இடுகைகள்

கோட்பாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அவதாரம் 2 - குற்றமூலம் மின்னூல் வெளியீடு

படம்
    உளவியல் சார்ந்த சிறு மின்னூல்தான். இந்த நூலில் உளவியலாளர்கள், அவர்களின் கோட்பாடுகள் பற்றி சுருக்கமாக எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. உளவியல் சார்ந்து அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கு நூல் ஆர்வமூட்டும்படியாக இருக்கும். நூலை அமேஸான் தளத்தில் வாசியுங்கள்.  நூலை வாங்க..... https://www.amazon.in/dp/B0CM33G8QT

அவதாரம் 2 - குற்றமூலம் - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
  சமர்ப்பணம் திரு. கணியம் சீனிவாசன் அவர்களுக்கு.... அட்டை வடிவமைப்பிற்கு உதவி  ஜிம்ப் மென்பொருள் அட்டைப்படம்  பின்டிரெஸ்ட்

இவான் பாவ்லோவ் செய்த உளவியல் ஆராய்ச்சி

படம்
          இவான் பாவ்லோவ்     1890 ஆம் ஆண்டு , ரஷ்ய மருத்துவரான இவான் பாவ்லோவ் உளவியல் கோட்பாடுகளை ஆய்வு மூலம் அமெரிக்கா , ஐரோப்பாவிற்கு நிரூபிக்க நினைத்தார் . விலங்குகளை பழக்க முடியும் . அவற்றை குறிப்பிட்ட முறையில் பழக்கி எதிர்வினையைப் பெறலாம் என்பதே இவானின் ஆய்வு நோக்கம் . ஆய்வகம் என்பது கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளைக் கொண்ட இடம் . அங்கு விலங்குகளை வைத்து சோதனை செய்து அதன் வழியாக முடிவுகளைப் பெறுவது , அதை வைத்து சோதனைகளை மனிதர்களுக்கு செய்வது என்பதே இறுதி திட்டம் . ஒருவரின் குணநலன் என்பது அவர் வாழும் சூழலோடு தொடர்புள்ளதாகவே உள்ளது . அதன் அடிப்படையில்தான் குண மாறுதல்கள் அடையாளம் காணப்படுகின்றன . ஊக்கமூட்டுதல் – எதிர்வினை என்ற கோட்பாட்டை ஜான் வாட்சன் உருவாக்கினார் . இந்தக் கோட்பாடு ஒரு சிறிய உதாரணம்தான் . இதன் அடிப்படையில் ஏராளமான கோட்பாடுகள் உருவாகின . அமெரிக்கா , ஐரோப்பாவில் உள்ள மக்களும் இதை ப்பற்றி அறிந்துகொள்ள முயன்றனர் . அப்போது , வியன்னா நாட்டைச் சேர்ந்த நரம்பியலாளர் மனம் பற்றிய புதிய கோட்பாட்டை உருவாக்கினார் . அதுவரை உளவியல் பற்றிய ஆய்வறிக்கைகள் கோட்பாடுகள்

அசுரகுலம் 5 - ரகசிய நரகம் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  ரகசிய நரகம், அசுரகுலம் தொடர்வரிசையில் ஐந்தாவது நூல். இந்த சிறுநூல், குற்றங்களை செய்வதில் உள்ள பல்வேறு உளவியல் அணுகுமுறைகளை ஆராய்கிறது. சிக்மண்ட் பிராய்ட் தொடங்கி அதற்கு பிறகு உருவான உளவியல் கோட்பாடுகள், குற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை எளிமையாக விளக்குகிறது. நூல்களை அமேஸானில் தரவிறக்கி வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BTY7MZQV

