இடுகைகள்

ஜெயமோகன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் கிறித்தவத்தின் எதிர்மறை செயல்பாடுகள்! - சிலுவையின் பெயரால் - ஜெயமோகன்

படம்
  சிலுவையின் பெயரால்…. ஜெயமோகன் கிழக்குப் பதிப்பகம்   ஜெயமோகன், அவரது வலைத்தளத்தில் கிறித்தவம் பற்றி எழுதிய கருத்துகளும் அதற்கு எதிர்வினையாக வந்த பல்வேறு வாசகர்களின் கருத்துகள், அதற்கு பதில் அளித்த எழுத்தாளரின் கருத்துகள் என அனைத்துமே சேர்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. நூலில், ஜெயமோகன் விரிவாக கிறித்தவம் தன்னை இந்தியப் பண்பாட்டிற்கு ஏற்ப எப்படி மாற்றிக்கொள்ள முயல்கிறது என கூறியுள்ளார். ஏறத்தாழ சிறில் அலெக்ஸ், அரவிந்தன் நீலகண்டன் ஆகியோரின் எதிர்வினைகளும் அதை எப்படி ஜெயமோகன் எதிர்கொள்கிறார் என்பதையும் வாசிக்கும்போது நமக்கு கிறித்தவம் பற்றிய புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளள முடிகிறது. பெந்தகொஸ்தே சபையின் அரசியல், தமிழில் கிறித்தவத்தை பரப்புபவர்கள் அதற்கு செய்யும் அநீதியான செயல்கள், இலக்கியவாதிகளை பணம் கொடுத்து வளைப்பது, அதற்கென போலித் தகவல்களைக் கொண்ட நூல்களை எழுதுவது என நிறைய செயல்களை நூலெங்கும் பட்டியலிடுகின்றனர்.   ஒருவகையில் இந்த நூல் கிறித்தவ அடிப்படை மதவாத தன்மையை வெளிச்சம்போட்டு காட்ட எழுதப்பட்டதோ என தோன்றுகிறது. அல்லது இந்தியாவிற்கு விரோதமான அந்நிய மதம் என்று கூற வருகிறார

வாழ்வின் இயல்போட்டத்தில் தன்னை அறிதல் - யதி - தத்துவத்தில் கனிதல்

படம்
  நித்ய சைதன்ய யதி யதி தத்துவத்தில் கனிதல் ஜெயமோகன், பாவண்ணன், எம்.கோபாலகிருஷ்ணன், நிர்மால்யா தன்னறம் வெளியீடு   ஈழவ சமூகத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு. இவரின் சீடரான நடராஜ குருவின் மாணவர்தான் நித்ய சைதன்ய யதி. தத்துவம் சார்ந்த கல்வி கற்றுள்ளவரான இவர், இந்தியாவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். நூலில் யதி தன்னுடைய வாழ்பனுவங்களையும், தத்துவங்களையும் விளக்கி பேசுகிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகளை ஜெயமோகன், பாவண்ணன், எம், கோபாலகிருஷ்ணன், நிர்மால்யா ஆகியோர் மொழிபெயர்த்துள்ளனர். யதி, தனது குருவான நடராஜரிடம் கற்ற கல்வி, அவருக்கும் தனக்குமான ஊடல் கொண்ட உறவு ஆகியவற்றைப் பற்றி சுவாரசியமாக விளக்கி எழுதியுள்ளார். சிறுவயதிலேயே ஏதோ நாளிதழில் வந்த நடராஜ குருவின் புகைப்படத்தை வெட்டி எடுத்து வைத்திருந்திருக்கிறார். பின்னாளில் யதி, நடராஜரின் மாணவராக இணைகிறார். இவரும் இன்னும் இரண்டு மாணவர்களும் சேர்ந்து நாராயண குருகுலத்தை மேம்படுத்துகின்றனர். குருவின் கொள்கைகளை உலகம் முழுக்க பரப்ப இதழ் நடத்தியதோடு, பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளனர். யதி, மலை

