இடுகைகள்

வளர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோக்கத்திற்கும் செயலுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது - இந்திராகாந்தி உரை

படம்
முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர், நாடு சுதந்திரம் பெற்ற நாளில் ஆயிரக்கணக்கானோர் சுதந்திரநாள் வாக்குறுதியை ஆன்ம பூர்வமாக கூறினர். அந்த வரலாற்று நிகழ்வின்போது பல்லாயிரம் பேர்களில் ஒன்றாக என்னுடைய குரலும் ஒலித்தது. 1947ஆம் ஆண்டு, எடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது. ஜனநாயகம், மதச்சார்பற்ற புதிய வளர்ச்சி பெறும் சக்தி உருவானதை உலகம் அறிந்துகொண்டது. சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது. பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டு, நாட்டு மக்களின் எதிர்காலத்தை பாதுகாத்து முதலடியை எடுத்து வைத்தோம். இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது. அமைதியோடு பல்வேறு நாடுகளுக்கு இடையில் நட்புணர்வை பிரசாரம் செய்து ஒத்திசைவை உருவாக்கும் விதமாக இந்தியா செயல்பட்டு வந்துள்ளது. திரு. லால்...

தொழிலதிபர்களை மிரட்டும் வரி!

தொழிலதிபர்களை மிரட்டும் வரி! அண்மையில் கர்நாடகாவைச் சேர்ந்த காபி தொழிலதிபர் சித்தார்த்தா, கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னணியில் கடனும் அரசின் வரி மிரட்டல்களும் இருந்தன. இந்திய அரசின் வங்கி திவால் சட்டம் போன்றவை மோசடிகளைத் தடுக்கும் நல்ல முயற்சிகள்தான். ஆனால், சந்தை ஏற்றத்தாழ்வுகளில் தவிக்கும் நிறுவனங்களை வரித்துறை வரைமுறை கடந்து மிரட்டுவது நியாயமற்றது என்ற குரல் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளது. “நீங்கள் ஒரே கொள்கையை அனைத்து வணிகங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. தொழில்முயற்சி தோல்வி அடைந்தால், உடனே தொழிலதிபர்களுக்குத் தண்டனை வழங்க நினைப்பது தவறு” என்கிறார் எஸ்ஸார் நிறுவனத்தைச் சேர்ந்த பிரசாந்த் ரூயா. உலக நாடுகளிலுள்ள அனைத்து தொழில்களும் வர்த்தகம் தொடர்பான ஒரே கண்ணியில் இணைந்துள்ளன. அதில் அமெரிக்கா சீனா நாடுகளுக்கிடையேயான வர்த்தகப்போர் கூட, வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தொழில்துறைக்கான கடன் வழங்குதலில் கவனமாக ஆராய்ந்து கடன் வழங்குதலை கடைப்பிடிப்பது வாராக்கடன் பாதிப்பைக் குறைக்கலாம். இந்தியா தொழில்கள் மீது அதிக வரி மற்றும் நெருக்குதலை அளிப்பதால், கடந்த ஆண்டு ...

தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங் ! - book review

படம்
 தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங்  ஒலிவியா செங், ஸ்டீவ் யுயி சங் ட்சங் கட்டுரை நூல் 297 பக்கங்கள் ஷி ச்சின்பிங் தனது அரசின் நிர்வாக சாதனைகளைப் பற்றி பிரசாரத்துறை மூலம் ஏராளமான நூல்களை எழுதி தொகுத்து வெளியிட்டுள்ளார். அவற்றை பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து விற்று வருகிறார்கள். அந்த நூல்களை படித்த நூலாசிரியர்கள், அதை வைத்து ஷி என்ன யோசிக்கிறார், உண்மையில் அவரது நாட்டில் நடந்த சம்பவங்கள், அதைப் பின்பற்றி அவர் என்ன யோசித்தார், செய்தார். கட்சியினர் என்ன நினைத்தனர் என்று விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.  ஷியின் ஆளுமை, கட்சியில் தன்னை வளர்த்துக்கொண்ட பாங்கு ஆகியவை தொடக்கத்தில் விளக்கமாக கூறப்பட்டுவிடுகின்றன. டெங், மாவோ ஆகியோரிடமிருந்து அவர் வேறுபடும் விதம் பற்றி மெதுவாக பல்வேறு திட்டங்களை அவர் எப்படி செயல்படுத்தினார், அதில் அடைந்த ஆதாயம் என கூறிக்கொண்டே வருகிறார்கள். நூலில் அத்தியாயம் தொடங்கும்போது அதில் கூறியுள்ள செய்திகள், இறுதியாக முடியும்போது படித்த விஷயங்கள் என்னென்ன என பாடநூல் போல வடிவமைப்பை பின்பற்றி இருக்கிறார்கள். இதுபோன்ற அமைப்பு எதற்கு என புரியவில்லை.  ஷி எ...

