அண்டர்கவர் ஏஜென்டாக இருந்து காணாமல் போன அம்மாவைக் கண்டுபிடிக்க செல்லும் மகனின் கதை!
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2EFXyQnZw1RJfv8gI6mQtWrVTF3n85sXlIusarkZVV5lnkgiyCaS0EQeFUbZBzb_pikzXDlW7XRa6J9ea0L4RQDm7eFSE3U_9NS2uMPnl-4Pc3rRLjh4WgbG1vz4LgD61wNR6xPCJ9m1FCy2NKJ3GQmfpPEVg6ctqI2EjLctdvSjjnoQLwX0BVCGw63gp/s320/250.webp)
சேஸ் தி ட்ரூத் 24 எபிசோடுகள் சீன டிராமா நாயகன் போலீஸ் அதிகாரி. அவனது அம்மா, சிறுவயதிலேயே வடமேற்கு ஓநாய் குழுவைப் பிடிக்க அதில் இடம்பிடித்தவர். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவருடனான தொடர்பு காவல்துறையிடம் இருந்து துண்டிக்கப்படுகிறது. அவர் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா, காவல்துறைக்கு துரோகம் செய்துவிட்டாரா என பல கணிப்புகள் நிலவுகின்றன. நாயகன், தனது அம்மாவைத் தேடி வடமேற்கு ஓநாய் குழுவைத் தேடி கிளம்புகிறான். இதில் அவன் சந்திக்கும் சவால்களே கதை. இந்த தொடரின் பலம், சண்டைக்காட்சிகளும், உணர்ச்சிகரமான பாசம் தொடர்பான உரையாடல்களும்தான். அதுதான் தொடரை பார்க்க வைக்கிறது. சுவாரசியமானதாக மாற்றுகிறது. தொடர் நெடுக ஓநாய்களின் ஓவியங்கள், அதன் பொம்மைகள், கிராபிக்சில் ஓடிவரும் ஓநாய்கள் என பார்க்க அழகாக இருக்கிறது. மனிதர்கள் நகருவது போலவே கேமராவும் ஹான்பெய், காலிசா, பாலைவனம், மலைதொடர்கள் என நகர்கிறது. கதையின் வழியாக அதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. காவல்துறைக்கும், வடமேற்கு ஓநாய் குழுவுக்கும் நடைபெறும் சண்டைக் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. அதிலும் இறுதிப்பகுதியில் வடமேற்கு ஓநாய் குழுவின் தலைமை அலுவல