சாதியால் இழிவுபடுத்தப்பட்ட எழுத்தாளரின் வாழ்க்கைக் குரல் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் தேவிபாரதி 21.1.2022   அன்பிற்கினிய நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நேற்று குக்கூ வெளியிட்ட தேவிபாரதியின் ஒரு மணி நேர நேர்காணலை யூட்யூபில் பார்த்தேன். நிறைய இடங்களில் பேசும்போது எழுத்தாளரின் குரல் தடுமாறி உடைந்துவிட்டது. கேமரா சிறப்பாக இயக்கப்பட்டது. ஆனால், படத்தொகுப்பாளர் எழுத்தாளர் தனது சொந்த வாழ்க்கையை சொல்லி அழும் காட்சியில் வண்ணமாக இருந்த காட்சியை கருப்பு வெள்ளையாக மாற்றுகிறார். இப்படி செய்வது எதற்கு என்று புரியவில்லை. எழுத்தாளர்கள் அவர்களாக தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசுவதில் நிறைய தகவல்களை நாம் தெரிந்துகொள்ள முடியாது போல உள்ளது.   இதற்கு அவர்களின் அகவயமான இயல்புதான் காரணம். ஒரு மணிநேர பேட்டியில், தேவிபாரதி எழுதிய நூல்களைப் பற்றிய கேள்விகளே இல்லை. ஜீவா நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஜெயமோகன் பேசிய உரை சிறப்பாக நன்றாக இருந்தது. சிறந்த கச்சிதமான உரை. நன்றாக தயாரித்து வந்து சிறப்பாக பேசினார். களப்பணி எப்படிப்பட்டது., அதற்கான உழைப்பு, அதில் கிடைக்கும் பயன், அதற்கான காலக்கெடு என சில விஷயங்களை அழுத்தம் திருத்தமாக பேசினார். தன் மீட்சி – ஜெயமோகன் எழுத

திருவண்ணாமலைக்கு திடீர் பயணம் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  வீட்டிலிருந்து வேலை - நோய்த்தொற்று  10.1.2022 இனிய நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்து வேலை பார்த்து வந்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு சென்றுவிடலாமா என யோசித்து வருகிறார்கள். நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் ஊருக்கு கிளம்பிவிடுவார்கள் என நினைக்கிறேன். இந்த வாரம் திருவண்ணாமலை செல்ல நினைத்தேன். கடிதம் எழுதும்போதே இந்த எண்ணம் தோன்றிவிட்டது. எனவே, பஸ் பிடித்து அங்கு சென்றுவிட்டேன். அந்த பயணத்தை முடித்துவிட்டு வந்துதான் கடிதத்தை பகுதி பகுதியாக எழுதி முடிவு செய்துள்ளேன். அங்கு சென்றபோது பிரெஞ்சு நாட்டின் மீது காதல் தஞ்சைக் கலைஞர் ஒருவரை சந்தித்தேன். தமிழ் ஆள்தான். வெளிநாட்டினருக்காகவே ஓவியங்களை வரைகிறார். அதாவது, அவர்கள்தான் அவருக்கு முதன்மையான வாடிக்கையாளர்கள். இப்போது கண்காட்சி வைக்க முயன்று வருகிறார். இவரும் குக்கூவைச் சேர்ந்த ஆள்தான்.   இவரிடம் எழுதுக – ஜெயமோகன் எழுதிய நூலை வாங்கிப் படித்தேன். நூலில் எழுதுவது, அதில் எழும் சிக்கல்கள் பற்றிய கேள்விகளுக்கு விரிவாக பதில் சொல்லியிருக்கிறார். நூல் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. எழுதுவது பற்றிய ச

கிராமத்து முத்துவீரன் பாம்பேவில் முத்து பாயாக மாறும் கதை! - வெந்து தணிந்தது காடு - கௌதம்

படம்
  வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு வெந்து தணிந்தது காடு இயக்கம் கௌதம் இசை – பாடல்கள் - ஏ ஆர் ஆர்   பாடல்கள்-   தாமரை கதை – ஜெயமோகன் நடுவக்குறிச்சி அருகே கிராமத்தில் முள்வேலிகளை விறகுக்கு வெட்டி பிழைக்கும் முத்துவீரன், மும்பைக்கு பிழைக்கச் செல்கிறான். அங்கு நேரும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையை மாற்றிப்போடுகின்றன. அப்படி அங்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. முத்துவீரன் பாத்திரம்தான் படத்தில் முக்கியமானது. வன்முறை வழி அவனை பிடிக்கும் என ஜாதகத்தில் சொல்லியிருக்கிறார்கள் அவனது அம்மா, ஊரில் அல்லாமல் வேறு மாநிலத்திற்கு வேலைக்கு அனுப்புகிறாள். சேர்வத்துரை என்பவர்தான் முத்துவை மும்பைக்கு கூட்டிச்செல்வதாக ஏற்பாடு. ஆனால் அவரே கூட எதிர்பாராத சிக்கலால் தனது உயிரை மாய்த்துக்கொள்கிறார். ஆனால் அவர் மூலமாக முத்துவுக்கு துப்பாக்கி கிடைக்கிறது. அதை எடுத்து மறைத்து வைத்துக்கொள்கிறான். ஏன் அப்படி செய்தான் என அவனுக்கு புரிவதில்லை. ஆனால் சேர்வதுரை மாமாவுக்கு கெட்டபெயர் ஆக கூடாது என அந்த நேரத்தில் யோசிக்கிறான். ஊரில் துப்பாக்கி மீது கைவைப்பது அவனது வாழ்க்கையை மாற்றுகிறது. இசக்கி புரோட்டா

