இடுகைகள்

மார்ச், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமரசம் செய்பவர்கள் எழுத்தாளராக முடியாது

படம்
எழுத்தாளர் பென்யாமின் நேர்காணல் சமரசம் செய்துகொண்டால் நிச்சயம் நான் எழுதியிருக்க முடியாது எழுத்தாளர் பென்யாமின் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மலையாள எழுத்தாளர் பென்யாமின், ஜாஸ்மின் டேஸ் என்ற நூலுக்காக ஜேசிபி பரிசை 2018 ஆம் ஆண்டு வென்றிருக்கிறார். இந்த நூல் தந்த தைரியத்தில் தன் வேலையைக் கூட விட்டு விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏறத்தாழ 21 ஆண்டுகளாக செய்து வந்த வேலையைக் கைவிடச்செய்த தன்னம்பிக்கை இந்த நூல் பென்யாமினுக்கு கொடுத்திருக்கிறது. அரபு வசந்தத்தை பின்புலமாக வைத்து எழுதிய உங்கள் நூலில் நீங்கள் சொல்லவருவது என்ன? நீங்கள் எழுதுவது என்பது எதற்காக என்ற முடிவுக்கு வரவேண்டும். ஏனெனில் எதற்கு நாவல் அதில் நீங்கள் கூறுவது என்ன? நாம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறோம் என்பதற்கான ஊடகமே எழுத்து.  நாவல், சிறுகதை, குறுநாவல் இந்த வடிவங்கள் கூட அதற்காகத்தான். ஷியா, சன்னி ஆகிய பிரச்னைகள் இதில் உள்ளதா என்று தெரியவில்லை. எனக்கு இருபிரிவிலும் நண்பர்கள் உண்டு. நாவலில் அரபு தேசத்தின் அரசியல் குறித்து இந்நூலில் பேசியுள்ளேன். ஏறத்தாழ உங்கள் நாவல் மூல

சைலண்ட் கஃபே கலாசாரம்!

படம்
ozy சைலண்ட் கஃபே அதிகரிக்கும் காரணம் என்ன? பிரான்ஸின் பாரீசிலுள்ள மொராக்கன் கஃபேவில் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. ஆம். இங்கு சமையல்காரர் தொடங்கி வெய்ட்டர் வரை அனைவருமே காது கேளாத மாற்றுத்திறனாளிகள். இங்கு உங்களுக்குத் தேவையான உணவு வகைகளை போர்டில் எழுதவேண்டும். அதனை அவர்கள் உங்களுக்குக் கொண்டுவந்து பரிமாறுவார்கள். அந்த உணவகத்தின் பெயர் 1000 & 1 signes. 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் காதுகேளாதவர் உரிமையாளரைக் கொண்ட உணவகம் இது. 2016 ஆம் ஆண்டு ஸாக்ரெப்- குரோஷியா, கோலோஜின்- ஜெர்மனி, லண்டன், யுனைடெட் கிங்டம், டெல்லி, இந்தியா, கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா, பாங்காக், தாய்லாந்து, கோகோட்டா, கொலம்பியா ஆகிய நாடுகளிலும் காதுகேளாதோர் உணவகங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மலேசியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம், காதுகேளாதோருக்கான கஃபே ஒன்றை தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் புதிய கஃபே ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சியையும் ஸ்டார்பக்ஸ் செய்துள்ளது. நிறுவனர், சித் நூவர், ozy பிரெஞ்சு மக்கள், காதுகேளாதோரின் உலகைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு இது. மெனுவில் சைகை

வன்முறையைத் தூண்டுகிறதா இசை?

படம்
பிபிசி மெட்டல் மியூசிக் வன்முறையைத் தூண்டுகிறதா? பொதுவாக ஹெவி மெட்டல் எனும் இசைவகை, வன்முறை கொண்டதாக பலரும் பார்க்கிறார்கள். டாட்டூ குத்தியபடி கிடாரின் கம்பிகள் அறுந்துவிழும் வேகத்தில் இசைக்கும் இசையை பலரும் கேட்டு கெட்ட ஆட்டம் போடுவது உலக வழக்கம். அப்போது அத்தனை பேரின் மனநிலையும் வன்முறையை நோக்கித்தான் குவிகிறதா? என்று ஆராய்ந்தபோது கிடைத்த முடிவுகள் அப்படி அல்ல என்று கூறிவிட்டன. பார்க்கும் படம், சாப்பிடும் உணவு ஆகியவற்றை வைத்து ஒருவரின் கேரக்டரை வரையும் பழக்கம் இந்தியாவில் மட்டும் அல்ல. உலகம் முழுக்கவே உண்டு. இசை கேட்பதும் அதில் ஒன்றுதான். வன்முறையான தீமில் இசை கேட்பது, மனதில் வன்முறையை ஏற்படுத்தும் என்பது தவறு மேக்குவார் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. வறுமை, உறவு, போதைப் பொருட்கள் பயன்பாடு, தனிமை உணர்ச்சி ஆகியவையும் இதனோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. அரிஸ்டாட்டில் இதுபற்றி, ஒருவர் நீண்டநாட்கள் குறிப்பிட்ட வகையிலான இசையைக் கேட்பது அவரின் ஆளுமையை வெளிப்படுத்துவதோடு,  உள்மன ஆசைகளையும் கூறுகிறது என்கிறார். ஆனால் இந்த கருத்துகளையும் தாண்டி மெட்டல் இசை கேட்கும்

மேக்வாவிலுள்ள கனிமங்களைப் பிரித்தெடுக்க முடியுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி எரிமலை மேக்மாவில் நமக்கு கனிமங்கள் கிடைக்குமா? உண்மையாகச் சொன்னால் கிடைக்காது. ஏன் என்றால், மேக்மா பாறைகளை உருக்கியபடி வரும் ஒரு நீர்மம். அதில் கனிமங்கள் உள்ளது உண்மை என்றாலும் அதனை அடர்த்தியான தன்மையில் மாற்றினால் மட்டுமே பயன்படுத்த முடியும். மேக்மாவை குளிரவைத்து கனிமங்களை திட நிலையில் பெறலாம். மேக்மாவை நீரில் கரைத்து அதிலிருந்து கனிமங்களை பிரித்தெடுக்க முயற்சிக்கலாம். நன்றி: பிபிசி

பதற்றத்தைக் கட்டுப்படுத்தும் உணவுகள் உண்டா?

