இடுகைகள்

மலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடலில் தங்கும் மலம்!

உங்கள் உடலில் மலம் எவ்வளவு நேரம் தங்கியிருக்கிறது என்பது உங்கள் நோய் அபாயத்தில் அதிர்ச்சியூட்டும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் பீட்டர் டாக்ரில் நீங்கள் அடிக்கடி இதைப் பற்றி யோசிக்காமல் இருக்கலாம், ஆனால் எந்த நேரத்திலும், உங்கள் உடல் நீங்கள் சமீபத்தில் உட்கொண்ட அனைத்து உணவையும் செரிக்க பிஸியாக இருக்கிறது. நேற்று இரவு நீங்கள் சாப்பிட்ட அந்த சுவையான பீட்சாவா? அதிலிருந்து வரும் ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு எரிசக்தியை வழங்குவதற்காக அறுவடை செய்யப்படுகின்றன, மேலும் பயன்படுத்த முடியாதவை மெதுவாக மலமாக மாற்றப்படுகின்றன - உங்கள் அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள். இந்த செயல்முறை எடுக்கும் நேரம் ஒவ்வொரு நபருக்கும் மிகவும் மாறுபடும், மேலும் நேரம் நீங்கள் நினைப்பதை விட முக்கியமானதாக இருக்கலாம். உண்மையில், உங்கள் 'குடல் பயண நேரத்தின்' (gut transit time) காலம் இறுதியில் உங்கள் ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. 2023 ஆம் ஆண்டு Gut இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையில், டென்மார்க் மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியா...

தெரிஞ்சுக்கோ - மலம்

படம்
  பீயுக்கும் ஈயுக்கும் என்னலே ஃபிரெண்ட்ஷிப்பு?   என ஓரம்போ படத்தில்   ஜான்விஜய் கேட்பார். காரண காரிய சமகால நட்பை, அந்தளவு கேவலமாக   கொச்சையாக ஆனால் மனதிற்கு உண்மையாக யாரும் சுட்டிக்காட்டி சொல்ல முடியாது. அதை விடுங்கள். மலம் என்றாலும் அதிலும் விஷயம் இருக்கிறது. உடலில் இருந்து வெளியேறும் மலத்தில் பல்வேறு கிருமிகள், தேவையில்லாத வேதிப்பொருட்கள் இருக்கும். அவை வெளியேறினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பசு ஒருநாளில் சுரக்கும் எச்சிலின் அளவு 98- 190 லிட்டர். மனிதர்கள் தம் ஆயுளில் வெளியிடும் அபான வாயுவின் அளவை வைத்து இரண்டாயிரம் பலூன்களை நிரப்பி வானில் பறக்க விடலாம். பலூன் வெடித்தால் என்னாகும் என்ற கேள்வியை த.வி.வெங்கடேஷ்வரனிடம் கேட்டுக்கொள்ளுங்கள். அபானவாயு, ஏப்பம், மலம் ஆகியவற்றை பண்ணை விலங்குகளான பசு, பன்றி, ஆடு மற்றும பிற விலங்குகள் வெளியிடுகின்றன. இதனால் உலகளவில் அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுவின் அளவு, 14.5 சதவீதம் ஆகும். ஜெயன்ட் பாண்டா, ஒருநாளுக்கு நாற்பது முறை மலம் கழிக்கிறது. யானை தினசரி பதினைந்து முறை சாணத்தை வெளியேற்றுகிறது. இந்த வகையில் நூறு கிலோ சாணம்...

டீ குடித்தால் கழிவறை நோக்கி ஒடுகிறீர்களா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி காபி, டீ குடித்தால் உடனே மலம் கழிக்கத் தோன்றுவது ஏன்? உடனே பீதியாகாதீர்கள். எனக்குக்கூட என் அம்மா வைக்கும் ரசத்தைச் சாப்பிட்ட உடனே பாத்ரூமுக்கு ஓடுவேன். அது குடும்பத்தில் நடக்கும் பழிக்குப்பழி சமாச்சாரம். அதை விடுங்கள். டீ, காபியில் ஏன் அப்படி நடக்கிறது?  காரணம் அதிலுள்ள ஊக்கமூட்டிகள் குடலை சற்று நெகிழ வைப்பதுதான். இதனால் உலகிலுள்ள 60 சதவீதம் பேர் காபியை ஆசையோடு குடித்துவிட்டு தலைதெறிக்கும் வேகத்தில் பாத்ரூமில் அடைக்கலமாகிறார்கள். இது தவிர்க்க முடியாது. இதுவே சாப்பிட்ட உடனே மலம் கழிக்கும் பழக்கம் சிலருக்கு இருக்கும் .இதனை ஆயுர்வேத த்தில் கழிச்சல் நோய் என்பார்கள். இதனை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். எனவே, டீ, காபியை குறைத்துக்கொண்டால் மலம் வேகமாக வெளியேறும் வேகத்தைக் குறைக்கலாம். உடலிலுள்ள நீரும் இதன் காரணமாக வேகமாக வெளியேறும் என்பதால் கவனம் தேவை. நன்றி: பிபிசி