இடுகைகள்

அரசு மருத்துவமனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதைக் காப்பாற்றும் வாசிப்பும் எழுத்தும்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  21.3.2022 மயிலாப்பூர் அன்புக்குரிய கதிரவனுக்கு, வணக்கம்.  எப்படி இருக்கிறீர்கள்? தேர்தல் கால பணி செய்திகள் முடிவுக்கு வந்திருக்கும். சென்னையில் வெயில் தாக்கம் மெல்ல கூடி வருகிறது. எனது அறையில் அனல் வீசுகிறது. இரவு உறங்குவது கடினமாகி வருகிறது. காய்ச்சல் வந்தவரின உடல் போல வேர்த்துக் கொட்டுகிறது.ஏறிய வெப்பம் ஏறியதுதான்.  கடும் வெயில் நடுக்கும் குளிர் என இனி வாழ்க்கை நடக்கும். ஐஐடிஎம் பற்றிய செய்தி ஒன்று எழுதினேன். தாய் நாளிதழில் தாறுமாறு ஆபரேஷன் செய்ததில் செய்தி ஏதும் விளங்கவில்லை.  நான் எழுதிய அமைச்சர் பற்றிய ஒற்றைக் குறிப்பு, எடிட்டர் என்மீது கோபப்பட அத்தனை வாய்ப்புகளையும் தந்தது.  சந்தேகம் வந்தால் இனி எழுதாதே என்று சொல்லிவிட்டார்.  இந்த மாதம் நாளிதழ் வேலைகள் முடிந்தவுடன் ஊருக்குப் போக வேண்டும். பார்ப்போம் திட்டம் எந்தளவு சாத்தியமாகிறது என்று...தற்போதைக்கு எழுதுவதும், வாசிப்பதும், தேநீர் குடிப்பதும் பெரிய விடுதலையாக இருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை சந்திக்காத புதிய மனிதர்களைச் சந்திப்பேன் என நினைக்கிறேன்.  பன்பட்டர்ஜாம் என்ற கட்டுரை நூலை எழுதிவருகிறேன். கோமாளியான சர்வாதிகாரி நாட்டு மக்

அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுகின்றன

படம்
விக்கிப்பீடியா நேர்காணல்: இதயநோய் மருத்துவர் ரமணகாந்த் பாண்டா இதயநோய் பிரச்னைகள் மரபணுரீதியாக இந்தியாவில் அதிகரிக்க வாய்ப்புண்டா? நோய் மேம்பாடு தொடர்பாக இன்று மருத்துவர்கள் மிகச்சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளனர். உடல்நல மேலாண்மை குறித்த ஆர்வம் வளர்ந்தால் மட்டுமே அடுத்த தலைமுறையை எப்படி நல்லமுறையில் வளர்ப்பது? இந்தியர்கள் கண்ணை மூடியபடி மேற்கத்திய உணவுப்பழக்கத்தை பின்பற்றுவது பல்வேறு நோய்களை உருவாக்கி வருகிறது. இன்று உருவாகிவரும் பல்வேறு டயட் முறைகள், ஆராய்ச்சியின்பாற்பட்டு உருவாகி வருவதல்ல. இன்ஸ்டன் பலன்களை எதிர்பார்த்து உருவாகும் இந்த டயட்களை நம் உடல்நலனை பாதாளத்தில் தள்ளுவது உறுதி. குப்பை உணவுகள் குறித்து அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது. உடல்பருமனைக் குறைப்பதற்கு அறுவை சிகிச்சை மட்டுமேதான் ஒரே வழியா? இன்றைய நோயாளிகள் யாரும் ஏமாளிகள் அல்ல. அவர்கள் பலரும் மருத்துவர்கள், இணையம் என கருத்துக்களை கேட்டுவிட்டே அறுவைசிகிச்சை முடிவுக்கு வருகிறார்கள். அறுவைசிகிச்சையைத் தவிர்க்கும் நிலையிலும் அவர்கள் அதுவே ஆரோக்கியத்தை தரும் என்று வற்புறுத்தும்போது மருத