இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயகத்தை சக்தி வாய்ந்த அமைப்புகள் தடுக்கின்றன!

படம்
பேட்ரிக் பாசம் , இயக்குநர் , ஜனநாயக கழகம் . உலகம் முழுக்க பாப்புலிச சிந்தனை கொண்டவர்கள் வென்று அதிபர்களாகவும் , பிரதமர்களாகவும் உருவாகி வருகிறார்கள் . அப்போது ஜனநாயக சிந்தனை வலுவிழந்து வருகிறதா என்று கேள்வி எழுகிறது அல்லவா ? அதற்குத்தான் சரியான பதில்களை அளிக்க ஜனநாயக தன்மையை ஆராய்ந்து வரும் பேட்ரிக் பாசத்தைச் சந்தித்தோம் . ஜனநாயகம் இன்று என்ன நிலையில் இருப்பதாக கருதுகிறீர்கள் ? ஜனநாயகம் இன்று பல்வேறு சவால்களை சந்தித்தாலும் சரியான நிலையில்தான் இருப்பதாக நினைக்கிறேன் . ஆனால் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் இனி ஜனநாயகத்திற்கு உலகில் இடமில்லை என்று பேசி வருகிறார்கள் . அதற்குக் காரணம் அவர்கள் உருவாகி வந்த இடம்தான் என்று நான் அறிவேன் . மக்கள் இன்று தங்களின் அரசியல் நிலைமை சரியில்லை என்று நினைக்கத் தொடங்கியுள்ளனர் . அதனை தங்களது வாக்குகள் மூலம் மாற்ற முயல்கின்றனர் . தொண்ணூறுகளில் ஏற்பட்ட உலகமயமாக்க மாற்றங்களால் பணக்காரர்கள் பயன் பெற்றதாக மக்கள் நினைக்கிறார்கள் . இதனால்தான் அவர்களுக்கு பாப்புலிச தலைவர்களின் வாக்குறுதிகள் நம்பிக்கை அளிக்க அவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் .

மனதில் எழும் எண்ணங்களை கட்டுப்படுத்துவதுதான் கஷ்டம்! - ஈஷா சிங்

படம்
ஈஷா சிங் , துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆங்கிலத்தில் - சித்தார்த் சக்சேனா ஈஷா சிங் , பதிமூன்று வயதிலேயே தேசிய அளவிலான பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரவில் பதக்கம் வென்றிருக்கிறார் . அவரது வெற்றி , போட்டி தயாரிப்பு , அவர் தவறவிட்ட விஷயங்கள் என பேசினோம் . துப்பாக்கி சுடும் வீரராக இல்லாமல் ஈஷா சிங்காக தினசரி நாள் எப்படி தொடங்கும் ? நான் சிறுவயதிலிருந்து துப்பாக்கிக்கான பயிற்சிகளை எடுத்து வருகிறேன் . இதனால் பள்ளிகளில் விளையாட்டு விழா , ஆண்டுவிழா , சுற்றுலா போன்ற விஷயங்களில் பங்கேற்க முடியாது . துப்பாக்கி சுடுதலில் வென்றது சந்தோஷம்தான் . ஆனால் என் பள்ளி தோழிகள் பள்ளிவிழாவில் தாம் பங்கு பெற்ற புகைப்படங்களை எனக்கு அனுப்பும்போது கஷ்டமாக இருக்கும் . ஏனெனில் நான் அந்த நேரத்தில் போட்டிகளில் பங்கேற்று இருப்பேன் . அல்லது பயிற்சிகளில் இருப்பேன் . போட்டிகளுக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு செல்லும்போது அனைவரின் கண்களும் என்னைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் . இது எனக்கு கடுமையான மன அழுத்தத்தை தருகிறது . ஆனால் என்ன , நான் என் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துவிட்டேன் . அதை நோக்கிச் செல்கிறே

