இடுகைகள்

என்ஆர்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடியுரிமை சட்டத்தின் அவலத்தை புகைப்படமாக்கியவருக்கு விருது!- ஜிஸான் ஏ லத்தீப்புக்கு ராம்நாத் கோயங்கா விருது

படம்
கேரவன் மாத இதழில் என்ஆர்சி பற்றிய புகைப்படத்தை வெளியிட்ட ஜிஸான் ஏ லத்தீப் என்ற புகைப்படக்காரருக்கு ராம்நாத் கோயங்கா விருது வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியான புகைப்பட கட்டுரை அது. என்ஆர்சி பட்டியல் வெளியாகி ஒரு மாதம் ஆகியிருந்தபோது அசாமில் நான்கு மாவட்டங்களில் லத்தீப் புகைப்படங்களை எடுத்தார். இதில் ஏழை, வறுமை நிலையில் உள்ள முஸ்லீம்கள் இரண்டு பட்டியல்களிலும் இல்லை என்று தகவல் வர துயரமுற்றனர். என்ஆர்சி என்றால் என்னவென்றே தெரியாமல் பயந்துபோனார்கள். அரசின் விடுபட்டோர் அறிக்கை 2017, 2018 என இரண்டு ஆண்டுகளில் வெளியானது. இதில் ஆதாரங்களைக் காட்டி தங்களது முன்னோர் இந்தியர் என நிரூபிக்காதபோது அவர்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது ஏறத்தாழ நாஜி ஜெர்மனியின் கெட்டோ எனும் வதை முகாம்களை ஒத்தது. 2015ஆம் ஆண்டிலிருந்து லத்தீப் அசாமில் பயணித்து வருகிறார். அங்கு மண் அரிப்பு தொடர்பான பணிக்கு முதலில் சென்றார். பிறகு 2019இல் அங்கு நிறைவேற்றப்பட்ட என்ஆர்சி சட்டம் பற்றி அறிந்ததும் அதனை பதிவு செய்திருக்கிறார். நான் முஸ்லீம் என்பதால் எனக்கும் குடியுரிமை தொடர்பான பிரச்னை

முஸ்லீம் மக்களை துரத்தவே அரசு இந்துத்துவ திட்டங்களை அமல்படுத்துகிறது! - அமான் வதூத், மனித உரிமைகள் வழக்குரைஞர்

படம்
  அமான் வதூத் மனித உரிமை வழக்குரைஞர் செப்.23 அன்று சிபாஜ்கரில் நடைபெற்ற மக்களின் குடியேற்றம் அகற்றல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முதலில் நான் கூறவிரும்புவது, இப்போது அரசால் குடியிருப்புகள் அகற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவருமே பல்லாண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்தவர்கள். பலரும் 1970களிலிருந்து இங்கிருக்கிறார்கள். எனவே இதனை அரசு புதிய குடியேற்றம் என்று கூறமுடியாது. இவர்கள் ஆற்றுநீரின் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு பெர்பெடா, காம்ரூபா ஆகிய மாவட்டங்களிலிருந்து இங்கு வந்தவர்கள்.  ஆற்று வெள்ளம் காரணமாக தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்தவர்கள் இங்கு வந்து தங்கினார்கள். பலரும் கூலி வேலைகளை செய்பவர்கள்தான். நிலமற்ற மக்கள்.  இங்கு தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் ஆற்றையொட்டியுள்ள நிலங்களில் தங்கியிருந்தவர்கள்தான். பொதுவாக அசாம் மக்கள் ஆற்றையொட்டி தங்க மாட்டார்கள். இப்போது முஸ்லீம் மக்கள் உள்ள இடங்களை , அசாமின் பூர்விக மக்களுக்கு தருவதாக கூறியுள்ளது. இங்கு அவர்கள் விவசாயம் செய்வார்கள் என்று அரசு கூறுகிறது. விவசாயம் செய்ய எதற்கு ஆற்றுக்க்கு அருகில் உள்ள நிலங்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரியவி

முஸ்லீம் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது! - ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் முதல்வர்

