இடுகைகள்

அருவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐஸ்லாந்தில் அமையப்பெற்ற அழகிய தேசியப்பூங்கா!

படம்
  திங்வெல்லிர் அமைந்துள்ள இடம் – ஐஸ்லாந்து கலாசார அங்கீகாரம் பெற்ற ஆண்டு – 2004 ஐஸ்லாந்து நாட்டில் அமைந்துள்ள பழமையான தேசியப் பூங்காவின் பெயர் திங்வெலிர். 930ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு மாற்றங்களைக் கண்டு வந்துள்ள இடம் இது. இரண்டு மலைச்சிகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ள அல்மனாக்ஜாவில் தேசியப் பூங்கா உள்ளது. நாட்டின் முதல் ஜனநாயக நாடாளுமன்றமும் இங்குதான்   முதன்முதலில் உருவாகி இயங்கி வந்தது. வடக்கு அட்லாண்டிக் நடுவில் உள்ள தீவை நார்ஸ் என்பவர் கண்டுபிடித்தார். இதற்கான காலம் அறுபது ஆண்டுகள்.   1262ஆம் ஆண்டு நார்வே ஐஸ்லாந்தை கட்டுப்படுத்தி ஆண்டது. திங்வெல்லிர் என்ற இடமானது கிறிஸ்துவ மக்களுக்கான புனித இடம். இங்குள்ள மக்கள் எந்த வன்முறையும் இல்லாமல் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டனர். இங்கு செல்பவர்கள் வட அமெரிக்க கண்டத்தட்டு, ஐரோப்பிய கண்டத்தட்டு என இரண்டிலும் பயணிக்க முடியும்.அட்லாண்டிக்கின் நடுப்பகுதியில் நீளமான மலைத்தொடர்களைக் கொண்ட நாடு ஐஸ்லாந்து. ஆக்சாரா என்ற ஆறு இங்கே ஓடுகிறது. அல்மனாக்ஜாவிலிருந்து திங்வல்லவட்டன் எனும் இடத்திற்கு அருவியாக மாறி செல்கிறது. திங்வல்லவட்டான் எனும் இயற்கை

ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க நான் தயாராக இல்லை! - அதிதி பாலன்

படம்
  அதிதிபாலன்  திரைப்பட நடிகை அருவி படத்திற்கு பிறகு இப்போதுதான் நீங்கள் கோல்ட்கேஸ் படத்தில் நடித்திருக்கிறீர்கள் இல்லையா? அருவி படத்திற்கு பிறகு நான் சிறிய பாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என பலரும் நினைத்தார்கள். ஆனால் அது தவறு. நான் கதையை மட்டுமே முக்கியமாக கருதினேன். அதில் முக்கியத்துவத்தை எதிர்பார்த்தேன். கோல்ட் கேஸ் படம் அப்படிக் கிடைத்தது. இதில் பிரித்விராஜூக்கு தனி டிராக் உள்ளது. எனக்கு கதையும் பாத்திரமும் பிடித்திருந்ததால் இதில் நடித்தேன்.  நீங்கள் நடித்துள்ள பாத்திரம் அமானுஷ்யங்களை நம்பி பயப்படும்படியாக உள்ளது. இதனை எப்படி நடித்தீர்கள்? எனக்கு அமானுஷ்யங்களின் மீது நம்பிக்கை கிடையாது. எனவே இந்த பாத்திரம் எனக்கு சவாலாக இருக்கும் என நினைத்தேன். அமானுஷ்யங்களை நம்பாத பெண் என்பதால் பயப்படும் காட்சிகள் எப்படி வரும் என்று கவலைப்பட்டேன். ஏனெனில் எனக்கு பயமே வரவில்லை. ஒருவகையில் நடிகையாக எனக்கு இது புதிய அனுபவமாக இருந்தது.  உங்களிடம் வரும் கதைகளை நிராகரிக்கிறீர்கள் என்று கூறுகிறார்களே? நான் ஒரே மாதிரியான பாத்திரங்களை செய்ய விரும்பவில்லை என்பதுதான் இதற்கு காரணம். இதுபோல வதந்திகளை பரப்புவது