இடுகைகள்

அநீதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அநீதியான செயல்பாட்டை நியாயப்படுத்த முடியுமா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி வில்ஃபிரட் பியான் என்பவர் யார்? குழு உளவியல் சிகிச்சை சார்ந்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர். குழுவின் மனநிலை என்பது தனிநபர்களின் அனுபவங்களிலிருந்து பெறப்படுகிறது. முதிர்ச்சியான ஒருவர் உலகம் முழுக்க கருப்பு, வெள்ளை இயல்பு கொண்ட மனிதர்கள் மட்டும் கிடையாது என முடிவுக்கு வருவார். அவருக்கு உலகில் உள்ள பல்வேறு குண இயல்பு கொண்ட நல்லவர்கள், கெட்டவர்கள் என பலரையும் அறிந்த அனுபவம் கைவந்திருக்கும்.  முன்முடிவு, இனவெறி என இரண்டையும் எப்படி வகைப்படுத்துவது? குழு உளவியலில் முன்முடிவு, இனவெறி என இரண்டுமே எதிர்மறையான கருத்தை அடிப்படையாக கொண்டது. வட இந்தியாவில் குறிப்பிட்ட முறையில் முஸ்லீம்களை ஒழித்துக்கட்ட நாடகம் நடைபெறுகிறது. முதலில் முஸ்லீம் இளைஞர், இந்துகடவுள் ஏதாவது ஒன்றை சேதப்படுத்துவதாக பச்சை செயலியில் வதந்தியைப் பரப்பவேண்டும். அதை வைத்து சிறுபான்மையினர் கடைகளை, வணிகத்தை முற்றாக புறக்கணிக்கவேண்டும். கடைகளை உடைத்து, சொத்துக்களை கொள்ளையடித்து, பெண்களை மானபங்கப்படுத்தி, வழிபாட்டுதலங்களில் பேய்க்கூச்சல் எழுப்பி அவர்களை வாழும் இடத்தில் இருந்து ...

மக்கள் அதிகாரத்துவ இயக்கங்களை அழித்த போல்ஷ்விக், பாசிஸ்ட் அமைப்புகள்!

படம்
    அரசியல் இயக்கமாக மக்கள் அதிகார அமைப்புகளை பார்ப்பது சுவாரசியமானது. அதன் செயல்பாடு, அமைப்பின் கட்டமைப்பு, உள்ளே நடக்கும் செயல்பாடுகள் என அனைத்துமே வேறுபட்டவை. வெளிப்படைத்தன்மை கொண்டவை. 1848-1914 காலகட்டத்தில் மக்கள் அதிகார அமைப்புகள் தீவிரமாக இயங்கின. அமைப்பிற்குள் மக்களை இழுக்க பிரசாரம் செய்தன. ஆனால், உலகப்போர் நிறைவடைந்தபிறகு, அமைப்புகள் பலரும் அறியாமல் காணாமல் மறையத் தொடங்கின. இதற்கு போல்ஷ்விக், பாசிஸ்ட் இயக்கங்களே முக்கியப் பங்காற்றின.   ஐரோப்பாவில் மக்கள் அதிகார இயக்கங்கள் அழிவதற்கு, அதைவிட வலிமையான கருத்தியல் அமைப்புகள் அரசு அதிகாரத்தை கைப்பற்றியதே முக்கியக் காரணம். 1945ஆம் ஆண்டிற்கு பிறகு ஐரோப்பாவில் சில மக்கள் அதிகார அமைப்புகள் மெதுவாக இயங்கத் தொடங்கின. தனது கருத்தியல் சார்ந்து சில நூல்களை வெளியிட்டன. லத்தீன் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, உருகுவே ஆகிய நாடுகளில் சர்வாதிகாரம் காரணமாக மக்கள் அதிகார அமைப்புகள் செயல்பாடு தேக்கமடைந்தன. பொதுவாக இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, மக்கள் அதிகார அமைப்புகளின் செயல்பாடு முழுக்க நின்றுபோய், அதன் நிழல்தான் மிச்சமிருந்தது. ப...

இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதே ஒரே வழி!