திருட்டு, கொலை ஆகியவற்றில் உள்ள உளவியல் கோட்பாடுகள்

படம்
  மக்கள் கூடும் இடங்களான மதுபானக்கடை, கிளப், பப் ஆகியவற்றில் எப்படியும் வன்முறை சம்பவங்கள் நடந்துவிடுவது வாடிக்கை. மது குடித்துவிட்டு மனிதர்கள் உணர்ச்சிகளை வெளியே கொட்டும்போது, பிறர் அதை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இதனால் மதுவைத் தொடர்ந்து அடிதடி, கைகலப்பு,   கொலை வரை நீள்கிறது. மதுபானக்கடைகளைப் பொறுத்தவரை அடிப்பவர், அடிபடுபவர் என இருவருமே மது அருந்திய மது பிரியர்கள்தான். நாட்டின் தூண்களான குடிமகன்கள்தான்.   உளவியலாளர் ஹெண்டர்சன் வன்முறை என்பதை   கைதிகள், சிறை நிர்வாக அதிகாரிகள் என இரண்டு வகையாக பிரித்துக் காட்டுகிறார். குற்றம் செய்துவிட்டு உள்ளே வந்த கைதிகளை அடக்கி வழிக்கு கொண்டுவர, தனக்கேற்றாற்போல நடந்துகொள்ள வைக்க சிறைத்துறை   அதிகாரிகள் வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். இதற்காக சிறைக்கைதியை அடித்து உதைப்பது, தனிமைச்சிறையில் அடைப்பது ஆகியவற்றை செய்கிறார்கள். சிறை என்பது தனி உலகமாக சமூகத்திற்கு கட்டுப்படாத இடமாக உள்ளது. சிறைக்கு அடுத்து குடிநோயாளிகள் மறுவாழ்வு மையம், மனநல குறைபாடு கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஆகியவற்றில் நோயாளிகளின் மீதான வன்முறை என்பது

குற்றச்செயல்பாடுகளுக்கு மனமுதிர்ச்சியின்மை அடிப்படையான காரணமா?

படம்
  மனமுதிர்ச்சியும் குற்றமும் - படம்- பின்டிரெஸ்ட் குற்றச்செயல்களை செய்பவர்களுக்கும், அவர்களின் வயதில் குற்றங்களைச் செய்யாத சிறந்த குடிமகன்களுக்கும் முதிர்ச்சி மட்டும்தான் மிச்சமாக இருக்கிறதா? ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு குழுக்களுக்கு இடையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வுப் பூர்வமாக நிரூபணம் செய்யத் தவறிவிட்டனர். இதில் இரண்டு வகையானவர்களைப் பார்க்கலாம். ஒன்று, தங்களின் இயல்புகளை கட்டுப்படுத்த முடியாத ஆட்கள், இவர்களுக்கு அறம் சார்ந்த நிலைப்பாடு மனிதில் உருவாகாது. குற்றங்களை செய்பவர்களுக்கு இடையில் அதில் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதற்கடுத்து வந்த பிற உளவியலாளர்களது கருத்துக்களைக் கேட்போம். தாக்குதல், கொலை, பாலியல் ரீதியான தாக்குதல் ஆகியவற்றில் ஒருவருக்கு பொருளாதார ரீதியான பயன்கள் கிடைப்பதில்லை. ஆனால் இவர்கள் பெற்றுள்ள மனமுதிர்ச்சியோடு ஒப்பிடும்போது, பணம் பொருட்களை கொள்ளையடிப்பவர்களின் மனநிலை அறிவுத்திறன் முதிர்ச்சி குறைவாகவே உள்ளது. தனிநபர்களைப் பொறுத்து காரணங்களை அறியும் திறனும், குற்றங்களின் தீவிரமும் மாறுபடுகிறது. பொதுவாக அறநிலை சார்ந்த மன முதிர்ச்சியை பொதுமைப்படுத்தி கூற முடியாது. இத

மனமுதிர்ச்சி அடைந்தவர்களால் குற்றங்களைச் செய்யமுடியாது!

