இடுகைகள்

பழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாவைக் கொன்ற அரசியல்வாதியை, போலீஸ்காரர்களை பழிவாங்க முயலும் மகனின் சட்டப்போராட்டம்!

படம்
யூ ஆர் ஆல் சரவுண்டட் கொரிய டிராமா இருபது எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்  நகரில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்படுகிறார். அதை அங்கு வேலை செய்யும் நர்ஸ் ஒருவர் பார்த்துவிடுகிறார். காவல்துறை அவரை சாட்சி சொல்ல அழைக்கிறது. ஆனால் அவரை பணக்கார தொழிலதிபர் சாட்சி சொல்லக்கூடாது என மிரட்டுகிறார். நர்சிற்கு கணவர் இல்லை. ஒரே ஆளாக நின்று வேலை பார்த்து மகனை வளர்க்கிறார். மகன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். உங்கள் உயிருக்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என போலீஸ் அதிகாரி சியோ பான் சியோக் உறுதிதருகிறார்.  இதனால் அந்த நர்சம்மாவும் சாட்சி சொல்ல ஒத்துக்கொள்கிறார். ஆனால் அதற்குப் பிறகு சில நாட்களிலேயே அவர் வீட்டில் கொலையாகி கிடக்கிறார். கொலையாளி விட்டுச்சென்ற டாலர் ஒன்றைப் பற்றி நர்சின் மகன் தகவல் சொல்கிறான். ஆனால் அவனையும் கொலையாளி கொல்ல முயல்கிறான். அந்த நேரத்தில் கொலையாளி போனில் பேசும்போது, சியோ என்ற உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்த அதிகாரியின் பெயரைக் கூறுகிறான். இதைக்கேட்ட சிறுவன், நம்பிய அதிகாரியே மோசம் செய்துவிட்டதாக நொந்துபோகிறான். இவர்களை பழிவாங்குவது என முடிவெடுத்து அந்த நகரில்

தனது குடும்பத்தை அழித்தவர்களை பழிவாங்க சிறு குறுங்கத்தியோடு கிளம்பும் விஷ ராஜா!

படம்
  பாய்சன் கிங், வெனோம்கிங் மாங்கா காமிக்ஸ்  எப்படி சிலந்தி கடித்து மாணவன் ஒருவன் சிலந்தி மனிதன் ஆகிறானோ அதேபோல சென்டிபீட் எனும் விஷப்பூச்சியை ஜின் ஜகான் கடித்துக்கொல்கிறான். அதன் விஷம் உடலுக்குள் இறங்க சுயநினைவை இழக்கிறான். அவனது தாத்தா, பேரனின் உயிரைக் காப்பாற்ற மாத்திரை ஒன்றை அவனுக்கு கொடுக்கிறார். அந்த மாத்திரை ஜின்னின் உடலில் உள்ள ரத்தத்தை ஜெல் போல மாற்றி விஷம் அவனை பாதிக்காதவாறு மாற்றுகிறது.  மருத்துவ இனக்குழு, விஷ இனக்குழுக்களால் முழுமையாக தோற்கடிக்கப்படுகிறது. நிறைய மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு பழிவாங்க சிறுவன் ஜின் எழுகிறான். அவனது பலமே சென்டிபீட் மூலம் உடலுக்குள் சேகரமான விஷம்தான். அதை வைத்து அவனை விட பலமடங்கு வலுவான எதிரிகளிடம் போரிடுகிறான். சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் அடிபட்டு உதைபட்டு நினைவிழந்து வீழ்ந்தாலும் தைரியத்தை இழப்பதில்லை. தான் தோற்றுவிட்டேன். தோல்வியை ஒப்புக்கொள்கிறேன் எ்ன்பதை அவன் கூறுவதில்லை. அவனது மன உறுதியும் போர் திட்டங்களும் அவனோடு இருப்பவர்களுக்கும், சமயங்களில் அவனது எதிரிகளுக்கும் கூட திகைப்பை ஏற்படுத்துகிறது.  மருத்துவ இனக்குழு அழிக்கப்பட்டு

தன் தந்தையை துரோகத்தால் வீழ்த்தியவர்களை தேடிச்சென்று பழிவாங்கும் வடக்கு வாள்!

