இடுகைகள்

சோதனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓராண்டில் நாம் எளிதாக புரிந்துகொள்ள முடியும் உளவியல் சமாச்சாரங்கள்!

 365 டேஸ் சைக்காலஜி உளவியல் கட்டுரைகள் ஆங்கிலம் இந்த நூல் தலைப்புக்கு ஏற்ப முழு ஆண்டுக்கான ஏராளமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அவை அனைத்துமே ஒற்றைப் பக்கங்களாக எழுதப்பட்டுள்ளன. இதன் வடிவமே இதை எளிமையான நூலாக மாற்றுகிறது. கூறியுள்ள விஷயங்கள் அனைத்துமே முக்கியமான உளவியல் விவகாரங்கள். இவற்றை தினசரி ஒன்று என படித்தால் கூட ஓரளவுக்கு உளவியல் பற்றிய அறிவைப் பெற்றுவிட முடியும்.  நூலில் ஒருவரின் சிந்தனை எப்படியானது. கும்பலாக இருப்பவர்களின் சிந்தனை எப்படியானது என்பதை விளக்கியுள்ளது சிறப்பானது. கும்பலாக இயங்குபவர்களின் செயல்பாடு காரணமாக, தனிப்பட்ட சிந்தனைக்கு எதிரான மனநிலை எப்படி உருவாகிறது என்பதை விளக்கி கூறியுள்ளார் ஆசிரியர். இந்தியா போன்ற மதவாத நாட்டில் நாம் கவனிக்கவேண்டிய உளவியல் அணுகுமுறை இது.  நூலில் நிறைய வேறுபட்ட உளவியல் சோதனைகளை நடத்திய அறிவியலாளர்களின் பெயர்கள், சிந்தனைகள், செய்த சோதனைகள் ஏற்படுத்திய சமூக மாற்றங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். குறிப்பாக உளவியல் சோதனைகள் மூலம் கல்வி கற்பிப்பது கூட மாற்றங்களை சந்தித்துள்ளது. ஆசிரியரை மையமாக கொண்ட அணுகுமுறை, மாணவர்களை மையமாக கொண்...

''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’

படம்
''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’ கிறிஸ்டியன் ஹேப்பி, ஆப்பிரிக்க தொற்றுநோய் மரபணுவியல் மையத்தின் நிறுவனர். இந்த மையம், ஆப்பிரிக்க மருத்துவர்களுக்கு வேகமாக பரவும் தொற்றுநோய் பற்றிய பயிற்சியை, எச்சரிக்கை செயல்பாடுகளை கருவிகளை வழங்குகிறது. 2025ஆம் ஆண்டு டைம் வார இதழின் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் கிறிஸ்டியன் ஹேப்பி இடம்பிடித்துள்ளார். நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணி, அதற்கான தீர்வு பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா? நான் மூலக்கூறு உயிரியல் மற்றும் மரபணுவியல் துறை சார்ந்த பேராசிரியர். ரெட்டீமர் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்க்கான மரபணு மையத்தின் இயக்குநராக பணியாற்றிவருகிறேன். ஆப்பிரிக்காவில் பரவும் தொற்றுநோய்களை தடுக்க, 2013ஆம் ஆண்டு மரபணு மையத்தை தொடங்கினோம். ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று பரவத்தொடங்கிய காலம்தொட்டு தொற்றுநோய் பரவுதலை தடுக்க முயன்று வருகிறோம். கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வந்தாலும் இத்துறைக்கு நாங்கள் புதிய நிறுவனம்தான். துறையில் செய்து வரும் அடிப்படைக் கட்டமைப்பு, மேம்பாடு, தொற்றுநோயை எதிர்கொள்வதற்கான மருத்துவப...

நோயில்லாத ஒருவருக்கு செய்யப்படும் மருந்து சோதனை!

 மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி மருத்துவமுறையை உருவாக்கிய சாமுவேல், பல்வேறு மருந்துகளை தன்னுடைய உடலில் செலுத்தி அதன் அறிகுறிகளை குறித்து வைத்துக்கொண்டே பல்வேறு நூல்களை எழுதினார். இந்த மருத்துவமுறையில் உள்ள அனைத்து மருந்துகளுமே நோயில்லாத ஒருவரின் உடலில் செலுத்தி, அதன் அறிகுறிகளை பார்த்து, கேட்டு எழுதிய பிறகே நோயுள்ளவருக்கு வழங்கப்படுகிறது. இப்படியான சோதனைகள் நடைபெறாமல் மருந்துகளை நேரடியாக நோயாளிக்கு பரிந்துரைக்க கூடாது. மருத்துவர் சாமுவேல் கூடுதலாக ஒரு நிபந்தனையையும் கூறுகிறார். அதாவது, ஓமியோபதி மருத்துவர் தனக்கு தேவையான மருந்துகளை தானே தயாரித்துக்கொள்ளவேண்டும் என்கிறார். நவீன காலத்தில் அவரின் அறிவுரை எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. மருத்துவர், நோயாளிக்கான மருந்தை தானே தயாரிக்கவேண்டும். அதன் தரம், தூய்மை, வீரியம் பற்றிய கவலைகள் காரணமாக இருக்கலாம். ஒவ்வாமைக்கு எனக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அனைத்துமே உள்மருந்துகள்தான். வெளியே பூச ஏதுமில்லை. எனக்கு தொடக்கத்தில் குழப்பமாக இருந்தது. மருத்துவர் அதைப்பற்றி தெளிவாக எதையும் கூறவில்லை. நானும் மருந்துகளை ஏதாவது கொடு...

உப்புச்சுவையை உணரும் நாக்கு - எலிக்கும் மனிதனுக்குமான தொடர்பு - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
      அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி நாக்கில் எந்த பகுதி உப்புச்சுவையை அறிகிறது? அனைத்து பகுதிகளுமேதான். சிலர் நாக்கில் குறிப்பிட்ட பகுதி உணவில் உள்ள சில சுவைகளை அறிகிறது என வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். போலிச்செய்திகள் என்பதை உருவாக்க இன்று ஏஐயைக் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். உண்மைக்கு நிரூபணம் தேவை. பொய்க்கு குழப்பமே போதும் அல்லவா? எனவே வதந்திகளை நம்பாதீர்கள். நாக்கில் குழுவாக, குறிப்பிட பகுதியில் சுவையை தனியாக உணரும் சுவை மொட்டுகள் ஏதுமில்லை. அறுசுவைகளை நாக்கில் உள்ள அனைத்து சுவை மொட்டுகளுமே அறிய முடியும். குறிப்பிட்ட பகுதியில் அந்த சுவை தெரிகிறது என நீங்கள் உணர்ந்தால், அது உங்கள் ஹல்லுசினேஷன்தான். உடனே சென்று டாக்டர் தசாவதாரத்தைப் பாருங்கள். 2 எலிக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்ன? மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள், பரிணாம வளர்ச்சி ஆய்வாளர்கள் ஆகியோர் ஒரே உயிரினத்திலிருந்து மனிதன், எலி, சி்ம்பன்சி ஆகியோர் உருவாகி பரிணாம வளர்ச்சிப்படி வளர்ந்திருக்க வேண்டும் என முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மனிதர்களோடு எலி எழுபது தொடங்கி எண்பது மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கலாம் என ஆ...

தடய அறிவியல் விசாரணை செய்ய போதுமான பணியாளர்கள், கருவிகள் உள்ளனவா? - தென்னிந்தியாவில் ஓர் அலசல்

படம்
              தடய அறிவியல் பரிசோதனை இதைப்பற்றி அறிய நீங்கள் கொரியா, ஜப்பான், சீன சீரியல்களைப் பார்த்திருந்தால் கூட போதுமானது. மலையாள மொழியில் கூட நிறைய திரைப்படங்கள் தடய அறிவியலை மையப்படுத்தி வந்திருக்கின்றன. பார்க்கவில்லை என்றாலும் கூட குற்றமில்லை. கொலை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை அறிவியல் முறைப்படி சோதிப்பதே தடய அறிவியல் பரிசோதனை அல்லது விசாரணை என்று கூறலாம். ஓடிடி தளங்களில் ஏராளமான படங்கள் தடய அறிவியல் சார்ந்து வெளிவந்துள்ளன. அதைப் பார்த்தால் ஓரளவுக்கு விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம். பென்ஸ் அல்லது போர்ச் காரை ஒருவர் வேகமாக ஓட்டிச்சென்று சாலையில் செல்லும் மக்கள் மீது ஏற்றிக்கொல்கிறார். மக்கள் இறப்பது, அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா இல்லையா என்பதல்ல விஷயம். அது, ஒருவர் வசதியானவரா, ஏழையா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். தடய அறிவியலில் பார்க்கவேண்டியது ஓட்டுநரின் நிலையை... வாகன விபத்து குற்றவழக்காக பதிவானபிறகு, வாகனம் ஒட்டியவர் என்ன நிலையில் இருந்தார், மது அருந்தியிருந்தாரா, இல்லையா என ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை எடுத்து சோதிப்பார்கள். கைரேகை, டிஎன்...

