இடுகைகள்

நூல் விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான அர்த்தம் - விக்டர் ஃபிராங்கல்

படம்
மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங் விக்டர் ஃபிராங்கல் உளவியல் நூல்  ஆஸ்திரியாவைச் சேர்ந்தவரான விக்டர், நாஜிப்படையினரால் பிடிபட்டு வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைத்த வரலாறு கொண்டவர். இதுபற்றி அவர் எழுதிய நூல்தான் இது. சித்திரவதை முகாம் என்றதும், முழுமையாக நூல் முழுவதும் மோசமான சித்திரவதை அனுபவங்கள்தான் இருக்கும் என நினைக்கவேண்டியதில்லை. நூல் 69 பக்கங்களைக் கொண்டது. ஆனால் படித்து முடிக்க அந்தளவு எளிமையாக இல்லை. அந்தளவு அனுபவங்களின் அடர்த்தி உள்ளது.  நூல் இருபாகங்களாக உள்ளது. முதல்பகுதி முழுக்க வதை முகாம்களின் அனுபவங்கள் உள்ளன. இரண்டாம் பகுதியில், தனது வதைமுகாம் அனுபவங்களின் அடிப்படையில் அவர் கண்டறிந்த லீகோதெரபி எனும் உளவியல் உத்தியை விளக்கியிருக்கிறார். இந்த உத்திகளை படித்து புரிந்துகொள்வது அவர் சார்ந்த துறையினருக்கு எளிமையாக இருக்கலாம். சாதாரணமாக ஒருவர் அதைப் படித்தால் சற்று தலைச்சுற்றிப்போகும் அபாயம் உள்ளது. முயற்சி செய்யலாம். சில நோயாளிகளைப் பற்றிய அனுபவங்களைக் கூறியுள்ளார். அதைப்படிக்கும்போது முன்முடிவுகளின் ஆபத்து கண்களுக்குத் தெரிகிறது.  நூலின் தொடக்கத்திலேயே தான் வதை முகாம்

டிஜிட்டல் உலகில் அடையாளங்களை மறைத்து உயிர்பிழைக்கும் வழிகள்!

படம்
  How To Disappear: Erase Your Digital Footprint, Leave False... Author: Frank M. Ahearn Publisher: Lyons Press தனிநபரால், அல்லது வேறு அமைப்பால் உயிருக்கு ஆபத்து என்றால் உங்கள் அடையாளத்தை மறைத்து வேறு இடத்திற்கு சென்று வாழ்வது உத்தமம். ஏனெனில் எல்லாவற்றையும் விட உயிர் பிழைத்திருப்பது முக்கியம். இதைத்தான் நூல் ஆசிரியர் ஃப்ராங்க் கூறுகிறார். நூலில் கூறும் கருத்துகள் அவரது சொந்த அனுபவம், தான் சந்தித்த மனிதர்கள், தனது செயல்களால் ஏற்பட்ட பிரச்னைகள், வெற்றி, தோல்வி என அனைத்தையும் வெளிப்படையாக பகிர்கிறார்.  இணையம் இல்லாதபோது அடையாளத்தை மறைத்து வாழ்வது எளிது. ஆனால் இன்று மிக கடினம். அனைத்து டெக் நிறுவனங்களும் சேவையை இலவசம் சென்று சொல்லி பயனர்களின் தகவல்களை பிறருக்கு விற்றுப் பிழைக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஒருவர் தனது அந்தரங்க தகவல்களை எப்படி மறைத்து உயிர்வாழ்வது என நூலில் ஆசிரியர் விரிவாக எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார்.  அரசுக்கு வரிபாக்கி வைப்பது, மோசடி செய்வது, கொள்ளை, கொலைக்குற்றங்கள் செய்பவர்களை ஃப்ராங்க் தனது நிறுவனத்தின் மூலம் காப்பாற்றுவதில்லை. அது அவரது நிறுவனத்திற்கு நிரந்