படம்
blackdog institute ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பதற்றத்தை கட்டுப்படுத்தும் உணவுகள் எது? ஈஸ்ட்டை அடிப்படையாகக் கொண்ட உணவுகள், பி வைட்டமின்கள் என சாப்பிட்டாலே மனதில் ஏற்படும் பதற்றம் குறையும் என்கிறது ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சி செய்தி. வைட்டமின் பி12,  நம் மனநிலையைக் கட்டுப்படுத்தும் செரடோனினை உற்பத்தி செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதோடு பருப்புகள், மீன் உள்ளிட்ட ஒமேகா 3 அமிலம் கொண்ட உணவுகள் பதற்றத்தை குறைக்க உதவுவதாக தைவான் ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன. நன்றி:பிபிசி

லவ் இன்ஃபினிட்டி 21: சுடும் வாழ்க்கையைப் பழகினேன்

படம்
மாங்கா. டோக்கியோ 21 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு:  உத்தம் சிங், சிக்கந்தர் இதுநாள் வரை மைதிலி ஏன் அவ்வளவு தூரம் விலகி நின்றாள் என்பது அந்த கணம் புரிந்துவிட்டது. என்ன செய்வது? காலம் கடந்துவிட்டது. ஒருவாரம் மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். நான் நண்பர்களோடு ஒருநாள் போய் பார்த்தேன். மெலிதாக இருந்த தேகத்தில் உயிர் கபடி விளையாடிக் கொண்டிருந்தது. முகத்தில் அனைத்தும் முடியப்போவதற்கான நிம்மதி அதிகரித்திருந்தது. உடலில் புரிந்துகொள்ளமுடியாத ஒளி தெரிந்தது. நான் வெடித்து அழுதுவிடுவேனோ என்று பயந்தேன். மெல்ல சமாளித்து, மைதிலியின் பெற்றோர் முகம் பார்க்காமல் கவனமாக வெளியே வந்தேன். மருத்துவமனையில் நோயாளி மட்டுமல்ல, அங்கிருப்பவர்களின் முகங்கள் கூட இருள்சாயத்தில் முழுகிவிடுகின்றன. இருள்சாயத்தில் நம்பிக்கையின் ஒளியை எங்கே போய் தேட.... அவள் இறந்த மாதம் நவம்பர் வேறு. எனக்குப் பிடித்த மாதம் என்பதோடு, மழையின் ஈரம், மண்ணின் அணுக்களில் சொட்டிக்கொண்டே இருக்கும் நேரமும் அதுவே. மெல்ல கரைந்தழுந்துகொண்டே பைக்கில் காங்கேயத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பினேன். பாப்பினி பிரிவ

வலியறியாத பெண்!

படம்
kth வலியறியாத பெண்! ஸ்காட்லாந்து பெண், மரபணு மாற்றத்தால் வலியிலிருந்து குணமாகும் தன்மையைப் பெற்றுள்ளதோடு, காயத்திலிருந்தும் விரைவாக குணமடைந்திருக்கிறார். இதன்விளைவாக, வலி காயத்திலிருந்து விரைவாக குணமாகும் சிகிச்சைகளைப் பற்றி ஆராய்ச்சிகளை தொடங்கியுள்ளனர்.  ஜோ கேமரூன் என்ற 66 வயது பெண்மணி, ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். மேலும் இடுப்பெலும்பு மாற்று அறுவைசிகிச்சையும் அவருக்குத் தேவைப்பட்டது. இதற்கான சிகிச்சைகள் கடுமையான வலிதரும் என்பதால் கேமரூன் பயத்துடன் இருந்தார். சிகிச்சையின்போது மருத்துவர்கள் அவரது உடல்நிலை, வலி குறித்து கேட்டுக்கொண்டே இருந்தனர். மணிக்கட்டு உடைந்தபோதும், காயங்களிலும் வலி இல்லாததை உணர்ந்தார்.  கேமரூன், ஆக்ஸ்ஃபோர்டு மரபணு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்டார்.  அப்போது அவருக்கு மரபணு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் FAAH எனும் மரபணு வலியற்று இருப்பதற்கு உதவுவதாகக் கண்டறியப்பட்டது. இதில் அதே பெயரிலான என்சைமும் உதவுகிறது. அதேசமயம் இந்த மரபணு அமைதியாக்கப்படுவதால், காயம் வேகமாக குணமாகிறது. அதோடு வலி, காயம் தொடர்பான ப

கல்வியில் தடுமாறும் இந்தியா!