விழித்தெழும் தேசம் மின்னூல் வெளியீடு....

படம்
  கோபோ, ஸ்மாஷ்வேர்ட் தளங்களில் நூலை தரவிறக்கி வாசிக்கலாம்...    https://books2read.com/u/m2DoRr

கார்பன் வரியின் நோக்கம்!

      கார்பன் வரியின் நோக்கம் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் கார்பன் வரி என்பது நடைமுறைக்கு வந்திருக்கும் அல்லது கொண்டு வரலாம் என யோசித்துக்கொண்டிருப்பார்கள். பிரான்ஸ் போன்ற நாட்டில் வரியை எதிர்த்து போராட்டங்களே வெடித்தன. உண்மையில் கார்பன் வரி எதற்காக, இதைக் கொண்டு வந்தால் கரிம எரிபொருட்கள் தயாரிப்பு குறைந்துவிடுமா, காலநிலை மாற்றம் பிரச்னை தராதா? அப்படியெல்லாம் கிடையாது. கார்பன் வரி என்பது, முற்றாக கரிம எரிபொருட்கள் உற்பத்தியை நிறுத்தப்படுவதை சற்று தள்ளிப்போட உதவுகிறது. கார்பன் வரியைக் கட்டுபவர்களால், அரசை முழுக்க எதிர்த்து தான் நினைத்தை செய்ய வைக்க முடியுமா என்று பதில் கூறுவது கடினம். கரிம எரிபொருட்களை முற்றாக ஒழிப்பது அரசுக்கு சாத்தியமா என்றால் சாத்தியம்தான். ஒரே உத்தரவில் அந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடலாம். ஆனால் பொதுவாக எந்த அரசும் அதுபோல செய்வதில்லை. பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், எக்செல் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் , தங்கள் தொழிற்சாலையை மூடுவது நடக்ககூடிய ஒன்றா என்ன? ஆனால், அவர்கள் கூட கார்பன் வரியை ஆதரிக்கிறார்கள். இப்போது சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கார்பன் வரி பற்ற...

சமத்துவம் என்பதற்கு என்ன அர்த்தம்?

படம்
              அடிப்படையில் ஒரு மனிதர் வேலை செய்து ஒன்றை உருவாக்குகிறார். அதை அவர் முழுக்க சமூகத்தின் உதவியின்றி உருவாக்கினார் என்று கூற முடியாது அல்லவா? அப்படி உருவாக்கியது சமூகத்தைச் சேர்ந்தது. அதை தனது சொத்து என கூறக்கூடாது. எனவே, அப்படி உருவாக்கிய பொருள் சமூகத்திற்கான சொத்து. நூல், வைரம், உடை ஆகியவற்றை உருவாக்கியவர்களுக்கு முக்கியமானதாக மதிப்புக்குரியதாக தோன்றலாம். மற்றவர்களுக்கு அதில் மதிப்பு இருக்காமல் இருக்கலாம். பசி நேரத்தில் ஒற்றை ரொட்டித்துண்டின் மதிப்பை எப்படி மதிப்பிடுவீர்கள்? வைரமோ, தங்கத்தைவிட அதிகமாகத்தானே? பத்து ரொட்டிப் பாக்கெட்டுகளை இரண்டுபேர் வாங்க காத்திருக்கிறார்கள். எனில், அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. இரண்டு பாக்கெட்டுகளுக்கு பத்துபேர் காத்திருந்தால் விலை அதிகரிக்கும். இதெல்லாம் விநியோகம், தேவையை அடிப்படையாக கொண்ட கணக்கு. ஒருவரின் உழைப்பை எளிதில் கணக்கிட்டுவிட முடியாது.அதற்கான அளவுகோலை பாரபட்சமில்லாமல் உருவாக்குவது எளிதான காரியமல்ல. லாபம், அதீத லாபம், குறைந்த கூலி என பாதையில் வேகமெடுத்தால் அதுதான் முதலாளித்துவப்பாதை. அங்கு, குறைந...