படம்
      மக்கள் அதிகாரத்துவர்கள், ஒரு விஷயத்தில் நீதி கிடைக்கவேண்டுமென்றால் எந்த தரகர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும் நாடுவதில்லை. அதில் அவர்கள் பெரிதாக நம்பிக்கை கொள்வதில்லை. நேரடியாக களத்தில் இறங்கி நடைபெறும் செயலை உடனே தடுக்க முயல்வார்கள். அதனால், இதை பார்ப்பவர்களுக்கு வன்முறை இயல்பு  கொண்டவர்கள் போல தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர்கள் அப்படியானவர்கள் இல்லை. செயலை உடனே தடுக்கவேண்டும் என நினைப்பார்கள். உடனே களத்தில் குதித்துவிடுவார்கள். இந்தியாவில் உள்ள மரங்களை வெட்டாமல் தடுத்த சிப்கோ இயக்கத்தை அறிவீர்கள். மரங்களை கட்டிப்பிடித்து தடுத்து இயற்கையைக் காத்தவர்கள். அதுபோலத்தான். இவர்களும் செயல்படுகிறார்கள். புல்டோசர்களைக் கொண்டு காடுகளை அழிக்கிறார்களா, அவர்களது வண்டியின் பெட்ரோல், டீசல் டேங்கில் சர்க்கரையைப் போட்டுவிடுவார்கள். அப்புறம் என்ன முழு எஞ்சினும் பழுதாகிவிடும். நாம் கவனிக்கவேண்டியது எதிர்தரப்பு எந்த மெக்கானிக்கிடம் செல்வார்கள் என்பதல்ல. நடைபெற்ற செயல் நின்றுபோனதல்லவா, அதுதான் மக்கள் அதிகாரத்துவர்களின் வெற்றி. இயக்கமாகவும் அவர்கள் மேலிருந்து கீழ் என ஆணையிட்டு ச...

சர்க்கரையும் சந்தை நிலவரமும் எப்போதும் கலவரம்தான்!

படம்
            மதிப்பிற்குரிய பொன்னி சர்க்கரை விநியோக குழுவினருக்கு, வணக்கம். நான் தங்களுடைய பொன்னி சர்க்கரையை, கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். பொடி போல இல்லாமல் சர்க்கரை பெரிதாக தரமாக இருக்கிறது. தொடக்கத்தில் ஒரு கிலோ பாக்கெட் சற்று அளவில் பெரிதாக இருந்தது. பிறகு, பாக்கெட் சற்று கச்சிதமாக்கப்பட்டது நல்ல முயற்சி. பொன்னி சர்க்கரை விலை அதிகபட்ச வரி உட்பட ரூ.55 என அச்சிடப்பட்டுள்ளது. கடையில் விநியோகம் செய்யும்போது என்ன விலைக்கு கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.45க்கு விற்ற சர்க்கரை, பத்து நாட்கள் இடைவெளியில் ரூ.48 என விலை கூடிவிட்டது.  இந்த ரீதியில் சென்றால், விரைவில் நீங்கள் பாக்கெட்டில் அச்சிட்ட விலையை மூன்று மாதங்களில் அடைந்துவிடலாம். தரம் சிறப்பாக உள்ளது. எனவே, விலை நிர்ணயத்தில் நீங்கள் சற்று கவனம் செலுத்தினால் பொன்னி சர்க்கரை, வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புள்ளது. கிராமப்புறம் சார்ந்த கடைகளில் சர்க்கரையை மூட்டையாக வாங்கி எடுத்து வந்து விற்கிறார்கள். அதன் தரம் அந்தளவு சிறப்பாக இல்லை. ஏற...

ஊழலால், அநீதியால் இழிந்த நிலைக்கு தள்ளப்படும் மூடநம்பிக்கை கொண்ட மக்கள் வாழும் கிராமம்! - தர்பாரி ராகம் - ஶ்ரீலால் சுக்ல

