இடுகைகள்

உயரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியர்களின் உயரம் மெல்ல குறைந்து வருகிறது!

படம்
  இந்தியர்களின் உயரம் குறைந்து வருவதாக இந்திய அரசின் தேசிய குடும்பநல ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவித்துள்ளன.  இந்தியர்கள் பொதுவாக உயரத்தை விட நிறத்தைப் பற்றிய கவனத்தை அதிகம் கொண்டுள்ளனர். ஆனால் ஒருவரின் உயரம், எடை என்பது உடல்நலத்தைப் பொறுத்தவரை முக்கியமானது. தற்போது தேசிய குடும்பநல ஆய்வுகளில் தெரிய வந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவை. 1992 முதல் 2020 வரையிலான ஆய்வுகளில் இந்தியர்களின் உயரம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.  இரண்டாவது மற்றும் நான்காவது ஆய்வுகளில் உயர மாறுதல் தெரியவந்துள்ளது. இதில் பதினைந்து முதல் இருபத்துநான்கு வயது வரையில் உள்ள பெண்கள் 0.12 செ.மீ. உயரம் குறைவாகவும், இருபத்தாறு முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களின் உயரம் 0.13 செ.மீ. உயரமாக உள்ளனர். இந்த வகையில் ஆண்களின் உயரம் முதல் பிரிவில் 1.1 செ.மீ, இரண்டாவது பிரிவில் 0.86 செ.மீ. என குறைந்துள்ளது. இதில் நாம் கவலைப்படும் விஷயமாக உள்ளது, பட்டியலினப் பெண்களின் உயரம் 0.42 செ.மீ., ஏழைப்பெண்களின் உயரம் 0.57 செ.மீ. என குறைந்துள்ளதுதான்.  ஆண்களைப் பொறுத்தவரை ஏழையான ஆண்கள், வசதியான ஆண்கள் பிரிவு என இரண்டிலுமே அவர்களின் உயரக்க

ஒன்றிய அரசின் பசிபட்டினி பற்றிய ஆவேசமும் உண்மையும்!

படம்
  பசிபட்டினி தொகுப்பு பட்டியல் 2021 யாருக்கும் தான் செய்துகொண்டிருக்கும் விஷயத்தைப் பற்றிய மதிப்பீடுகளைக் கொடுத்தால் உடனே கோபம் வந்துவிடும். காரியம் நடந்துகொண்டிருக்கும்போதே முடிவை சொல்கிறாயே என்று ஒன்றிய அரசும் கூட பட்டினிதொகுப்பு பட்டியல் முடிவை அறிவியல் ஆதாரமே இல்லை என்று எளிமையாக கூறிவிட்டது.  மொத்தம் 116 நாடுகள் உள்ள பட்டியலில் இந்தியா இப்போது 101 இடத்தைப் பிடித்துள்ளது. இந்த இடத்தைப் பிடித்த தற்கே எல்லாம் எங்கள் கட்சி பிரதமரின் உழைப்பால் வந்தது என கட்சி தொண்டர்கள், ஐடி விங்குகள், சமூகவலைத்தள விளக்குகள் கொண்டாடிக்கொண்டு உள்ளனர். ஒன்றிய அரசைப் பொறுத்தவரை இப்படி சமாளிப்பு பதில் சொல்வது இத்தோடு நிற்காது. எளிதாக வணிகம் செய்வதற்கான பட்டியலிலும் தடுமாற்றம், பத்திரிகை ஜனநாயக பட்டியலிலும் பின்னடைவு, எகனாமிஸ்ட் பத்திரிகை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் இந்தியா குறைத்தே கணக்கு காட்டுகிறது எனசெய்தி வெளியிட்டுள்ளது. இப்படி பல்வேறு ஆய்வுகளையும் தவறு என சுட்டிக்காட்டவேண்டிய தேவையும் அவசியமும் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.  பட்டினிப் பட்டியலை எடுக்க முக்கியமான அம்சங்கள் சில உள்ளன.

விமானத்தில் குழந்தைகள் அழுவது ஏன்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி குழந்தைகள் விமானப்பயணத்தில் அழுவது ஏன்? சாதாரண குழந்தைகள் முதல் ஆட்டிசக் குழந்தைகள் வரை பஸ், விமானம் என வாகனம் எதுவானாலும் செல்லும்போது மெல்லத் தொடங்கி பயணிகளை உசுப்பி எழவைக்கும் அளவு அழுவார்கள். ஏன்? காரணம் விமானத்தில் சாதாரணமாக அனுபவிக்கும் அழுத்தம் நம்மாலே பொறுத்துக்கொள்ள முடியாது. குழந்தைகள் எப்படி தாங்கும். விமானம் உயரத்தில் பறக்கும்போது, காது அடைக்கும். அந்த அழுத்தம் குழந்தைகளுக்கு தனியாக இருப்பது போலத் தோன்றும். இதனால்தான் அழுகை எல்லை மீறுகிறது. அறிவியல்ரீதியான காரணம், குழந்தைகளின் காதில் உள்ள அமைப்புதான். அஸ்டாசியன் குழாய் எனும் அமைப்பு நம் காதில் உள்ள நடுவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு முழு வளர்ச்சி அடைந்தது அல்ல. வயது வந்தோருக்கும் குழந்தைகளுக்கும் இது வேறுபட்ட வளர்ச்சியில் உள்ளது என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த  சைமன் பேயர். பொதுவாக நாம் பயணிப்பதை மூளை உணர்வது நம் காதில் செல்லும் காற்று மூலமாகத்தான். விமானம் ஏறி இறங்கி 9,100 மீட்டர் உயரத்தில் பறக்கிறது. இது பொதுவான உயரம். இதில் வயதுவந்தோர் காற்றழுத்த த்திற்கு ஏற்றவாறு தம்மை