இடுகைகள்

நேர்காணல் - கிரிஷ் காசரவல்லி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாவலை சினிமாவாக்க கேள்விகளை கேளுங்கள்!

படம்
கிரிஷ் காசர்வல்லி... இரண்டாம் பகுதி... திரைப்படமாக்கும் கதையை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? நாவலை சிறுகதையை படித்து அதனை திரும்ப கூறும் தேவையிருக்கிறதாக என யோசிப்பேன். அவ்வளவேதான். அடுத்ததாக தற்போதைய உலகில் கூறும் கதைக்கு பொருந்திப்போகும் நிகழ்வுகள் உண்டா? இன்றைய உலகில் எனது கதை ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துமா? கதையின் நிகழ்வுகளை உணர்ச்சிகளை சினிமா அனுபவமாக வலுவாக மாற்ற முடியுமா? என்பதை கேள்விகளாக எனக்குள் கேட்டு பதில் கிடைத்தால் கதையை திரைப்படமாக உருவாக்குவேன். உங்களுடைய வாழ்க்கையிலிருந்து பல்வேறு அனுபவங்களை பெற்றிருப்பீர்கள். குறிப்பாக உங்களது தந்தை குறித்து கூறுங்கள்.  எங்களது கிராமத்தில் எனது தந்தை ஜமீன்தாராக வாழ்ந்து வந்தார். ஆனால் அதேசமயம் காந்தியத்தில் நம்பிக்கை கொண்டவரும் கூட. தலித்துகளை முன்னேற்றும் விதமாக கிணறுகள், பள்ளிகள், வீடுகள் ஆகியவற்றை கட்டித்தந்தவர் ஊரிலுள்ள அனைத்து நிகழ்வுகளிலும் மரியாதையை தரவேண்டிய அந்தஸ்திலான ஜமீன்தாராக பங்கேற்பார். மதத்தின் மீது பிடிப்பற்ற என் தந்தை அக்காலத்தில் கிராமத்தில் படித்த நபர் அவர் மட்டும்தான். ஏறத்தாழ என் தந்தையின் கு