கிராமங்களை விட்டு வைக்காத நோய்த்தொற்று! - கடிதங்கள்
வேலையைக் காப்பாற்றிக்கொள்ள சம்பள வெட்டு! வடக்குப்புதுப்பாளையம் 19.4.2021 அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? சென்னையில் அறையில் வெப்பக் கொடுமை என்றால் வீட்டில் ஆஸ்பெஸ்டாஸ் மற்றும் இரும்புக்கூரை உள்ள அறையில் வேலை செய்கிறேன் . இது வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டப்பட்டது . வீட்டின் மற்ற அறைகள் சிறியவை . வேலை செய்வதற்கு காற்றோட்டமாக இல்லை . அடுத்த ஆண்டிற்கான வேலைகளை செய்து வருகிறோம் . இந்த ஆண்டில் வேலையை காப்பாற்றிக்கொண்டு முழு சம்பளம் வாங்குவது கடினமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது . ஜீரோ டு ஒன் என்ற தொழில்சார்ந்த நூல் ஒன்றை பிடிஎப் வடிவில் போனில் படித்தேன் . ஸ்டார்ட்அப் நிறுவனங்களை எப்படி தொடங்குவது , என்ன மாதிரியான அணுகுமுறை வெற்றியைக் கொடுக்கும் என பல்வேறு கருத்துகள் நூலில் இருந்தன . 180 பக்கங்கள்தான் . நூல் ஆங்கிலம் என்பதால் புரிந்துகொண்டு வாசிக்க காலதாமதமாகிவிட்டது . தொழில் நிறுவனங்களின் சூப்பர் ஐடியா , சொதப்பல் ஐடியா , தொழில் சார்ந்த மூடநம்பிக்கைகள் என நிறைய விஷயங்களை ஆசிரியர் பேச