இன்று சகிப்புத்தன்மையை யாரும் விரும்புவதில்லை! அன்புள்ள அப்பாவுக்கு

படம்
பிக்சாபே 11 அன்புள்ள அப்பாவுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? நான் எனது ஜாதகம் பற்றி சில விஷயங்களை சோதித்துப் பார்த்தேன் . எனக்கு பெரும்பாலும் ராசிபலன்களிலேயே நல்ல பலன்கள் கிடைத்தது கிடையாது . இதில் ஜாதகத்தில் என்ன கிடைக்கப்போகிறது ? அப்படித்தான் நண்பர் ஜனாவும் சொன்னார் . அவர் இதனை நம்புகிறார் . நான் அதனை அறிவியல் முறையாக ஏற்கிறேன் . அதாவது கணக்கீடுகள் . நடக்கும் அனைத்திற்கும் முன்னோர் வினைதான் காரணம் என்று வருத்தப்பட்டு உட்கார்வதால் என்ன கிடைக்கும் ? உண்மையிலேயே பணம் என்பதை பொருட்டாக எடுக்காமல் சோதிடர் ஒருவர் ஜாதகம் பார்த்தால் மட்டுமே இது சாத்தியம் . பூமியும் சுற்றுகிறது . பூமியிலுள்ள நாமும் அதன்படியே இயங்குகிறோம் . எனவே ஜோதிடத்தில் துல்லியமான பலன்களை கண்டறிவது கடினம் . அப்படியும் சரியாகச் சொல்லிவிட்டால் , நமக்கு நேரும் துயரங்களைத் தடுக்க முயற்சிக்கலாம் . நீங்கள் பேசும் திருமணம் சாதாரண காரியமல்ல . நிறைய சோதனைகள் , நெருக்கடிகள் உள்ளன . ச . அன்பரசு 26.5.16 12 அன்புள்ள அப்பாவுக்கு , வணக்கம் . வாழிய நலம் . திருமண வாழ்க்கை நீ

இந்தியாவைப் போன்ற மத சுதந்திரம் பாக்.கில் கிடையாது!

படம்
ஆரிஃப் ஆஜாகியா , மனித உரிமைகள் செயற்பாட்டாளர் . பாகிஸ்தானின் சட்டங்கள் மற்றும் ராணுவத்தை கடுமையாக விமர்சித்து வந்தவர் ஆரிஃப் . தற்போது வெளிநாட்டில் வசிப்பவர் , தாய்நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீற்ல்களைக் கண்டித்துப் பேசி வருகிறார் . பாகிஸ்தானில் நடைபெறும் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசி வருகிறீர்கள் . அங்கு நடைபெறும் முக்கியமான பிரச்னையாக எதனைக் கூறுவீர்கள் ? அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய புகார்கள் , செய்திகள் நம்பிக்கை அளிக்கும்படி இல்லை . ராணுவத்தின் சொல்படி நடப்பவர்தான் அங்கு பிரதமராக முடியும் . பாக் . ராணுவம் சிந்து , பலுசிஸ்தான் , கைபர் பக்துன்காவா ஆகிய பகுதிகளில் கடுமையான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியுள்ளனர் . அங்கு சுதந்திரமாக பேசுவது கூட குற்றமாக கருதப்படுகிறது . குழந்தை தொழிலாளர்கள் , கொத்தடிமை முறை , பாலியல் தொழில் , குழந்தைகளின் மீதான வன்முறை ஆகியவை பாக்கில் சாதாரணமாக நடைபெற்று வருகிறது . மசூதிகளிலும் மதராசாக்களிலும் இதுபோன்ற அநிதீகள் நடந்தாலும் , அவை இன்னும் கண்டுகொள்ளப்படவிலைல . பாக்கில் சிறுபான்மையினர் மீது மனித உரிமை மீறல்கள் ந

அரசு கொள்கைகளை வகுத்தால் மட்டுமே பூமியைக் காக்க முடியும்!

படம்
நாம் நினைத்ததை நிலைமை மோசமாக உள்ளது டேவிட் வாலஸ் வெல்ஸ் , நியூயார்க் மேகசின் கூடுதல் ஆசிரியர் . வெப்பமயமாதல் பற்றி தி அன்ஹேபிட்டபிள் எர்த் என்ற நூலை எழுதியுள்ளார் . ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவுக்கு வந்தவரிடம் பேசினோம் . நீங்கள் உங்கள் நூலின் தொடக்கத்திலேயே இப்போது உள்ளதை விட நிலைமை மோசமாகும் என்று கூறியுள்ளீர்களே ? நாம் என்ன செய்துள்ளோம் என்று கூட தெரியாதபடி வெப்பமயமாதலுக்கான விஷயங்களை செய்து விட்டோம் . இப்போது 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்தால் கூட புயல்கள் , கடலின் நீர்மட்டம் உயர்வது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் . கொல்கத்தா போன்ற நகரங்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் . வெப்ப பாதிப்பால் பலரும் சுருண்டு விழுவார்கள் . வெப்பமயமாதலால் , 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சூழல் அகதியாக இடம்பெயர்வார்கள் . 150 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் காற்று மாசுபாட்டால் இறப்பார்கள் . இதுமட்டுமன்றி , ஆர்க்டிக் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் கரையும் . இதனை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதை திட்டமிடுவது அவசியம் . இதில் நிலப்பரப்பு ரீதியான அரசியல

பெரியார் சொன்னதை அன்றே மக்கள் ஏற்கவில்லை!