படம்
              ஹிமந்தா பிஸ்வா சர்மா அசாம் முதல்வர் அசாமிற்கான அடுத்த பத்தாண்டுகள் திட்டம் என்ன ? அசாமில் தீர்க்கவேண்டிய நிறைய பிரச்னைகள் உள்ளன . சமூக திட்டங்களில் அசாம் முக்கியமான இடத்தில் இல்லை . அடிப்படைக் கட்டமைப்பு , பெண்கள் , குழந்தைகள் மேம்பாடு , குழந்தைகளின் இறப்பு சதவீதம் குறைப்பு ஆகியவற்றில் நிறைய பணிகள் செய்யப்பட வேண்டியதுள்ளது . வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயில் அசாம்தான் . எனவே இங்கு செய்யும் மாற்றங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கு நிறையவே உதவும் . எல்லை தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் சுற்றுலா மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு உதவும் . மாநிலத்தை புள்ளிவிவரப்படி ஆராய்ந்தால் முஸ்லீம்களின் மக்கள்தொகை 29 சதவீதமாக அதிகரித்துள்ளது . இந்துக்களின் வளர்ச்சி 10 தான் அதிகரித்துள்ளது . இதற்கு முஸ்லீம்களிடையே உள்ள கல்வி அறிவின்மை , வறுமை ஆகியவையே காரணம் . எனவே , நாங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தினால்தான் கல்வி , சுகாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களை உருவாக்க முடியும் . மாநில அரசு முஸ்லீம்களின் மக்கள்தொகையை குறைக்க திட்டங்கள் தீட்டி வருகிறதா ? அரசு , ம

பன்மை கலாசாரத்தை விரும்பும் இந்தியன் நான்! - சத்யா நாதெள்ளா

படம்
infinityleap சத்யா நாதெள்ளா , மைக்ரோசாப்ட் இயக்குநர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்ற பெருமையைத் தாண்டி , புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சாதித்த சாதனைகள் அதிகம் . மைக்ரோசாப்டின் குறைகளை உள்ளபடியே ஏற்றுக்கொண்டு அந்நிறுவனப் பிரிவுகளை ஒருங்கிணைத்து நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சத்யா . அவரிடம் டெக் துறை , வளர்ச்சி , இந்தியா பற்றி பேசினோம் . செயற்கை நுண்ணறிவு பற்றி நீங்கள் கருத்து தெரிவித்திருந்தீர்கள் . அதாவது , அத்துறைக்கான விதிகளை வகுக்குமாறு பேசியிருந்தீர்கள் . டெக் நிறுவனங்கள் பயனர்களின் பிரைவசி விஷயங்களை சரியாக கடைபிடிக்கின்றனவா ? தொழில்நுட்பம் என்பது ஒரேமாதிரிதான் . ஆனால் அதனை கடைப்பிடிக்க சில விதிமுறைகள் தேவைப்படுகின்றன . உணவுபாதுகாப்புத் துறைக்கு விதிகள் இருப்பது போலவே , விமானத்துறைக்கும் விதிகள் உண்டு . அதேபோல செயற்கை நுண்ணறிவு துறைக்கும் தனியான விதிகள் இயற்றப்படவேண்டும் . பயனரின் அந்தரங்கம் என்பது அவரின் உரிமை . அது பாதுகாக்கப்படவேண்டும் . நாங்கள் ஐரோப்பாவின் விதிமுறைகளை உலகம் முழுக்க பின்பற்றுகிறோம் . கடு

என்பிஆர், என்ஆர்சியில் ரகசியம் ஏதுமில்லை!

படம்
மக்கள்தொகை, குடியுரிமைத் திருத்தசட்டம் தொடர்பான தகவல்கள் எந்த அமைப்புகளுக்கும் அளிக்கப்படாது! சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குடியுரிமை சட்டத் திருத்தத்தில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை என்பதே இல்லை. மேலும் இதில் முஸ்லீம்கள் இந்தியாவில் வாழ்வதற்கான உரிமை என்பதும் விடுபட்டுள்ளதே? குடியுரிமைச்சட்டம் அரசியலமைப்புப் படி சரியானதே. நாட்டிற்கும் மக்களுக்கும் தேவையான சட்டங்களை இயற்ற நாடாளும்ன்றத்திற்கு உரிமை உண்டு. இதுபற்றி அரசமைப்புச் சட்டத்தில் 246 இதற்கான வழிகாட்டும் குறிப்புகள் கிடைக்கின்றன.  நாடாளுமன்றத்திற்கு இருக்கும் அதிகாரமெல்லாம் சரிதான். ஆனால் அதற்காக அங்கு இயற்றப்படும் சட்டம், அரசமைப்புச்சட்டம் அனைவருக்கும் வழங்கும் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக இருக்கலாமா? நாங்கள் சட்டப்பிரிவு 14 படி, குடியுரிமைச்   சட்டத்தை உருவாகியுள்ளோம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகியவற்றிலுள்ள மக்களுக்கு குடியுரிமை வழங்குவதாக கூறியுள்ளோம். இந்திராகாந்தி, உகாண்டாவில் இடி அமீன் ஆட்சியின்போது அங்கிருந்தவர்களை இந்துக்களாக கருதி குடியுரிமையை அளித்தார்.மேலும் இந்