வேலைவாய்ப்பை தீர்மானிக்கும் அல்காரித நிறுவனங்கள் - பாதகங்களும் விளைவுகளும் - அல்காரிதம் - நூல் விமர்சனம்

படம்
  அல்காரிதம் ஹில்கே செல்மன் ஹாசெட் புக்ஸ் வங்கிகள், பள்ளிகள், தனியார் டெக் நிறுவனங்கள் ஆகியவற்றில் அல்காரித நிறுவனங்கள் எந்தளவு பயன்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாக ஏற்படும் பாதகங்கள் என்னென்ன, அதை வேலை தேடுவோர் எப்படி எதிர்கொள்வது என நூலாசிரியர் விளக்கியுள்ளார்.  இன்று வேலைக்கு அனுப்பும் ரெஸ்யூம்களை அல்காரிதங்கள்தான் தேர்ந்தெடுக்கின்றன. அவை தேர்ந்தெடுத்து சில தேர்வுகளை வைக்கின்றன. இதில் ஒருவரின் உடல்மொழி, குரல், செயல்பாடு, நிறம், இனம் என அனைத்தும் பார்க்கப்படுகிறது. பிறகு அவரின் திறன் மதிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் அடுத்தகட்ட வேலைவாய்ப்பு தேர்வுகளை பெரு நிறுவனங்கள் நடத்துகின்றன. அமேஸான் ஃபிளெக்ஸ் போன்ற நிறுவனங்களில் ஒருவர் அல்காரிதம் மூலம் கண்காணிக்கப்பட்டு, குறைகள் எழுந்தால் பெரிதாக விளக்கங்கள் கேட்காமல் ஒரே ஒரு மின்னஞ்சல் மூலம் வேலையை விட்டு நீக்கப்பட்டுவிட முடியும். இதற்கான விளக்கங்களை வேலை இழந்தவர் பெற முடியாது. இதற்காகவே தனி ஒப்பந்தங்களை அமேசான் தயாரித்து வைத்து வேலை செய்பவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது. வாகனங்களில் உள்ள கேமராக்கள் மூலம் ஓட்டுநர்களை கண்காணிப்பது, அந்த

அநீதிக்கு எதிரான குரலாக ஒலிக்கும் ஆக்ரோஷ இசை!

படம்
  மெட்டல் மியூசிக்  நிக்கோல் ஹார்னிங் 104 பக்கங்கள் ஹெவி மெட்டல் இசை இன்று தமிழ் சினிமாவுக்கும் வந்துவிட்டது. பிராந்திய மொழி சினிமாவுக்கு வருவதற்கு வேண்டுமானால் தாமதமாகி இருக்கலாம். ஆனால், எழுபது எண்பதுகளில் அந்த இசையை ரசிக்கும் பலர் உலகமெங்கும் உருவாகிவிட்டார்கள்.   இசைவிழாக்களுக்கு செல்பவர்கள் பிறருக்கு அதைப்பற்றி சொல்வது குறைவு. சொன்னாலும் புரிந்துகொள்ளவேண்டுமே? இங்குள்ள இசைஞானிகளுக்கு ஹெவி மெட்டல் என்பது இரைச்சல் என்பதாகவே மாறாத கருத்துண்டு. கிணற்றுத் தவளைகளுக்கு அகங்காரம் எப்போதுமே அதிகம்தான்.  ஹெவி மெட்டல் இசை எதற்கு உருவானது, அதன் பின்னணி, அதில் பிரபலான இசைக்குழுக்கள், அவர்களின் புகழ், வீழ்ச்சி, பெற்ற வெற்றிகள், எதிர்கொண்ட விமர்சனங்கள், சமூகம் வேறுபட்ட இசையை எப்படி புரிந்துகொண்டது, உள்வாங்கியது என்பதைப் பற்றி நிக்கோல் ஹார்னிங் விரிவாக விளக்கியுள்ளார்.  சமூக அமைப்பில் உள்ள பிரச்னைகளை எதிர்க்க நினைப்பவர்கள், அதில் பொருந்திபோக முடியாதவர்கள் மெட்டல் இசையை உருவாக்குகிறார்கள். அதைக் கேட்பவர்களும் இப்படியான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லையென்றாலும் பரவாயில்லை. தலையை மேலும்

நவதாராளவாத உலகில் மக்கள் மீது செலுத்தப்படும் கண்காணிப்பு அரசியல்!