படம்
  லெஜண்ட் ஆஃப் நார்த்தர்ன் பிளேடு காமிக்ஸ்  ரீடுமங்காபேட்.காம் வழக்கமான பழிவாங்கும் கதைதான். ஜின் மோ வோன், என்பவன் நார்த் ஹெவன்லி செக்ட் என்ற சிறிய அரசின் ஒரே வாரிசு. அவரது அப்பா பேராசையற்ற ஆட்சியாளர். காலப்போக்கி்ல் அவருக்கு செல்வாக்கு பெருகியதால், அவர் மீது தேசதுரோக குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள். இதனால் அவர் தனது மகனைக் காப்பாற்ற தற்கொலை செய்துகொண்டு இறக்கிறார்.  அவர் இப்படி இறந்துபோக அவரது நான்கு நண்பர்களே முக்கிய காரணம். சென்ட்ரல் அலையன்ஸ், நைன் ஸ்கைஸ் என இரு அமைப்புகளிடம் பரிசுகள், பணம் பெற்று, ஜின்னின் அப்பாவுக்கு துரோகம் செய்கிறார்கள். நாட்டின் நூலகத்தில் உள்ள தற்காப்புக்கலை நூல்களை ஜின் படித்து வீரனாகிவிட்டால் என்னாகும் என அத்தனை நூல்களையும் எடுத்துசெல்கிறார்கள்.  ஜின்னின் அப்பா இறந்தபிறகு, நாட்டின் அரசு கலைக்கப்படுகிறது. சென்ட்ரல் அலையன்ஸ் சார்பாக கண்காணிப்பு மட்டும் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது, ஜின்னை அங்கு உள்ள காவலர்கள் அடித்து சித்திரவதை செய்கிறார்கள். ஆனால் அவன் அதை பொருட்படுத்தாமல் வாழ நினைக்கிறான்.  ஜின்னின் அப்பா, அவனுக்கு மட்டுமே குறிப்பிட்ட முன்னோர்களின் எழுத்து

அத்தையின் மந்திரி பதவியை அழித்து அவரின் மகளைக் கரம் பிடிக்கும் மருமகனின் கதை!

படம்
  பொப்பிலி ராஜா வெங்கடேஷ்,திவ்ய பாரதி  இயக்கம் பி கோபால்,  காட்டுக்குள் அம்மா, தாத்தாவுடன் சிறுவன் இருபது ஆண்டுகளாக வளர்ந்து பெரிதாகிறான். அவன்தான் பொப்பிலி ராஜா. அங்கு வரும் அமைச்சரின் பெண்ணுடன் நேசம் பிறக்கிறது. ஆனால் அமைச்சரோ, ராஜாவின் அம்மா, தாத்தாவை கட்டி வைத்து அடிக்கிறாள். காவல்துறை மூலம் சித்திரவதை செய்ய முயல்கிறாள். ஏன் அப்படி செய்கிறாள் என்பதே கதையின் முக்கியப் பகுதி.  தேர்தல் அரசியலுக்காக கொலை செய்யப்பட்டு, குணநலன்கள் களங்கப்படுத்தப்பட்டு காட்டுக்கு செல்ல நேருகிற சூழல் ராஜாவின் அம்மாவுக்கு நேருகிறது. ஆனால், அவர் பழிவாங்குவதை முக்கியமாக கருதவில்லை. தனது மகனை அவன் இயல்புப்படி வளர்க்கிறார். அவன் அரசு வனத்துறையோடுசேர்ந்து வேலை செய்கிறான். இந்த நேரத்தில் அங்கு வரும் அமைச்சரின் மகளை சந்திக்கிறான். இருவருக்கும் முதல் சந்திப்பிலேயே முட்டிக்கொள்கிறது. பிறகு இருவரும் மெல்ல மனதால் நெருங்கி வருகிறார்கள். அவன் யார் என அடையாளம் தேடும்போது, அவளின் அப்பா, அவன் உன் மாமன் முறைதான். கட்டிக்கொள்ளலாம் என வெளிப்படையாக சொல்கிறார். அதாவது, மனைவியின் தம்பி மகன்.  பழிவாங்குதலை தொடங்க வேண்டாமா? மந்திர

தனது குடும்பத்தை அழித்த பணக்காரரை பழிவாங்க அலையும் கல்லூரி மாணவன்!

