இடுகைகள்

பாசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மா பாசம் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள், குறைபாடுகள்!

படம்
  1950ஆம் ஆண்டுகளில் குழந்தைகள் தாய் மீது காட்டும் பாசம் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் பேசப்பட்டன. இதை கப்போர்ட் லவ் என்று குறிப்பிட்டனர். குழந்தைகள் அம்மாவைச் சார்ந்தே இருப்பார்கள். காரணம், உணவுத்தேவை. பிறந்தவுடன் குழந்தைகள் உடனே இயங்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று வயது வரை அவர்களை பாதுகாத்தால் மட்டுமே அவர்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இதை விலங்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பிறக்கும் குட்டிகள் கண்விழித்துப் பார்க்கும்போது எது அசையும் பொருளாக இருக்கிறதோ அதை தங்களது அம்மாவாக கருதுகின்றன. இந்த இடத்தில் குட்டியின் தாய் இருக்கும். விலங்குகளின் பாச ஒட்டுதல் பற்றிய ஆய்வை உளவியல் ஆய்வாளர் கான்ராட் லாரன்ஸ் செய்தார்.  ஜான் பௌல்பை என்ற ஆய்வாளரும் இதேபோன்ற ஆய்வை செய்து காரண காரியங்களைக் கண்டுபிடிக்க முயன்றார். அவருக்கு கிடைத்த ஆய்வு முடிவுகள், லாரன்ஸ் கூறிய கருத்துகளுக்கு மாற்றாக இருந்தன. குழந்தை, அம்மா தவிர வேறு பலரிடம் ஒட்டுதல் கொண்டிருக்கலாம். ஆனால் அம்மாவுடன் கொண்டுள்ள உறவு தனிப்பட்ட ஒன்று. குழந்தை தனது தேவைகளை சிரிப்பு, அழுகை, முனகல் என பல்வேறு வித

தந்தை - மகன் உறவில் உள்ள இடைவெளிக்கு உண்மையான காரணம்!

படம்
  அப்பா, மகன் உறவு என்பது சினிமாக்களில் வருவதைப் போல எளிதானது அல்ல. சொத்துக்காக அல்லது சமூகத்தின் அழுத்தத்திற்காக ஒருவர் பிள்ளை பெற்றுக்கொண்டாலும் தந்தைகள் பெரும்பாலும் மகன்களோடு நெருக்கமாக பழகுவதில்லை. பெரும்பாலும் இருவருக்கும் இடையிலான உறவில் மௌனமே உள்ளது. ஆண்களின் உறவு சிக்கல்கள் பற்றி பெரிதாக உளவியலாளர்கள் கவலைப்பட்டது இல்லை. ஆனால், பிரெஞ்சு - கனடா நாட்டு உளவியலாளர் கய் கார்னியு என்பவர், இதில் கவனம் குவித்து அப்சென்ட் ஃபாதர்ஸ் லாஸ்ட் சன்ஸ் என்ற நூலை 1991ஆம் ஆண்டு எழுதினார். உளவியலாளர் தன்னுடைய அப்பாவுடனான உறவை முன்னுதாரணமாக வைத்துத்தான் ஆய்வு செய்து நூலை எழுதி வெளியிட்டார்.  பெண் பிள்ளைகளை விடுங்கள். அவர்கள் தங்கள் அழகு, செயல் என ஏதாவது வகையில் பிறரிடம் அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு அவர்களைப் பெற்றவர்களிடமிருந்தே அங்கீகாரம், பாராட்டு கிடைப்பதில்லை. அந்த வகையில் மகன்களுக்கு தங்கள் தந்தையிடமிருந்து மனப்பூர்வமான பாராட்டு பெரும்பாலும் கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் கூட அதற்கு வெகு காலம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.  ஏன் தந்தை மகனை மனப்பூர்வமாக பாராட

ஜென்ம எதிரிகளாக உள்ள விலங்குகள் காட்டும் பாசநேசத்திற்கான காரணம்- சீன உளவியல் ஆய்வாளர் குவோ

