இடுகைகள்

தணிக்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

13. படித்துவிட்டு வெளியே வரும் இளம் ஆடிட்டர்களால் ஒப்புதல் தரப்படும் கணக்கு! மோசடி மன்னன் அதானி

படம்
      அதானி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், அதானி குழுமத்தில் உள்ள தனியார் நிறுவனமாகும். 2022ஆம் ஆண்டு, இந்த நிறுவனம் சம்பாதித்த லாபம், 6.9 பில்லியன் டாலர்கள். வணிக சேவைகளை வழங்கியது, பிற பரிவர்த்தனைகளை அதானி குழும நிறுவனங்களுக்கு செய்து கொடுத்ததது என தனது வர்த்தக நடவடிக்கைகளைப் பற்றி ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதானியின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் அடிப்படை கட்டுமானத் திட்டங்களில் கவனம் செலுத்துகின்றன. தொழிலில் சிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பல்வேறு அதானி குழும தனியார் நிறுவனங்கள்,   முதலீட்டாளர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுபவையாகும். அதானி குழுமத்தில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலிருந்து, 31.9 மில்லியன் டாலர்களை அதானி குழும தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன. 2022ஆம் ஆண்டு அதானி இன்ஃப்ராக்ஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவன ஆவணங்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளன. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் துணை நிறுவனங்களான இவை, சம்பாதித்துள்ள வருமானம்: 1.அதானி பவர் முந்த்ரா -12.2 மில்லியன் டாலர்கள் 2.அதானி பவர் மகாராஷ்டிரா -12.2 மில்லியன் டாலர்கள் 3

இந்திய சிறைகளுக்குள் நூல்களுக்கு தடை!

படம்
  ஜிஎன் சாய்பாபா, மனித உரிமை செயல்பாட்டாளர் கடந்த மாதம் எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கௌதம் நவ்லகா, பிஜி வுட்ஹவுஸ் என்ற எழுத்தாளரின் நூல்களை வாசிக்க கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.  மும்பையிலுள்ள தலோஜா சிறை நிர்வாகம் இதற்கு அளித்த பதில், பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று.  சிறைத்துறை அதிகாரிகள் நூல்களை, காகிதங்களை, நோட்டுகளை ஏன் அகராதிகளை கூட கைதிகளுக்கு கொடுக்காமல் இருப்பதும், பிறகு வழக்குரைஞர்கள் இதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்கு செல்வதும் புதிதல்ல. இப்படி சமூக செயல்பாட்டாளர் ஜோதி ஜக்தாப் என்பவருக்கு நூல்கள் மறுக்கப்பட்ட, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த உத்தரவு வந்து சேர்ந்தும் கூட இரண்டு மாதங்கள் ஆனபிறகே நூல்கள் ஜோதிக்கு வழங்கப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளுக்கு நூல்கள் மேல் உள்ள வெறுப்பை  இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.  2020ஆம் ஆண்டு நாக்பூர் சிறையில் ஜிஎன் சாய்பாபா அடைக்கப்பட்டிருந்தார். இவர் தெலுங்கு மொழி நூல்களை வாசிக்க கேட்டிருந்தார். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் அதை காதில் போட்டுக்

திரைப்படங்களின் தணிக்கையை கையில் எடுக்கும் மத்திய அரசு! - புதிய சூப்பர் சென்சார் விதிகள் அறிமுகம்

படம்
                        திரைப்படங்களுக்கான புதிய சட்டம் 2021       கடந்த வாரம் திரைப்படங்களுக்கான புதிய விதிகள் வெளியிடப்பட்டன . இந்த விதிகள் 1952 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன . இதன்படி திரைப்படத் தணிக்கை அமைப்பு படத்தை திரையிடலாம் என குறிப்பிட்ட பிரிவில் படத்தை அனுமதித்தாலும் கூட அதனை திரும்ப சோதிக்க மத்திய அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது . இந்த சட்டம் பற்றி பார்ப்போம் . படங்களில் சர்ச்சைக்குரிய வசனங்கள் , காட்சிகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு சென்சார் அமைப்பு சிலசமயங்களில் சான்றிதழ் தரமுடியாது என்று கூறி திரையிட அனுமதி மறுக்கும் . அந்த சமயங்களில் இதற்கான தலைமை அமைப்பான ட்ரிப்யூனலில் முறையிட்டால் பெரும்பாலும் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி கிடைத்துவிடும் . மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் இந்த அமைப்பை கலைத்துவிட்டு , இனிமேல் நீதிமன்றங்களே படத்தை திரையிடலாமா , வேண்டாமா என்று முடிவெடுக்கும் என்று கூறிவிட்டது . இதனை திரைத்துறையினர் பலரும் இது சாத்தியமாக என்று கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தனர் . புதிய விதிகள் உருவாக்கப்பட்டு