மக்களை பிரிக்கும் அரசியலை நாங்கள் செய்ய மாட்டோம்! - ஹேமந்த் சோரன்

படம்
dh நேர்காணல் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வர் நீங்கள் எதிர்கட்சியைச் சேர்ந்த ரகுபர்தாஸின் மீதான வழக்கை கைவிட்டிருக்கிறீர்களே? மாநிலத்தில் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை இதன்மூலம் தொடங்கியுள்ளேன். சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல நடவடிக்கைகளை உருவாக்க முடியும் என நம்புகிறேன். இதேபோல ஊழல் வழக்குகளையும் தள்ளுபடி செய்வீர்களா? அதற்கு வாய்ப்பில்லை. ஊழல் வழக்குகளில் சட்டவிதிகளுக்கு ஏற்பவே நாங்கள் நடந்துகொள்வோம். இந்த வழக்குகளை நடத்துவதில் எனக்கு எந்தவித உள்நோக்கமும், பழிவாங்கும் எண்ணமும் கிடையாது. உங்களது அரசின் முன்னுரிமைகள் என்ன? மக்கள் எங்களை எளிதில் அணுக முடியும் என்பதுதான். விரைவில் நீங்கள் அதற்கான சான்றுகளை காண்பீர்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் இவற்றைப் பற்றி உங்களது கருத்து? மக்கள் இங்கே வேலைவாய்ப்புகளின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில்அவர்களிடம் ஆவணங்கள் கேட்பது முறையாகாது. பணமதிப்பு நீக்கத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று நொந்து போனார்கள். அந்த துயரம் எங்கள் மாநிலத்தில் மீண்டும் நடக்க நான் அனுமதி

பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்கிறீர்களா? - என்ஆர்சியில் மாட்டும் குழந்தைகள்!

படம்
reddit என்ஆர்சி திட்டத்தில் உங்களை இந்தியர் என நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் தேவை என இந்திய அரசு கூறியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பிறப்புச்சான்றிதழை வாங்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதில் இன்னொரு பிரச்னை உள்ளது. அதாவது படிக்கும், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கும். அதனை காட்டித்தானே பள்ளியில் வயதை சொல்லி சேர்ப்பார்கள். ஆனால் பழங்குடி, பட்டியலின மக்களின் பிள்ளைகள் பள்ளிகளுக்கே செல்வதில்லை. அவர்களிடம் எப்படி மேற்சொன்ன அரசு ஆவணங்கள் இருக்கும். 2005க்குப் பிறகு பிறந்தவர்கள் பெரும்பாலும் பிறப்பு சான்றிதழை வைத்திருப்பார்கள். காரணம், அந்தளவு அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. ஆனால் அதற்கு முந்தைய காலத்தவர்கள் பிறப்பு சான்றிதழை பார்த்திருப்பது கடினம். அது முக்கியமான ஆவணமாக முதல் வகுப்பு சேரும்போது இருந்திருக்கும். அதற்குப்பிறகு பள்ளியில் கொடுக்கும் ஆவணங்களை பிற வகுப்புகளுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இன்று 63 வயதாகும் பெற்றோருக்கும் பிறப்பு சான்றிதழ்கள் தேவை, அவர்களின் பெற்றோர் வயதாகி இருந்தாலும் அவர்களுக்கும் பிறப்ப

சென்சஸிற்கும், என்பிஆருக்கும் என்ன வேறுபாடு? -2021 டாஸ்க் இதுதான்!

படம்
என்ஆர்சி, சிஏபி ஆகியவற்றுக்கு அடுத்த வரிசையில் என்பிஆர் செயல்பாட்டைத் தொடக்க நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்துவிட்டது. தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது, மக்கள்தொகையைக் கணக்கிட உதவும். இதில் பெயர் இருப்பதற்கும், குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் தகவல்கள் பிற அமைப்புகளுக்கு பயன்படுத்தாமலிருக்க எந்த உத்தரவாதமும் கிடையாது. பொதுவாக அரசு இந்த உறுதியை எப்போதும் தந்த து கிடையாது. இனிமேலும் கிடையாது. மக்கள் தொகையைக் கணக்கிடும் தகவல், என்ஆர்சியுடன் இணைக்கப்படாது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆனால் உண்மையில் என்ஆர்சியின் முதல் கட்டப்பணி, இந்தியாவில் உள்ள மக்களைக் கணக்கிடுவதுதான். எனவே, இப்பணியை மாநில அரசு தொடங்க கூடாது என இடதுசாரிகள் கூறிவருகின்றனர். இதன்வழியாகவும் சிறுபான்மையினரைக் கணக்கிட்டு அவர்களை தனி முகாம்களின் அடைக்கும் வாய்ப்பு உள்ளது. என்ன வேறுபாடு? மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் அரசின் என்பிஆருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமூக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டது. அதோடு நிலப்பரப்பு சார்ந்த தகவல்களும் இதில் முக்கியமானவை. என்பிஆ