வலியுடன் அறம் பேசும் உண்மை மனிதர்களின் கதை! அறம் - ஜெயமோகன்- வம்சி

படம்
  அறம் ஜெயமோகன் வம்சி பதிப்பகம்   நூலில் மொத்தம் பதிமூன்று கதைகள் உள்ளன. ஒவ்வொன்றுமே முக்கியமானவைதான்.   வாசிப்பவர்களுக்கு அவை சிறப்பான அனுபவங்களை தருகின்றன. நான் இங்கு குறிப்பிடவிருப்பது சில கதைகளை மட்டுமே. கோட்டி   சிறுகதை, இன்றைய நவீன அரசியலை கேலி செய்யும் காந்தியவாதியின்   கதையைக் கூறுகிறது. குறைகளை சொன்னாலும் கூட அனைத்து ஊர்களிலும் இப்படி தன் வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணித்த மனிதர்கள் உண்டு. இவர்கள் போன்றவர்களால்தான் ஊரிலுள்ள பல்வேறு பிரச்னைகள் தீர்வு காணப்படும். கதையில் வரும் பூமேடை அப்படிப்பட்டவர். அவர் நோட்டீஸ் ஒட்டும் இடமும், ஏன் ஒட்டுகிறீர்கள் என கேட்கும்போது சொல்லும் பதிலும் அட்டகாசமாக அவரது மனதை வெளிக்காட்டுகிறது.   பிறரது சந்தர்ப்பவாதங்களை அனைத்து இடங்களிலும் உரித்துக்காட்டும் மனிதராக முகத்தை உள்ளபடியே காட்டும் மனிதராக பூமேடை இருக்கிறார். இதனால் அவரை கோட்டி என ஊரே சற்று தள்ளி நின்று பார்க்கிறது. அவர் தலித் மக்களுக்கான தோட்டி வேலை பற்றி ஆவேசமாக பேசும் காட்சி எவ்வளவு ஆழமான பொருள் கொண்டது. பெண் பார்க்க செல்லும் வழக்குரைஞரின் நிலையில்தான் நாம் பூமேடையை பார்க்கிறோம

நூறு நிலங்களின் மலை - மனதில் கற்பனைகளை பெருகச் செய்யும் நிலவெளியின் வரலாறு! - ஜெயமோகன் - கிழக்குப் பதிப்பகம்

படம்
  நூறு நிலங்களின் மலை ஜெயமோகன் கிழக்கு பதிப்பகம் மின்னூல் எழுத்தாளர் ஜெயமோகன் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளுக்கு தனது நண்பர்களுடன் சென்ற பயண அனுபவமே நூறு நிலங்களின் மலை என்ற நூலாக மாறியிருக்கிறது.  இமயமலையில் பொதுவாக மலையேற்ற வீரர்கள் அல்லது டிடிஎஃப் வாசன் போன்றோர் சென்று தங்கள் அனுபவத்தை பதிவு செய்வார்கள். ஆனால் எழுத்தாளர் சென்றால், அந்த அனுபவத்தை சேற்றுப்படிவ பாறைகளை, ஆற்றின் கடும் குளிரை, அறையில் வீசும் தழைமணம் கொண்ட ஆப்பிள் மணத்தை பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இங்கு வேறுபடுகிறது.  ஐந்து மாநிலங்களின் வழியாக காரில் சமண மடாலயங்களுக்கு சென்று வந்த அனுபவங்களை ஜெயமோகன் முன்றே எழுதியிருக்கிறார். இந்த நூலிலும் அப்படியொரு இலக்கை எட்டியிருக்கிறார். இமயமலை பகுதிகளில் உள்ள ஏராளமான புத்த மடாலயங்களுக்கு சென்று அங்குள்ள விதவிதமான வடிவங்களில் பெயர்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றி நமக்கு விளக்குகிறார். கூடவே அந்த நிலப்பரப்புகளில் வாழும் மக்கள், அங்கு நிலவும் அரசியல் ஆகியவை பற்றியும் எழுதுகிறார். இது, நூலுக்கு தனிப்பட்ட ஈர்ப்பை வழங்கியுள்ளது.  ஷியா,சுன்னி முஸ்லீம் அரசியலை விட அங்