படம்
            மறுவாசிப்பு- தர்பாரி ராகம் ஶ்ரீலால் சுக்ல தமிழ் மொழிபெயர்ப்பு - சரஸ்வதி ராம்னாத் நேஷனல் புக் ட்ரஸ்ட் அரசு மீது அங்கத தன்மையோடு கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் இந்தி இலக்கிய நூலை வெளியிட்டதற்காகவே அரசு வெளியீட்டு நிறுவனத்திற்கு நன்றி கூறவேண்டும். புண்பட்ட மனங்கள் அதிகரித்துவிட்ட காலத்தில், இந்த நூலெல்லாம் மறுபதிப்பு கண்டு வெளியானால் அதுவே பெரிய ஆச்சரியம். நூலாசிரியர், ஶ்ரீலால் சுக்ல. இவரது வேறு எந்த நூல்களையும் நான் படித்தது இல்லை. இந்த நூலும் வாசிப்பில் ஆர்வம் கொண்ட பிறரையும் வாசிக்க வைக்கும் நோக்கில் உள்ள சகோதரர் முருகு மூலமாகவே வாங்கினேன். அந்த வகையில் அவருக்கு நன்றி. முந்நூறு பக்கங்களுக்கும் அதிகம் கொண்ட நூலின் அச்சிடப்பட்ட விலை ரூ.28. புத்தக திருவிழா தள்ளுபடியில் ரூ.14க்கு வாங்கினேன். இந்நூலில் உள்ள கருத்துகளை காங்கிரஸ் அனுமதித்து அரசு நிறுவனம் மூலம் வெளியிட்டது.  தற்போதுள்ள வலதுசாரி மதவாத அரசு, இத்தகைய நூலை நிச்சயம் ஏற்காது. புறக்கணிக்கவே செய்யும். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் நூலில் ஏராளம் உள்ளன. சிவபால்கஞ்ச் எனும் கிராமம்...

வரி உட்பட அதிகபட்சவிலை என்பது நகைச்சுவையா?

படம்
      மதுரையைச் சேர்ந்த பல்பொடி நிறுவனம். பல்பொடி, அலுப்பு மருந்து என விற்று இன்று அதே பல்பொடியில் பற்பசை அளவுக்கு முன்னேறியுள்ளது. அந்த நிறுவனத்தின் பல்பொடி பிராண்ட் பத்து கிராம் அளவுகொண்ட பாக்கெட் ரூ.2 விலை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் ஐந்து ரூபாயில் விற்கிறார்கள். அப்போது ரூ.2 என விலையை அச்சிட்டுள்ளது நகைச்சுவைக்காகவா? ஐந்து ஆண்டுகள் என காலாவதி காலத்தை அச்சிட்டுள்ள துணிச்சலான நிறுவனம், விலையை ஏன் இப்படி மாற்றி விற்க வேண்டும் என்று தெரியவில்லை.  இந்த நிலையில் பல்பொடியை, சித்த மருத்துவம் என்று வேறு போட்டு அதையும் கீழான நிலைக்கு கொண்டுவருகிறார்கள். வியாபாரிகள் இன்று அரசியலில் வலிமை பெற்று வருவதால், குறைகளை சுட்டிக்காட்டினால் கூட சட்டரீதியாக வழக்கு தொடர்ந்து மிரட்டும் ஆபத்துகள் அதிகரித்துள்ளன.   

தீயசக்தி உலகை மாற்றியமைத்து நீதியின் பக்கம் கொண்டு வரத் துடிக்கும் தீயசக்தி இனக்குழுவின் இளம் தலைவர்!

படம்
    ஐ இன்கார்னேட்டட் கிரேசி ஹெய்ர் சீன காமிக்ஸ் தொடர் அத்தியாயம் 96- டீமன் கல்ட் எனும் தீமை இனக்குழுவில் வாழும் இளம் தலைவர் உடலில் ஆவி ஒன்று புகுந்துகொள்கிறது. அந்த ஆவி, முரிம் கூட்டணி தலைவரின் மூத்த மகனுடையது. அவர் நேர்மை நாணயம் நம்பிக்கை, கடப்பாரை என ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார். இதைப் பொறுக்காமல் தேநீரில் விஷம் கலந்துவிட, ரத்தவாந்தி எடுத்து செத்துப்போகிறார். சாகும்போதே புயல் டிராகன் குழு எனும் தீமை இனக்குழுவை அழித்தொழிக்கும் வேலையை செய்கிறார். அக்குழுவின் தலைவர் கூட நாயகன்தான். அவரது ஆவி, தீமை இனக்குழுவைச் சேர்ந்த இளம் தலைவரின் உடலில் புகுந்தால் என்னாகும்? அதுதான் இந்த காமிக்ஸின் மையம். பொதுவாக நாம் அனைவருமே முப்பது வயதிற்குள் உலகில் வாழ்வதற்கான அடிப்படை நம்பிக்கைகளை உருவாக்கிக்கொள்கிறோம். அதாவது, திருடப்போகிறோமா, அல்லது பிச்சை எடுக்க போகிறோமா என இரண்டு வாய்ப்புகள் நம்முன் உள்ளன. தேர்ந்தெடுப்பதை பொறுத்து வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளோடு அமையும். நன்மை, நீதி, நியாயம் என்று பேசுபவன், அதற்கு எதிரான குலம் என்று கருதப்படும் இடத்தில் அதை நிர்வாகம் செய்யக்கூடிய பதவிக்கு வந்தால் என்ன செய்வா...

