இடுகைகள்

போலி நிறுவனங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மை மதிப்பை விட பலமடங்கு பங்கு மதிப்பு உயர்ந்தால்.. - அதானி மோசடி - ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை

படம்
      1 மோசடி மன்னன் – அதானி ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை 2023 – தமிழாக்கம்   இந்தியாவில் திறமை வாய்ந்த தொழிலதிபர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் உண்டு. இந்த அம்சங்கள்தான்   உலகளவில்   இந்தியாவை வலிமை வாய்ந்த நாடாக மாற்றி வருகிறது. இந்தியப்   பொருளாதாரம், அதன் தொழில் வளத்திற்கு முதலீடுகள் பெருமளவு கிடைக்கும் ஆதாரமாக பங்குச்சந்தையைப் நம்பியிருக்கிறது. மக்கள், பங்குச்சந்தையில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளை நாளிதழ்களிலும், டிவி சேனல்களின் வழியாகக் கூட அறிவது குறைவே. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், நிறுவனங்களின் தலைவர், இயக்குநர்கள், அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள்   பற்றி நேர்மையாக விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் உடனே சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது படுகொலை செய்யப்படுகிறார்கள். தொழில் நிறுவனங்கள் பற்றி எதிர்மறையாகப் பேசும், விமர்சிக்கும் பங்குச்சந்தை ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இப்படி பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தலும் நெருக்கடியும் உள்ள சூழ்நிலையில் பங்குச் சந்தையில் நடக்கும் பெருநிறுவன மோசடிகள் பற்றி மக்க