சுதந்திர வணிகம்!

படம்
    பாயும் பொருளாதாரம் 11 சுதந்திர வணிகம் ஒரு நாடு குறிப்பிட்ட பொருளை தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது. இன்னொரு நாடு அதே பொருளை தயாரிக்க அதிக செலவாகிறது. நினைத்த அளவுக்கு தரமும் மேம்படவில்லை. ஆனால் வேறு சில பொருட்களை சிறப்பாக தயாரிக்கிறது. இந்த சூழலில் பொருளை சிறப்பாக தயாரிக்கும் நாடு, அதை தயாரிக்க விட்டுவிடலாம். அதே பொருளை சிறப்பாக தயாரிக்க முடியாத நாடு, அம்முயற்சியை கைவிட்டு தனக்கு எளிதாக தயாரிக்க முடிகிற பொருளைத் தயாரிக்கலாம். இப்போது இருநாடுகளும் வணிகம் செய்தால் இரு பொருட்களை ஒருவருக்கொருவர் குறைவான விலையில் விற்றுக்கொள்ள முடியும். மக்களுக்கும் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். பரவலாக அனைத்து மக்களும் வாங்குகிற இயல்பில் இருக்கும். அமெரிக்கா விமானங்களை சிறப்பாக தயாரிக்கிறது என்றால் அதை இன்னொரு நாடு வாங்கிக்கொண்டு பயன்பெறலாம். தற்சார்பு என்ற பெயரில் முழங்கால்களை தரையில் தேய்த்துக்கொண்டு கஷ்டப்படவேண்டியதில்லை. சீனா, வெளிநாட்டு வரி தீவிரவாத செயல்களை சமாளித்து கணினி,அலைபேசிகளுக்கான சிப்களை கூட உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது. அவ்வளவு ஏன் ஓப்பன் ஏஐயை அடிப்படையா...

விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி!

படம்
        3 பாயும் பொருளாதாரம் விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி! பனிரெண்டு லட்சம் கோடி ரூபாயை இந்திய வங்கிகள் தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவற்றை வசூலிக்க முடியவில்லை. அணுக்க முதலாளித்துவ ஒன்றிய அரசு, எப்போதும்போல கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்றால் அத்துறை சார்ந்த முன்னேற்றம் என்று பொருள் கொள்ளலாம். கொரோனா காலத்தில் கூட லாபம் சம்பாதித்த தொழிலதிபர்களுக்கு எதற்கு கடன் தள்ளுபடி? இப்படி அரசியல்வாதிகளின் உதவிகளைப் பெற்று வரி கட்டாமல் சம்பாதித்தாலும் கூட லஞ்சம் வழங்குவது, பங்கு விலையை அதீதமாக காட்டுவது என இந்திய தொழிலதிபர்கள் சர்க்கஸ் காட்டி வருகிறார்கள். சரி சந்தைக்கு செல்வோம். சந்தையில் மக்கள் பொருட்களை வேண்டும் என கோரவில்லை என்றாலும் கூட அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வணிகர்கள் வாங்கி வைத்து விற்பார்கள். சந்தை அதன் இயல்பில் இயங்கி வரும் என பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் கூறியுள்ளார். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. சந்தை இயங்குவது கண்ணுக்குத் தெரியாத கரம் மூலம் என...

யானைகள் கணக்கெடுப்பு - தள்ளிப்போகும் காரணம்!