தாயில்லாத சூழலில் குழந்தைக்கு ஏற்படும் மன நெருக்கடி

படம்
  Mary ainsworth 1950ஆம் ஆண்டு, மேரி, உளவியலாளர் ஜான் பௌல்பையின் ஆய்வுக் கோட்பாட்டை ஒட்டிய ஆய்வுகளை செய்தார். மேற்குலகில் பெற்றோர் பிள்ளைகளோடு குறைந்தளவு ஒட்டுதலைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிழக்கு நாடுகளில் தாய், குழந்தைகளோடு மிக நெருக்கமாக இருக்கிறார். குறிப்பாக குழந்தைகள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கும்போது என புரிந்துகொள்ளலாம். குழந்தையின் உடல்மொழியை புரிந்துகொண்டு அதற்கு உணவு வழங்குவது, குளிக்க வைப்பது,உடை மாற்றுவது, உறங்க வைப்பது என அனைத்து செயல்களும் நடைபெறுகின்றன. இதனால் குழந்தைகள் தாயுடன் பாதுகாப்பான ஒட்டுதலைக் கொண்டுள்ளன.  வினோத சூழ்நிலை என்ற ஆய்வை மேரி செய்தார். அதன்படி, ஒரு அறையில், அம்மா குழந்தை என இருவர் இருக்கிறார்கள். குழந்தை பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை அம்மா கவனித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இப்போது அந்த அறையில் வெளிநபர் ஒருவர் உள்ளே வருகிறார். இந்த சூழ்நிலையில் குழ்ந்தை எப்படி உணர்கிறது, அதன் உடல்மொழி எவ்வாறு மாறுகிறது என்பதை மேரி ஆய்வு செய்தார்.  அடுத்து, ஒரு அறையில் குழந்தையோடு அம்மா இருக்கிறார். க...

தனிநபர் சுதந்திரத்திற்கு மதிப்பளித்த உளவியலாளர் சாலமன் ஆச்!

படம்
  தனிநபர் சுதந்திரம்  வெளிநாடுகளில் தனிநபர் சுதந்திரத்திற்கு அதிக மதிப்புண்டு பிற மூன்றாம் உலக நாடுகளை விட அங்கு கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்கிறார்கள். ஆனால் அதேசமயம் மறைமுகமாக கண்காணிப்பும் களையெடுத்தலும் உண்டு. இன்று வலதுசாரிகளின் தலையெடுப்பால் கண்காணிப்புச் சட்டங்களும், சர்வாதிகார நிர்வாக முறைகளும் என நிலைமை வெகுவாக மாறிவருகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கருத்து சுதந்திரம் சார்ந்த பாதைக்கு வந்து சேர பலநூறு ஆண்டுகள் பிடித்தன இந்த நாடுகளில் குழுக்களை விட தனிநபர்களுக்கே அதிக மதிப்புண்டு. ஜப்பான், ஆப்பிரிக்கா, ஃபிஜூ ஆகிய நாடுகளில் குழுக்களுக்கும் அவர்களின் கருத்துகளுக்கும் மதிப்புண்டு.  தொடக்க கால அமெரிக்காவில், கம்யூனிசம் பேசினால் அவர்களை கைது செய்து சிறையில் வைத்து சித்திரவதை செய்வது வழக்கம். சொந்தகருத்துகளை பேசியவர்களை, மனித உரிமைக்கு குரல் கொடுத்தவர்களை தேசதுரோகி என்று கூறிவிடுவார்கள். இப்படி மனதிலுள்ள கருத்துகளை வெளிப்படையாக பேசும் தனிநபர்களை குறிப்பாக கம்யூனிஸ்டுகளை கைது செய்யும் வழக்கத்தை தொடங்கியவர், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரான ஜோசப் மெ...

சமூக உளவியலின் தந்தை கர்ட் லெவின்!