படம்
franchise india இந்தியா, சீனாவை விட மூன்று மடங்கு அதிக பள்ளிகளைக் கொண்டுள்ளது. ஆனாலும் கல்வித்தரத்தில் பலமடங்கு கீழே உள்ளது. என்ன காரணம் உள்ளது?  கல்வி உரிமைச்சட்டம்  நூறு சதவீதம் கல்வியை வலியுறுத்துகிறது. ஆனால் கல்வியில் குறிப்பிட்ட தரத்தை கொண்டு வர அரசு தடுமாறி வருகிறது. தற்போது நிதி ஆயோக், கல்வியில் பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. ஆனாலும் பிரச்னைகளுக்கான வேராக உள்ளது, திறன் வாய்ந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் நியமிக்கப்படாதே ஆகும். ”இந்தியா எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் ஆபத்து ஆசிரியர்கள் பற்றாக்குறையே ஆகும். இந்த சூழலில் கல்வியில் சிறந்த திறனை எட்டுவது என்பது மிகவும் சிரமம்” என்கிறார் நிதி ஆயோக் ஆலோசகரான ஆலோக் குமார் மற்றும் சீமா பன்சால்(இயக்குநர், போஸ்டன் ஆலோசனை நிறுவனம்) சீனாவில் ஐந்து லட்சம் பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால் இந்தியாவில் பதினைந்து லட்சம் பள்ளிகள் இயங்கியும் நம் குழந்தைகளுக்கு சரியான கல்வியை பயிற்றுவிக்க முடியவில்லை. இந்தியாவிலுள்ள நான்கு லட்சம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 50 தான் என்றால் நம்புவீர்கள

லவ் இன்ஃபினிட்டி: காதல் தேசம் நானும் கடந்தேன்

படம்
அனா கரோலினா\ பின்ட்ரெஸ்ட் 20 லவ் இன்ஃபினிட்டி 20 குமார் சண்முகம் தொகுப்பு: இளங்கண்ணன், விசாலாட்சி பிருந்தாகிட்ட நான் என்ன சொன்னேன். நான் எதுவுமே சொல்லல. நீ அருகம்புல்லு மாதிரியான அழகின்னேன். சார், என்ன நான் பின்னாடி சுத்தும்போதெல்லாம் ரெட் சிக்னல் கொடுப்பாரு. இப்ப க்ரீன் கிடைச்சுரும் போலயே  ன்னு சிரிச்சா. கள்ளி! ஐஸ்க்ரீம் அவளோட கழுத்தில இறங்கிறது தெரிஞ்சுது.  அவளுக்கு எல்லாமே தெரியும். எனக்கு தெரிஞ்சு கவிக்கு அடுத்தபடியா ஏதாவது கிஃப்ட் அனுப்பிக்கிட்டே இருக்கிற ஒரே ஜீவன் அவதான். திடீர்னு காலேஜூக்கு ஒரு பார்சல் வந்தது. எடுத்துப் பார்த்தா, சட்டை. இவளோட பேரும் நம்பரும் மட்டும் இருந்தது. எதுக்கு இதெல்லாம் பணறேன்னு கேட்டேன். ஐபிசி படி இதெல்லாம் தப்பா? ன்னு ஒரு கேள்வி கேட்டா. அசந்துட்டேன். அப்பவே முடிவுக்கு வந்துட்டேன். இது ஸ்கூல்ல படிச்சப்ப பார்த்த பிருந்தா இல்லன்னு. என்ன அப்டேட். வேகம். அதனால்தான் சொல்றேன். பெண்களிடம் ஆண்கள் போட்டி போட்டு ஜெயிக்கவே முடியாது. அவர்களாக விரும்பினால் தோற்கிற மாதிரி தன்னைக் காட்டிக்குவாங்க. ஆனால் உண்மையில் தோற்கிறது ஆண்கள்தான்

துல்லியமான உணர்ச்சிப் பெருக்கு கொண்ட சிறுகதைகள் - தீண்டா திருமேனி

படம்
பனுவல் தீண்டா திருமேனி ஆர்.வெங்கடேஷ் அகநாழிகை மொத்த தொகுப்பில் பதினெட்டு கதைகள். ஒவ்வொன்றும் அதன் விரிவான தகவல்கள், நறுக்கென்ற வாக்கியங்கள் ஆகியவற்றால் தனித்து தெரிகின்றன. ஆசிரியரின் கதாபாத்திரங்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் நினைவுகளை, கசப்புகளை சுமந்துகொண்டு திரிகிறார்கள். முதல் கதையான அலைவரிசை தொடங்கி, புதிய கோணங்கள் குறுநாவல் வரைக்கும் இது அப்படியே தொடர்கிறது. இறுதியில் அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்கிறார்கள் அல்லது இறைவனைத் தஞ்சமடைந்து ஆறுதல் அடைகிறார்கள். இதுவேதான் இந்த நூலின் அடிச்சரடாக உள்ளது. குருஷேத்திரம், ஒவ்வொரு முறையும், ஒரு கேள்வி ஆகிய சிறுகதைகளின் நாயகர்கள், எளிமையானவர்கள். அதேசமயம் கனவுகளை அழியவிட்டு வேடிக்கை பார்த்து மனம் புழுங்குபவர்கள். வாழ்க்கையின் எதார்த்தத்திற்காக சந்தோஷ் அடிபணிந்தாலும் தான் அடகு வைக்கும் தன்மானம், சந்தோஷம் ஆகியவை பற்றிய கவனம் எப்போதும் அவருக்கு இருக்கிறது.  ஒரு கேள்வி, வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கு பணிந்தவரை(மணி) ஒரு கேள்வி வெடிக்கும் எரிமலையாக்குகிறது. அது மனதில் புதையுண்டு போனாலும் சிறிய கேள்வி, அவர் பெற்ற தோல்வியை நினைவி

நிலவு இல்லாத பூமி?