படம்
               2022-23ஆம் ஆண்டுக்கான யானைகளின் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த ஆண்டு வெளியிடப்படக்கூடும். இப்போது, ஊடகங்களில் அரசின் அறிக்கையில் உள்ள தகவல்கள் மெல்ல வெளியே வந்துள்ளன. அதுவும் சூழலுக்கோ, நமக்கோ நல்ல செய்தியை சொல்வதாக இல்லை. கிழக்கு, மத்திய, தென் பகுதி இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. மேற்குவங்கம் - தெற்கு 84 %, ஜார்க்கண்ட் 64%, ஒடிஷா 54%, கேரளம் 51% என யானைகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது. வளர்ச்சி திட்டங்கள், சுரங்கம் தோண்டுவது, கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவையே யானைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வர காரணம். யானைகளின் எண்ணிக்கையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுத்து வருகின்றனர். தொண்ணூறுகளில் இருந்து இந்த செயல்பாடு நிற்காமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. புதிய கணக்கிடும் முறையாக டிஎன்ஏ ஆவணப்படுத்துதல் பயன்படுகிறது. இந்த முறையில் கணக்கீடு மட்டுமே செய்யப்படுகிறது. வேறு எந்த ஆலோசனைகளும் கூறப்படுவதில்லை. 2002ஆம் ஆண்டு வரை நேரடியாக யானைகளைப் பார்த்து கணக்கீடு செய்...

பரஸ்பர வளர்ச்சிக்காக ஆப்பிரிக்க நாடுகளோடு இணைந்து நடைபோடும் சீனா - மக்கள் சீன குடியரசு 75 ஆண்டுகள்

படம்
      மக்கள் சீன குடியரசு - 75 ஆண்டுகள் உலக நாடுகள் சிறப்பாக இயங்கினால்தான் சீனா நன்றாக செயல்பட முடியும். சீனா நன்றாக செயல்படும்போது, முழு உலகமும் இன்னும் மேம்படும் என 2023ஆம் ஆண்டு சீன அதிபர் ஷி ச்சின்பிங், மூன்றாவது பாதை மற்றும் சாலை திட்டத்தின் உரையில் கூறினார். சீனாவில் 1.4 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களோடு, பல்வேறு சவால்களை சந்தித்து பயணிப்பது சாதாரண காரியமல்ல. 2049ஆம் ஆண்டு சீன நாட்டை புத்துயிர்ப்பு செய்வதுதான் லட்சியமாக கொண்டு சீன அரசு இயங்கி வருகிறது. அந்த ஆண்டில் மக்கள் சீன குடியரசு, தனது நூற்றாண்டைக் கொண்டாடும் நாள். மக்கள் சீன குடியரசு நிலப்பரப்பு ரீதியாக, மக்கள்தொகை ரீதியாக பெரிய நாடு. இப்படி பல்வேறு சவால்களைக் கொண்ட நாடு எப்படி ஒரே திசையில் பயணிக்கிறது என ஆச்சரியமாக உள்ளது. 1978ஆம் ஆண்டு சீனாவில் நடந்த பொருளாதார மாற்றங்கள், சீர்திருத்தங்கள் முக்கியமான சாதனைகள் என்று கூறவேண்டு்ம். அவை அனைத்து பிரிவு மக்களுக்கும் வளமை சேர்ப்பதாக மாறியுள்ளது. இதன் கூடவே கிராம, நகர வளர்ச்சி போதாமைகள், காற்று, நீர் மாசுபாடு, கோவிட், ரஷ்யா உக்ரைன் போர்  ஆகிய சவால்களையும...

போருக்கு செலவு செய்வதைவிட நிதியை ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு திருப்பலாம்!