படம்
  குறிப்பிட்ட இடைவெளியில் ஒருவர் பிறருக்கு தெரியாதபடி குற்றங்களை செய்து வரலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அவர் வேறு வாழ்க்கையை வாழலாம். அவருக்கு மனைவி, குழந்தைகள் இருக்கலாம். விடுமுறை என்றால் காரை எடுத்துக்கொண்டு முருகன் கோவிலுக்கு போகலாம். புனித தலங்களுக்கு செல்லலாம். ஆனால் தான் செய்யும் குற்றச்செயல்கள் என்பது பாதிக்கப்படாதபடி தனியாக வைத்துக்கொண்டு இயங்குபவர்களாக இருப்பார்கள். வெளியில் உள்ள பல்வேறு அழுத்தங்களுக்கு பணிந்துவிடாதபடி குற்றவாளிகளின் செயல்பாடு இருக்கும். இவர்கள் தங்களின் இரக்கமில்லாத இயல்பு, கொலை செய்யும் பண்பு ஆகியவற்றை மறைத்து தனிப்பட்ட ஒழுக்கத்துடன் செயல்பட்டுக்கொண்டிருப்பார்கள். இதற்கு மூளையில் அவர்களுக்கென தனி கட்டுப்பாடு இருக்கிறது என விசாரணையில் கூறியிருக்கிறார்கள். இந்தக் கருத்தை 1966ஆம் ஆண்டு ரோட்டர் என்ற உளவியலாளர் லோகஸ் ஆஃப் கன்ட்ரோல் என்ற வார்த்தை மூலம் குறிப்பிட்டு வரையறை செய்தார். வெளி உலகத்தில் ஏற்படும் தாக்கத்திலிருந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதில் குற்றவாளிகள் திறமையாக செயல்பட்டனர் என்பது உண்மை. குற்றவாளிகள், குற்றவாளிகள் அல்லாதோரை விட உள்மன ஆற்ற

ஒருவர் குற்றங்களைச் செய்ய தயங்குகிறார் - அதற்கு என்ன காரணம்?

படம்
  ஒருவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது முன்னே உள்ள மேசையில் நிறைய ஆயுதங்கள் உள்ளன. கத்தி, ஆணி, சுத்தி, கோடாரி, சாட்டை, கயிறு என நிறைய பொருட்கள். அனைத்துமே ஒருவரை தாக்குவதற்கும் சித்திரவதை செய்வதற்குமானது. நாற்காலியில் அமர்ந்திருப்பவர், தன் எதிரே இருப்பவரிடம் சொல்லுகிறார்.  மேசையில் உள்ள எந்த பொருட்களை வேண்டுமானாலும் எடுத்துக்கொள். என் மீது பயன்படுத்து என்கிறார். இப்படி சொல்லப்படும்போது எதிராளி என்ன செய்வார்? தான் செய்வதை பிறர் பார்த்தால் கவனித்தால் நிச்சயம் நாற்காலி மனிதரை தாக்க மாட்டார். ஆனால் யாரும் கவனிக்கவில்லை என்றபோது நிச்சயம் ஆயுதங்களை பயன்படுத்த மனம் அரும்பாடு படும். அதை தடுத்து நிறுத்தும்போதுதான் நம் மனது பற்றிய தெளிவு கிடைக்கும். மேலே சொன்ன சோதனை அகிம்சை பற்றி உண்மையாகவே நடத்தப்பட்டதுதான். அறம், நீதி, குற்றம் என்பதெல்லாம் நாம் மெல்ல உலகைப் புரிந்துகொண்டு வாசித்து பிறரை பார்த்து அறிந்துகொண்டு வாழ்வதுதான். குற்றம் செய்வதில் ஏற்படும் தடைகள் பற்றி பார்ப்போம். தண்டனை காரணமாக ஏற்படும் ஒழுக்கம். அரசு, குறிப்பிட்ட குற்றங்களுக்கு மரணதண்டனை வழங்குகிறது., இல்லையெனில் ஆயுள

குற்றம் செய்பவர்களை அடையாளமறியும் உளவியல் கோட்பாடு!- டிப்ரசன்ஷியல் அசோசியேஷன் தியரி

படம்
  டிஃப்ரன்சியல் அசோஷியேஷன் தியரி   என்ற கோட்பாட்டை சூதர்லாந்த் என்பவர் உருவாக்கினார். 1939இல் எழுதப்பட்ட இக்கோட்பாடு, பின்னாளில் சற்றே மாறியது. இதன் வழியாக குற்றம் நடைபெறுவதற்கான காரணம், எப்படி குற்றம் என்பது நடக்கிறது, அதை செய்பவர் பற்றியும் குறிப்பிடுகிறது. அதுபற்றிய விளக்கத்தைப் பார்ப்போம். குற்ற இயல்பு என்பது கற்றுக்கொள்ளக் கூடியது. குற்றச்செயல்பாடுகளை அதை செய்பவர்களிடமிருந்து எளிதாக கற்கலாம். இப்படி கற்கும் செயல்பாடு நெருங்கிய நண்பர்கள் குழுவில்தான் தொடங்குகிறது குற்றங்களை செய்வதற்கான நுட்பங்கள், பாணிகள், காரணங்கள் மாறுபடக்கூடியவை. குற்றத்தின் காரணங்களைப் பொறுத்து அதற்கான தண்டனை என்பது சட்டத்தின் கீழ் ஆதரவாக அல்லது எதிர்ப்பாக அமையலாம். இது, சட்டத்தின் பார்வைக் கோணத்தைப் பொறுத்தது. ஒருவர் தரும் வாக்குமூலப்படி அவர் சட்டத்தை மீறிய குற்றவாளியாக கருதலாம் அல்லது அவர் கூறும் கூற்றுப்படி சட்டத்தை மீறவில்லை என்றும் முடிவெடுக்கலாம். ஒரு விஷயத்தைக் கற்பது என்ற அடிப்படையில் அவரின் ஆர்வம், ஆழமாக ஆய்வு செய்யும் தன்மை, ஒத்த அலைவரிசை என பல்வேறு அம்சங்கள் மாறுபடலாம். ஒருவர் செய்யும