படம்
  சைக்கோ பாலிடிக்ஸ்  பியூங் சுல் ஹான்  வெர்சோ தத்துவ நூல் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தத்துவ நூல். இதை எழுதியுள்ள பியூங் சுல் ஹான், தத்துவத்தில் புகழ்பெற்றவர். இவரைப் பற்றி, இவரது நூல்கள் பற்றி இலக்கிய இதழ்களில் பல்வேறு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பக்க அளவில் நூல் சிறியதுதான். ஆனால் கூறும் விஷயங்கள் சற்று அடர்த்தியானவை.  அவர் தனது பேச்சில் கூறுவது போலவே பல்வேறு வார்த்தைகளை  மட்டுமல்ல முழு நூலிலுள்ள அனைத்து அடிக்குறிப்பிட்டு வைத்துக்கொண்டு புரிந்துகொள்ளவேண்டும். அந்தளவு அடர்த்தியான பொருளை விளக்க முயலும் நூல்தான் இது.  நூலில் பிக் பிரதர், பிக் டேட்டா, ஜார்ஜ் ஆர்வெல்லின் நூலிலுள்ள பல்வேறு பாத்திரங்கள், பிக் பிஸினஸ் என நிறைய எடுத்துக்காட்டுகள் காட்டப்படுகின்றன. மக்கள் மீது கேமராக்களின் கண்காணிப்பு இருக்கிறது. ஆனால் அது 1984 நாவலில் வரும்படியான வற்புறுத்தலாக இல்லை. நட்புரீதியான தன்மையில் கண்காணிப்பும், மக்களை வழிக்கு கொண்டு வரும் செயல்களையும் அரசு செய்து வருகிறது என ஆசிரியர் கூறுகிறார். ஒருவரை அரசு, சமகால தொழில்நுட்பங்கள் வழியாக கண்காணிக்கிறது. அரசுக்கு எதிர

இந்துத்துவா எனும் கருத்தியலை குறுகிய மனத்துடன் சுயநலனிற்கு பயன்படுத்துபவர்களைப் பற்றி விளக்கும் நூல்!

படம்
  நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர் கிழக்கு பதிப்பகம் 341 பக்கங்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் எழுதிய நூலை வலதுசாரி கருத்தியல் கொண்ட கிழக்கு பதிப்பகம் ஏன் வெளியிட்டுள்ளது என வாசகர்களுக்கு சந்தேகம் எழலாம். அதற்கான பதில் தலைப்பிலேயே உள்ளது.  இந்துமதம் எப்படிப்பட்டது, அதில் உள்ள தன்மைகள் என்ன, அதற்கு உழைத்த ஆதிசங்கரர்,ராமானுஜர் ஆகியோரின் பங்களிப்பு, சங்கரர் உருவாக்கிய மடங்கள், அதன் பணிகள், நிறுவன மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என முதல் பகுதி விளக்குகிறது. இதற்குப்பிறகு சசி தரூர் விளக்குவது இந்துத்துவா என்ற கொள்கையை உருவாக்கிய சாவர்க்கர், அதை மேம்படுத்திய கோல்வால்கர், ஹெட்கேவர் ஆகியோர் எப்படி அதை குறுகிய நோக்கத்தில் பார்த்து மக்களின் மத நம்பிக்கையை சுயநலனிற்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார்.  இங்குதான் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்பின் செயல்பாடு உள்ளே வருகிறது. கலாசார தேசியம் என்ற பெயரில் நிறுவன மதங்கள் போலவே இந்து மதத்தை எந்தெந்த வழிகளில் மாற்ற முயல்கிறார்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நூலை தொடக்கத்தில் படித்தது, இ

