இடுகைகள்

இயக்குநர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிறுவனங்களின் இயக்குநர்களாக இந்தியர்கள் நியமிக்கப்பட என்ன காரணம்?

படம்
  pixabay சாதிக்கும் இந்திய இயக்குநர்கள்! அண்மையில் இந்தியரான லீனா நாயர், சானல் பிரெஞ்சு நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராக பதவியேற்றார். இதன் மூலம், பெப்சிகோவின் இயக்குநராக இருந்த இந்திரா நூயிக்கு அடுத்ததாக பெண் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.  இந்தியர்கள் இப்போது பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இயக்குநராக மாறிவருகிறார்கள். மைக்ரோசாஃப்டின்  சத்யா நாதெள்ளா, ஆல்பபெட்டின்  சுந்தர் பிச்சை ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். ஐபிஎம், நோவர்டிஸ், அடோப், ட்விட்டர், ஹார்மன், விமியோ ஆகிய நிறுவனங்களிலும் இந்தியர்கள் இயக்குநர்களாக உள்ளனர். ”பிறப்பு, கல்வி, வேலை என அனைத்து விஷயங்களுக்கும் இந்தியர்கள் போராடி வளர்வதால் இயற்கையாகவே அவர்கள் சிறந்த மேலாளர்களாக இருக்கிறார்கள்” என்றார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஆர்.கோபாலகிருஷ்ணன். பியூ நிறுவன ஆய்வுப்படி(2016படி), 77 சதவீத இந்தியர்கள் குறைந்தப்பட்சம் ஒரு பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர் என கண்டறிந்தது. இந்த வகையில் 31 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே பட்டம் பெற்றவர்கள். ”தொழிலை நடத்திச் செல்ல புதுமைத்

நான் எந்தக்கட்சிக்கும் எதிரானவன் இல்லை! - பா.ரஞ்சித்

படம்
  பா.ரஞ்சித்  திரைப்பட இயக்குநர் சார்பட்டா உங்களுடைய சிறந்த படம் என நினைக்கிறீர்களா? நான் இயக்கிய அனைத்து படங்களுமே எனக்கு பிடித்தமானவைதான். அதிக முயற்சி எடுத்து இயக்கி படம் என்றால் அது காலாதான். அது சமூகத்தில் ஏற்படுத்திய விவாதங்கள் முக்கியமானவை. நான் மிகவும் நேசித்த படம் என்றால் அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி ஆகியவற்றை சொல்லுவேன். எனது படங்களை நான் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. அவை அனைத்துமே எனக்கு பிடித்தவைதான். முந்தைய படங்களுக்கு வந்த விமர்சனங்கள்தான், சார்பட்டாவை வலிமையாக உருவாக்க உதவியது.  உங்களுடைய படங்களுக்கு திரைக்கதை எப்படி அமைக்கிறீர்கள்? நான் என்னுடன் எப்போதுமே குறிப்பேடு ஒன்றை வைத்திருப்பேன். அதில் அவ்வப்போது தோன்றும் ஐடியாக்களை எழுதி வைப்பேன். பின்னர் அவற்றை கணினிக்கு மாற்றிக்கொள்வேன். சார்பட்டா படத்திற்கு சென்னையிலுள்ள தலித் மக்களின் வாழ்க்கையை அறிந்த எழுத்தாளர் தமிழ் பிரபா உதவினார். எட்டு அல்லது ஒன்பது திரைக்கதைகளை எழுதினோம். அதில் ஏராளமான பாத்திரங்கள் உருவாகி வளர்ந்து அழிந்தன. அதில் எனக்கு பிடித்தமான பாத்திரம் ரதி. இவர் கறிக்கடை வைத்திருப்பவராக டான்சிங் ரோசின் அக்க

மக்களின் பிரச்னை பற்றி பேசி படம் எடுத்தால் வழக்கு போட்டு மிரட்டுகிறார்கள்! - திவ்யபாரதி, ஆவணப்பட இயக்குநர்