படம்
  ஒருவரின் குணநலன்களுக்கு அடிப்படையானது என்ன? அவரின் தனிப்பட்ட இயல்பா, அல்லது அவரைச் சுற்றியுள்ள அல்லது அவர் வாழும் சூழலா? இந்த கேள்வி பலருக்கும் இருக்கும். தொடக்கத்தில் சூழல் மட்டும்தான் என சூழலியலாளர்கள் நம்பினர். ஆனால் 1920ஆம் ஆண்டு, கர்ட் லெவின் வெறும் சூழல் மட்டுமல்ல தனிநபரும் கூடத்தான் அவரின் ஆளுமை மாற்றத்திற்கு காரணம் என்று கூறினார்.  இரண்டு எதிரெதிரான விசைகள் மனிதரை அவரது இலக்கு நோக்கி அழைத்துச்செல்ல உதவுகிறது என கர்ட் லெவின் கூறினார். இவர் கூறிய கருத்துகள், அன்றைய உளவியல் உலகிற்கு சற்று புரட்சிகரமானவை.  தன்னைத்தானே மாற்றியமைப்பது கடினமான ஒன்று. ஒருவர் அதுவரை சேமித்து வைத்த கொள்கைகளை தூக்கிப்போட்டுவிட்டு அனைத்தையும் மாற்றியமைத்து இலக்கை நிர்ணயித்து பயணம் செய்வது கடினம். அதுவே அமைப்பு ஒன்றை இதுபோல மாற்றினால் அதில் ஏராளமானவர்களின் பார்வை, அறிவு, தலையீடு என அனைத்துமே இருக்கும். இதையெல்லாம் உள்ளீடாக பெற்று அமைப்பு தன்னை மாற்றிக்கொள்கிறது. அப்படித்தான் காலத்திற்கேற்ப சவால்களை சமாளித்து வெல்ல முயல்கிறது.  ஒரு அமைப்பை மாற்ற முயலும்போதுதான் அதை முழுமையாக புரிந்துகொள்...

ஜோம்பி தனது கடந்தகாலத்தை தானே டிடெக்டிவ்வாகி கண்டறியும் கதை!

படம்
              ஜோம்பி டிடெக்டிவ் கொரிய தொடர் ராகுட்டன் விக்கி மருத்துவக் கழிவு கொட்டிக்கிடக்கும் இடத்தில் இருந்து ஒரு உருவம் எழுகிறது . அதுதான் நாயகன் காங் மின்கோ . எழுந்தவர் சிகரெட் பிடிக்கிறார் . வாயில் புகைவிட நினைத்தால் வயிற்றில் உள்ள ஓட்டை வழியாக புகை வெளியே செல்கிறது . அப்போதுதான் அவர் வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதை உணர்கிறார் . அங்கிருந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் அதிர்ந்துபோ கிறார் . இறந்து புதைக்கப்பட்டவர் மீண்டும் உயிர் வந்தால் உடல் சதைகள் எப்படி சிதைந்து கிடக்கும் . அப்படித்தான் அவர் உடல் முழுக்க பஞ்சர் ஒட்டியது போல சதைகள் கிழிந்து ஒ ட்டுப்போடப்பட்டது போல உள்ளன . சுருக்கமாக வாழும் பிணம் . அதாவது ஜோம்பி . அவருக்கு தான் யார் , பெயர் , ஆதார் எண் , வங்கியில் கொடுத்த பான் எண் , வீட்டு முகவரி என எதுவுமே நினைவில்லை . தான் யார் , எப்படி கொல்லப்பட்டோம் . ஏன் ஜோம்பி ஆனோம் என்ற உண்மையை மெல்ல கண்டுபிடிக்கிறார் . இந்த கதையை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்கள் . அடுத்த பாகம் தொடங்கி ஒளிபரப்பப்பட்டாலும் ஆச்சரி...