சோசலிசத்திலிருந்து பாசிசம் பிறக்கிறதா? - விளக்குகிறார் எஃப்ஏ ஹயேக்

படம்
  ரோட் டு செஃர்ப்டம் நூல் அட்டை ரோட் டு செஃர்ப்டம் எஃப்ஏ ஹயேக்   இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல் தத்துவவியலாளர், ஹயேக். இவர் நூலில்   அரசியல்   தத்துவங்களை விரிவாக விளக்கி எழுதியுள்ளார். இந்த நூலை இடதுசாரி ஆதரவாளர்கள் படிக்கும்போது நிச்சயம் நெஞ்சுவலி வரும். அந்தளவு கம்யூனிசத்தை, இடதுகளுக்கான கருத்தை தாக்கியுள்ளார். நாம் கவனிக்க வேண்டியது வரலாற்று ஆதாரங்கள் மூலம் தனது கருத்தை எப்படி படிப்பவர்களிடம் கொண்டு செல்கிறார், ஏற்க வைக்கிறார் என்பதை மட்டுமே. 1941ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூலில் ஆசிரியர். சோசலிசம் வழியாக பாசிசம், நாஜியிசம் உருவாகிறது என்பதை விளக்கி கூறுகிறார். இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளே பெரும்பாலான கருத்துகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் எப்படி சட்டப்பூர்வமாக உருவாகிறது, மக்களை அதற்கு தயார்படுத்துகிறது, ஊடகங்களை அதற்கேற்ப வலதுசாரி அரசியல்வாதிகள் எப்படி வளைக்கிறார்கள் என்பதை நூலாசிரியர் நன்றாக விளக்கியுள்ளார். நூலை படிக்கும்போது ஜெர்மனியில் நடைபெற்ற ஹிட்லர் ஆட்சி, ரஷ்யாவில் நடைபெற்ற லெனின், ஸ்டாலின் ஆட்சி ஆகியவை நினைவில் வந்த

யதார்த்த நீதியை சொல்லும் நீதிக்கதைகள்! - நிஜம் நீதி - சுஜாதா

படம்
  நிஜம் நீதி சுஜாதா 73 பக்கங்கள் நக்கீரன் பதிப்பகம்   பஞ்சதந்திர கதைகளை படித்திருப்போம். அதில் நிறைய நீதிகளை அறிந்திருப்போம். அந்த கதைகளை, காலத்திற்கு ஏற்ப சற்று மேம்படுத்தி பார்த்து நீதிகளை அறிந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் இந்த நூல். முதல் கதையே சுஜாதாவின் குறும்பான   எழுத்தில் ஜிம்மியும் கடவுளும் என்ற தலைப்பில் தொடங்குகிறது. அதற்குப்பிறகு, நூலை நீங்கள் கீழே வைக்க வைக்க மாட்டீர்கள். அந்தளவு கதைகளும் சுவாரசியமாக இருக்கிறது. கதைகள் குழந்தைகளுக்கானவை அல்ல. வயது வந்தவர்களுக்கானவை. இதைப் புரிந்துகொண்டு படிக்கவேண்டும். செயல்படுபவர்கள் பேசமாட்டார்கள், சில துரோகங்கள் எப்போதும் மன்னிக்கப்படுவதில்லை, மோசடிகளை விஞ்ஞானம் கண்டுபிடித்துவிடும் என்ற கதைகள், எழுதப்பட்டவிதத்தில் மனம் கவருபவையாக உள்ளது. இந்த நூலை, காலம்தோறும் சற்று மாற்றி எழுதிக்கொள்ள முடியும் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம். ஏனெனில் காலம்தோறும் பிழைப்பதற்கான விதிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அதை வைத்து இதுபோல நிறைய கதைகளை எழுதலாம். உண்மையில் இன்றுள்ள சூழலுக்கு ஏற்ற கதை என எறும்பு, புறா கதையையும், தவளையை இரைய