படம்
bbc ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி நிலவு இல்லையென்றால் என்னாகும்? நிலவு பூமியைச் சுற்றி வருகிறது. ஒருவேளை நிலவு இல்லாதபோது, பூமியில் என்ன மாற்றம் நடக்கும்? கடல் அலைகளின் எழுச்சி குறையும். சூரியனின் ஈர்ப்பு விசை மட்டுமே பூமியைப் பாதிக்கும். தினசரி நேரத்தில் 0.002 நொடி வித்தியாசம் ஏற்படும். இப்போது பூமி 23.5 டிகிரி கோணத்தில் உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசை இதனை இந்த இடத்தில் பொருத்தியுள்ளது. ஆனால் நிலவு இல்லாதபோது, இந்நிலை மாறும். செவ்வாய் 60 டிகிரி கோணத்தில் அதன் வட்டப்பாதையில் சாய்ந்துள்ளது ஈர்ப்புவிசை வலிமையற்ற துணைக்கோள்களால்தான். நன்றி: பிபிசி

நமக்கு இறக்கை முளைத்தால் என்னாகும்?

படம்
bbc முன்பு அதிக எடை கொண்ட பறவையாக இருந்தது, அர்ஜென்டாவிஸ் மேக்னிஃபைசென்ஸ். இது வாழ்ந்த காலம் 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு. இதன் உயரம் எடை ஆகியவை அப்படியே இன்றைய மனிதனுக்குப் பொருந்தும். இதன் இறக்கை நீளம் ஆறு மீட்டர். இதன் இறக்கையை அடிக்கடி அசைப்பது சிரமம் என்பதால், சில அசைவுகளுக்கு பிறகு ஓய்வெடுத்து பின் இறக்கைகளை அசைக்கின்றன. நமக்கு இறக்கை முளைத்திருந்தால், நாம் இதுபோல முயற்சிக்கலாம்.  இறக்கைகள் நமக்கு இருக்கவேண்டுமெனில், பெக்டோரல் தசைகள் விலாவில் இருக்கவேண்டும். அதுவும் பாடிபில்டர்களுக்கு விலாவிலிருந்து விரிகிறதல்லவா? அதே தசைதான். ஆனால் இருமடங்கு சைசில் இருக்கவேண்டும். மேலும் இதனை வலுவாகப் பயன்படுத்த இந்த தசைகளோடு நெஞ்செலும்பும் வலுவாக இருக்க வேண்டும்.  உடலுக்குள் புகும் ஆக்சிஜனை மிக எளிதாக இறக்கைகளுக்கு செலுத்தி அதனை சக்தியாக மாற்றுபவை பறவைகள். மனிதர்களும் அதேயளவு திறனைப் பெற ஆக்சிஜன் சிலிண்டர்களை உதவிக்கு முதுகில் பொருத்திக்கொள்ளலாம்.  நன்றி: பிபிசி

டாய்லெட் பேப்பருக்கு என்னாகிறது?

படம்
bbc ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி டாய்லெட் பேப்பருக்கு என்னாகிறது? டாய்லெட் பேப்பர் என்பது எளிதில் கிழிக்க முடிவதற்குக் காரணம், அது செல்லுலோஸ் இழைகளால் தயாரிக்கப்படுவதே. மேலும் டாய்லெட் நீரிலேயே அதனைப் போட்டாலும் எளிதில் கரைந்து கூழ் போலாகும் தன்மை அதற்கு பிளஸ். சிங்கில் உள்ள வடிகட்டி போன்றவற்றில் சிக்கிக் கொள்வதை சுகாதாரப் பணியாளர்கள் சேகரிக்கின்றனர். அதனை மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பிவிடுகின்றனர். டாய்லெட்டரின் பேப்பரின் வாழ்வு அதோடு முடிவுக்கு வருகிறது. நன்றி: பிபிசி

சர்க்கரை சாப்பிடும்போது என்னாகிறது?

படம்
birdee சர்க்கரை சாப்பிடும்போது என்னவாகிறது? சர்க்கரை பிடிக்காதவர்கள் யார் உண்டு. அனைவருக்கும் சர்க்கரை மீது தனி ஆசை உண்டு. அமெரிக்காவின் பென்சில்வேனியா, உலகின் சாக்லெட் தலைநகரம் என்று அழைக்கப்படும் அளவு புகழ்பெற்றது. சர்க்கரை உணவுகளை சாப்பிடத் தொடங்குவதால் ஏராளமான பிரச்னைகளை உடலுக்கு ஏற்படுகின்றன. இதன் பாதிப்புகள் பலருக்கும் ஏற்பட, அதன் தாக்கத்தை அனைவரும் உணரத் தொடங்கியுள்ளனர். நரம்பியல் அறிவியலில், உணவு என்பது இயற்கையான பரிசாக கூறப்பட்டுள்ளது. உயிரினமாக நாம் வாழ்வதற்கு, சாப்பிடுவதும், பாலுறவும்  முக்கியமானது. மூளையின் முன்புறத்திலுள்ள நியூக்ளியஸ் அகும்பென்ஸ், சாக்லெட் கேக்கை சாப்பிடலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. இதிலுள்ள டோபமைன் எனும் ஹார்மோன், கேக்கின் சுவையை மூளையில் பதிந்து வைத்துக்கொண்டு மீண்டும் அதனை உண்ணுமாறு தூண்டுகிறது. இதிலும் கூட இனிப்பை மட்டுமே அதிகம் தேர்ந்தெடுப்போம். காரணம் ஆதிகாலத்து உணர்வுதான். இயல்பாகவே இனிப்பு என்பது சரியான உணவாகவும், கசப்பு என்பது விஷம் எனவும் நம் மூளையில் பதிந்துள்ளது. இது பல்வேறு தலைமுறையாக நம் ஜீனில் பதிந்து வந்த

இந்தியா தொழில்நுட்பத்தில் முந்துகிறதா?