படம்
              படைப்புகளை எதிர்த்து வழக்குகளை போடுகிறார்கள் ! கக்கூஸ் படம் எடுத்த திவ்யபாரதியை பற்றி படித்திரூப்பீர்கள் . அவர் இப்போது கீட்டோ நிறுவனத்தின் உதவியுடன் நிதி திரட்டி மாற்று திறானிகளை மையமாக வைத்து சாட்லா என்ற ஆவணப்படத்தை எடுத்து வருகிறார் . வரவர ராவ் , சுதா பரத்வாஜ் , ஸ்டேன்சாமி ஆகியோர மக்கள் பிரச்னைக்காக போராடினாலும் அவர்களை அரசு எதிரிகளாகவே கருதுகிறது . பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறது என ஆவேசப்படுகிறார் . க க்கூஸ் என்ற தனது ஆவணப்படுத்தில் மலமள்ளும் தொழிலாளர்களைப் பற்றிய விமர்சனத்தைப் பதிவு செய்தார் . அடுத்து ஒருத்தரும் வரலே என்ற படத்தில் ஓக்கி புயலில் அரசு எப்படி செயல்பட்டது , சாகர் மாலா திட்டத்தால் ஏற்படும் அபாயம் பற்றியும் விளக்கியிருந்தார் . 2017 இல் இவரின் க க்கூஸ் படம் வெளியானபோது , அரசு இவர் மீது சைபர் டெரரிசம் என்று வழக்குகளை பதிவு செய்த்து . அது மோசமான காலகட்டமாக இருந்தது . வெறும் டீசர் வெளியிட்டாலே வழக்கு போட்டுவிடுகிறார்கள் என்று கூறுகிறார் . அம்பேத்கர் , பெரியார் , கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களின் மீது நம்பிக்கை கொண்ட

நடிகரை நடிக்க வைக்க சர்ச்சை இயக்குநர் செய்யும் சூப்பர் பிளான்! - ஏகே விஸ் ஏகே 2020

படம்
                    ஏகே விஸ் ஏகே விக்ரமாதித்ய மோட்வானே இந்த படம் முழுக்க நடைமுறையில் வாழும் இருமனிதர்கள் பற்றிய பாதி பாதி உண்மைகளைக் கொண்டு எழுதப்பட்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது . படம் முழுக்க அனுராக் காஷ்யப் , அனில் கபூர் பற்றிய ஏராளமான கிண்டல் , நக்கல் விரவிக் கிடக்கிறது . அதுதான் படத்தை சுவாரசியப்படுத்துகிறது . அனில் கபூர் , அனுராக் காஷ்யப் இருவரும் ஒரு ஊடக நேர்காணலுக்கு வருகிறார்கள் . அங்கு இருவருக்கும் மோதல் வெடிக்கிறது . அந்த சூழ்நிலையில் அனுராக் காஷ்யப் பிரபலமான இயக்குநராக இருக்கிறார் . அனில் கபூர் , மார்க்கெட்டை இழந்த நிலையில் சிறிய பாத்திரங்கள் செய்துகொண்டிருக்கிறார் . அனுராக்கிடம் கூட தனக்கு படத்தில் வாய்ப்பு கொடு என வாய்விட்டு கேட்கிறார் . நேர்காணல் நிகழ்ச்சியில் நடக்கும் அவமானத்தால் அனுராக் காஷ்யப்பின் இயக்குநர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது . எனவே அவர் தனது உதவியாளர் பிளஸ் பெண்தோழி யோகிதா கொடுக்கும் யோசனைப்படி அனில் கபூரை பழிவாங்க நினைக்கிறார் . இதற்காக கதை ஒன்றை எழுதி அதில் லைவாக அனில் கபூரை நடிக்கச்சொல்லி வற்புறுத்துகிறார் . அவர் நடிக்க மாட்ட

தொழில் நாயகன் நாதெள்ளா- மைக்ரோசாப்ட் இயக்குநர்!

படம்
சத்யா நாதெள்ளா - நம்பர் 1 நீங்கள்தான் நம்பர் 1 தலைவராக ஃபோர்ப்ஸ் இதழில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால், அவரே வெட்கப்படுவார். 1992ஆம் ஆண்டு மைக்ரோசாப்டில் சேர்ந்தவர், இன்று 129 பில்லியன் டாலர்கள் வருமானம் சம்பாதிக்கும் நிறுவனத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இவர் பில்கேட்ஸ், ஸ்டீவ் பால்மர் போல ஊடகங்களில் அறிமுகம் கொண்டவர் அல்ல. ஆனால் சிறப்பான குழுக்களை அவர்களின் அரசியல் கடந்து உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். சிறந்த இயக்குநரின் தகுதி என்பது, குழுவாக மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் சக்தியை அவர்களுக்கே காட்டுவதுதான் என்கிறார். 2014ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட்ஸ் நிறுவன இயக்குநராக அறிவிக்கப்பட்ட சத்யா நாதெள்ளாவின் முன் நிறைய தடைகள் இருந்தன. நிறுவனம் எதிர்காலத்தில் எந்த தொழில்நுட்பத்தை பிடித்துக்கொள்ளவேண்டும் என்று தெரியாமல் இருந்தது. அதனை ஒழுங்கு செய்து பிற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து நிறுவனத்தின் எதிர்காலத்தை வெளிச்சமாக்கினார். மேக கணிய முறையை லினக்ஸ் கட்டமைப்பை இணைத்து வலிமையாக்கினார். நிறுவனத்தின் பலத்தோடு பலவீனங்களையும் அறிந்திருந்தார். அதுவே அவரை பலமாக்கிய