படம்
  அடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த தத்துவவாதி எட்வர்ட் கட்த்ரை என்பவரைப் பற்றி பார்ப்போம். இவர், உளவியல் பற்றி ஆய்வுகளைச் செய்தார். இவான் பாவ்லோவின் கிளாசிக்கல் கண்டிஷனிங் என்ற கோட்பாட்டை அடிப்படையாக எடுத்துக்கொண்டார். நாய்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மணியை ஒலிக்கவிட்டு உணவு வழங்கினால், மணி ஒலிக்கும்போது வாயில் எச்சில் சுரக்கத் தொடங்கிவிடும். இதுதான் ஆய்வின் முக்கியமான முடிவு. மனம் எப்படி பழக்கத்திற்கு அடிமையாகிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.  நாய்க்கு குறிப்பிட்ட செயலை செய்தால் உணவு கிடைக்கும் என்பதை தெரிய வைத்தால் பின்னாளில் என்ன செய்தால் உணவு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்கிறது என எட்வின் கூறினார். அதாவது ஒரே செயலை திரும்ப திரும்ப செய்வதால் அதன் குணநலன் உருவாவதில்லை. உணவுக்காக செய்யும் செயல்பாடுகள் மெல்ல உருவாகி மேம்பாடு அடைந்து குண இயல்புகளாக மாற்றம் அடைகிறது. இதற்காக ஒரே சோதனையை விலங்குகளிடம் மீள மீள செய்யவேண்டியதில்லை என்று உறுதியாக கருதினார்.  அடுத்து செய்திகளில் பார்த்த விஷயத்தைப் பார்ப்போம். உலகில் எப்போதும் பொருந்திப்போகாத விலங்குகள் உண்டு. பூனை, எலி, பூனை, நாய் ஆகியவை எப்போதும

தனது குடும்ப சொத்தை மீட்டு சிதறிய குடும்பத்தை ஒருங்கிணைக்கும் நாயகன்!

படம்
  சர்தா புல்லோடு  வெங்கடேஷ் , நக்மா, சங்கவி  தனது அம்மாவை வேசி என சொல்லி அப்பாவிடம் இருந்து பிரித்து அவரை குடிநோயாளியாக்கி, தங்கையை பணி மனுஷியாக்கும் அத்தையை பழிவாங்கும் நாயகனின் கதை.  மேலே சொன்ன விஷயங்களை சீரியலுக்கு பொருத்தமாக வைக்கலாம். ஆனால் படத்திற்கு கதையாக வைத்து எடுத்தால் எப்படியிருக்கும்? கண்றாவியாகவே இருக்கும். மாற்றமே இல்லை. அதேபோல்தான் இருக்கிறது. கொஞ்சம் ஆசுவாசமாக இருக்க சங்கவி, நக்மாவின் கிளுகிளு நடனம் உதவுகிறது.  தெலுங்குபடங்களில் நாயகியை ஸ்டாக்கிங் செய்து காதலிக்கும் வம்பு பண்ணும் நாயகன் கூடவே அவரது மாமியாரையும் பாலியல் சீண்டல்களை செய்து ஆண்மையை நிரூபிப்பது வழக்கம். இதை நகைச்சுவை என நினைத்து செய்கிறார்கள். ஆனால் சண்டாளமான காட்சியாக வந்துவிடுவது வாடிக்கை. இதிலும் மாமியார் மஞ்சுளாவுக்கு அப்படியான காட்சிகள் ஒன்றல்ல இரண்டை வைத்திருக்கிறார் இயக்குநர். தெலுங்கில் இரு நாயகிகளை இடுப்பில் வைத்து ஆடுவது, அத்தை, அத்தை பெண்கள் இருவர் என த்ரீசம், ஃபோர்சம் செய்வதெல்லாம் உண்டு. கண்களைக் கட்டும் காம வித்தைகள் அவை.  கோட்டா சீனிவாசராவ், சத்ய நாராயணா என இரு நடிகர்கள் நன்றாக நடித்திருக்கிற

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தீயசக்தி பேரரசன் பழிவாங்க மீண்டும் உயிர்த்தெழுந்தால்... மேஜிக் எம்பரர்