படம்
ஹரிஹரன் ராஜா சர்மா என்றால் பலருக்கும் புரியாது . ஹெச் . ராஜா என்றால் அனைவரும் புன்னகை பூப்பார்கள் . அந்தளவு பா . ஜ . கவின் புகழை தமிழகத்தில் பரப்ப பாடுபட்டு வருபவர் இவர் . பெரியாரை அவதூறு செய்வது , உயர்நீதிமன்றத்தை ஏக வசனத்தில் திட்டுவது என எப்போதும் சர்ச்சையின் மையத்தில் இருப்பது இவரது பாணி . அவரிடம் பேசினோம் . உள்ளாட்சித் தேர்தலில் பா . ஜ . க சொல்லிக்கொள்ளும்படி வெற்றிபெறவில்லையே . தமிழகத்தில் ஏன் உங்கள் கட்சி இன்னும் தடுமாறி வருகிறது ? இது கற்பனையான வாதம் . நாங்கள் சில இடங்களில் மட்டும்தான் போட்டியிட்டோம் . நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெற்றுள்ள வாக்குகளைப் பார்த்தாலே தெரியும் . நாங்கள் மெல்ல முன்னேறி வருகிறோம் . தமிழகத்தில் பா . ஜ . கவிற்கு எதிராக இருக்கும் மனநிலையைப் பற்றி .... அது உண்மை அல்ல . நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அப்படி ஒரு மனநிலை இருப்பதாக தோற்றத்தை உருவாக்கினார்கள் . இது மாறிவிடும் தன்மை கொண்டதுதான் . பெரியார் இறந்து நாற்பது ஆண்டுகளுக்கும் பிறகு அவரைச்சுற்றி அரசியல் அமைந்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

லஜபதிராய் இந்து, முஸ்லீம் பிரச்னையை முன்னதாகவே அடையாளம் கண்டார்!

படம்
மாதவ் கோஸ்லா படம்- இந்தியன் எக்ஸ்பிரஸ் மக்கள்தான் அவர்களுக்கான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் மாதவ் கோஸ்லா , அசோகா பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா சட்டப்பள்ளி ஆகிய அமைப்புகளில் பேராசிரியராக பணிபுரிகிறார் . ஆங்கிலம் மூலம் : நளின் மேத்தா இந்திய அரசியலமைப்பு சிஏஏ போன்ற சட்டங்களை ஏற்பது சரியானதா ? இல்லை . அது தவறானது . மக்கள் உருவாக்கும் சட்டங்களில் இதுபோன்ற விஷயங்கள் இருக்கக்கூடாது . நான் இவற்றை அரசியலமைப்புச்சட்டத்தில் இணைக்க விரும்பவில்லை . லாலா லஜபதி ராய் தன் அரசியல் பயணத்தின் தொடக்கத்தில் இந்துத்தவ பார்வையைக் கொண்டிருந்தாரா ? லாலா லஜபதி ராய் முக்கியமான அரசியல் ஆளுமை . அவர் வாழும் காலத்தில் மதத்தைப் பின்பற்றினால் அது பெரிய சிக்கலாக மாறும் என்பதை மனப்பூர்வமாக அறிந்திருந்தார் . இந்து மதம் மற்றும் இஸ்லாமிய மதம் ஆகியவற்றுக்கு இடையில் எழும் வேறுபாடுகளையும் அவர் அடையாளம் கண்டார் . அன்றைய காலத்தில் அம்பேத்கருக்கும் , லாலா லஜபதிராய்க்குமான மதரீதியான வேறுபாடுகள் தீவிரமாக இருந்தன . இந்து மகாசபையைச் சேர்ந்த சாவர்க்கர் , கோல

சமூக வளர்ச்சிக்கு உதவும் திட்டம்தான் காலை உணவு வழங்கும் திட்டம்!