படம்
  கைதி சிரஞ்சீவி, மாதவி ஊரில் பணக்காரரின் மகளை காதலித்து,அதன் விளைவாக அப்பா, அக்கா, இறுதியாக தனது உயிரையே இழப்பவனின் கதை.  இந்த கதை ஒருவகையில் ஆந்திரத்தில் உள்ள சாதிக்கட்டமைப்பை மறைமுகமாக வெளிக்காட்டுகிறது. சிரஞ்சீவியும், மாதவியும் ஒரே கிராமத்தை்ச சேர்ந்தவர்கள். இருவரும் நகரில் சென்று ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நடனம்,நாடகம் ஆகியவற்றில் சேர்ந்து நடித்து இருவருக்கும் காதல் நெருப்பு பற்றிக்கொள்கிறது. மாதவிக்கு பெரியளவில் பணம் இருக்கிறது. படிப்பு முடிந்தால் கல்யாணம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கவேண்டியதுதான் பாக்கி. ஆனால் சிரஞ்சீவிக்கோ, மாதவியின் அப்பா வீரபத்திரனிடம் அடமானம் வைத்த வீட்டை மீட்க வேண்டும். விதவை அக்காவைக் காப்பாற்ற வேண்டும் என நிறைய கடமைகள் உள்ளன. இதனால் படிப்பில் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. மாதவிக்கு அவனை காதலிப்பது தவிர வேறு வேலையில்லை.  இந்த நிலையில் தேர்வு எழுதியபிறகு சிரஞ்சீவி தனது கிராமத்திற்கு வருகிறான். அப்படி வரும்போது பேருந்தில் வருவதாக கூறுபவனை, மாதவி தனது காரில் கிராமத்திற்கு கூட்டி வருகிறாள். இதைப் பார்த்து கிராம முன்சீப், வீரபத்திரத்திடம் தகவல் கூற அவர் சி

உடலில் குறுகல் இன்றி தோளில் நிமிர்வுடன் அரசியல்வாதிகளை எதிர்கொண்ட பத்திரிகையாளரின் சுயசரிதை! டெவில்ஸ் அட்வகேட் - கரண் தாப்பர்

  டெவில்ஸ் அட்வகேட் கரண் தாப்பர் ரூ.375 ஹார்ப்பர் கோலின்ஸ் அமேசான்   இந்தியாவில் இன்போடெய்ன்மென்ட் டெலிவிஷன் நெட்வொர்க் என்ற நிறுவனம் தொடங்கி அதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்துகொடுத்த பத்திரிகையாளர் கரண் தாப்பர் எழுதியுள்ள சுயசரிதை நூல், டெவில்ஸ் அட்வகேட். இதேபெயரில் அவர் சிஎன்என் ஐபிஎன் டிவி சேனலில் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தற்போது, கரண் தாப்பர் தி வயர் என்ற இணைய பத்திரிகைக்கு நேர்காணல் நிகழ்ச்சிகளை செய்து கொடுத்து வருகிறார். டெவில்ஸ் அட்வகேட் நூல், மொத்தம் 187 பக்கங்களைக் கொண்டது. இந்த பக்கங்களில் அவர் தான் காஷ்மீரில் பிறந்தது, அவரது பெற்றோரின் அதீத பாசம், மூன்று சகோதரிகளின் அன்பு, பள்ளிப்படிப்பு, தனக்கு கரண் என பெயர் வந்ததற்கான காரணம் ஆகியவற்றை தொடக்கத்தில் விவரிக்கிறார். இந்தப்பகுதி சற்று நெகிழ்ச்சியாக இருக்கிறது.  மூன்று பெண் குழந்தைகளுக்குப் பிறகு பிறக்கும் ஆண் பிள்ளை கரண் தாப்பர். இவர் பிறக்கும்போது அவரின் அப்பாவிற்கு வயது, 50.  எனவே, ராணுவ அதிகாரியான அப்பாவிற்கு, கரண் மீது தனி பிரியம் இருக்கிறது. அதேசமயம் அம்மாவிற்கு மகனை கண