படம்
தி ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் இந்தியா தன் சாட்டிலைட்டை தானே தகர்த்து, தொழில்நுட்ப ரீதியிலும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் சீட்டையும் ரிசர்வ் செய்துவிட்டது. இந்தியாவின் தாக்குதல் பரப்பு 1000 கி.மீ. (தற்போது நடந்த தாக்குதல் 300 கி.மீ.பரப்பு) ரஷ்யா  600 கி.மீ. அமெரிக்கா 6000 கி.மீ. சீனா 10000 - 30000 கி.மீ. இருவகை சாட்டிலைட் ஏவுகணைகள் டாசாட்(DAASAT) இவ்வகை ஏவுகணையே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டது. இன்டர்செப்டர் சிஸ்டம் உதவியின்றி வட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோளை அழிக்கும் சக்தி கொண்டது. வட்டப்பாதை ஏவுகணை இதனை முதலில் வட்டப்பாதையில் பொருத்தி பின்னர் செயற்கைக்கோளை நோக்கிச் செலுத்தி அதனை அழிப்பது. இதிலும் சீனாவை ஒப்பீடு செய்தால் இந்தியாவுக்கு மிஞ்சுவது ஏமாற்றம்தான். காரணம், விண்வெளி குப்பைகளை லேசர் ஆயுதம் மூலம் அழிப்பது வரை யோசித்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது சீன விடுதலைப்படை. பூமியைச் சுற்றி 320 ராணுவச் செயற்கைக்கோள்கள் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன. இதில் முந்துவது அமெரிக்கா. அமெரிக்கா 140 செயற்கைக்கோள்களையும், ரஷ்யா 80 செயற்கை

விடுதலை, சுதந்திரம் பற்றிய உளவியல் குறிப்பு

படம்
Add caption மரணவீட்டின் குறிப்புகள் தாஸ்தாயெவ்ஸ்கி அலெக்சாண்டர் பெட்ரோவிச் என்ற பிரபு ஒருவரின் கதை. அவர் தன் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ரஷ்யாவின் சைபீரியாவில் மிக பாதுகாப்பான சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள், சந்திக்கும் மனிதர்கள்தான் கதை. இதில் முக்கியமானதாக தாஸ்தாயெவ்ஸ்கி விவாதிப்பது, விடுதலை, சுதந்திரம், சிறையின் தன்மை ஆகியவை பற்றித்தான். முதலிலேயே சிறை வாழ்வை அலெக்சாந்தர் அனுபவிக்கத் தொடங்கி விடுகிறார். ராணுவம் மற்றும் பிற மக்கள் செய்யும் குற்றங்களுக்கும் அச்சிறைவாழ்வுதான் கிடைத்தது. ஆனால் இருபிரிவாக பிரித்து சிறைதண்டனை கைதிகள் வாழ்ந்து வருகின்றனர். நன்னடத்தை அடிப்படையில் கைதிகளைப் பிரித்து அவர்களுக்கென தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் கைதிதான். நான் எனும் அடையாளத்தில் வரும் கைதிகள் மெல்ல ஒடுங்கி சிறையின் சுவர்களுக்குள் இளமையைத் தொலைத்து வெளிவரும்போது சமூகத்தில் வாழும் தன்மையை தொலைத்தவர்களாக மாறிவிடுவதை அசத்தலாக எழுதி உள்ளார் தாஸ்தாயெவ்ஸ்கி. முழுக்க உளவியல்ரீதியான தன்மையில் சென்று டக்கென கதை முடிந்துவிடுகிறது. அ

’இந்தியாவின் சக்தி அதிகரித்துள்ளது’

படம்
சதீஸ் ரெட்டி, டிஆர்டிஓ நேர்காணல் இந்தியா தன் சாட்டிலைட்டை ஏவுகணை மூலம் தகர்த்து எறிந்துள்ளது. சக்தி எனும் திட்டத்தைப் பற்றி டிஆர்டிஓ இயக்குநகர் சதீஸ் ரெட்டி பேசுகிறார். இந்தியா இன்று உலகநாடுகளின் லிஸ்டில் இணைந்துள்ளது. நீங்கள் இந்த திட்டம் பற்றி விரிவாக கூறுங்களேன்.  சக்தி எனும் இத்திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2016-17 வாக்கில் தொடங்கினோம். திட்டத்தை வேகமாக்கியது ஆறுமாதங்களுக்கு முன்புதான். முன்பே நடைமுறையில் உள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த புதிய ஏவுகணையை உருவாக்கி சாதித்துள்ளோம். இதில் சந்தித்த சவால்களைப் பற்றிக் கூறுங்கள். இதில் பயன்படுத்திய தொழில்நுட்பம் பற்றி பேசமுடியாது. ஆனால் இதில் சவால்கள் என்பது மூன்று இடத்தில் இருந்தது. இலக்கின் மீதான துல்லியம், இலக்கை சரியான கோணத்தில் தாக்கும் திட்டம், டெக்னாலஜியைப் பயன்படுத்தி இலக்கை சரியான முறையில் அணுகுவது ஆகியவை பெரும் சவாலாக இருந்தது. இதன்மூலம் நாம் அடையும் நிலை என்ன? இந்தியா தயாரித்துள்ள இந்த செயற்கைக்கோள் முழுமையாக இந்தியாவில் தயாரானது என்ற பெருமை கொண்டது. இதன் அமைப்பு, மென்பொருட்கள், சென்ச

லவ் இன்ஃபினிட்டி: காதல் சொல்லப் போறேன்!