படம்
           உள்நோக்கம் கொண்ட தேசபக்தி அரசியல்    ஒருவகையில் பாகிஸ்தான் நாட்டுடன் உறவுகள் மேம்படுவதாக  இருந்தாலும், இன்னொருவகையில் அந்நாட்டுடன் சுமூகமான உறவு ஏற்படக்கூடாது என்று விரும்புகிறோம். நமது பிரதமர் பாகிஸ்தான் பகுதிகளைப் பற்றிப்பேசும்போது நாடாளுமன்றத்தில் பல அணிகளாகப் பிரிந்து நின்று பேசுவது நடக்கிறது. நாட்டின் ஊடகங்களில் இரு தரப்பு பற்றி கடும் கூச்சல் இடுவதுமாக இரு நாட்டு உறவுகள் சமநிலையடையும் நிலையில், இச்செயல்கள் அதைக் குலைத்துப்போட்டுவிடுகின்றன.  நமது செயல்பாடுகள் பாகிஸ்தானுடனான ஒற்றுமையை உண்மையில் நாம் விரும்புவதில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. உறுதியாக, நாம் உறவுகளை சிறந்ததாகவும், ஆழமானதாகவும் கொள்ள முயற்சித்தும் அங்கே மனக்கசப்பும், கோபமும்தான் இறுதியில் மிஞ்சுகிறது. அனைத்தையும் விட பாகிஸ்தானுக்கு சரியான பாடத்தை கற்பிக்கவேண்டும்; அவர்களை சரியான இடத்தில் வைக்கவேண்டும்; எனவும், பாகிஸ்தானை இகழ்ந்து பேசுவதுதான் தேசபக்தி என்று கூறுவதில் பெரும் அரசியல் உள்ளது.  மும்பை தீவிரவாதத் தாக்குதல் பிரச்சனைகளை தீர்க்காமல் பிரதமர் பாகி...

வாழு வாழவிடு எனும் அமைதி முயற்சிகளை சந்தேகப்படக்கூடாது

படம்
            அமைதிக்கு வாய்ப்பளிப்போம்!  பாகிஸ்தானில் முன்பிருந்த அரசுகள் அங்கிருந்து வரும் தாக்குதல்களை தடுக்க சிறிதளவே முயற்சிகளை எடுத்தன. காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் எந்த ஒரு நடைமுறைத் தீர்வையும் முன்வைக்கவில்லை. இன்றுவரையிலும் கூட வளைந்து கொடுக்காத தன்மையில் அமைதிப் பேச்சுவார்த்தை செல்கிறது. எதிர்தரப்பில் எந்த பதிலும் இல்லாத நிலையில் நாம் தொடர்ந்து அதனை முன்னெடுத்து வருகிறோம்.  பாகிஸ்தானுடன் விரோதம் வளர்க்க நம்மிடம் பல்வேறு காரணங்கள் இன்றும் உயிரோடு உள்ளன. இது கடினமானதாக இருந்தாலும், அமைதி அழைப்பு என்பது முக்கியமானதாக உள்ளது. ஆண்மையுடன் தொடர்புபடுத்தாத வரையில் வாழ்க்கையில் இது முக்கியமானதுதான். வன்மம் வளர்ப்பதைவிட இந்தியர்களுக்கு நல்ல வாழ்விற்கான உறுதி தருவது அமைதி என்பதால் அதனை தேர்ந்தெடுக்க முடியும்.  பாதுகாப்பு நிதியறிக்கையில் 40 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக இரு நாடுகளில் இந்தியா மூன்று மடங்கு அதிகமாக ஆண்டிற்கு ஆண்டு கூடுதலாக செலவழித்துவருகிறது. கோல்டன் குவாட்டிரிலேட்டரல் சாலை திட்டம் எனும் பெரிய திட்டத்தினை அரசு நிறைவு செய்துள்ள...

ஏழை நாடுகளில் தொழிற்சாலைகளை அமைத்து நன்மதிப்பை பெறும் சீனாவின் உத்தி!

படம்
        வரவேற்பு கிடைக்குமிடத்தில் வணிகத்தை நடத்தி வெற்றி பெறும் சீனா! சீனாவுக்கு அமெரிக்காவை அசைத்துப் பார்த்து முதலிடத்தை பெறும் லட்சியம் உண்டு. தென்சீனக்கடலை அதன் ராணுவக்கப்பல்கள் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன. இதெல்லாம் கடந்து, உள்நாட்டில் வணிகம் வளர்ச்சியில் சுணக்கம் கண்டவுடன், இரண்டாயிரத்திலேயே அயல்நாடுகளை நோக்கி சீன நிறுவனங்களை செல்லுமாறு அந்த நாட்டு அரசு கூறிவிட்டது. அரசு கூறியதை அரசு, தனியார் நிறுவனங்கள் கெட்டியாக பிடித்துக்கொண்டு சவுதி அரேபியா, மலேசியா, வியட்நாம், எகிப்து, மொராகோ, கஜகஸ்தான், இந்தோனேசியா, அர்ஜென்டினா, செர்பியா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் வணிகம் செய்யத் தொடங்கியுள்ளது. டிக்டாக்கை அமெரிக்கா தடை செய்தாலும் கூட அதைப்பயன்படுத்தி சீனா பல்வேறு நாடுகளில் தனது வணிகத்தை கொண்டு சென்றுள்ளது. அந்த நாட்டின் கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஆன்லைன் பொருட்கள் விற்பனை நிறுவனங்கள், ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உலக நாடுகளில் வறுமையாக உள்ள நாடுகளில் தொழிற்சாலைகளை திறந்து வருகின்றன. இப்படி செய்வதால் சீனாவின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளா...

சீனா - இந்தியா ராணுவ வலிமையில் முன்னிலை பெறுவது யார்?

படம்
      ராணுவ வலிமையில் முன்னிலை பெறுவது யார்? இன்றோ நாளையோ நிச்சயமாக ஆதிக்கத்தை அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போர் நடைபெறும். அது உறுதி. அப்போது அதில் யார் வெல்வது என்பதை ஒரு நாடு எந்தளவு செலவு செய்து ராணுவத்தை உருவாக்கியுள்ளது என்பதைப் பொறுத்தே கூற முடியும். இந்திய அரசு, இணையத்தின் கட்சி சார்ந்த கேலி வதைக்குழுக்களை வைத்து வெல்ல முடியாது. இந்துமத ராணுவ வீரர்கள் மட்டுமே போராடி வெற்றியைப் பெற்றுவிடுவார்களா என்றும் புரியவில்லை.   சீனா, சாங்காய் கூட்டுறவு அமைப்பில் இடம்பெற்ற நாடுகளுடன் ராணுவப் பயிற்சிகளை செய்து வருகிறது. அவர்கள் உருவாக்கியுள்ள பயிற்சிகளின் கூடவே, மேற்கு நாடுகளின் போர்முறைகளை அறிய வேண்டுமே?  அதற்காக பாகிஸ்தானின் நட்பு உதவுகிறது. அந்த நாட்டு ராணுவத்திற்கு அமெரிக்க அரசு பயிற்சி அளிக்கிறது. இப்படியாக சீனா தன்னை ராணுவத்தில் வலிமையான நாடாக வளர்த்துக்கொண்டுள்ளது. புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். ராணுவ வீரர்களின் எண்ணிக்கை சீனா - 20,35,000 இந்தியா - 14,55,550 ராணுவ பட்ஜெட் சீனா - 231.4 பில்லியன் டாலர்கள் இந்தியா - 75 பில்லியன் டாலர்கள் விமானங்கள் சீனா - 3,304 இந...

மழைப்பேச்சு பாட்காஸ்ட் - வறுமை ஒழிப்பு எனும் தேசம் தழுவிய களப்பணி

படம்
  autoplay player               https://archive.org/details/2024-08-08-18-58-14

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மக்கள் பழக்கப்பட்டுவிட்டனர்! - இந்தியா - சீனா அரசியல் கொள்கைகள் ஒப்பீடு

படம்
          சீனா, அமெரிக்காவை விலக்கி முதலிடத்தை அடையும் முயற்சியில் உள்ளது. அதன் ஒழுக்கம், கட்சி கட்டுப்பாடு, அர்ப்பணிப்பான உழைப்பு குலையாத பட்சத்தில் அதை அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவை சீனாவுக்கு எதிராக நிறுத்த மேற்கு நாடுகள் முயல்கின்றன. அவர்களின் உள்மன ஆசை அப்படி இருக்கலாம். ஆனால், கள யதார்த்தம் வேறு மாதிரி உள்ளது. இருநாட்டில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பார்ப்போம். சீனாவில் மக்கள் குடியரசு ஆட்சியில் உள்ளது. இதிலுள்ள அதிகாரிகள், பிரதமர், அதிபர் அனைவருமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள். அங்கு ஒரே கட்சிதான் உள்ளது. அந்த கட்சிதான் அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுக்கிறது. இதற்கான நிர்வாக கமிட்டியில் ஆண்கள் மட்டுமே உள்ளனர். பெண்களுக்கு இடம் இல்லை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிகராக கூறவேண்டுமெனில் வலதுசாரி மதவாத கட்சியான பாஜக உள்ளது. இதன் தாய் சங்கமாக இந்து தீவிரவாத அமைப்பு, ஆர்எஸ்எஸ் உள்ளது. கலாசார அமைப்பு என பிரசாரம் செய்துகொள்ளும் இந்த அமைப்பே, இந்தியாவை உருவாக்கிய நவீன சிற்பிகளில் ஒருவரான மகாத்மா காந்தியை படுகொலை செய்தது. உறுப்பினர்கள் அடிப்ப...