படம்
  மேஜிக் எம்பரர் சீனா மங்கா காமிக்ஸ் 350 அத்தியாயங்கள் தொன்மைக் கால தீயசக்தி பேரரசன், அவனது வளர்ப்பு மகனால் சதி செய்யப்பட்டு வீழ்த்தப்படுகிறான். அவனது இறப்புக்கு காரணம், ஒரு மந்திர நூல். அதையும் தன்னோடு எடுத்துக்கொண்டு உடலை எரித்துக்கொண்டு இறக்கிறான். இதனால் அவனது ஆன்மா, மறுபிறப்பு எடுக்கிறது. ஆன்மா, பொருத்தமான உடலை தேடுகிறது. அப்போதைக்கு காட்டில் குற்றுயிராக கிடக்கும் லுவோ குடும்ப பணியாளன் ஜூவோ ஃபேன் உடலில் நுழைகிறது. அந்த நேரத்தில் லுவோ குடும்பத்தை இன்னொரு பகையாளி குடும்பத்தினர். காட்டில் வைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர். தீயசக்தி பேரரசன் , தனது சக்தியெல்லாம் இழந்தாலும் மந்திரசக்தி முறைகளை நினைவில் வைத்திருக்கிறான். அதைக் கொண்டு குற்றுயிராக கிடப்பவனைக் கொன்று அவன் ரத்தத்தை தனது உடல் ஆற்றலுக்குப் பயன்படுத்துகிறான். அந்த சக்தியை வைத்து ஆபத்தில் உள்ள லுவோ குடும்பத்தை (மிஸ் லுவோ, மிஸ்டர் லுவோ அக்கா, தம்பி) என இருவரையும் காக்கிறான். அச்சமூகத்தில்,லுவோ குழு, மூன்றாவது தரத்தில் உள்ள குடும்பம். அக்கா, தம்பி, விசுவாச வேலைக்காரன் பாங் ஆகியோர்தான் லுவோ குடும்பம். ஒன்றுமே இல்லாத

தங்கச்சியின் கையால் உயிரைப் போக்கிக்கொள்ளும் அண்ணனின் அன்லிமிடட் பாசம்! வீரசிம்ம ரெட்டி-என்பிகே (2)

படம்
  வீரசிம்மா ரெட்டி வீர சிம்ம ரெட்டி இயக்கம் கோபிசந்த் மலினேனி இசை தமன் சாய் கண்டசாலா என்பிகே, ஸ்ருதி, ஹனிரோஸ், வரலட்சுமி   அண்ணன் தங்கை பாசத்தின் எக்ஸ்ட்ரீம் வெர்ஷன். இருவருக்கும் பாசத்தால் ஒருவருக்கொருவர் தம் உயிரைக் கூட விடுகிறார்கள். இதனால் ஓ ஹென்றி கதை போல யாருக்கும் சல்லி பைசா பிரயோஜனம் இல்லாமல் போகிறது.   இதனால் பாசமேனும் மனதில் பதிகிறதா என்றால் அதுவும் இல்லை என்பதுதான் வேடிக்கை. முதல் காட்சியில் ஊரின் பெரிய நிலத்தைக் காட்டுகிறார்கள். அங்கு கட்டிலில் அமர்ந்திருக்கிற ஒருவரிடம் கல்யாணப் பத்திரிக்கையை ஒருவர் கொண்டு வந்து கொடுக்கிறார். அதற்கு ஊரின் பெரிய தலையை வரச்சொல்ல சொல்லுகிறார். வந்தால் அங்கு வைத்தே அவரைக் கொல்வதாக சொல்லுகிறார். ஆனால் அதற்கு கட்டிலில் உட்கார்ந்திருக்கிறவர். அது முடியாது. சாத்தியமே இல்லை என்கிறார். இதனால் அவரைக் கொன்று, அவரது பயிர்களை தீ வைத்து எரித்து விடுகிறார். அவர்தான் வில்லன், பிரதாப் ரெட்டி. புலிசர்லா ஊரில் வாழும் வீர சிம்மா ரெட்டி, அந்த ஊரையே வாழ வைக்கிற ஆள். அதேசமயம் நல்லதோ கெட்டதோ இரண்டையும் அந்த ஊர் மக்களுக்கு அவரே செய்கிறார். அவர் ஏற்பாடு