அயோத்திதாசரின் பெயரை மறைத்து விமர்சித்த ஆளுமைகளைப் பற்றிய நூல் - பெயரழிந்த வரலாறு - ஸ்டாலின் ராஜங்கம்

படம்
  பெயரழிந்த வரலாறு - அயோத்திதாசர்  பெயரழிந்த வரலாறு அயோத்தி தாசரும் அவர் காலத்திய ஆளுமைகளும் ஸ்டாலின் ராஜாங்கம் காலச்சுவடு தமிழ் வழியில் படித்து ராயப்பேட்டையில் சித்த மருத்துவமனைச்சாலை நடத்தி வந்த அயோத்திதாசர், பௌத்த மதத்தை பட்டியலின மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களை அதைநோக்கி ஈர்த்தார். இதற்கென தனது நாளிதழில் பல்வேறு தொடர்களை எழுதி அதை நூல்களாக தொகுத்து வெளியிட்டார். இதேபோல இரட்டைமலை சீனிவாசன், சிங்கார வேலர், லட்சுமி நரசு ஆகியோர் பட்டியலின மக்களுக்கு பல்வேறு பங்களிப்புகளை ஆற்றினர். அன்றைய காலத்தில் மக்களிடையே புகழ்பெற்றிருந்த பிராமண கவிஞர்கள், எழுத்தாளர்கள் பட்டியலின மக்களுக்காக பாடுபட்ட அயோத்திதாசரின் செயல்பாடுகளை எங்குமே குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட நேர்ந்தாலும் கூட பெயரைக் கூறவில்லை. இந்தவகையில் அவரது செயல்பாடு குறிப்பிடப்படாமல் அழிந்துபோனது. இதை ஸ்டாலின் ராஜாங்கம், அன்றைய போக்கு அப்படித்தான் இருந்தது. உவேசா, பாரதி மட்டும் அயோத்திதாசரின் பெயரைக்குறிப்பிடாமல் இல்லை. அயோத்திதாசரும் மேற்சொன்னவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் விமர்சித்தார் என்று கூறுகிறார். அயோத்தி

மெய்ஞானத்தை தேடும் சீடனுக்கு குரு வைக்கும் பல்வேறு சோதனைகள்- மந்திரவாதியின் சீடன் - இவால்ட் ஃப்ளிஸர்

படம்
  மந்திரவாதியின் சீடன் இவால்ட் ஃப்ளிசர் தமிழில் அசதா காலச்சுவடு பதிப்பகம்   வெளிநாட்டுக்காரரான இவால்ட் இந்தியாவிற்கு ஞானம் தேடிப்பெற வருகிறார். அவருக்கு குருவாக வரும் யோகானந்தர் அவரை எப்படி சோதித்தார், தனது சீடனாக ஏற்றாரா, ஞானம் பெற உதவினாரா என்பதே கதையின் மையம். அசதா,ஆங்கில நூலை தமிழில் மிகச்சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். அதில் எந்த பழுதுமில்லை. ஆனால், இந்த நூல் மனிதர்கள் தேடும் ஞானத்தை, மெய்ப்பொருளை பற்றியது என்பதால் திரும்ப திரும்ப வாக்கியங்களை, இவால்டின் மனவோட்டங்களை படித்தால் மட்டுமே புரியும். இவால்டின் பயணமாகவே மட்டுமே குறுக்கி பார்க்க முடியாதபடி நூல் உருவாக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் நூலை படிக்க சற்று கடினமானது போல தோன்றும். ஆனால், சற்று வாசித்து ஐம்பது பக்கங்களை கடந்துவிட்டால்   பிரச்னை ஏதுமில்லை. நூலை வாசித்தவர்கள் உறுதியாக தாந்த்ரீகத்தைப் பற்றி தேடிப்போவார்கள். உறுதியாக அதற்கான அனைத்து விஷயங்களையும் ஆசிரியர் நூலில் விதைத்திருக்கிறார். மடாலயங்களின் உள்கட்டுமானது, சடங்குகளை முடிந்தளவு விளக்க முயன்றிருக்கிறார். இறுதியாக இவால்ட் தனக்கு கிடைத்த இரண்டு நிமிட உள்ளொ

வாழ்க்கை, தொழில் என இரண்டிலும் வாகை சூடுவதற்கான வழிகாட்டி நூல்!

