உலகை ஆள நினைப்பவனின் மறுபிறப்பு ரகசியங்கள்!
ஸ்காலர் ரீஇன்கார்னேஷன் மாங்கா காமிக்ஸ் 150 அத்தியாயங்கள்---- தற்காப்புக்கலை கற்ற மாவீரன் ஒருவனை, பத்து தற்காப்பு கலை மாஸ்டர்கள் ஒன்றாக சேர்ந்து சதி செய்து கொல்ல நினைக்கிறார்கள். எதற்கு, அவனால் உலக அமைதி கெட்டுவிடுமாம். மாவீரனைப் பொறுத்தவரை கற்ற டார்க் ஆர்ட்ஸ் கலையை ஆயுதமாக பயன்படுத்துகிறான். அவனிடம் வாளோ, குறுங்கத்தியோ கூட கிடையாது. தற்காப்புக்கலை கற்றவன் ஆயுதங்களை சார்ந்து இருக்ககூடாது என்பதுதான் அவனது உறுதியான கொள்கை. இமாலயம் போன்ற மலைப்பகுதியில் நடக்கும் சண்டையில், புத்த துறவி தற்கொலைத் தாக்குதல் நடத்தி மாவீரனை கொல்கிறார். அவரும் இறந்துபோனதாக காட்டுகிறார்கள். பிறகு, அதிக காலமெல்லாம் ஆகவில்லை. அதே மாவீரன் மீண்டும் பிறக்கிறான். டார்க் ஆர்ட்ஸ் என்ற தற்காப்புக்கலை கற்றதால் கொல்லப்பட்டவன், மீண்டும் அதே கலையை நினைவில் கொண்டு பிறக்கிறான். முற்பிறவி நினைவுகளுடன் நகரத்தின் தலைவர் வீட்டில் பிறக்கிறான். முற்காலத்தில், அனாதை. ஆனால் புதிய மறுபிறப்பில் குடும்பம், பெற்றோர். தங்கை, குறிப்பாக வீடு, செல்வம் என அனைத்துமே இருக்கிறது. மாவீரனைப் பொறுத்தவரை தனது உலகத்தை ஆளும் ஆசையை அவன் கைவிடவில்ல