இடுகைகள்

செய்சாகு நகமுரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சினிமா பார்த்து கொலைகாரர் ஆனார்!

படம்
அசுரகுலம் செய்சாகு நகமுரா ஜப்பானில் 1924 ஆம் ஆண்டு பிறந்த செய்சாகு நல்ல புத்திசாலி. ஆனால் காது கேட்காத குறைபாடு உண்டு. சமூக அந்தஸ்தில் மிகவும் பின்தங்கிய குடும்பம். ஊர் முழுக்க இவரது குடும்பத்தை கேலி பேச அதுவே காரணமானது. எனவே அமைதியாக தன் மனதின் உள்முகமாக திரும்பியவர், ஜப்பானின் கடானா வாள் சண்டைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினார். ரசித்து மகிழ்ந்தார். அதுவே பின்னாளில் அவரது இயல்பு மாறவும் காரணமானது. ஒன்பது நபர்களை இரக்கமின்றி ஆசையோடு கத்தி கொண்டு குத்தினார். சிசுவோகா எனும் பகுதியில் நிகழ்ந்த குற்றச்சம்பவங்கள் அவை. 1938 ஆம் ஆண்டு செய்சாகு தன் குற்றத்தொடரைத் தொடங்கினார். ஆக.22 அன்று இரண்டு பெண்களை காம்போவாக கற்பழிக்க முயன்று தோற்றார். அந்த சின்ன விஷயத்திற்கு லபோ திபோ என அப்பெண்கள் வாயில் கைவைத்து எம்ஜிஆர் கால நாயகி போல அலற, அவர்களின் மூச்சை நிரந்தரமாக நிறுத்தினார். அப்போது செய்சாகுவின் வயது பதினான்கு. செய்சாகு தன் வேலையைக் காட்டிய காலம் போர் காலம் என்பதால் அரசும் பெரியளவு கண்டுகொள்ளவில்லை. இதனால் அவரின் கொலைவெறி எல்லை தாண்டி சென்று அவரின் அண்ணன், அண்ணன் மனைவி, குழந்தை, தந்தை