குற்றங்களை அடையாளம் காண்பதில் பயன்படும் பல்வேறு கோட்பாடு முறைகள்

படம்
  குற்றத்தை எப்படி புரிந்துகொள்வது, இதில் பல்வேறு கருத்துகள், கோட்பாடுகள் உள்ளன. உளவியல், சமூகவியல், பொருளாதாரம் ஆகியவையும் இதில் உள்ளடங்கும். அதற்கு ஏற்ப அவரவர் துறை சார்ந்த கருத்துகளைச் சொல்லி குற்றங்களை பிறருக்கு புரிய வைக்கலாம். சமூகவியல் அடிப்படையில் ஒருவரின் சமூகம், அவரின் இனக்குழு, குடும்ப நிலை, வேலை செய்பவரா, வேலை கொடுப்பவரா என்றெல்லாம் பகுத்தாய்ந்து  குற்றத்தின் அடிப்படையை நோக்கம் என்ன என்று கண்டறியலாம். பத்தொன்பதாவது நூற்றாண்டில் இத்தாலி நாட்டில் புகழ்பெற்ற மருத்துவர் இருந்தார். அவர் பெயர், சீசர் லாம்ப்ரோஸா. இவர், பரம்பரையாக வரும் குணங்கள்  காரணமாக ஒருவர் தவறுகளை செய்கிறார். இப்படி தவறு செய்யும் குணம் நட்பு மூலமாகவும் இன்னொருவருக்கு பரவலாம். குடிநோயாளிகள் நிறைய குற்றங்களை செய்கிறார்கள் என கருத்துகளை எழுதினார். பரவலாக்கினார். வறுமையான சூழ்நிலை, கல்வி அறிவின்மை ஆகியவை குற்றங்களுக்கு முக்கியமான காரணங்கள் என்று கூறினார். மூன்றில் ஒரு பங்கு குற்றவாளிகள் பிறக்கும்போது குற்றவாளிகள் என்று எழுதினார். பிற்காலத்தில் லாம்ப்ரோஸாவின் ஆய்வுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. குற்றங்களை செய்யும்

குற்றங்களை கணக்கீடு செய்வதில் ஏற்படும் தடுமாற்றங்கள், ஆய்வறிக்கை செயல்பாடு

படம்
  பொதுவாக காவல்துறையில் வழக்குகளை எளிதாக பதிய மாட்டார்கள். பதிந்தால் அதை விசாரிக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என நிறைய நடைமுறை பிரச்னைகளை உண்டு. அதேநேரத்தில் பதிவாகும் வழக்குகளை வைத்துதான் குறிப்பிட்ட வட்டாரத்தில் குற்றங்கள் நடைபெறுகின்றனவா, அதன் சதவீதம் என்ன, குற்றத்தை குறைக்க என்னென்ன விஷயங்களைச் செய்யலாம் என்று அரசு யோசித்து திட்டமிடுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டத்தில் இதற்கென தனி அறிக்கைகளை வெளியிடுகிறது. 1970ஆம் ஆண்டு அமெரிக்காவில்   ஹூட், ஸ்பார்க்ஸ் ஆகியோர் செய்த ஆய்வில் மூன்றில் இருபங்கு குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தங்களது அறிக்கையில் கூறினர். அதே சமயம் இங்கிலாந்தில் பதிவான குற்றங்களை ஆராய்ந்தபோது, அதில் கொள்ளை சார்ந்த குற்றச்செயல்கள் எழுபது சதவீதமும், 27 சதவீத குற்றங்கள் சைக்கிள் திருட்டாகவும் இருந்தது.   மோசடி, பாலியல் குற்றங்கள், மோட்டார் சைக்கிள் திருட்டு ஆகியவை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தன. செல்வாக்கு மிக்க குடும்பங்கள், சாதி, மதம் சார்ந்த பிரச்னைகள் எல்லாம் பெரும்பாலும் ஆவணங்களில் பதிவு செய்யப்படாமலேயே தீர்த்து வைக்கப்படுகின்றன. சாதாரணமா