கண்முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராக அமைதி காப்பதும் தவறுதான்! - கோகோ காஃப்

படம்
  கோகோ காஃப் coco gauff டென்னிஸ் வீரரான கோகோ காப், 2023ஆம் ஆண்டில்  22 மில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளார். இதில் பெரும்பகுதி விளம்பரங்கள் மூலம் கிடைத்துள்ளது. இது அவருக்கு பெருமையான ஒன்று. கருப்பினப் பெண்ணாக நான் விளையாடும் விளையாட்டு அந்தளவு பன்மைத்தள்மை கொண்டதல்ல. எனக்கு இது அர்த்தம் கொண்ட ஒன்று என்றார்.  கடந்த ஆண்டு செப்டம்பரில், தனது பத்தொன்பதாவது வயதில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை காஃப் வென்றார். போட்டியில், ஆரியானா சபாலென்கா என்ற வீரரை போட்டியிட்டு வென்றார். சாம்பியன் பட்டத்தை பெறும்போது பெயரும் புகழும் கூடவே வரும் என்று தெரியும். ஆனால், அதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. எனது வீட்டில் எத்தனை பட்டங்களை வாங்கி வைக்க முடியும் என்றுதான் யோசித்து வருகிறேன் என்றார்.  கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியின் அரையிறுதியில் தோற்றாலும் காஃபின் நம்பிக்கை தளரவில்லை. அவர் தான் நினைத்த பாதையில் தீர்க்கமாக சென்றுகொண்டே இருக்கிறார்.  2020ஆம் ஆண்டு ஜார்ஜ் பிளாய்ட் போலீசாரால் கொல்லப்பட்டபோது, அதை தீவிரமாக யோசித்துள்ளார். நடந்த அநீதி பற்றி யோசித்தேன். அதை ந...

அநீதிக்கு எதிரான குரலாக ஒலிக்கும் ஆக்ரோஷ இசை!

படம்
  மெட்டல் மியூசிக்  நிக்கோல் ஹார்னிங் 104 பக்கங்கள் ஹெவி மெட்டல் இசை இன்று தமிழ் சினிமாவுக்கும் வந்துவிட்டது. பிராந்திய மொழி சினிமாவுக்கு வருவதற்கு வேண்டுமானால் தாமதமாகி இருக்கலாம். ஆனால், எழுபது எண்பதுகளில் அந்த இசையை ரசிக்கும் பலர் உலகமெங்கும் உருவாகிவிட்டார்கள்.   இசைவிழாக்களுக்கு செல்பவர்கள் பிறருக்கு அதைப்பற்றி சொல்வது குறைவு. சொன்னாலும் புரிந்துகொள்ளவேண்டுமே? இங்குள்ள இசைஞானிகளுக்கு ஹெவி மெட்டல் என்பது இரைச்சல் என்பதாகவே மாறாத கருத்துண்டு. கிணற்றுத் தவளைகளுக்கு அகங்காரம் எப்போதுமே அதிகம்தான்.  ஹெவி மெட்டல் இசை எதற்கு உருவானது, அதன் பின்னணி, அதில் பிரபலான இசைக்குழுக்கள், அவர்களின் புகழ், வீழ்ச்சி, பெற்ற வெற்றிகள், எதிர்கொண்ட விமர்சனங்கள், சமூகம் வேறுபட்ட இசையை எப்படி புரிந்துகொண்டது, உள்வாங்கியது என்பதைப் பற்றி நிக்கோல் ஹார்னிங் விரிவாக விளக்கியுள்ளார்.  சமூக அமைப்பில் உள்ள பிரச்னைகளை எதிர்க்க நினைப்பவர்கள், அதில் பொருந்திபோக முடியாதவர்கள் மெட்டல் இசையை உருவாக்குகிறார்கள். அதைக் கேட்பவர்களும் இப்படியான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லையென்றால...