படம்
  ரியோ ஒகாவா நூல் வாகை சூடும் சிந்தனை ரியோ ஒகாவா ஜெய்ஹோ தமிழாக்கம் – மிஸ்டிக் ரைட் நிறுவனம்     நான் நன்றாக இருக்கிறேன் என்ற புத்தகம் ரியோ எழுதியதுதான். பக்கம் 85. நூல் சற்று சிறியது. கருத்துக்களும் அதனால் சிறியதோ என்று தோன்றும்படி நூலை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த நூலோடு ஒப்பிடும்போது வாகை சூடும் சிந்தனை சொல்லும் கருத்துகள் அடிப்படையில் சற்று மேம்பட்ட சுய முன்னேற்ற நூல் எனலாம், ஹேப்பி சயின்ஸ் ஆன்மிக மத தலைவர் ஆற்றிய நான்கு உரைகளை தொகுத்து ‘வாகை சூடும் சிந்தனை’ என நூலாக்கியிருக்கிறார்கள். இப்படி நூலாக்குவதில் உள்ள நுட்பம் பற்றியும் ரியோ, பேசியுள்ளார். ஆனால், அது எந்தளவு சரி என்பதை வாசகர்கள்தான் படித்து புரிந்துகொள்ளவேண்டும். பானாசோனிக் நிறுவனத்தின் நிர்வாக முறை. குழாய் தண்ணீர் தத்துவத்தை எப்படி கடைபிடித்து நிறுவனம் மின்சாதனங்களை விற்றது என்பது படிக்க நன்றாக இருந்தது. இன்று அந்த தத்துவத்திற்கு என்ன மதிப்பு என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அதை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்படுத்திய காலம் முக்கியமானது. குறிப்பிட்ட பதவி, அதிகாரம் கிடைத்தபிறகு நாம் எப்படி செயல்படவேண்டுமென ர

மனிதர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் - தீக நிகாயம் - பௌத்த மறைநூல்

படம்
  தீக நிகாயம் நூல் அட்டை தீக நிகாயம் பௌத்த மறைநூல் மு கு ஜெகந்நாத ராஜா தமிழினி விலை ரூ.140 பாலி மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் ஆசிரியர். இதனால் நூல் முக்கியத்துவம் பெறுகிறது. பாலி மொழியில் உள்ள சொற்கள், சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்களைப் பற்றி முன்னமே விவரித்துவிடுகிறார்கள். இதனால் நூலை படிக்கும்போது பெரிதாக தடுமாறவேண்டியதில்லை. புத்தர் கூறியது என நிறையப் பேர் எழுதுவார்கள். ஆனால் இந்த நூல் இப்படியாக கேட்டிருக்கிறேன் என்று சொல்லி எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் பௌத்த மறைநூல் என கூறியதற்கு ஏற்பவே உள்ளது. மோசமில்லை. சமண புத்தர் ஓரிடத்தில் தனது சீடர்களோடு அமர்ந்திருக்கிறார். அங்கு அவரைப் பார்க்க பல்வேறு மன்னர்கள், விவசாயிகள், பிராமணர்கள், குறு நில மன்னர்கள், பிற சமயங்களை கடைபிடிக்கும் ஆட்கள் வருகிறார்கள். அங்கு வந்து கேள்விகளைக் கேட்கிறார்கள். இந்த முறையில் புத்தர் ஏராளமான சூத்திரங்களை வரிசையாக சொல்லிக்கொண்டே வருகிறார். அவர் கூறும் உபதேசங்களை மனம் ஒன்றிக் கேட்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டது போலவே வாசகர்களும் மனம் ஒன்றிப் படித்தால்தான் புத்தரின்