அம்மாவின் நினைவுகளைக் காப்பாற்ற மகள் செய்யும் போராட்டம்! ஜங்க் இ - கொரியன்

படம்
  காலமான நடிகை கங் சூ இயோன் நடுவில் இயக்குநர் இயோன் சங் ஹோ ஜங் இ கொரிய படம் ஜங்க் இ கொரியப்படம் – நெட்பிளிக்ஸ் ட்ரெய்ன் டு பூசன் படம் எடுத்த இயோன் சங் ஹோ என்ற இயக்குநரின் அறிவியல் புனைகதைப் படம்.   பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், மனிதர்களை பாதிக்கிறது. எனவே, அவர்கள் விண்வெளிக்கு சென்று வசிக்கும் நிலை ஏற்படுகிறது. கூடவே, உள்நாட்டுப் போரும் உருவாகிறது. இதில் அரசு தரப்பு ஏஐ அறிவு கொண்ட வீரர்களை வைத்து போரை நடத்துகிறது. இதற்காக ஆராய்ச்சி செய்யும் நிறுவனம் ஒன்றில்தான் கதை நடைபெறுகிறது.   இந்த நிறுவனம் ஒருகாலத்தில் பூமியில் நடைபெற்ற போரில் சாதனை செய்த பெண்மணியான யூன் ஜங்கின் நினைவுகளை எடுத்து செயற்கை அறிவை குளோனிங் செய்கிறார்கள். அதை வைத்து அவரின் உருவத்தில் ராணுவ வீரர்களைத் தயாரிப்பதே நோக்கம். இதை குழு தலைவராக இருந்து செய்வது, சியோ ஹியூன். இவர்தான்   யூன் ஜங்கின் மகள்.   தாய் கோமா நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார். மகள் சியோ ஹியூனின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காகவே, அம்மா யூன் ஜங் போருக்கு போகிறார். போருக்கு சென்றால் அவரது மகளுக்கு சிகிச்சை இலவசமாக கிடைக்கும் என்பதுதான் டீல். ஆனால

பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரிக்க நினைக்கும் எதிரியைத் தடுக்கும் சகோதரர்கள்! பாஸ் பேபி - ஃபேமிலி பிஸினஸ்

படம்
  பாஸ் பேபி ஃபேமிலி பிஸினஸ் ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனத்தின் அனிமேஷன் படைப்பு. இந்த படத்தின் கதையை சரியாக உள்வாங்க பாஸ் பேபி பார்ப்பது அவசியம். அந்த படத்தின் தொடர்ச்சியாக வரும் கதைதான் ஃபேமிலி பிஸினஸ். இந்த அனிமேஷன் படத்தில் சகோதர ர்கள் இருவர் இருக்கிறார்கள். இதில் ஒருவர் தொழிலதிபர். பணத்தாலேயே கொழிக்கிறார். அவருக்கு குடும்பம் என்றால் பெற்றோர், மூத்த சகோதரர் இருக்கிறார். ஆனால் அவர்களை விட்டு தொழில் பரபரப்பு என தள்ளியே இருக்கிறார். இதற்கு மூத்தசகோதரர், அவரது தொழிலதிபர் தம்பி என இருவர் வாழ்க்கையிலும் நிறைய சங்கடங்கள் காரணங்களாக உள்ளன. அதை தீர்த்து இருவரும் எப்படி ஒன்றாக சேர்கிறார்கள் என்பதே கதை.   குழந்தையாக இருப்பவர்கள் சேர்ந்து பேபி கார்ப் என்ற நிறுவனத்தை நடத்துகிறார்கள். இதை ரகசியமாக செய்து வருகிறார்கள். இதில் சாதனை குழந்தையாக ஒரு காலத்தில் இருந்தவர்தான், இப்போது தொழிலதிபராக இருக்கும் தம்பி. மூத்த சகோதரர் தொழிலில் சிறக்கவில்லை. ஆனால் அவர் மணம் செய்துகொண்டு இரு பெண் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத் தந்து வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்கிறார். அவரது மனைவிதான் வெளியில் சென்று

காதலி மீது அவளது அப்பா வைத்துள்ள அதீத பாசத்தை தடுக்க முடியாத காதலனின் கதை - நுவ்வே நுவ்வே - திரிவிக்ரம் சீனிவாஸ்

