குடும்பத்தால் ஏற்படும் இறந்தகால அவமானங்களுக்கு தற்காப்புக்கலை கற்றுக்கொண்டு பழிவாங்கும் இளைஞன்!
மார்சியல் மாஸ்டர் ஃபிரம் மார்சியல் லைப்ரரி மங்காகோ.காம் முரிம் கூட்டணியில் கூலிப்படையில் வேலை செய்யும் தற்காப்புக்கலை வீரரான இளைஞருக்கு வேலை ஒன்றை கொடுக்கிறார்கள். வேலைக்கு மறுக்க முடியாதபடி அதிக காசும் கொடுத்து துணைக்கு இரண்டு வலுவான வீரர்களையும் அனுப்பி வைக்கிறார்கள். நாயகன், ஒரு கற்பலகை ஒன்றை தேடி கொண்டு வந்து கொடுக்கவேண்டும். ஆனால், அதை அடையச் செல்லும் பாதை முழுக்க ஏராளமான பொறி அமைப்புகள். அதை உடைத்துக்கொண்டு போக முயன்றதில் நாயகனைத் தவிர்த்து அனைவருமே இறந்துவிடுகிறார்கள். அந்தளவுக்கு கற்பலலை உள்ள இடத்தில் அம்பு, ஈட்டி, விஷம் என நிறைய பொறிகளை அமைத்து வைத்திருக்கிறார்கள். நாயகன் எப்படியோ தப்பி பிழைத்து சுரங்கம் போன்ற பாதை வழியாக ஊர்ந்து சென்று கற்பலகையை கண்டுபிடித்துவிடுகிறான். அதிலுள்ள வினோதமாக எழுத்துகளை தன் கையைக் கடித்து அந்த ரத்தம் மூலமாக எழுதிக்கொள்கிறான். கிரந்த எழுத்துக்கள் போல பார்க்க வினோதமாக படிக்க பொருளை அறியமுடியாதபடி இருக்கிறது கற்பலகையின் தொன்மை எழுத்துகள். அதை தொட்டு பார்க்கும்போது எதேச்சையாக விரலிலுள்ள ரத்தம் கல்லில் படுகிறது. உடனே கணினி உயிர் பெற்றதைப் ...