இடுகைகள்

திருப்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கையின் நோக்கத்தை தேடும் மனிதர்களின் பயணம்!

படம்
  ஒருவரின் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் எதற்காக பிறந்தோம், எதற்காக இந்த வாழ்க்கை என்று தோன்றும். இந்தக் கேள்விகளுக்கு எதற்கு ஒருவர் பதில்களை தேடுகிறார்? அப்போதுதான் அவர் தன்னை எது திருப்திபடுத்துகிறது, எங்கு குழப்பம் ஏற்படுகிறது என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். உணவு, தூக்கம், பாலுறவு என்பதெல்லாம் ஒருவரின் அடிப்படையான தேவைகள். இதெல்லாம் தாண்டி மனதில் ஏற்படும் திருப்தி உணர்வு என்பது முக்கியமானது. அதை அடையாதவர்கள், எதனால் தனக்கு திருப்தி கிடைக்கவில்லை என்று அறிய முயன்று அலைந்துகொண்டே இருப்பார்கள்.  இருபதாம் நூற்றாண்டில் மேற்சொன்ன விஷயங்கள் புதுவிதமான சூழ்நிலையில் வந்து நின்றன. உளவியலாளர் ஆபிரகாம் மாஸ்லோ, மனிதநேயம் கொண்ட உளவியல் முறையை அறிமுகப்படுத்தினார். இதில் காதல், நம்பிக்கை, உண்மை, ஆன்மிகம், தனித்துவம், இருத்தல் என அனைத்துமே உண்டு. இந்த முறை மூலம் ஒருவர் தன்னுணர்வு நிலையைத் தொட்டு தன்னை உணர முடியும். மனிதர்களின் தேவைகளை பிரமிடு வடிவில் உருவாக்கினார். அதில் ஒருவரின் அவசிய தேவைகள், அறிவுசார் தேவைகள், பாதுகாப்பு தேவைகள் என அனைத்துமே இடம்பெற்றிருந்தன. ஒருவருக்கான அவசியத் தேவை