படம்
behance 19 லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ராஜா தேசிங்கு, மியான் வாட்ஸ் நாம எல்லாத்தையும் படிச்சிருப்போம் தெரியும்னு நினைப்போம். ஆனா, உண்மை என்னன்னா, தேவைப்படும்போது அதனை மறந்திருவோம். நம் அனுபவத்துல பதிஞ்ச விஷயங்கள் மட்டும்தான் நம்மை எப்போதுமே காப்பாத்தும். மத்த விஷயங்கள் எல்லாம் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் நம்மை கைவிட்டுவிடும். இங்க அறிவுங்கறதும், அனுபவம்கிறதும் வேறுவேறு. நீங்க ஓஷோ, வேதாத்திரின்னு பல பண்டல் புத்தகங்கள ஷெட்யூல் போட்டு படிக்கலாம். இப்போ பாருங்க, காதலோ, காமமோ, ஒரு உறவு குறித்தோ நெருக்கடி வருது. அதில் எடுக்கிற முடிவு உங்க வாழ்க்கையை மாத்தப்போவுது. இதில நீங்க என்ன செய்ய முடியும்? உங்க அறிவு உதவும்னு நினைக்கிறீங்களா? நிச்சயம் இல்லை. நான் சந்திச்ச எல்லா பெண்களிடம் நான் இந்த விஷயத்தைப் பார்த்தேன். அதாவது, நாம சாதிக்க முடியாததை இவன் சாதிக்கணும்னு ஒரு எண்ணம். தூண்டுதல் இருக்கு. ஆனால் அது ஏன்? அப்படி இருக்கணும்னு என்ன இருக்கு? நான் அவங்களுக்கு  எழுதின letter லேயும் அன்னைக்கு அப்படித்தான் எழுதியிருக்கேன். ஆகா வைரஸ் எப்படி பரவுது பாத்தீங்

சீஸ் டேட்டா!

படம்
target ஃபிரான்ஸ் நாடு, உலகிலேயே சீஸ் தயாரிப்புக்கு புகழ் பெற்றது. தோராயமாக 300 வகை சீஸ்களை தயாரித்து வருகிறது. பர்கருக்கு பயன்படுத்துகிறார்களே அவ்வகை சீஸின் பெயர் ஃபிரோமேஜ் ஃபிரான்காய்ஸ். இதில் ஆரஞ்சு சுளை போன்று வசீகரிக்கும் அமெரிக்க சீஸ் என்பது தனிப்பட்டது. பீட்ஸா, பர்கர் சாப்பிட்டுப் பழகியதால் இன்று இந்தியர்களே எக்ஸ்ட்ரா சீஸ் டாப்பிங்க்ஸ் கேட்டுவாங்கி சாப்பிட்டு பில் கொடுக்கிறார்கள். அப்போது அமெரிக்கர்கள் மட்டும் சும்மாயிருப்பார்களா?  ஜூன் 2018 இல் மட்டும் 840 பவுண்டுகள் அளவிலான சீஸை காலி செய்திருக்கின்றனர். இந்த ஆண்டின் ஜனவரியில் அதன் அளவு 805 பவுண்டுகளாக உள்ளன. ஒரு அமெரிக்கர் நான்கு பவுண்டுகள் சீஸ்களை லபக்குகிறார். கடந்த ஆண்டின் அமெரிக்க சீஸ் மார்க்கெட் மதிப்பு, 2.77 பில்லியன் டாலர்கள்.  கிராஃப்ட் சிங்கிள் எனும் சீஸ் பிராண்டை அமெரிக்கர்களில் 40 சதவீதம் பேர் விரும்பி வாங்குகின்றனர். கடந்த ஆண்டு பதப்படுத்தப்பட்ட சீஸ் விற்பனை 1.6% அளவுக்கு குறைந்தது. அரைமணிநேரத்திற்கு குறைவான நேரத்தில் 65.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சீஸை வெப்பப்படுத்தினால், அது பதப்படுத்த

இறப்பு பற்றி பேசலாம் வாங்க!

படம்
quartz டெத் கஃபே! கடந்த ஆண்டு 88 வயதான சாட்ஸி வெஸ்பெர்கர் தன் இறுதிச்சடங்கை தன் உறவினர்களுடன் தானே கொண்டாடினார். நியூயார்க்கின் ஆர்ட் ஆஃப் டையிங் இன்ஸ்டிடியூட்டில் இவர் பட்டதாரி. இறப்பு குறித்த தானட்டோலஜி படிப்பை கற்றார். ஆறுமாதப் படிப்பில் இடையே, முதல் மாதத்திலேயே  டெத் கஃபேவில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கத் தொடங்கினார். என்ன செய்வார்கள் இந்த டெத் கஃபேயில்? கேக்கை சாப்பிட்டபடியே டீ குடித்தபடி இறப்பை பற்றி பேசவேண்டும் அதுதான் கான்செஃப்ட். டெத் கஃபே இயக்கம், 2000 ஆம் ஆண்டு தொடங்கியது. ஸ்விஸ் சமூகவியலாளர் ஜோன் அண்டர்வுடின், அமைதியிலிருந்து இறப்பை மீட்டெடுக்க வேண்டும் என்று  கூறினார். டெத் கஃபே செயல்பாடுகளை வரைமுறைப்படுத்தியவர் இவர்தான். இன்று டெத் கஃபேக்கள் 65 நாடுகளில் செயல்பட்டுவருகின்றன. உலகம் முழுக்க செயல்படும் டெத் கஃபேக்களின் மொத்த எண்ணிக்கை 8,059. ஃபேஸ்புக்கில் 52 ஆயிரம் பேர்களுக்கு மேல் டெத் கஃபே பக்கத்தை பின்பற்றுகிறார்கள். அமெரிக்காவிலுள்ள 60 சதவீத மார்ச்சுவரி பள்ளி மாணவர்களில் பெண்களே அதிகம். உலக மக்கள் தொகையில் 3% பேர் வயது 60 மற்றும் அதற்கும் அதிக

பாலின பாகுபாடற்ற பள்ளிகள் - என்ன பயன்?