படம்
சென்னையில் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு அக்சயா பாத்ரா அமைப்புடன் இணைந்து தொடங்கியுள்ளது . பெங்களூருவைச் சேர்ந்த இந்த அமைப்பு பல்வேறு மாநிலங்களுடன் இணைந்து பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது . அமைச்சர் வேலுமணி இத்திட்டம் பற்றி ட்விட்டரில் முன்னமே அறிவித்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி எந அறிவிப்பையும் வெளியிடவில்லை . அக்சய பாத்ரா அமைப்பின் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கட்டிடம் பேசினோம் . தமிழ்நாடு அரசு மதிய உணவுத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது . அதுபற்றிய உங்கள் கருத்து ? தமிழ்நாடு அரசின் மதிய உணவுத்திட்டம் பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடியான திட்டமாக உள்ளது . இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன . உங்களது அமைப்பு இந்தியாவில் உள்ள பன்னிரண்டு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது . ஆனால் தமிழகத்தில் உங்களுக்கென சமையல் செய்ய ஒரே ஒரு சமையற்கூடம்தானே உள்ளது ? நாங்கள் வரும் மார்ச்சிலிருந்து சென்னை கார்ப்பரேஷன் அமைப்புடன் இணைந்து 5, 090 மாணவர்களுக்கு நாங்கள் கா

கற்பனையால்தான் மனிதகுலம் வளர்ச்சி பெற்றதா?

படம்
மிஸ்டர் ரோனி  நீரின் கொதிநிலை மாறுமா? நீரின் கொதிநிலை என்பது அங்குள்ள அழுத்தத்தைப் பொறுத்தது. கடல்மட்டத்தில் நீங்கள் இருந்தால் அங்கு அழுத்தம் தோராயமாக 1013 ஹெக்டாபாஸ்கலாக இருக்கும். நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். அதுவே நீங்கள் இமயமலையில் உட்கார்ந்து இருந்தால் அங்கு நீரின் கொதிநிலை 71 டிகிரி செல்சியஸாக இருக்கும். வேகமாக நீரைக் கொதிக்க வைத்துவிடலாம்.  நீரை கொதிக்கவைக்கும்போது, நீர் மூலக்கூறுகள் அலைவுற்று நீராவியாகின்றன. அந்த நீராவி மூலக்கூறுகளின் அழுத்தம், அச்சூழலின் அழுத்தத்திற்கு  சமமாகுவதே நீரின் கொதிநிலை எனலாம். வெயிலில் காய வைக்கப்படும் துணி வெளுத்துப்போவது ஏன்? ஒரு பொருளின் துணியிலுள்ள நிறத்தை தேக்கி வைக்கும் மூலக்கூறு அமைப்புக்கு குரோமோபோர் என்று பெயர். இதன்மீது ஒளியிலிருந்து வரும் போட்டான்கள் பட்டு உட்கவரப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஒரு பொருளின் வண்ணம் தீர்மானிக்கப்படுகிறது. சிவப்பு வண்ண உடைகளை வேகமாக வெளுத்துப்போகின்றன. காரணம், அவை அதிகளவு ஒளியிலுள்ள போட்டான்களை ஈர்க்கின்றன. இதனால் அதன் குரோமோபோர் அமைப்பு சிதைகிறது. இதனால் அதன் நிறம் மங்குகிறத

நட்சத்திரமாக என்னை நினைக்கவில்லை. நான் நடிகன்தான்! - ராஜ்குமார் ராவ்!

படம்
நேர்காணல் ராஜ்குமார் ராவ், இந்தி நடிகர் உங்களது மனதில் இப்போது என்ன உணர்வு உள்ளது? மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னிடம் பிளான் பி ஏதும் கிடையாது. நடிக்கவேண்டும் என நினைக்கிறேன். இதனை என் வாழ்நாள் முழுக்க செய்ய ஆசைப்படுகிறேன். அவ்வளவுதான். இயக்குநர் ஹன்சல் மேத்தாவுடன் அதிக படங்களை செய்கிறீர்களே? அவருடன் முதல் படம் பணியாற்றியபோது 2013ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். இப்போது மீண்டும் அவரோடு இணைந்து ஐந்தாவது படம் செய்கிறேன். வேலை என்பதைத் தாண்டி அவர் என் குடும்ப நண்பர் போல ஆகிவிட்டார். காரணம், நாங்கள் சினிமாவின் மீது வைத்துள்ள ஆர்வம், ஆசைதான். நாங்கள் இருவரும் சொல்ல நினைக்கும் கதைகளை விஷயங்களை மக்களுக்குச் சொல்ல ஒன்றாக இணைகிறோம். நட்சத்திர அந்தஸ்து எப்படி இருக்கிறது? அப்படி ஒன்று எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை. நான் நடிக்க விரும்பி இங்கு வந்தேன். நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னை நம்பி அளிக்கும் கதாபாத்திரங்களுக்கு நேர்மையாக இருக்கவேண்டும். அவற்றை மக்கள் ரசிக்கவேண்டும். இறுதியாக நான் சொல்ல விரும்புவது நான் நடிகன் மாத்திரமே. இன்று படத்தின் கதையை முக்கியமாக பார்க்கிறார்