முற்பிறப்பில் துரோகம் செய்த ஐந்து பேரரசர்களுக்கு எதிராக போராடும் வேட்டைக்காரன்! - டார்க் ஹன்டர்

படம்
  தி ஹன்டர் (or dark hunter) மங்கா காமிக்ஸ் சீனா ரீட்எம்.ஆர்க் 292----- ஐந்து பேரரசர்களால் துரோகம் செய்யப்பட்ட வீரன் ஒருவன் நெஞ்சில் வாள் பாய்ச்சி கொல்லப்படுகிறான். அவன் மறுபிறவியில் தாழ்ந்த குலத்தில் பிறந்து சமூகத்தின் வேறுபாடுகளையும் கடந்து தனது தற்காப்புக் கலை மூலம் தன்னைக் கொன்றவர்களை பழிவாங்குவதுதான் கதை. கதை இன்னும் முடியவில்லை தொடர்கிறது. படித்தவரையில் உள்ள கதையைப் பார்ப்போம். சென் பெய்மிங்கிற்கு நினைவு திரும்பும்போது, அருகில் அவனது தங்கை சூயி இருக்கிறாள். அவள்தான் அவனை எழுப்பிக்கொண்டிருக்கிறாள். வீட்டில் கடன் கொடுத்தவர்கள் சுற்றி நிற்கிறார்கள். எழும் சென் பெய்மிங்கிற்கு தான் யார், எப்படி இங்கு வந்தோம் என அனைத்துமே நினைவிருக்கிறது.துரோகத்தால் பறிபோன அவனது உயிர், சில நாட்களுக்குப் பிறகு   வேறு ஒரு உடலில் புகுந்திருக்கிறது. அதுதான், அந்த ஊரில் ஆதரவற்று வாழும் சென் குடும்பம். அதில் உள்ள உறுப்பினர்கள் அண்ணன் சென், தங்கை சூயி, பிறகு சென்னை ஆதரிக்கும் எப்போது அவனோடு இருக்கும் நண்பன் லேஸி பக். கதையின் தொடக்கத்தில் சென் பெய்மிங், அவனுக்கு இருக்கும் மூன்று மில்லியன் டாலர்

ஒருதலைக்காதலில் இழுத்துவிடப்படும் பெருமாள் பக்தனின் நிலை! - நமோ வெங்கடேசா - வெங்கடேஷ், த்ரிஷா

படம்
    நமோ வெங்கடேசா - தெலுங்கு  விக்டரி வெங்கடேஷ், த்ரிஷா, பிரம்மானந்தம். முகேஷ் ரிஷி, அலி இயக்கம் சீனு வைட்லா   வெங்கட்ரமணா, ஹைதராபாத்தில் தனது சித்தப்பா குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தொழிலே கலை நிகழ்ச்சிகளை செய்வதுதான். இந்த நிலையில் வயசாகிறதே திருமணம் செய்யலாம் என நினைத்து ஜோதிடம் பார்க்கிறார்கள். ஆனால் ஜோதிடர் போட்ட சோளிகளில் ஒன்று எந்த பக்கமும் திரும்பாமல் நடுவில் நிற்கிறது. அதாவது கல்யாணம் நடந்தாலும் நடக்கும். இல்லையானாலும் சரி. வெங்கட்ரமணாவைப் பொறுத்தவரை அவர் பிறரை ஏமாற்றுவதில்லை. அவரும் ஏமாறுவதில்லை. இப்படி இருப்பவருக்கு பாரிசில் நிகழ்ச்சி நடத்த அழைக்கிறார்கள். அழைத்த ஆள் லேசுபட்டவரில்லை. ஆனால் அவரையும் வெங்கட் ரமணா எந்த கல்மிஷம் இல்லாமல் நடந்துகொண்டு பீதிக்குள்ளாக்குகிறார். பிரசாத் என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கட் ரமணாவை தனது சொந்தக்காரப் பெண் காதலிப்பது போல மாயையை உருவாக்குகிறார். அதையும் வெங்கி நம்புகிறார். ஆனால் உண்மையில் அவர் காதலிக்கும் பெண் யார், அவர் யாரை விரும்புகிறார், பிரசாத்தின் பழிவாங்கும் திட்டம் நிறைவேறியதா என்பதை நகைச்சுவையாக சொல்ல