மனநல குறைபாடு கொண்ட தம்பியின் பெயரில் கொலைகளை செய்யும் போலீஸ் அதிகாரி அண்ணன்!

படம்
  ஹரே ராம் - கல்யாண் ராம், பிரியாமணி ஹரே ராம் கல்யாண்ராம் 1,2, பிரியாமணி இரு பிள்ளைகள். ஒருவன் மென்மையானவன். இன்னொருவன் பிறப்பாலே வன்முறை எண்ணம் கொண்டவன். வன்முறை என்பதற்காக சீரியல் கொலை செய்பவன் அல்ல. யாராவது அவனை தூண்டிவிட்டால் எரிச்சல் ஊட்டினால் அவர்களை சும்மா விடுவதில்லை. மாறுகை மாறுகால் வாங்கும் அளவுக்கு கோபம் கொண்டவனாக இருக்கிறான். மனநல குறைபாட்டை இன்னும் தெளிவாக விளக்கியிருக்கலாம். அதுதான் படத்தின் பெரும் குறை. ஹரி நிதானமானவன், ராம் வன்முறையான ஆள். அம்மாவுக்கு இரு பிள்ளைகளும் முக்கியம். எனவே, தனது இரட்டையர்களாக பிறந்தவர்களைக் காக்க தானே ராமைக் கூட்டிக்கொண்டு தனியாக செல்கிறாள். அவளது கணவர் ஹரியை வளர்க்கிறார். ராமை திட்டியதால் மனைவி பிரிந்துபோனாள் என மனம் கலங்கி உடல் நலம் கெட்டு இறக்கிறார்.   நகரில் ஹரி உதவி கமிஷனராக உள்ளார். அங்கு சில நாட்களுக்கு முன்னர் நெடுஞ்சாலையில் காரை ஓட்டி வரும் பத்திரிகையாளர் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். அதை முதலில் தற்கொலை என அனுமானித்தாலும் ஹரி அது கொலை என்று கூறி சந்தேகங்களை அடுக்கிறார். அடுத்து, அரசியல்வாதியின் மருத்துவர் தம்பி ஒருவர...

மாஃபியாவை சட்டப்பூர்வமாக மாற்றும் அநீதியின் காவலன்! பிஸ்னஸ்மேன் - மகேஷ்பாபு

படம்
  பிஸ்னஸ்மேன் - மகேஷ்பாபு, காஜல், நாசர் பிஸ்னஸ்மேன் -தெலுங்கு அடடா... அப்பப்பா பாத்திரங்கள் - Character Sketch பிஸினஸ்மேன் சூர்யா பாய் (மகேஷ் பாபு) தெலுங்கு இயக்குநர் – பூரி ஜெகன்னாத்   சாதாரண ஆள், ஆந்திராவிலிருந்து மும்பைக்கு சென்று பெத்த மாஃபியா டான் ஆகும் கதை. அதற்கான காரண காரியங்களை இயக்குநர்கள் சிறப்பாகவே செய்கிறார்கள். அதெல்லாம் தாண்டி நாயக பாத்திரம் எந்தளவு உறுதியாக உள்ளது, என்னென்ன விதமான வலிகளைப் பொறுக்கிறது என்பதே,  படத்தைப் பார்ப்பவர்கள் எந்த வயதாக இருந்தாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பார்க்க வைக்கிறது. பேச வைக்கிறது. ‘’குற்றவாளி கிடையாது. ஆனால் குற்றவாளி போல யோசிப்பவன்” என மும்பை கமிஷனர் அஜய் கோபத்துடன் கூறும் அளவுக்கு சூர்யா அநீதியின் தலைவனாக வேலை பார்க்கிறான். கமிஷனர் அஜய் பரத்வாஜ், ‘’இனி மும்பையில் இனி எந்த டானும் இல்லை’’ என பிரஸ் கிளப்பில் கூட்டம் வைத்து பேசியபிறகுதான், மும்பைக்கு ரயிலில் வந்து இறங்குகிறான் சூர்யா. காட்சி ரீதியாகவே அவர் சொன்னதை உடைப்பதற்குத்தான் நாயகன் வருகிறான். பூரி ஜெகன்னாத்தின் ஆக்ரோஷ ஹீரோக்களில் இன்றும் ரசிக்க வைக்கும் வி...