பசுமை இல்ல வாயுக்கள் இல்லாத உலகம், மத நெருக்கடிகளை எதிர்கொண்ட ரோஜர் பேக்கான்

படம்
            அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி உலகில் பசுமை இல்ல வாயுக்களே இல்லை என்றால் பூமியின் வெப்பம் என்னவாக இருக்கும்? தோராயமாக மைனஸ் 15 டிகிரி தொடங்கி மைனஸ் இருபது டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். பசுமை இல்ல வாயுக்களின் காரணமாகவே பூமியில் தோராய வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாக உள்ளது. முற்றாக பசுமை இல்ல வாயுக்களே இல்லை என்றால் நம் வாழ்க்கை முற்றாக பூமியில் இல்லாமல் போய்விடும். அளவோடு இருப்பது நல்லது. கூடவும் கூடாது, குறையவும் கூடாது. சூரிய வெப்பம் பசுமை இல்ல வாயுக்களின் ஊடாகவே பூமிக்கு வருகிறது. இந்த வெப்பம் வாயுக்களின் காரணமாகவே பூமியில் தங்குகிறது. பசுமை இல்ல வாயுக்கள் அளவை தாண்டாமல் இருந்தால் பூமியில் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வதற்கான காலநிலையை உருவாக்குகிறது. குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு, தாவரங்கள் வளர்வதற்கு அத்தியாவசியம். கார்பன் அனைத்து தாவரங்கள், விலங்குகள் வாழ்க்கைக்கும் தேவையான ஒன்று. ரோஜர் பேக்கான் என்பவர் யார்? 1214 அல்லது 1220 ஆண்டில் பிறந்தவர் என்றே கூறவேண்டியுள்ளது. இவர் ஒரு அறிவியலாளர். ரோஜர் பேக்கானை பலரும் தத்துவவாதி பிரான்சிஸ் பேக்கானோட...

அடிமைகளை விட கேவலமானவர்களைக் கொண்ட நாடு!

படம்
              சீன நாட்டோடு இந்திய மக்கள் தம்மை இணைத்துக்கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஆனால், சில தற்செயலான தொடர்புகளைப் பற்றி பேசி மகிழ்ந்துகொள்ளலாம். பௌத்த மதம் இந்தியாவில் உருவானது. அதை, இந்து மதத்தில் இருந்து உருவானது என அரசு அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இந்துத்துவ முட்டாள்களும் அப்படியே பிரசாரம் செய்து வருகிறார்கள். கூடவே, அரசில் இணைந்து இன அழிப்பு செய்து பிற சிறுபான்மையினரை அழிக்க முயல்கிறார்கள். சர்க்கரை தயாரிப்பு, பட்டு ஆடைகள் உற்பத்தி, சீன மொழியில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமொழி சொற்கள் ஆகியவை இந்தியாவுடனான தொடர்பை உறுதி செய்கிறது. சீனாவின் யுன்னானிலுள்ள டாய் எனும் சிறுபான்மை மக்கள் ராமாயணத்திற்கான தனித்த வடிவத்தைக் கொண்டிருக்கிறார்கள். 1636-1912 காலகட்டத்தில் பிரிட்டிஷாரால் சீனாவுக்கு ஆபத்து ஏற்பட்டது. அப்போது பிரிட்டிஷ் படையில் பெருமளவில் இருந்தவர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சீக்கியர்கள். இவர்கள் ஹாங்காங், ஷாங்காய், ஹாங்கூ ஆகிய பகுதிகளில் ஆங்கில அரசுக்கு ஆதரவாக படுகொலைகளை செய்தனர். எனவே, அன்று தொடங்கி சீனாவில், இந்தியா என்றால் அட...