படம்
  நுவ்வே நுவ்வே  இயக்குநர் திரிவிக்ரம்  தருண், ஸ்ரேயா சரண் அப்பாவுக்கும் மகளுக்குமான பாசத்தில் மகளின் காதலன் சிக்கிக்கொண்டால் என்னவாகும்?  படத்தில் நாயகன் என்பது பிரகாஷ்ராஜ்தான். படம் தொடங்கி இறுதிக்காட்சி வரை உறுதியாக நின்று நடித்திருக்கிறார். இது திரிவிக்ரம் சீனிவாசின் முதல் படம்.  படத்தில் முரணான பாத்திரங்களுக்கு இடையில் வரும் வசனங்கள் கச்சிதமானவை. அச்சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை. கதையைப் பார்ப்போம்.  அஞ்சலி, கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறாள். இவளது அப்பா தொழிலதிபர். அதைத்தாண்டி மகள் மீது பாச வெறி கொண்டவர். மகளுக்கு கொடுக்கும் பரிசு கூட பாசத்தைப் போல ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. மகளுக்கும் அம்மாவை விட அப்பாவே ஆதர்சம். மகளுக்கு, தனது குடும்பத்தினர் ஏன் அவரது மூத்த பையன் பரிசு கொடுக்கும் முன்னரே பரிசு கொடுத்து திகைப்பு ஏற்படுத்துகிறார். இப்படி இருப்பவர், அதீத பாசத்தால் திருமணம் என்று வரும்போது என்ன முடிவு செ்யகிறார் என்பதே கதை.  படத்தின் தொடக்க காட்சியே மது அருந்தியபடி பிரகாஷ் தனது நண்பரிடம் பேசும் காட்சிதான்.  அதில் தனது மகளைப் பற்றி பாசத்தோடு பேசுகிறார். மனம் கனிந்த பேச்சில் ந

குடும்ப பாசத்தால் வெட்டியாக சுற்றும் நாயகன் காட்டும் வீரம்! ஆறடி புல்லட் - கோபிசந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ்

படம்
  ஆறடி புல்லட்  இயக்கம் பி கோபால் இசை மணி சர்மா  கோபி சந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், அபிமன்யூசிங் கட்டுமானத் தொழிலை சொந்தமாக தொடங்க நினைக்கும் இளைஞன், கோபி சந்த். ஆனால் அப்பா அவன் மீது நம்பிக்கை கொள்வதில்லை. இதனால் அவன் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்குப் போகிறான். அதுவும் கூட அப்பாவின் சிபாரிசில்தான். அங்கு சென்றாலும் கூட தவறாக வேலை செய்பவர்களை வாயால் திட்டி கையால் அடித்து காலால் உதைக்கிறான். இதனால் வேலை போகிறது. என் குடும்பம்தான் எனக்கு முக்கியம் என வந்துவிடுகிறான். இப்படி இருக்கும் சூழலில் விஜயவாடாவில்  உள்ள காசி என்ற ரவுடியை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால் அவனுக்கும் அவன் நேசிக்கும் குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதுதான் படத்தின் கதை.  படத்தில் காமெடி என்பது பிரம்மானந்தம் வரும்போதுதான். அதுவரை நாயகனே சிறியதாக காமெடி செய்ய முயல்கிறார். அதெல்லாம் பெரிதாக எடுபடவில்லை.  குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்பதுதான் நாயகனின் லட்சியம். அதற்காக சுய தொழில் செய்ய நினைக்கிறான். ஆனால் குடும்பத்திடம் அவனுக்கான பாசம் எப்படி உள்ளது என்பதைக் காட்ட ஆக்சன் காட்சிகள்தான் ஒரே சாட்சி. மற்றபடி வேற

வன்மமாக மாறும் வெறுப்பு - கடிதங்கள் - கதிரவன்

படம்
  3.4.2022 மயிலாப்பூர் அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் உங்களிடம் பேசி இருக்கிறேன். மகிழ்ச்சி. தம்பியின் திருமணம் சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன். நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டன. இம்முறை துறை சார்ந்த வல்லுநர்களை தேடி எழுத வைக்க இருக்கிறேன். முயற்சி பலிதமாகுமா என்று தெரியவில்லை. கஷ்டம்தான். முயல்கிறேன். இன்று சக்தி சாரின் அறைக்குச் சென்றேன். வடபழனி. கேம்பஸ் என்ற ஹோட்டலில் புட்டும் கடலைக்கறியும் வாங்கிக் கொடுத்தார். டீப் வாட்டர். பவர் ஆஃப் டாக் என்ற இரு படங்களைப் பார்த்தேன். டீப் வாட்டர், மனைவி மீது கொலைவெறி பாசம் கொண்ட கணவரின் அதீத செயல்பாடுகளைப் பேசுகிறது. குறைந்த வசனங்கள். நிறைந்த உடல்மொழி என படம் எடுத்திருக்கிறார்கள்.  பவர் ஆஃப் டாக் படம், பெண் இயக்குநர் ஜேன் கேம்பியன் எடுத்தது. ஒருவரின் மனதில் உருவாகும் வெறுப்பு எப்படி வன்மமாக மாறி குற்றச்செயல்களுக்கு தூண்டுகோலாகிறது என்பதே படம். இந்து ஆங்கில நாளிதழில் சூழல் பற்றிய கட்டுரைகளை சிறப்பாக எழுதுகிறார்கள். இதை மொழிபெயர்த்து எழுத வேண்டும். எங்கள் நாளிதழ் இனி நூலகங்களில் கிடைக்கும் என்று ஆசிர

கெவூடில் நாயைப் பராமரிப்பது எப்படி?