என்னால் முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள்! - பெரிதாகவே சிந்தியுங்கள் - ரியோ ஒகாவா

படம்
  ரியோ ஒகாவா, எழுத்தாளர்,ஆன்மிக தலைவர் பெரிதாக சிந்தியுங்கள் ரியோ ஒகாவா ஜெய்ஹோ பதிப்பகம் பக்கம் 135   ஹேப்பி சயின்ஸ் என்ற ஜப்பானின் மிகப்பெரும் ஆன்மிக நிறுவனத்தை தொடங்கி நடத்தி வரும் ரியோ ஒகாவா எழுதியுள்ள நூல். இந்த நூலைப் பற்றிய விமர்சனத்தை நாம் எழுதிக்கொண்டிருக்கும்போது , அவர் கோஸ்ட் ரைட்டர்களை வைத்து நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக்கொண்டிருப்பார். இந்த நூலிலேயே 1,600 நூல்கள் எழுதப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.   அப்படியான நூல்களில் ஒன்றுதான் இது. தமிழில் எஸ் ராமன் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் மொழிபெயர்ப்பில் குறை காண ஏதுமில்லை. நன்றாகவே எழுதப்பட்டிருக்கிறது. சிறு சிறு கட்டுரைகளாக எழுதப்பட்டிருப்பது நல்ல ஐடியா. நூலில் சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன. அவற்றை அடுத்தடுத்த பதிப்புகளில் திருத்திக்கொண்டால் நல்லது. ரியோ ஒகாவா, தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்டு அதை வாசகர்களுக்கு சொல்லும் அறிவுரையாக மாற்றிக்கொள்கிறார். குறிப்பாக, பிறர் நம்மீது வைக்கும் விமர்சனங்கள், வரையறைப்படுத்தல் என்பதை தனது சிறுவயது வாழ்க்கை, ஐக்யூ டெஸ்டில் பெறும் மதிப்பெண்களை வைத்து விளக்கியிர

வாழ்வின் இயல்போட்டத்தில் தன்னை அறிதல் - யதி - தத்துவத்தில் கனிதல்

படம்
  நித்ய சைதன்ய யதி யதி தத்துவத்தில் கனிதல் ஜெயமோகன், பாவண்ணன், எம்.கோபாலகிருஷ்ணன், நிர்மால்யா தன்னறம் வெளியீடு   ஈழவ சமூகத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு. இவரின் சீடரான நடராஜ குருவின் மாணவர்தான் நித்ய சைதன்ய யதி. தத்துவம் சார்ந்த கல்வி கற்றுள்ளவரான இவர், இந்தியாவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். நூலில் யதி தன்னுடைய வாழ்பனுவங்களையும், தத்துவங்களையும் விளக்கி பேசுகிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகளை ஜெயமோகன், பாவண்ணன், எம், கோபாலகிருஷ்ணன், நிர்மால்யா ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர். யதி, தனது குருவான நடராஜரிடம் கற்ற கல்வி, அவருக்கும் தனக்குமான ஊடல் கொண்ட உறவு ஆகியவற்றைப் பற்றி சுவாரசியமாக விளக்கி எழுதியுள்ளார். சிறுவயதிலேயே ஏதோ நாளிதழில் வந்த நடராஜ குருவின் புகைப்படத்தை வெட்டி எடுத்து வைத்திருந்திருக்கிறார். பின்னாளில் யதி, நடராஜரின் மாணவராக இணைகிறார். இவரும் இன்னும் இரண்டு மாணவர்களும் சேர்ந்து நாராயண குருகுலத்தை மேம்படுத்துகின்றனர். குருவின் கொள்கைகளை உலகம் முழுக்க பரப்ப இதழ் நடத்தியதோடு, பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளனர். யதி, மலை

உங்களை தலைவராக்கும் விதிகளைக் கொண்ட நூல்!

