இடுகைகள்

டெய்ஸி ராக்வெல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விருது வெற்றிக்கு எழுத்துலகில் இடம் இல்லை! - இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

படம்
  கீதாஞ்சலி ஸ்ரீ இந்தி மொழி எழுத்தாளர்  ரெட் சமாதி என்ற பெயரில் கீதா எழுதிய நூல் டாம்ப் ஆஃப் சாண்ட் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. டெய்ஸி ராக்வெல் என்பவர் இதனை மொழிபெயர்த்தார். இந்த நூலுக்கு தற்போது சர்வதேச புக்கர் பரிசு கிடைத்துள்ளது. 64 வயதான கீதாஞ்சலியை சந்தித்துப் பேசினோம்.  நீங்களே உங்கள் நூலை ஆங்கிலம், இந்தி மொழியில் எழுதியுள்ளீர்கள். தற்போது விருதுபெற்ற நாவல் கூட ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உங்களுடைய படைப்புகளை நீங்களே மொழிபெயர்க்க ஆசைப்பட்டுள்ளீர்களா? என்னுடைய கிரியேட்டிவிட்டியான எழுத்து என்பது இந்தி மொழியில்தான். பிரேம்சந்தின் சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் எழுதினேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பதைவிட நான் இந்தியில் புதிதாகவே நூலை எழுதிவிட முடியும்.  டாம் ஆஃப் சாண்ட் நாவல், எப்படி ஒருவரின் இறந்தகாலம் தினசரி வாழ்க்கையை மாற்றுகிறது, வடிவமைக்கிறது என விவரிக்கிறது. 60 ஆண்டுகள் கழித்தாலும் கூட இந்த விளைவுகள் நடைபெறுகின்றன. வரலாற்றோடு ஒருவர் சரியான உறவை எப்படி பேணுவது? நாவலில் வரும் இறந்தகாலம் என்பது 50-60 ஆண்டுகள் ஆகும். இறந்த காலத்தின் பாதிப்புகள் நம்மை

இந்தி மொழியை விட ஆங்கிலத்தில் நிறைய தகவல்கள் ஆதாரங்கள் உள்ளன! - எழுத்தாளர் கீதாஞ்சலி

படம்
  கீதாஞ்சலி ஸ்ரீ எழுத்தாளர் டெய்ஸி ராக்வெல் மொழிபெயர்ப்பாளர் இவர் எழுதிய ரெட் சமாதி என்ற நூல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் பெயர், டாம்ப் ஆப் சாண்ட். இதனை டெய்ஸி ராக்வெல் என்ற பெண்மணி மொழிபெயர்த்துள்ளார். இந்த நூல் தற்போது புக்கர் பரிசுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தி நூல் ஒன்று, இப்பரிசு பட்டியலில் இடம்பெறுவது அரிதானது.  கணவர் இறந்தபிறகு, மனைவி பாகிஸ்தான் செல்கிறார். தனது வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களை அடையாளம் காண்கிறார் என்று எழுதியிருக்கிறீர்கள். எப்படி இப்படி கற்பனை செய்து எழுதினீர்கள்? கீதாஞ்சலி - இந்த நூலை எழுத எனக்கு ஏழு ஆண்டுகள் ஆனது. முதிய பெண் பற்றிய பிம்பம்தான் கதைக்கு முக்கியமானது. அவள் கணவரை இழந்திருக்கிறாள். இதுவரை அவள், குடும்பம், கணவன் என வாழ்ந்ததில் பிறர் சொல்லியே அவளது வாழ்க்கை நடந்து வந்திருக்கிறது. இதன் விளைவாக அவள் தனது வாழ்க்கை மீது கொண்ட ஆர்வத்தையே இழந்திருக்கிறாள். கணவரின் இறப்பு பெரும் விடுதலையை அடையாளம் காட்டுகிறது. இனி தன்னுடைய வாழ்க்கை புத்துணர்வு பெறவேண்டும் என நினைக்கிறாள். அதன் பொருட்டே எல்லைகளால் பிரிக்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான்