இடுகைகள்

பெண்ணியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இணையத்தில் வழியே பெருக்கெடுக்கும் காதலும், நெருக்கமும் - மெட்டாவர்ஸ் நாகரிகம்

படம்
1 இன்று இணையம் நமது உடலின் இன்றியமையாத பாகம் போல ஆகிவிட்டது. இணையம் இல்லாத ஸ்மார்ட்போன், கணினி என்பது உயிரில்லாத உடல்போல. இணையம் அனைத்தையும் தந்தாலும் உறவைத் தருமா, ஒருவர் தொடுவது போன்ற சுகத்தை தருமா என்றால் கொஞ்சம்  போலியாக இருந்தாலும் அதையும் தரும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. அவற்றைப் பற்றித்தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.  தட் சாஸி திங் என்ற நிறுவனம் இந்தியாவில் உள்ளது. இதன் நிறுவனர், சாச்சி மல்ஹோத்ரா. இது டிஜிட்டல் வடிவிலான செக்ஸ் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிராண்ட். இதனை தொடங்கியவர், தனது காதலருடனான காதலை பகிர்ந்துகொள்வதும் இணையம் வழியாகத்தான். சில சமயங்களில் நாம் மனதிலுள்ள  ஆசைகளை பகிர்ந்துகொள்வது கடினமானது. அதற்கு செக்ஸ்டிங் வழிமுறை உதவுகிறது. நாம் தினசரி எதிர்கொள்ளும் சவால்களையும், சங்கடங்களையும் டிஜிட்டல் வழியாக நாம் விரும்புபவருடன் பகிர்ந்துகொள்வது சிறப்பாக இருக்கிறது என்றார் சாச்சி.  தனாயா நரேந்திரா, செக்ஸ் கல்வியாளர் பேஸ்புக், ட்விட்டர், இன்டாகிராம், வாட்ஸ்அப், டெலிகிராம் என அனைத்துமே மக்களுடன் தொடர்புகொள்ளும் சாதனங்கள்தான். முன்பை விட டிஜிட்டல் வழியாக பிறருடன் தொடர்புகொள்

பெண்ணியம் காக்கும் இன்ஸ்டாகிராம் பக்கம்! - பெண்களுக்காக ஆலோசனை தரும் உயிரா தமி்ழ் குழு

படம்
                பெண்களுக்காக கொடி பிடிக்கும் ஆண் ! இன்ஸ்டாகிராமில் உயிரா தமிழ் எனும் பக்கத்தை திறந்தால் முழுக்க பெண்களுக்கு ஆதரவான வாசகங்கள் தென்படுகின்றன . கெட்டப்பெண் என்று எப்படி பெண்களை வரையறை செய்கிறார்கள் என்பது முதல் இணையத்தில் பெண்களுக்கு லைக் போட்டு காதலிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கும் கோளாறுகள் வரை புட்டு வைக்கிறார் மனிதர் . யார் இவர் ? குடிமைத் தேர்வுகளுக்காக படித்து வருபவர் , பெண்களுக்கான உரிமைகள் , சிக்கல்கள் , சமூகம் எப்படி அவர்களை கட்டுப்படுத்துகிறது என்பதை எளிதாக சிறு வாக்கியங்களில் பேசி வருகிறார் . நான் ஒரு ஆண் . பெண்ணியத்திற்கு வரையறை சொல்லுவதற்காக இதனை செய்யவில்லை . நான் இந்த செயல்பாட்டில் எனது அறியாமையைத்தான் முன் வைக்கிறேன் . அதில்தான் கற்றும் கொள்கிறேன் என்று பேகிறார் ஜீவ சரவணன் . விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்தவர் சென்னைக்கு குடியேறி இப்போது சி்ந்தனையிலும் மாற்றத்தை உருவாக்கிவருகிறார் . இவரது பக்கத்தைப் பார்த்து பல பெண்கள் தங்களது வாழ்க்கை சிக்கல்களுக்கும் தீர்வு தேடி வருகின்றனர் . இப்படி பலரும் இணைந்து ஒரு குழுவே உருவாகியிருக்கிறது . இதனை

இயற்கைக்கும் பெண்ணுக்கும் தொடர்பு உண்டு!

படம்
நேர்காணல் கிறிஸ் குவோமோ, சூழலியலாளர் பெண்கள் இயற்கையோடு இணைந்தவர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள் எப்படி? நீங்கள் பெண்ணை அவளின் பொறுமை, பாதுகாக்கும் குணம் ஆகியவற்றை வைத்து இயற்கையோடு இணைக்கிறீர்கள். நானோ மனிதர்கள் அனைவரும் இயற்கையை சார்ந்து அதிலிருந்து அறிவைப் பெற்று தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைக் காண்கிறேன். இதில் பெண்கள் அர்ப்பணிப்பாக பணிகளைச் செய்கிறார்கள் இங்கு நான் சொல்வது பெண்ணின் பணிகளை மட்டுமே. அவர்களை உடல்களாக கருதி, இயற்கையோடு இணைக்கவில்லை. பெண்கள் உலகை வேறுவிதமாக பார்க்கிறார்கள் என்கிறீர்களாழ ஆமாம். கடந்த இருநூறு ஆண்டுகளாக நாம் காலனியாதிக்கத்தால் அவதியுற்றோம். இன்று முதலாளித்துவத்தால் மறைமுகமாக பிரச்னைகளுக்கு உள்ளாகிறோம். பெண்கள் இக்காலகட்டங்களில் தங்களுக்கான பிரச்னைகளை தீர்க்க முனைந்திருந்தார்கள். அதாவது பாலின பாகுபாடு, சமூகப் பிரச்னைகள், சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த உழைத்து வந்தனர். ஆனால் இருநூறு ஆண்டுகளில் இவர்களை அமைப்புகளை உருவாக்க வைத்திருந்தால் பருவநிலை மாறுபாடுகளை நாம் சந்திக்கும் நிலை வந்திருக்காது. இப்படி உருவாக்கப்படும் தொழிற்சாலைகளை அவர்கள்

பெண்ணியவாதிகளோடு விவாதிக்க கூடாத புத்தகம்!

படம்
குட்ரீட்ஸ் போதைக்கு அடிமையானவர்களின் உளவியல் குறித்து ஜூடித் கிரிசெல் ஆராய்ந்து எழுதியுள்ளார். கோக்கோலா முதல் பஞ்சுமிட்டாய் வரை மூளையை அடிமையாக்கும் பொருட்கள் எது, எதனால் நமக்கு போதை ஏற்படுகிறது என்பதை பல்லாண்டு ஆராய்ச்சித் தரவுகளோடு, உண்மையில் நோயாளிகளிடம் கண்ட பிரச்னைகளையும் எழுதியுள்ளார்.  இந்த நூலை எழுதியவர் ஒரு ஃபேஸ்புக் எதிர்ப்பாளர். அது அட்டையைப் பார்த்தவுடன் கண்டுபிடித்திருப்பீர்கள். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் கம்பெனியின் முதலீட்டாளர். ஆனால் ஃபேஸ்புக் நாட்டுக்கும் உலகுக்கும் ஏற்படுத்திய அரசியல் பொருளாதார இழப்புகளால் அதனைக் கைவிட்டு வெளியே வந்தவர் இவர்.  ஃபேஸ்புக் உலகளவில் ஏற்படும் அரசியல் பொருளாதார குழப்பங்களை புட்டுபுட்டு வைத்திருக்கிறார் ரோஜர். இதற்காகவே நீங்கள் அவசியம் வாசிக்கவேண்டிய நூல் இது.  பெண்களின் உயர்வைச் சொல்லும் புத்தகம்தான். உடனே மனோ ரெட் போல போரடிக்குதுப்பா என சொல்லிவிடாதீர்கள். அதனை கிராஃபிக் வடிவில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள். எனவே எழுத்தாக இருக்காது என்பதால் இபுக்காக வெளியிட்டால் கூட சிறிது கண்ணை ஓட