படம்
  பெரும்பாலான மக்கள் இன்று  அபார்ட்மெண்ட், வில்லா என வசிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு ஏற்றதுபோலத்தான் செல்லப்பிராணிகளையும் வளர்க்கிறார்கள். அப்படியல்லாதபோது அது தனிப்பிரச்னையாக மாறிவிடும். கெவூடில், கெவாலியர் கிங் சார்லஸ் ஸ்பேனியல், பூடில் என இரு நாய் இனங்கள் சேர்ந்து உருவான நாய் இனம். சிம்பிளாக கிராஸ் ப்ரீட். சாலா கலப்பினம் ....லயன் +டைகர் = லைகர் போலத்தான்.  வீட்டுக்குள் இருந்தாலே போதும்.... கெவூடில் பெரும்பாலும்  வீட்டுக்குள் அறைக்குள் இருக்க நினைக்கும் நாய் தான். கூடவே அதன் சகாவாக மனிதர்கள் இருக்கவேண்டும். இல்லையெனில் விரைவில் ஏங்கிப்போய்விடும்.  பொதுவாக இதன் உயரம் 40 செ.மீ. எடை 5 முதல் 12 கி.கி தான். சிறியதாக இருக்கும். எளிதாக கையாளலாம். கன்றுக்குட்டி போல இருந்தால் பாசத்தால் மேலே தாவினால் ஓனரை ஐசியூவில் வைத்து காப்பாற்ற வேண்டியிருக்கும். சில கட்டளைகளை சொல்லி முதலிலேயே பழக்கினால், அதை கெவூடில் கேட்கும். பின்பற்றும். குறிப்பாக வெளியில் சென்று மலம் கழிப்பது, சிறுநீர் பெய்வது ஆகியவற்றை.... வியாபாரம் வேண்டாமே? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் குடும்பத்தொழிலே ஆடை வி

நாய்களை எளிதாக பழக்க முடிவதற்கான காரணம்! - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ! நாய்களை எளிதாக பழக்கமுடிவது எப்படி? வீட்டில் வளர்க்கும் பூனைகளை குறிப்பிட்ட கட்டளைக்கு ஏற்ப பழக்கலாம். ஆனால், அந்த முயற்சியும் கூட நாய்களோடு ஒப்பீடு செய்தால் கடினமானவையே. நாய், உரிமையாளர் கூறும் சிக்கலான ஆணைகளை கூட ஏற்று செய்யும். ஆனால் பூனை, தானே விரும்பினால் மட்டும் செயல்களை செய்யும். நாய், பாரம்பரியமாக குழுவாகவே வேட்டையாடி வாழ்ந்து வந்துள்ளது. அப்படி வாழும்போது, குழுத்தலைவர் ஆணையை ஏற்று பணியாற்றும் பண்பு நாய்க்கு உண்டு. இதனால், நாய் தன் உரிமையாளரை தனக்கும் மேலுள்ள அதிகாரம் கொண்டவராக பார்ப்பதால் கட்டளையை உடனே செய்து முடிக்கிறது. எனவே, நாய்களை பழக்குவது எளிதாக இருக்கிறது.  விஷ முறிவு மருந்து எப்படி உருவாக்கப்படுகிறது? உலகம் முழுக்க 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஷப் பாம்புகள் உள்ளன. இவை மனிதர்களை கடிப்பதால் 80 ஆயிரம் தொடங்கி 1 லட்சத்து 40 ஆயிரம் வரை மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன.  பாம்பு கடித்தவரை உடனே காப்பாற்ற விஷ முறிவு மருந்து அவசியம். மருந்தைத் தயாரிக்க முதலில், பாம்பின் விஷத்தை குதிரையின் உடலில் செலுத்துகிறார்கள். இந்த விஷத்திற்கு எதிராக குதிரையின் உடல் ஆன்டிப