படம்
  21 இர் ரெப்யூடபிள் லாஸ் ஆஃப் லீடர்ஷிப் ஜான் சி மேக்ஸ்வெல் 336 பக்கம் ஹார்ப்பர் கோலின்ஸ்   தலைமைத்துவத்தை ஒருவர் எப்படி வளர்த்துக்கொள்வது என்பதை ஏராளமான அமெரிக்க நாட்டு உதாரணங்களோடு எழுத்தாளர் எழுதி விளக்கியுள்ளார். பிறரது வாழ்க்கை அனுபவங்களோடு, தான் தேவாலயத்தில் பாதிரியாக பொறுப்பேற்று செயல்பட்டபோது செய்த சரி, தவறு, அதனால் நேர்ந்த விளைவுகள் அனைத்தையும் தான் பேசும் தலைமைத்துவ மையப்பொருளுக்கு இணைத்திருக்கிறார். நூலில் இந்தியாவைப் பற்றி மோசமான விவரிப்புதான் உள்ளது. அதைப்பற்றி பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை. காந்தி, இந்தியா போன்ற ஒரு தேசத்தில் சுதந்திரம் பெற்றுத்தர எப்படி உழைத்தார், மக்களை தொடர்புகொண்டார் என்பதை சிறப்பாக விளக்கியுள்ளார். ஒரு நிறுவனத்தில் ஊழியர்களின் நம்பிக்கையைப் பெறுவது, எதிர்ப்புகளை வெல்வது, பிறருக்கு உதாரணமாக முன்னே நின்று தடைகளை எதிர்கொள்வது, எதிரிகளை வெல்வது, தொலைநோக்காக யோசிப்பது, நெருக்கடியில் வேகமாக சிந்தித்து செயல்படுவது என ஏராளமான விஷயங்களை உதாரணங்களுடன் மெல்ல விவரித்து எழுதியிருக்கிறார். சில இடங்களில் எழுத்தாளர் தான் நடத்தும் பயிற்சி வகுப்பு உதாரணங்கள

இதழியல் லாபம் சம்பாதிக்கும் வணிகத் தொழிலாக மாறிய வரலாறு!

படம்
  ஜர்னலிசம் – ஷார்ட் இன்ட்ரோடக்‌ஷன் ஆக்ஸ்போர்ட் பிரஸ் பத்திரிகை தொழில் அன்றிலிருந்து இன்றுவரை கொள்கை ரீதியாக செயல்பாட்டு ரீதியாக எப்படி மாறியிருக்கிறது என கூறுகிறார்கள். நூலில் அதிகம் பேசப்படுபவர், ரூபர்ட் முர்டோக் என்ற ஊடக தொழிலதிபர்தான். இவர்தான் ஸ்டார் டிவி குழுமத்தை தொடங்கியவர். இப்போது ஸ்டார் டிவி குழுமத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கிவிட்டது. ரூபர்ட்டின் ஃபாக்ஸ் டிவி அமெரிக்க ஊடக கலாசாரத்தை மறு வடிவமைப்பு செய்தது என்று கூற வேண்டும். ஐரோப்பா முழுக்கவே ஊடகங்களின் கொள்கைகளை மாற்றி பொழுதுபோக்கை முதன்மையாக்கி செய்திகளின் தரத்தை கீழிறக்கிய ஊடக தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக். பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகள், அரசியல்வாதிகளுக்கு ஏற்றபடி செய்திகளை மக்கள் மாற்றிப் புரிந்துகொள்ளும்படி எழுதுவது, மடை மாற்றி தலைப்புகளை வைப்பது, முக்கியமான செய்திகளை இருட்டடிப்பு செய்வது என இங்கிலாந்தில் உள்ள சன், கார்டியன், டெய்லி மிரர் என ஏராளமான நாளிதழ்களை, ஜர்னலிசம் நூல் சாடுகிறது. எடுத்துக்காட்டுகளுடன் தான் பேசியவற்றை வாசகர்களுக்கு கொடுக்கிறது. நூலில் உள்ள உள்பக்க படங்களை கீழே உள்ள கேப்ஷன்களுடன் சேர்த்து