நீட்ஷேவின் கருத்தால் கொலை செய்ய கிளம்பிய அறிவுஜீவிகள்!

படம்
  நீட்ஷே சினிமா பார்த்து திருடினேன் என்ற வார்த்தைகளை டெய்லி புஷ்பம், தந்தி போன்ற நாளிதழ்களில் சாதாரணமாக பார்த்திருப்பீர்கள். இப்படி சொல்லும் நாளிதழ்கள் அந்த பிரபலங்களை வைத்துதான் சம்பாதிக்கிறார்கள். ஆனால் செய்திகளை குற்றவாளி சொன்னதாகவே வெளியிடுவார்கள். உண்மையில் குற்றவாளியின் மனம் தான் செய்தது சரிதான் என வாதிட இதுபோன்ற புற காரணங்களை எடுத்துக்கொள்கிறது. சினிமாதான் ஒருவரை தூண்டியது, குற்றங்களில் ஈடுபட்டார் என்றால் அதே சினிமாவில் அறம் சார்ந்த உணர்வுகளை ஏற்படுத்தும் படங்கள் ஏகத்துக்கும் உண்டே, அவை குற்றவாளியின் மனதை மாற்றவில்லையா? பொதுவாக மனித மனம் தான் செய்யும் காரியத்திற்கு காரண காரியங்களை எளிதாக உருவாக்கிக்கொள்ளும். இன்று பொதுவெளியிலும் அறியாமை வெளிப்பட தான் சொல்லுவதே உண்மை என்று பேசுகிறார்கள் பாருங்கள். இவர்கள் நவீன குற்றவாளிகள். பின்னணியல் குற்றச்செயல்களை செய்துகொண்டும் இருக்கலாம். இந்த வகையில் நீட்ஷே என்ற தத்துவ அறிஞரைப் பற்றி வாசித்திருப்பீர்கள். இவர் அவர் வாழ்ந்த காலத்தை முன்வைத்து சில கருத்துகளை கோட்பாடுகளை சொன்னார். அதில் ஒன்றுதான், பலவீனர்கள் மீது அதிகாரம் செலுத்தித்தான் நாம்

கிரையோபிரசர்வேஷனை கோட்பாடு அளவில் முன்வைத்தவர்! - ஜேம்ஸ் லவ்லாக்

படம்
  ஜேம்ஸ் லவ்லாக் ( James lovelock 1919) அறிவியலாளர், சூழலியலாளர்  "கார்பன் வெளியீட்டைக் குறைக்க அணுசக்தி உதவும் என்பது என் கருத்து" "காற்றில் உள்ள குளோரோ ப்ளோரோ கார்பனை (CFC) கண்டறியும் கருவி(ECD), சூழலைப் பற்றிய கேயா கோட்பாடு (Gaia theory) எனது முக்கியமான சாதனை" இங்கிலாந்தில் உள்ள லெட்ச்வொர்த் கார்டன் சிட்டியில் பிறந்த  அறிவியலாளர். மருத்துவப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். உடல்களைப் பாதுகாக்கும் கிரையோபிரசர்வேஷன் ( cryopreservation) முறையில் ஈடுபாடு காட்டியவர்.  எலிகளை வைத்து சோதித்து வெற்றிகண்டார். இதனால் பல்வேறு அறிவியலாளர்கள், மனிதர்களை கிரையோபிரசர்வேஷன் முறையில் பாதுகாக்கும் ஆராய்ச்சிகளை நம்பிக்கையுடன் தொடர்ந்தனர்.  1960களில் நாசா அமைப்பிற்காக, கோள்களை ஆராய பல்வேறு அறிவியல் கருவிகளை வடிவமைத்து கொடுத்தார்.  தான் எழுதிய நூல்களில் ( The Revenge of Gaia, The Vanishing Face of Gaia) கார்பன் வெளியீடு பற்றி எச்சரித்தவர், பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க அணுசக்தியை ஆதரித்தார். இதனால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.  https://en.wikipedia.org/wiki/James_Lovelock

