இடுகைகள்

பாக். லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பற்றிய காரண காரியங்களை விளக்கும் அம்பேத்கர்!

 பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை பி ஆர் அம்பேத்கர் தமிழில் மகாதேவன் கிழக்கு பதிப்பகம் அம்பேத்கர் எழுதிய நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டால் அதற்கு பின்னால் என்ன காரணம் இருக்க முடியும்? முஸ்லீம்களை அவர் விமர்சித்து எழுதியிருக்கக்கூடும். சரிதான். அந்த வகையில் முஸ்லீம்களை விமர்சிப்பதோடு, அவர்கள் படையெடுப்பு வழியாக இந்தியா அடைந்த சேதம், கோவில்கள் இடிப்பு, மக்கள் பலி என பலவற்றையும் அம்பேத்கர் ஆவணப்படுத்தி எழுதியுள்ளார்.  நூலில் அவர் பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை தனது போக்கில் அணுகி அதற்கான காரண காரியங்களை விளக்கி எழுதியுள்ளார். இதை ஆதரிக்கும், எதிர்க்கும் தரப்புகளின் உள்நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.  நூலைப் படித்து எழுதும்போது இந்திய ஒன்றியத்தின் சுதந்திர தினம் கடந்துபோய்விட்டது. ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தான் இந்தியா பிரிவினை பற்றி பேச, ஆலோசிக்க, சரியான காலம்தான். நூலில், அம்பேத்கர் முஸ்லீம்கள் ஏன் தனிநாடு கேட்கிறார்கள், அதற்கான தேவை என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். அதேசமயம் இந்து மகாசபையினரின் இந்து அரசு அமைந்தால் ஏற்படும் பாதகங்களையும் அவர் கூறியிருக்கிறார். இந்துக்களின் சா...

கதைகள் சொல்லப்படாமல், கேட்காமல் வளர்வது குழந்தைகளுக்கு ஆபத்தானது - கஹானி சவாரி

படம்
  பாகிஸ்தான். கராச்சியில் உள்ள லையாரி டவுன். அங்கு இளைஞர் ஒருவர் நூலை விரித்து குழந்தைகளுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் வேடிக்கையாக கூறுவதைக் கேட்டு குழந்தைகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் கேட்கும் கதை பலமுறை சொல்லப்பட்டதுதான். ஆனாலும் சலிக்காத ஒன்று.  பாகிஸ்தானில் உள்ள பொருளாதார சூழலில் கல்வி அனைவருக்கும் எட்டாத ஒன்று. நூல்களும் உடைகளும் வாங்கி அரசின் இலவசக் கல்வியைப் பெறுவது கூட அங்குள்ள குழந்தைகளுக்கு இயலாத ஒன்று. இதற்கு, அங்கு எரிபொருட்களின் விலை உயர்வும், அதன் விளைவாக ஏராளமான மக்கள் வேலை இழந்ததும் முக்கியமான காரணங்கள்.  பத்து வயதிலுள்ள குழந்தைகளில் 77 சதவீதம் பேருக்கு எளிமையாக வாக்கியத்தை புரிந்துகொண்டு வாசிக்கத் தெரியவில்லை. பத்திலிருந்து 16 வயது வரம்பு கொண்ட குழந்தைகளில் 44 சதவீதம் பேர் பள்ளியிலிருந்து விலகிக்கொண்டுவிடுகிறார்கள். இத்தனைக்கும் பாக்.கில் கல்வி இலவசம், கட்டாயமும் கூட. ஆனால் விலைவாசி பிரச்னையில் குழந்தைகளும் தப்பவில்லை.  லையாரி டவுனின் தெருக்களில் ஐஸ்பெட்டி வண்டியை தள்ளிக்கொண்டு வரும் இளைஞர் பெயர் முகமது நோமன். இவர் கஹானி சவாரி எனு...