அநீதிக்கு எதிராக விளிம்பு நிலை மக்களின் வயிற்றில் எரியும் நெருப்பு - படுகைத் தழல் - புலியூர் முருகேசன்

படம்
  படுகைத் தழல் புலியூர் முருகேசன் நாவல் படுகைத் தழல் நாவல் பரிசோதனை முயற்சியான பல்வேறு விஷயங்களை தீர்க்கமான தன்மையில் பேசுகிறது.  சமகாலத்தில் இருந்து சோழகாலம் வரை பயணிக்கும் நூல் அந்தந்த காலகட்டத்தில் எளிய மனிதர்கள் மீது அதிகாரம் எப்படி பாய்ந்து அவர்களது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது என விளக்கமாக பேசுகிறது.  கதையின் தொடக்கத்தில் கலியமூர்த்தி என்பவர் பற்றிய விவரங்கள் கூறப்படுகின்றன.அவருக்கு திருமணமாகவில்லை. அவருக்கு சில நாட்களாக அடிவயிற்றில் வலி உள்ளது. அதை சரிசெய்ய அவரது பெரியப்பா மகன் அவரை இரண்டு ரூபாய் மருத்துவரிடம் கூட்டிச்செல்கிறான். அவர் ஹோமியோபதி மருத்துவர். பல்வேறு சோதனைகளை செய்தவர், அடிவயிற்று வலிக்கு காரணம் வேறு எங்கோ உள்ளது என கலியமூர்த்தியை அவரது நினைவுகளின் வழியாக பேச வைக்கிறார்.  கதை தொடங்குகிறது. ராசன் எனும் புலையக்குடி ஆள் எப்படி வேளாளர், பிராமணர் உள்ளிட்ட மேல் சாதிகளால் வதைபட்டு தனது நிலத்தை இழந்து பசியால் அவர் மட்டுமல்ல அவரது ஒட்டுமொத்த குடும்பமே வதை பட்டு அழிகிறது. ஏறத்தாழ நாவல் முழுக்க வரும் எளிய விளிம்புநிலை மனிதர்கள் அனைவருமே இதேபோல மரணத்தை...

அநீதி வில்லன்களை எதிர்க்கும் பொறுப்பான திருடன் - சிரஞ்சீவி, ராதா

படம்
  தொங்கா  சிரஞ்சீவி, ராதா மற்றும் பலர்  யூசுவலான பழிக்குப்பழி கதைதான். அதையே சீரியல் போல மாற்றி வள வளவென இழுத்து பிறகு சுபம் போட்டிருக்கிறார்கள்.  சிரஞ்சீவி கார்களைத் திருடுவது, பணத்தை கொள்ளையடிப்பவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது என செய்து பிழைக்கிறார். இன்னொரு விஷயம், அவர் தனது குடும்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார். திருடர் என்றாலும் அவர் ஒரு லட்சியவாதி. திருடும் பணத்தில் தனது மெக்கானிக் நண்பனுக்கும், தனக்கு கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியை அனாதை இல்லங்களுக்கு கொடுத்துவிடுகிறார். எவ்வளவு நல்ல மனசு பாருங்க சாரே! ஊரில் இரண்டு பணக்கார ர்கள் இருக்கிறார்கள். அத்தனையும் கடத்தல், பிறரை ஏமாற்றுதல் செய்தே சம்பாதித்தது. அவர்களிடம் உள்ள சொத்துக்களை தன் பக்கம் இழுத்து அவர்களை கதறவிட நினைக்கிறார். ஏன் அப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் அதற்கான ஃபிளாஷ்பேக் சொல்லித்தானே ஆகவேண்டும். அதை முதலிலேயே சொல்லிவிடுவதால், கதையில் புதிய பாத்திரங்களைக் கொண்டு வந்து கதையை இழுக்கிறார்கள்.  வருமானவரித்துறை அதிகாரி விஸ்வநாதன், அடுத்து இன்ஸ்பெக்டர். விஸ்வநாதனை தூண்டிவிட்டுத்தான் ஊரின் இரு பணக்காரர்...