போலியான கோட்பாடுகளை மக்கள் நம்புவதற்கு காரணம் என்ன? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? பெரும்பாலான மேப்கள் ஏன் தவறாக இருக்கின்றன? பூமி உருண்டையாக இருக்கிறது. ஆனால் மேப் உள்ள தாளோ தட்டையாக இருக்கிறதே அதனால்தான். உள்ளபடியே சரியான தகவல் வேண்டுமென்றால் மேப் மிகப்பெரிதாக இருக்கவேண்டும். வரைபடத்தில் உலகத்தை எப்படி அடக்குவது என்றால் அதை சாதித்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர், ஜெரார்டஸ் மெர்கேடர். 1569இல் இவர் உருவாக்கிய முறையைத் தான் பலரும் பின்பற்றி வருகிறார்கள். இன்று கூகுள் மேப்பில் பார்க்கும் உலகைக் கூட மெர்கேடர் காட்டும் முறையைப் பின்பற்றித்தான் பார்க்கிறோம். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால் பல்வேறு நாடுகளின் அளவு மிகப்பெரிதாகிவிடும். சில நாடுகள் மிக சிறியதாக சுருங்கிவிடும்.  மக்கள் ஏன் போலியான பல கோட்பாடுகளை நம்புகிறார்கள்? கட்டடங்களை இடிப்பது எளிது. கட்டுவது கடினம். இதைப்போலவே வதந்திகளை உருவாக்குவது எளிது. அதனை உடைப்பது கடினம்.  நம்பிக்கை ஒருவரின் மனதில் உருவாகிறது என்றால் அதற்கு அடிப்படையாக உண்மை அல்லது பொய் இருக்கலாம். எதனை நீங்கள் நம்புகிறீர்களோ அதுதான் முக்கியம். முரட்டுத்தனமான புத்திசாலிகள் கோட்பாடுகளை உருவாக்குவதோடு அதனை பரப்பவும் செய்கின்

வாழ்க்கையை மாற்றும் பல்வேறு பழக்கங்கள், இதன் பின்னணியில் உள்ள உளவியல் ஆய்வுகள்!

படம்
                முடிவெடுக்கும் பழக்கம் ! உலகம் இன்று நவீனமாக மாறி வருகிறது . அதற்கேற்ப தினசரி வாழ்க்கையிலும் , தொழிலை சார்ந்தும் ஏராளமான முடிவுகளை எடுத்துவருகிறோம் . இதில் எது சரி , எது தவறு என்பதை உணர்வதற்கு காலம் தேவைப்படலா்ம் . ஆனால் இப்படி முடிவு எடுப்பதற்கான தகவல்களை நாம் எப்படி பரிசோதிக்கிறோம் , அலசுகிறோம் என்பதை புரிந்துகொள்வது அவசியம் . அப்போதுதான் ஆபத்தான காலங்களில் மனிதர்கள் உயிர்பிழைத்து வந்திருப்பதற்கான திறனை அறிய முடியும் . சுயநலன் , பொதுநலன் என இரண்டு சார்ந்தும் முடிவுகளை வேகமாக அல்லது நிதானமாக எடுப்பது நடைபெறுகிறது . இதில் முன்னுரிமை தருவதைப் பற்றி யோசிப்பதும் எப்படி நடைபெறுகிறது என்பதை அனைவரும் அறிந்துகொள்வது முக்கியம் . தள்ளுபடி ஆதாயங்கள் இயல்பாகவே மனித மனம் உடனடியாக பரிசுகளை ஆதாயங்களை எதிர்பார்க்க கூடியது . இதனால் உலகம் முழுக்க பொன்ஸி திட்டங்கள் இன்றும் கூட செயல்பட்டு மக்களை ஏமாற்றுகின்றன . இதுபற்றிய செய்திகளைப் படித்தாலும் கூட அதிக லாபம் என்ற சொல்லை மக்கள் கைவிடத் தயாராக இல்லை . இது அடிப்படையான மனிதர்களின் பழக்கவழக்கங்களை வடிவமைக்கிற தன்