இடுகைகள்

அரசியலமைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் பெருமையான சாதனைகள்! India@75

படம்
  இந்தியாவின் பெருமையான சாதனைகள்! இந்திய அரசியலமைப்பு இந்தியாவின் அரசியலமைப்பு நாட்டைக் கட்டமைத்ததில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், சமத்துவம், நீதி, சுதந்திரம் ஆகியவற்றை இதில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் குடிமக்களுக்கு வழங்குகின்றன. அனைத்து மாநிலங்களுக்கான உரிமைகளை உள்ளடக்கிய ஒன்றிய அரசு என்பதை அரசியலமைப்புச் சட்டங்களே உறுதிப்படுத்துகின்றன. இன்று அதனை உடைக்க மதவாத கும்பல் முயன்றாலும், அது உருவாக்கப்பட்ட காலத்திலும் இன்றும் வலிமையான ஒன்றாக எளிய மக்களுக்கும் உதவுகிறதாகவே உள்ளது.  அனைவருக்கும் வாக்குரிமை பாலினம், வகுப்பு, கல்வி, சாதி, மதம்  என எந்த பாகுபாடுமின்றி அனைத்து வயது வந்தோர்களுக்கும் வாக்குரிமையை இந்தியா சாத்தியப்படுத்தியுள்ளது. பல்லாண்டுகளாக காலனித்துவ நாடாக இருந்த நாடு இந்தியா. பணக்கார ர்கள் ஏழைகளுக்கான இடைவெளி இன்றும் இருக்கிறது. ஆனாலும் அனைத்து மக்களுக்குமான வாக்குரிமையை இந்தியா சாத்தியப்படுத்தியது மகத்தான சாதனை.  ராணுவ ஒழுக்கம் இந்தியாவில் அருகில் உள்ள பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகளில் ராணுவ கலகம் நடந்துள்ளது. இன்றுவரை பாகிஸ்தானில் ராணுவம்தான் மறைமுக ஆட

நிகழ்காலத்தின் வாளின் முனையில் நாம் நிற்கிறோம்! - ஜவாகர்லால் நேரு - வின்சென்ட் காபோ

படம்
          குறிக்கோள்களை பின்பற்றுதல் ! மக்களவையில் தீர்மானங்களை பற்றி பேசுவதற்கு நான் முன்னமே ஆறு வாரங்களுக்கு முன்னமே தயாராகத் தொடங்கிவிட்டேன் . இதனை உங்களிடம் பெருமையாக கூறிக்கொள்கிறேன் . இந்த தருணம் தன்னகத்தே தனித்துவத்தையும் எடையையும் ஒரு்ங்கே கொண்டுள்ளது . இந்த தீர்மானத்தின் காரணமாக நான் கூறும் வார்த்தைகள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தலாம் . நான் இங்கு மக்களின் முன்னே நிற்பது அவர்களின் எதிர்காலத்தை சரியான முறையில் வடிவமைப்பதற்கான பணி காரணமாகத்தான் . நிகழ்காலத்தின் வாளின் முனை போன்ற முனையில் நாம் நிற்கிறோம் . பல கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக நான் இங்கு நிற்கிறேன் . நமது முன்னோர்கள் நாம் எதிர்பார்த்து நிற்கும் எதிர்காலத்தை உழைத்து பெறுவதற்கான ஆசிர்வாதத்தை வழங்குவார்கள் என நம்பலாம் . நான் கூறியுள்ள தீர்மானம் , மாநிலங்களிலுள்ள ஆட்சியாளர்களை குறிப்பிடவில்லை என்று புதுமையான் விமர்சனங்களும் , மறுப்புகளும் எழுந்துள்ளன . இதுபோன்ற மறுப்பான கருத்தை மாநில ஆட்சியாளரான ராஜா அல்லது மக்களின் பிரதிநிதிகள் எழுப்பலாம் . இவற்றைப் பற்றி மக்களவையில் கூட விவாதிக்கலாம் .