இடுகைகள்

சீனப்படம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாய் போல ஒடுங்கி வாழும் இளைஞன் வீர தீர சூரனாகி வாள் எடுக்கும் கதை!

படம்
  சோல் ஆஃப் பிளேட்ஸ் சீன திரைப்படம்  ஐக்யூயி ஆப் நாம்கூங் என்ற குடும்பம் வாள் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் அரும்பாடுபட்டு வாள் ஒன்றைச் செய்கிறார். ஆனால் அப்படி செய்யும்போது மனதில் உருவாகும் ஆசை,வாளில் தீய ஆன்மாகவாக மாறுகிறது. எனவே, அதை சரிசெய்ய முயல்கிறார்கள். அந்த நேரம் பார்த்து புகழ்பெற்ற வாள்வீரர், அதை திருடிக்கொண்டு செல்கிறார். அவருக்கு அந்த வாளை வைத்து நிறைய விஷயங்களை சாதிக்க ஆசை. உண்மையில் அந்த வாளைத் தேடி ஏராளமானவர்கள் சுற்றி வருகிறார்கள். அந்த வாள் யாருக்கு கிடைத்தது என்பதே கதையின் இறுதிப்பகுதி.  படத்தில் நாயகனுக்கு பெயரே நாய்தான். மிஸ்டர் நாய் என அழைத்து தூற்றுகிறார்கள். அவனது இளமைக்காலம் கொடுமைகள் நிறைந்தது. ஒரு துண்டு இறைச்சிக்காக நாயுடன் சண்டையிட்டு வாழ்கிறான். அப்படியே வாழ்ந்து கோழைத்தனமும், உயிரைக் காப்பாற்றி்க்கொள்ளும் சாதுரியமும் வருகிறது. ஆனால் வீரம், தைரியம், நேர்மை வரவில்லை. இதை அவன் மெல்ல கற்றுக்கொண்டு வாளை எப்படி கையில் எடுத்து வாளின் ஆன்மா இருந்தாலும் இல்லையென்றாலும் வீரனாக இருக்கிறான் என்பதை சொல்ல முயன்றிருக்கிறார்கள்.  படம் நெடுக ந

நகரில் திடீரென நெருப்பால் எரிந்து இறந்துபோகும் மனிதர்கள்! - பின்னணியை ஆராயும் இரண்டு காவல் அதிகாரிகள்!

படம்
  அல்டிமேட் சீக்ரெட் சீன திரைப்படம்  ஐக்யூயி ஆப்  சீன நகரம். அங்கு நடைபெறும் அரசியல் பிரச்னைகளால் அதன் நிம்மதியை அழிக்க சிலர் முயல்கிறார்கள். அதற்காக பேய் கொலை செய்கிறது என நம்பும்படியான ஜெகஜால பேய் முகமூடி தோற்றத்தில் சிலரை நெருப்பால் எரித்துக் கொல்கிறார்கள். அதைப்பற்றி காவல்துறை அதிகாரிகள் இருவர் எப்படி விசாரித்து அறிகிறார்கள் என்பதே கதை.  சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மருந்துப்பொருள் பற்றிய கதை. ஆனால் அதை கதையில் கொண்டு வந்து விளக்குவதற்குள் நமக்கு படம் பார்க்கும் ஆர்வமே போய்விடுகிறது. நாயகன், காவல்துறை அதிகாரி. ஆனால் எப்போதும் சரக்கு போட்டுக்கொண்டு விலைமாதுக்களின் மடியே கதியென்று கிடக்கிறான். ஏன் அப்படி? அவனுக்கென்று முன்னாள் காதலி இருப்பாள். ஆனால் அவள் இன்னொரு வசதியான ஆளை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டாள் என்பதே காரணம். அந்த செய்தி, அதிலுள்ள உண்மை மனதை வருத்தும்போதெல்லாம் நாயகன் மது அருந்துகிறான். எப்போதெல்லாம் வருந்துகிறான்? எப்போதுமேதான். படம் முழுக்க நாயகன் மது போதையிலேயே இருக்கிறான்.  இவனுக்கு நேர் மாறாக ஆன்ம ஆற்றல் கொண்டவனாக இன்னொரு காவல் அதிகாரி, பச்சை மாவு பிடித்தது போல கும்

சீனப் பொக்கிஷங்களை ஜப்பான்காரனுக்கு விட்டுக்கொடுக்க மறுக்கும் நாயகன்!

படம்
  ஷூ ஃபூ டிரஷ்சர் சீன திரைப்படம்  ஒன்றரைமணிநேரம் ஐக்யூயி ஆப் கல்லறைக்கு சென்று பொக்கிஷங்களை தேடும் படங்களுக்கென இருக்கும் சில அம்சங்களைப் பார்ப்போம்.  நாயகன் பொக்கிஷ புதிர்களை அவிழ்ப்பதில் திறமைசாலி. அவனுக்கென நகரில் கலைப்பொருட்களை விற்கும் கடை வைத்திருப்பான். தங்கம், வெள்ளி பாத்திரங்களை கொள்ளையிடுவதில் ஆர்வம் இருக்காது.  நாயகனின் நண்பன் பேராசை கொண்ட வியாபாரி. சூதாடி கலைப்பொக்கிஷங்களை அடகு வைப்பான். இவனுக்காகவே நாயகன் வெளிநாட்டுக்காரர்கள் அல்லது எதிரிகளோடு கூட்டு சேர்ந்து கல்லறைகளை கண்டுபிடித்து உள்ளே செல்லவேண்டியிருக்கும். இந்த காட்சிகள் கடுப்பாக இருந்தாலும் திரை நடிகர்கள் காமெடி என்பதாக பாவ்லா செய்வார்கள்.  நாயகி பெரும்பாலும் நாயகனின் தோழியாக இருப்பாள். எதிரியாக இருந்து நட்பாகி தனது காணாமல் போன அப்பாவை கல்லறைக்குள் தேடிக்கொண்டிருப்பாள். நாயகன் ஊடல் கொள்வதும், ஊடாடி மகிழ்வதும் இவருடன்தான்.  சீன படங்களில் ஜப்பானியர்கள் மேல் துவேஷம் மறைக்கப்படாமல் இருக்கும். அந்த நாட்டினர், சீனாவின் மீது படையெடுத்து நிறைய அக்கிரமங்கள் செய்திருக்கிறார்கள். அதை இன்றுவரை மறந்துவிட மக்கள் தயாராக இல்லை. சினி