வியட்நாம் சிறுமியின் பழிதீர்க்கும் வெறி! - தி புரோடேஜ் 2021

படம்
  முதல் காட்சி வியட்நாம் நாட்டில் விரிகிறது. மழை பெய்துகொண்டிருக்க, அதில் தலைக்கு சிறு முக்கோண தொப்பி அணிந்துகொண்டு மக்கள் தெருவில் நடந்துகொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் ஒரு வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று பார்த்தால், அங்குள்ளவர்கள் அனைவருமே இறந்துகிடக்கிறார்கள். அனைவருமே ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களிடமுள்ள பணத்தை அந்த நபர் எடுத்துக்கொள்கிறார். அப்போது, அவருக்கு ஏதோ சத்தம் கேட்க கைத்துப்பாக்கியை எடுத்து அதை சோதிக்கிறார். பீரோவில் சிறுமி ஒருத்தி தானியங்கி துப்பாக்கி ஒன்றுடன் இருக்கிறாள். அவளை அந்த நபர் அதாவது சாமுவேல் எல் ஜாக்சன் கொல்லவில்லை. அவளது பயம் போக்கி அவளை க் கூட்டிக்கொண்டு செல்கிறார். சாமுவேல் அவரே சொல்லிக்கொள்வது போல நல்லவர் கிடையாது. கூலிக்கொலையாளி.  தனக்குத் தெரிந்த வித்தையை வியட்நாம் சிறுமிக்கு, அதாவது அன்னாவுக்கு சொல்லித்தருகிறார். அவள் அவரே பிரமிக்கும்படி சூட்டிகையாக ஆபத்தானவளாக வளர்கிறாள். அவளுக்கு வளர்ப்பு அப்பா என மூடியை மட்டுமே நினைக்கிறாள். அன்னாவுக்கு புத்தகங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். எனவே, புத்தக கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறாள். இந்

பொய் சொல்லி இளம்பெண்ணின் வீட்டுக்குள் நுழையும் பொறியாளன், எதிரியை அன்பால் வெல்லும் கதை! - பர்சனல் டேஸ்ட் 2010

படம்
        பர்சனல் டேஸ்ட்  கொரிய தொடர் தொடரை இலவசமாக யூட்யூபில் பார்க்கலாம்.  எழுத்து  கிம் ஹி ஜூ இயக்கம் சன் ஹியூங் சுக், நோ ஜாங் சான்  கொரிய சூப்பர் ஸ்டார் லீ மின் ஹோ நடித்திருக்கிறார். தொடரில் முக்கியமான கதை,  லின் ஹோவின் எம் கட்டுமான நிறுவனத்திற்கும், மிராயே நிறுவனத்திற்கும் நடக்கும் தொழில்போட்டிதான் . லீ மின்ஹோவின் தந்தை மிராயேவில் வேலை செய்தாலும் கூட அவருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தங்கியிருந்த வீடு கூட துரோகம் செய்த நண்பரால் கைப்பற்றப்படுகிறது. அப்படி துரோகம் செய்தவர்தான் மிராயே கட்டுமான உரிமையாளர். அவரை பழிவாங்கவேண்டும் என துடிப்பாக இயங்கும் லின் ஹோவுக்கு சரியான வாய்ப்பாக டேம் ஆர்ட் கேலரி திட்டம் வருகிறது. அதில்  போட்டியிடுகிறார்.  அந்த நிறுவனத்தினர் சாஞ்ஜோ எனும் கட்டுமான அமைப்பின் படி கட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் என்ற ரகசிய செய்தி லின் ஹோவிற்கு கிடைக்கிறது. அந்த அமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பேராசிரியர் பார்க் என்ற கட்டுமானக் கலைஞரின் வீட்டுக்கு சென்று ப்ளூபிரிண்டுகளை பார்க்க வேண்டும். ஆனால் அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். கொரியாவில் அவரது