மேல் முறையீட்டிற்கு உயர் நீதிமன்றம்தான் செல்லவேண்டும் என சொல்லும் மத்திய அரசின் புதிய சீர்திருத்தம்! - ட்ரிப்பியூனல் அமைப்பு கலைக்கப்படுகிறது

படம்
                காணாமல் போகும் ட்ரிப்யூனல் மத்திய அரசு , தற்போது புதிய சீர்திருத்தமாக திரைப்படங்களை மேல் முறையீட்டிற்கு அனுப்பும் ட்ரிப்பியூனலை கலைத்துள்ளது . இதனால் சர்ச்சைக்குரிய மையப்பொருளைக் கொண்ட படங்கள் உயர்நீதிமன்றத்தில் தங்கள் படங்களை திரையிடுவதற்கான அனுமதியை பெற வேண்டியிருக்கும் . 1983 ஆம் ஆண்டு திரைப்பட ஒளிப்பதிவு சட்டம் 1952 படி ட்ரிப்பியூனல் அமைக்கப்பட்டது . இதில் தலைவர் உட்பட ஐந்து பேர் இருப்பார்கள் . இவர்களை உறுப்பினர்களாக கருதலாம் . கூடுதலாக ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலரும் இருப்பார் . மத்திய தணிக்கை வாரியத்தின் கருத்திற்கு எதிராக திரைப்பட்ட தயாரிப்பாளர்கள் ட்ரிப்பியூனில் தங்கள் படங்களின் திருத்தங்களுக்கு எதிராக முறையிட்டு நீதி பெறலாம் . மத்திய தணிக்கை வாரியத்தில் தலைவர் தவிர்த்து 23 உறுப்பினர்கள் இருப்பார்கள் . இவர்கள் படங்களைப் பார்த்து திருத்தங்களை கூறி அதற்கான பல்வேறு சான்றிதழ்களை வழங்குவார்கள் . யு , யு / ஏ , ஏ என பல்வேறு வித சான்றிதழ்களை வழங்குவார்கள் . ஏ சான்றிதழ் பெற்ற படங்களை டிவியில் ஒளிபரப்புவது கடினம் . பொதுமக்களின் பார்வையிடலுக்கு வரு

ஓடிடி பிளாட்பாரங்களுக்கான தணிக்கை தடை பாதிப்பை ஏற்படுத்துமா? டேட்டா கார்னர்

படம்
                  நவம்பர் 9 அன்று , இணையத்தில் வெளியாகும் படங்கள் , பாடல்கள் , பேச்சு உள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது . இதனை தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை கட்டுப்படுத்தும் . இதன் கீழ் இனி அனைத்து ஓடிடி சேவை வழங்கும் நிறுவனங்களும் , சமூக வலைத்தளங்கள் , இணையதளங்கள் வரும் . இந்த நிறுவனங்கள் இருக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்த வகையில் 26 சதவீதம் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுமே இவற்றில் இருக்கும் . மேற்கண்ட முதலீட்டிற்கு மேல் உள்ள செய்தி நிறுவனங்ளள் இதுபற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு வழங்கவேண்டும் . இதில் நிறுவனத்தின் இயக்குநர் , தலைவர் , உறுப்பினர்கள் என பல்வேறு விவரங்கள் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது . அக்டோபர் 15, 2021 ஆம் ஆண்டிற்குள் வெளிநாட்டு முதலீடுகள் 26 சதவீதமாக்கப்படவேண்டும் என்ற மத்திய அரசு காலவரம்பு நிர்ணயித்துள்ளது . இதுபற்றி டிஜிபப் நிறுவனம் , மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஊடகங்களை கட்டுப்படுத்த நினைக்கிறது . அரசின் இதுபோன்ற