பிஆர்சிஏ 2 மரபணு ஏற்படுத்தும் புற்றுநோய்! - தலைமுறைகளைத் தாண்டி தொடரும் வேதனை

படம்
  புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இன்று அதிகரித்திருக்கிறது. வாழ்க்கை முறை, உணவு, மரபணு வழியாக எளிதாக புற்றுநோய் ஒருவரை தாக்கி அழிக்கிறது. கூடவே, அவரது குடும்பத்தையும் பாதிக்க 50 சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆபத்திலிருந்து தப்பி பிழைக்க பலரும் மருத்துவ சிகிச்சையை நாடி வருகிறார்கள். இதில் பொருளாதார சிக்கல்களும் உள்ளன. அமெரிக்க மருத்துவர் சூசனா உங்கர்லெய்டர், அவரது அப்பாவிற்கு சோதனை மூலம் கண்டறிந்த கணைய புற்றுநோயால் ஆடிப்போயிருந்தார். அப்பாவிற்கு வந்த உயிர்க்கொல்லி நோய் மூலம் தனக்கு எதிர்க்காலத்தில் வரும் ஆபத்தை அவர் முதலில் உணரவில்லை. 2022ஆம் ஆண்டு சூசனாவின் அப்பா ஸ்டீவனை சோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் இருந்த பிஆர் சிஏ 2 எனும் மரபணு, மார்பு, கருப்பை, கணையத்தில் புற்றுநோய்   உண்டாக்குவதோடு அவரது பிள்ளைகளுக்கும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அடையாளம் கண்டனர். அவர்களின் பரிந்துரை பெயரில் சூசனாவும் அவரது சகோதரியும் மரபணு சோதனையை செய்து புற்றுநோய் அபாயத்தை அடையாளம் கண்டுகொண்டனர். நாற்பத்து மூன்று வயதாகும் சூசனா, மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக செயல்பட்டுவருகி...

நெடுஞ்சாலை கொலைகாரருக்கு மாற்று! - அவருக்கு பதிலாக இவர்

படம்
  நீதியைக் காப்பாற்றுவதற்கு காவல்துறை உள்ளது. அதன் வழியாக நீதிமன்றம் தண்டனைகளை வழங்கி சட்ட ஒழுங்கை காப்பாற்றுகிறது. ஆனால் இப்படி நடக்கும் செயல்பாடுகள் எளிதானவை அல்ல. சரியாக நடக்கிறது என்றும் கூறமுடியாது. குற்றங்கள் நடந்து அவற்றை காவல்துறை அறிய முடியாமல் அல்லது செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்க   தாமதமாகும்பொழுது குற்றவாளி என யூகித்தவர்களை மாட்டிக்கொடுப்பது வாடிக்கை. இதில் குற்றவாளி என காவல்துறையில் கூறப்படுபவர்களின் உறவினர்களே அவர்தான் குற்றவாளி என தனிப்பட்ட வன்மத்திற்கு இடம் கொடுத்து அவர்களை பழிவாங்கினால் எப்படியிருக்கும்? ஆபெல் என்பவரின் விவகாரத்தில் இப்படித்தான் உண்மைகள் வளைக்கப்பட்டன. அரசு அமைப்புகள் இதற்கு கூறிய பதில்களும்   என்னென்ன சொல்றான் பாருங்க என்ற ரீதியில் இருந்தன. ஐ-45 கொலைகாரர் என அழைக்கப்பட்டவர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவர் செய்த கொலைகள் அத்தனையும் நிஜம். ஹூஸ்டன், கால்வெஸ்டன் இடையிலான நெடுஞ்சாலைதான் 45 என குறிப்பிடுகிறார்கள். இந்த சாலையில் 1982-1997 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 42 சிறுமிகள், இளம்பெண்கள் காணாமல் போய் பிறகு பிணமாக மீட்கப்ப...

இந்தியா எதிர்காலத்தில் அணு ஆயுத சோதனைகளை செய்ய வாய்ப்புள்ளது! - ஆஸ்லே டெல்லிஸ்

படம்
  ஆஸ்லே டெல்லிஸ்  ஆஸ்லே டெல்லிஸ், டாடா ஸ்ட்ரேட்டஜிக் அஃபேர்ஸ் பிரிவு தலைவராக இருக்கிறார். இவர் முன்னதாக கார்னெகி உலக அமைதி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். தற்போது அசிட்ரிமிக்ஸ் – நியூக்ளியர் ட்ரான்ஸ்மிஷன் இன் சதர்ன் ஆசியா நூலை எழுதி வெளியிட்டுள்ளார். உங்கள் நூலில் நீங்கள் கூறியுள்ள அடிப்படையான விஷயம் என்ன? 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் அணு ஆயுதங்கள் பற்றி நூல் எழுத நினைத்தேன். அதனால் அமெரிக்காவில் அதிபர் புஷ் நிர்வாகத்தில் எனக்கு வேலை கிடைத்தது. இதனால் நூலை எழுத முடியவில்லை. மீண்டும் திரும்ப நூலை எழுதியபோது சில விஷயங்களை நான் கவனத்தில் கொண்டேன். அமெரிக்க –இந்திய அணு ஒப்பந்தம் நடந்தபோது நான் அமெரிக்காவில்தான் வேலை செய்துகொண்டிருந்தேன். தெற்காசியாவில் சீனாவுக்கு முக்கியமான இடம் உண்டு. இதற்கு இடையில் சீனாவுக்கும் ரஷ்யாவிற்கும் விரோதம் உருவானது. சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளும்   1998ஆம் ஆண்டு முதலே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து முக்கியமான தெற்காசிய நாடுகளாக மாறிவிட்டன. மேற்சொன்ன நாடுகளின் விவகாரங்கள்தான் நூலின் அடிப்படையான மையம். 1998ஆம் ஆண்டு முதலாக அத...