படம்
familiesmagazine.com.au பாலின பாகுபாடற்ற சூழல் சாத்தியமா? செய்தி: பாலின பாகுபாடற்ற குழந்தைகளுக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கான பொம்மைகள், உடைகள் உலகெங்கும் விற்பனையாகத் தொடங்கியுள்ளன. ஆண்களுக்கு ப்ளூ கலர், பெண்களுக்கு பிங்க் கலர் என பிரிக்கும் பாகுபாடு கூட இனி இருக்காது. ஆண் குழந்தைகளுக்கு கார், ரயில் பொம்மைகளும் பெண் குழந்தைகளுக்கு கரடி, பார்பி பொம்மைகளும் வாங்குவது கூட தற்போது குறைந்து வருகிறது. என்ன காரணம்? பாலின பாகுபாடு குறித்து உணர்வு பெற்றோர்களுக்கும் ஏற்பட்டதுதான். பாலின பேதமற்ற உடைகள் பாலின பாகுபாடற்ற கலாசாரத்தில் ஆண், பெண் குழந்தைகளுக்கான பொம்மை, உடை என்பது தனித்தனியான தேர்வாக இருக்காது. பெண்குழந்தைகள் கிச்சன் செட் வைத்து விளையாடுவதும் கூட அவர்களின் தேர்வாகவே இருக்கும்.மேற்குலகில் தொடங்கிய இந்த கலாசாரம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவிலும் வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு சிறந்த உதாரணம், ஃபிளிப்கார்ட், தன்னுடைய வலைத்தளத்தில் பாலின பாகுபாடற்ற பொம்மைகளுக்கான ஃபில்டர் ஒன்றை உருவாக்கியுள்ளதுதான். இதனால் என்ன லாபம்? குழந்தைகள் தன்னம்பிக்க

லவ் இன்ஃபினிட்டி: அன்பைத் தவிர வேறெதுவுமில்லை

படம்
18 லவ் இன்ஃபினிட்டி  குமார் சண்முகம் தொகுப்பு: ஹர்வீன் கௌர், ரிதேஷ் -மாதேஷ் டயரியில் இருந்து... உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம் எனக்கு... நிறைய எழுதணும்போல இருக்கும். எழுதுவேன். ஆனாலும் எதிலும் நேர்த்தி கைகூட மாட்டேன்கிறதே. . இப்படி கிழித்து போட்ட காகிதங்களைப் பார்த்து எங்க அம்மா கூட திட்டினாள். நோட்டு வாங்கறதுக்கே சொத்த  அழிச்சிருவே போல ன்னு. இதை ஸ்லோமோஷன்லே பாத்தேன். அம்மா கூட அம்புட்டு அழகு. எல்லாமே உன்னால்தான். என்னை எப்படி இப்படி மாற்றினாய்? 26.2.2002 அன்று எழுதி உன்னிடம் கொடுக்காத கடிதம். உன் இல்லத்தில் உள்ளவர்களும், இதயத்தில் உள்ளவர்களும் நலமாக இருக்க வேண்டும் என்பதே இறைவனை நான் வேண்டிக் கேட்கும் வரம். இந்தக் கடிதம் நான் உனக்கு கொடுத்த கவிதை புக் உடன் சேர்ந்திருக்க வேண்டியது. காலம் தாழ்த்தி கிடைத்தாலும் பரவாயில்லை. நான் உனக்கு கொடுத்த Note இல் எழுதியிருந்ததைப் படித்து பதில் எழுது. வழக்கம்போல் இல்லாமல் விரிவாக! ரைட்.. வெரி வெல், நன்றாகச் சாப்பிடு. உடம்ப பத்திரமா பாத்துக்க. அதிகநேரம் படிச்சு தூங்காம இருக்காத. பாரு, உன்கிட்ட பேசும்போது உன்னோடு அம்மாவ

லவ் இன்ஃபினிட்டி: காலம் வழிவிடுமா?

படம்
http://t.co/YIlRU8s0mw லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ரித்திக் சிங் டயரியில்... புதிரா புனிதா என்று நீங்கள் மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் எனக்குப்பிடித்தத்தைத்தான் செய்து வந்தேன். அப்பா சொன்னார், சுப்பா சொன்னார் என்பதெல்லாம் நான் விரும்பவில்லை. எனக்கு பெண்களை விதிவிலக்கின்றி பிடிக்கும் என்பதை முன்னாடியே சொல்லிவிட்டேன். ஆனால் எந்த பெண்ணை ரொம்ப பிடிக்கும் என்பதையும் லேசாக சொல்லிவிட்டேன். கடிதம் எழுதுவது, கடிதம் எழுதிய நோட்டைக் கொடுப்பது என நட்பு ஆண், பெண் இருவரிடமும் வளர்ந்து வந்தது. 25.2.2002 இந்த புள்ளியளவு எனக்கு உன் மனதில் இடமிருந்தால், போதும். Pongal சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டிருப்பாய். நீ Kavi யை  மட்டும் பொங்கலுக்கு கூப்பிட்டாய். ஆனா என்னை கூப்பிடலை. அதனாலென்ன, பரவாயில்லை விடு. நேரில் உன்னோடு பேசணும். என்னிக்கு அப்படிப் பேச சந்தர்ப்பம் அமையும்? பக்கத்தில் உன்னோடு அமர்ந்துகொண்டு நிறைய சண்டை போடணும்.  கவிதை, கதை, பூக்கள், பூமி, இந்த வாழ்க்கை, உன் வாழ்க்கை, உன் வீட்டு பருத்திச்செடி, உன் bus, பயணங்கள், உன் சந்

போனை யூஸ் பண்ணாதீங்க!