எதிரியை மாறுகை மாறுகால் வாங்கிவிட்டு அமைதியை போதிக்கும் படம்! சமரசிம்ஹா ரெட்டி - பாலைய்யா, சிம்ரன், அஞ்சலா ஜாவேரி

படம்
  சமரசிம்ஹா ரெட்டி பாலகிருஷ்ணா, சிம்ரன், அஞ்சலா ஜாவேரி இயக்கம் - ஜி கோபால் கதை வி விஜயேந்திர பிரசாத் வசனம் பாருச்சி பிரதர்ஸ்  இசை மணிசர்மா  ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மோட்டல் ஒன்றுக்கு அப்புலு வருகிறான். அவன் கையில் பணம் இல்லை என்பதால் சுயநலமான சுமித்ராவின் ஹோட்டலில் வேலைக்கு சேருகிறான். இந்த ஹோட்டலுக்கு போட்டியாக சிட்டம்மா என்ற பெண்மணி ஹோட்டல் வைத்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் தொழில்போட்டி உள்ளது.   அப்புலுவைப் பார்த்ததிலிருந்தே சிட்டம்மாவுக்கு இவன்தான் தனக்கு ஏற்றவன் என மனம் சொல்லுகிறது. ஹோட்டலில் மூன்று பெண்கள் வேலை செய்கிறார்கள். இவர்களை சுமித்ரா கடுமையாக திட்டி வேலை செய்யச் சொல்லுகிறார். இந்த பெண்களுக்கு அத்தைதான் ஹோட்டலை நடத்தும் பெண்மணி என அப்புலு தெரிந்துகொள்கிறான்.  மூன்று பெண் பிள்ளைகளில் முதல் பெண் திருமணத்திற்கு தயாராகி நிற்கிறாள். அடுத்தவள் படிக்கவேண்டும் என ஆசைப்பட்டு வேலைநேரம் போக படித்துக்கொண்டு இருக்கிறாள். கடைக்குட்டியான சிறுமி, அத்தையால் அடித்து உதைக்கப்பட்டு கால் முடமாகி கிடக்கிறாள். இவர்களுக்கு அப்புலு ஏன் உதவி செய்ய நினைக்கிறான் என்பதுதான் படத்தின் கிளைக்

மாற்றுத்திறனாளி தங்கையைக் காப்பாற்றத் துடிக்கும் பாச அண்ணன்! வீரபத்ரா 2006 - பாலகிருஷ்ணா, சதா, தனுஸ்ரீ தத்தா

படம்
  வீரபத்ரா 2006 தெலுங்கு பாலகிருஷ்ணா இயக்குநர் - ஏ.எஸ். ரவிகுமார் சௌத்ரி வசனம் மருதுரி ராஜா  இசை - மணி சர்மா  முரளி கிருஷ்ணா, தனது சொந்த ஊரிலிருந்து ஹைதராபாத்திற்கு வருகிறார். தனது சகோதரியை நல்ல கல்லூரி தேடி படிக்க வைப்பதுதான் நோக்கம். அவரது சகோதரி யார் என முரளி கிருஷ்ணா  வாழும் காலனி மக்களே தேடும்போதுதான் அவரது பின்புல வரலாறு தெரிய வருகிறது. அவருக்கும் சிறையில் கொலைக்குற்ற தண்டனை அனுபவிக்கும் பெத்திராஜூக்கும் பெரும் பகை உள்ளது. அவரது ஆட்கள் முரளி கிருஷ்ணாவைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதுதான் கதை.  பாலகிருஷ்ணா படம் முழுக்க யாரையோ ஒருவரைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார். காலனி மக்களைப் பாய்ந்து பாய்ந்து காப்பாற்றுவதே போதுமானது. படம் நெடுக அவர் முழு முயற்சியாக மனிதர்களைக் காப்பாற்றுகிறார். ஆனால் படத்தைக் கைவிட்டுவிடுகிறார். இயக்குநரும் படப்பிடிப்பின்போது அப்படியே டீக் குடிக்க போய் பிரியாணி சாப்பிட சென்றுவிடுகிறார்கள் என்றுதான் நினைக்கவேண்டும். பிரகாஷ்ராஜ், ஷாயாஜி ஷிண்டே ஆகிய நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நடிக்கவேண்டாம் என கடுமையாக ஆணையிட்டுவிட்டார்கள் போல. அவர்களும் நிறைய காட்சிகள