வாசனையையும் சுவையையும் அறியும் சுவாரசிய சோதனை!

படம்
  உணர்வுகளோடு விளையாடு! தேவையான பொருட்கள் வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை,மாதுளை, கண்களைக் கட்டும் துணி, நண்பர் ஒருவர் செய்யவேண்டியது 1. மேற்குறிப்பிட்ட பழங்களில் இரண்டை(வாழைப்பழம், ஆப்பிள்) எடுத்துக்கொள்ளவேண்டும். ஒன்றை முகர்ந்து பார்க்கவேண்டும். இன்னொரு உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இச்செயலை செய்யும்போது உங்கள்  கண்கள் துணியால் கட்டப்பட்டிருக்கும். நண்பர் தான் உணவுப்பொருட்களை எடுத்துக் கொடுப்பார். தொடங்கலாமா? 2. உங்கள் நண்பரை அழைத்து கண்களை இறுக கட்டச்சொல்லிவிடுங்கள். அடுத்து அவர் ஒரு உணவுப்பொருளை (வாழைப்பழம்) உங்களுக்கு சாப்பிட கொடுக்கவேண்டும். அதேசமயம், இன்னொரு உணவுப்பொருளை (ஆப்பிள்) மூக்கில் அருகில் நீங்கள் அதனை வாசனையை அறியும்படி பிடிக்கவேண்டும். 3. மூக்கால் உணரும் வாசனை, உண்ணும்போது உங்களுக்கு தெரிய வரும் உணவுப்பொருளின் சுவை இரண்டையும் நீங்கள் கூறவேண்டும். இச்சோதனைகளை உணவுப்பொருட்களை மாற்றி செய்யலாம்.  கற்பது இதைத்தான்! பொதுவாக ஒருவருக்கு மூக்கால் முகரும் திறன் இல்லாதபோது பசி உணர்வு தூண்டப்படாது.  தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக வாசனைகளை உணரும் திறனை இழப்பதற்கு ...

பல்வேறு சோதனைகளுக்குப் பயன்படும் அறிவியல் மாதிரிகள்!

படம்
  டிஸ்க்ரிப்டிவ் மாடல்களுக்கு எடுத்துக்காட்டு அறிவியல் மாதிரிகள்  அறிவியல் துறைகளில் பேசப்படும் சிக்கலான கருத்துகளை பிறருக்கு விளக்க உதவுபவை, அறிவியல் மாதிரிகள் (Science models) ஆகும். இவற்றில் ஐந்து வகைகள் உண்டு. அவை,   ரெபிரசன்டேஷனல் மாடல்ஸ் (Representational models) உடலிலுள்ள என்சைம்கள் எப்படி செயல்படுகின்றன, வேதிப்பொருட்கள் எப்படி சுரக்கின்றன  என்பதை எளிமையாக விளக்க ரெபிரசன்டேஷனல் மாடல்கள் உதவுகின்றன.  ஸ்பாஷியல் மாடல்ஸ் (Spatial models) கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களின் அணுக்களை முப்பரிமாண வடிவில் பார்த்து செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள, ஸ்பாஷியல் மாடல்கள் உதவுகின்றன.   டிஸ்க்ரிப்டிவ் மாடல்ஸ் (Descriptive models) உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சி நிலைகளை விளக்கப் பயன்படும் வடிவம். இதில் படம், வார்த்தைகள் என இரண்டுமே பயன்படுகிறது.  கம்ப்யூடேஷனல் மாடல்ஸ் (Computational models) மாறிவரும் பூமியின் தட்பவெப்பநிலையைப் புரிந்துகொள்ள பயன்படும் மாதிரி  வடிவம். இதை உருவாக்க கணினி உதவுகிறது. எ.டு. குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலை,  வெ...