படம்
போனை யூஸ் பண்ணாதீங்க! சீன போன்களின் பெருக்கம் வந்த பிறகு, அனைவரும் போன்களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டோம். தற்போது இதனை ஆல் இன் ஆல் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தி வருகிறோம். இதன்விளைவாக படுக்கை அறையிலும் லேப் டாப் வைத்து ஹாட் ஸ்பாட்டில் கனெக்ட் செய்து வேலை பார்ப்பது இன்றைய நெருக்கடி. ஆனால் இதன் விளைவாக தூக்கமின்மை அதிகரித்து வருகிறது. படுக்கை விட்டு தள்ளி வைங்க தூங்குவதற்கு முன்பு 30 நிமிடத்திற்கு முன் சமூக வலைத்தளங்களை விட்டு விலகினால் உங்கள் தூக்கத்திற்கு பிரச்னையில்லை. அந்த நேரத்திலும் ஸ்நாப்சாட் படங்கள், இன்ஸ்டாகிராம் அழகிகள் என ஜொள்ளுவிட்டு போனின் ஸ்க்ரீனை எச்சிலால் நனைத்தால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. 2017 ஆம் ஆண்டு செய்த ஆய்வுப்படி, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு தூக்க குறைபாடு ஏற்படும் என்கிறது. நோட்டிஃபிகேஷன்ஸ் வேண்டாமே! போனின் முக்கியமான எரிச்சல். புதிய பதிவுகளைக் காட்டும் நோட்டிஃபிகேஷன்களின் ஒலிதான். இது நிச்சயம் எந்த தூக்கத்தையும் நடுவில் கொஞ்சம் டிஸ்டர்ப் செய்யும். சிஹெச்டி எனும் அமைப்பு, நோட்டிஃபிகேஷன்கள் இல்லை என்றால் தூக்கம் பெ

லவ் இன்ஃபினிட்டி: காதல் சொல்லிப் பழகு!

படம்
weddingchicks.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: இனியன், கவிதவன் பிரகாஷ் கவிதைகள் பற்றி பேசினேன் அல்லவா? அதுதான் என்னை உயிரோடு வைத்திருப்பதாக வெகுநாள் நினைத்திருந்தேன். ஆனால் அப்படி அல்ல; அம்மா போட்ட சோறுதான் என்னை அப்படி நினைக்க வைத்திருந்தது என பின்னால் தெரிந்துகொண்டேன். கவிதை எழுதுகிறவர்கள் கண்டிப்பாக காதலிக்கவேண்டும் என்பது என்ன விதியோ? நான் என் மாமன் பொண்ணு பிரியா முதற்கொண்டு காதலிக்க முயன்று தோற்றுக்கொண்டே இருந்தேன். ஒருத்தரை பிடித்திருக்கிறதென சொன்னால், அவர் என்ன சாதி என்பது முதல் கேள்வி. அடுத்து, அவர் சொந்த சாதி என்றால் பொருளாதாரம் குறுக்கே நந்தியாய் நின்றால் என்ன செய்வது? அப்போது காலேஜில் ஒரே ஆறுதல், ஏடாகூட மூர்த்திதான். காலையில்  பேப்பர் போட்டுவிட்டு வேலைக்கு அசால்டாக வருபவன், படிப்பில் சாதிப்பான். ஆனால் எதுவுமே தெரியாது. சுறுசுறுவென ஓடுவான். நினைத்த நேரத்தில் மோட்டரோலா போனில் ஸ்டோர்மி டேனியல்ஸின் படத்தை மின்னலாக முடுக்கி பார்த்துக்கொண்டிருப்பான். எப்படிடா? அதெல்லாம் அப்படித்தான். என்பான். அவனுக்கு முரடன் செந்தில் பழக்கமானதிலிருந்திலிருந்து ந

மாறவேண்டிய கல்விப் பார்வை!

படம்
கல்வி ஊழல்கள்! புகழ்பெற்ற பெருமை வாய்ந்த கல்லூரிகளில் படிப்பது யாருக்குத்தான் பிடிக்காது. இதுவே அமெரிக்காவில் 25 மில்லியன் டாலர்கள் ஊழல் செய்யத் தூண்டியுள்ளது. இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் கல்வி என்பது செல்வந்தர்களுக்கு கட்டுப்பட்டதாகவே, அவர்களால் வாங்க கூடியதாகவே உள்ளது. இதில் அமெரிக்க  உதாரணம் தற்போது கவனம் பெற்றிருக்கிறது. உலகிலேயே ஹாங்காங்தான் கல்விக்கு அதிகம் செலவழித்து வருகிறது. ஒரு குழந்தைக்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 400 ரூபாய் (தோராய அளவு)செலவிடுகின்றனர் ஹாங்காங் பெற்றோர். இந்த ஆய்வை பதினைந்து நகரங்களில் உள்ள 8, 481 பெற்றோர்களிடம் செய்துள்ளனர்.  இது உலகளவில் கல்விக்கு செலவிடும் அளவை விட மூன்று மடங்கு அதிகம்.  ஹாங்காங்கை அடுத்து அரபு அமீரகம் கல்விக்காக அதிகம் செலவழிக்கிறது. வெற்றிக்கான வழி படிப்பு என்று எண்ணிவிடக்கூடாது. இன்று பார்ச்சூன் இதழில் இடம்பெறும் 500பேர்களில் 30 பேர் மட்டுமே குறிப்பிட்ட பல்கலையில் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். இன்று செயற்கை  நுண்ணறிவு நம் வேலைவாய்ப்புகளை விரைவில் பறித்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. இன்னும் பழைய முறையில் படித