இடுகைகள்

அரசியல் எழுத்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமரசம் செய்பவர்கள் எழுத்தாளராக முடியாது

படம்
எழுத்தாளர் பென்யாமின் நேர்காணல் சமரசம் செய்துகொண்டால் நிச்சயம் நான் எழுதியிருக்க முடியாது எழுத்தாளர் பென்யாமின் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மலையாள எழுத்தாளர் பென்யாமின், ஜாஸ்மின் டேஸ் என்ற நூலுக்காக ஜேசிபி பரிசை 2018 ஆம் ஆண்டு வென்றிருக்கிறார். இந்த நூல் தந்த தைரியத்தில் தன் வேலையைக் கூட விட்டு விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஏறத்தாழ 21 ஆண்டுகளாக செய்து வந்த வேலையைக் கைவிடச்செய்த தன்னம்பிக்கை இந்த நூல் பென்யாமினுக்கு கொடுத்திருக்கிறது. அரபு வசந்தத்தை பின்புலமாக வைத்து எழுதிய உங்கள் நூலில் நீங்கள் சொல்லவருவது என்ன? நீங்கள் எழுதுவது என்பது எதற்காக என்ற முடிவுக்கு வரவேண்டும். ஏனெனில் எதற்கு நாவல் அதில் நீங்கள் கூறுவது என்ன? நாம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறோம் என்பதற்கான ஊடகமே எழுத்து.  நாவல், சிறுகதை, குறுநாவல் இந்த வடிவங்கள் கூட அதற்காகத்தான். ஷியா, சன்னி ஆகிய பிரச்னைகள் இதில் உள்ளதா என்று தெரியவில்லை. எனக்கு இருபிரிவிலும் நண்பர்கள் உண்டு. நாவலில் அரபு தேசத்தின் அரசியல் குறித்து இந்நூலில் பேசியுள்ளேன். ஏறத்தாழ உங்கள் நாவல் மூல