ரொமான்டிக் மருத்துவரின் புதிய மருத்துவப்படை - டாக்டர் ரொமான்டிக் சீசன் 2 - கொரிய தொடர்

படம்
    டாக்டர் ரொமான்டிக்  சீசன் 2 புதிய நடிகர்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் டீச்சர் கிம், தலைமை நர்ஸ், அவருக்கு உதவியாளர்கள் யாரும் மாற்றப்படவில்லை. வில்லனும் கூட மாறவில்லை. ஆனால் சூழல்கள் மாறியுள்ளன.  டாக்டர் ரொமான்டிக் என்பது டீச்சர் கிம்தான். அவர்தான் டைட்டில் ரோல் நாயகன். டோல்டம் மருத்துவமனையில் தலைமை மருத்துவர். தனது குழுவில் உள்ளவர்கள் தவறு செய்தால் இவரது கண்டிப்பு பல்லை உடைப்பேன், தவறு செய்த கையை வெட்டுவேன் என்பதாகவே இருக்கும். இப்படிப்பட்டவர்தான் அவர்களுக்கு தேவையானபோது உதவியும் செய்வார். ஒருவருக்கு உதவி தேவையென்றால் எந்த இடத்திலும் இருக்கும் பொருட்களை வைத்தே சிகிச்சை செய்யும் இவரது ஸ்டைல் டோல்டம் வட்டாரத்தில் புகழ்பெற்றது.  சாதாரணமாக இந்த மருத்துவமனை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. காசு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் சிகிச்சை கிடைக்கும். இதனால் மருத்துவமனை பெரிதாக சம்பாதித்து கொடுப்பதில்லை. ஆனால் அவசர சிகிச்சை என்றால் டோல்டம் மருத்துவமனையில் டீச்சர் கிம் என்பதுதான் அந்த வட்டாரத்தில் பிரபலமான நம்பிக்கை.    முதல்பகுதியில் கங் டங் ஜூ, யூன், டூயிங்பம் ஆகியோரின் வருகை, டீச்ச

சுவாரசியமான செய்தி வெறியால் அழிக்கப்பட்ட தனது குடும்பத்திற்காக அறவழியில் பழிவாங்கல்! - பினாக்கியோ - கொரிய தொடர் - இறுதிப்பகுதி

படம்
        பினாக்கியோ இறுதிப்பகுதி கொரியதொடர் எம்எக்ஸ் பிளேயர் டிவி சேனல் நேர்காணலில்... மொத்தம் இருபது எபிசோடுகள்தான் . முதல் பகுதியில் தீயணைப்பு வீரரான ஒருவர் கட்டிடம் ஒன்றில் தீயணைக்க செல்கிறார் . அங்கு தகவல் கொடுப்பவர் செய்யும் குளறுபடியால் தீயணைப்பு வீரர்கள் அனைவருமே கேஸ் வெடித்து இறக்கும்படி ஆகிறது . உண்மையில் இதற்கு பின்னணியில் தொழிலதிபர் ஒருவரும் அவருக்கு உதவியாக அரசியல்வாதியும் உள்ளனர் . ஆனால் இந்த உண்மை வெளியே வரக்கூடாது என தொழிலதிபர் பங்குகளை வைத்துள்ள எம்எஸ்சி என்ற ஊடகத்தின் செய்தியாளர் சாவோக்கிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது . முதலில் உண்மை , நேர்மை , கண்ணியம் , கட்டுப்பாடு என்பவர் இறுதியில் வாய்ப்புதான் வசதியைக் கொடுக்கும் என சலனப்பட்டு டீலுக்கு ஒகே சொல்லுகிறார் . செய்திகளில் வீரர்கள் இறப்புக்கு தீயணைப்பு வீரர்களின் தலைவர்தான் காரணம் என கட்டம் கட்டுகிறார் சாவோக்கி . இதனால் மக்களின் கோபம் முழுக்க தீயணைப்பு வீரரின் குடும்பம் மீது திரும்புகிறது . இப்படி மக்களின் வெறுப்பினால் தீயணைப்பு கேப்டனின் மகன்கள் கி ஜே மியூங் , ஹோமி யூங் ஆகியோரின் வ