சமணர்களின் வாழ்க்கையைச் சொல்லும் அருகர்களின் பாதை! - கடிதங்கள் கதிரவன்

படம்
  13.11.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் மயிலாப்பூரில் வெள்ளப்பிரச்னை குறைவு. ஆனால் முதல்வர் தனது அலுவலகத்திற்கு செல்லும் வழியான ராதாகிருஷ்ணன் சாலை மழைநீரால் மூழ்கிவிட்டது. வடிகால் அமைப்புகள் சரியாக இயங்கவில்லை. பிளாஸ்டிக் குப்பைகள் வடிகால் அமைப்பில் அடைத்துக்கொண்டுவிட்டன. சாலையில் தூய்மை பணியாளர் குப்பைகளை மழைநீரில் அகற்றிக்கொண்டிருக்கும்போதே, ஒருவர் அலுவலகத்தில் இருந்து குப்பையை எடுத்து சாலையில் வீசி எறிந்தார். என்ன சொல்வது இவர்களை? ஒவ்வாமைக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன். ஊருக்குப் போய் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.  நாளிதழ் தொடங்குமா என்றே தெரியவில்லை. வேலை என்ற பெயரில் ஏதோ சமாளிப்பது போலவே தெரிகிறது. சீன சிறுகதைகள் -வானதி, அருகர்களின்  பாதை - ஜெயமோகன் என இரு நூல்களைப் படித்தேன். ஜெயமோகனின் எழுத்து பயணத்தின்போதும்,  காடுகளை விவரிக்கும்போதும் புத்துயிர் கொள்கிறது. சில இடங்களை காவிக்கட்சிக்கு ஆதரவாக வரிந்துகட்டி எழுதியிருக்கிறார்.  அதை தவிர்த்துவிட்டுப் படித்தால் பிழை ஏதும் இல்லை. பிரச்னையும் இ

என்றென்றைக்கும் உலகிற்கு தேவைப்படும் காந்தி! - உரையாடும் காந்தி - ஜெயமோகன்

படம்
  காந்தி நன்றி -டைம்ஸ் ஆப் இந்தியா உரையாடும் காந்தி ஜெயமோகன் என்றைக்கும் இல்லாதபடி காந்தி இன்று மக்களுக்கு தேவைப்படுகிறார். அவரின் கொள்கைகள், ஆளுமை, ஊடக வெளிப்பாடு என அனைத்துமே இன்றுமே மக்களை வசீகரிக்கின்றன.  நிறைய ஊடக ஆளுமைகள், வலதுசாரி கருத்தாளர்கள் காந்தியை அவதூறு, வசை செய்வதற்காக அவரது தனிப்பட்ட ஆன்மிக பரிசோதனைகளைப் பற்றி பேசுவார்கள். ஆனால் அப்படியும் கூட அன்றைய காங்கிரசிலும் இன்றும் கூட யாரையும் விட செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தது காந்தி மட்டுமே.  இதை ஒத்துக்கொள்ள இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு கூட சங்கடங்கள் தயக்கங்கள் இருக்கலாம்.  உரையாடும் காந்தி நூலில் ஜெயமோகன், காந்தி மீது மக்களுக்கு உள்ள பல்வேறு சங்கடங்கள், தயக்கங்கள், கேள்விகள், அவதூறுகள், வசைகள் என அனைத்துக்கும் பதில் அளிக்கிறார்.  இந்த நூல் ஜெயமோகனின் வலைத்தளத்தில் எழுதப்பட்ட கருத்துக்களைக் கொண்டதே.  காந்தியைப் பற்றி எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என ஜெயமோகன் இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். இதன்படி காந்தியைப் பற்றி பல்வேறு ஊடகங்களில் அறிய வந்த பொய், வதந்தி, அவதூறு, வசைகளுக்கு சலிப்பே இல்லாமல் பதில் சொல்லுகிறார்.  காந்திய

அறையில் மலராக பூக்கும் பூஞ்சை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வரும் வாரத்தில் நாளிதழ் வேலைகள் தொடங்கவுள்ளன. தீபாவளி  அன்று தாமதமாக எழுந்தேன். இப்போது நான் இருக்கும் மூன்றாவது மாடியில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதலில் நான்கு பேர்கள்தான் இருந்தோம். இப்போது பக்கத்து அறையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டனர். இவர்கள் அதிகாலை 5 மணி முதல் 8.30 மணி வரை குளியலறை, கழிவறையைப் பிடித்துக்கொள்கிறார்கள். எனவே, நான் அவர்களுக்கு முன்னதாகவே எழுந்து குளித்துவிட்டு 7 மணிக்கு அலுவலகத்திற்கு சென்று விடுகிறேன்.  அந்திமழை இதழைப் படித்தேன். பெண்களின் மனத்தைப் பற்றி சிறப்பிதழாக செய்திருந்தார்கள். எழுத்தாளர் கலாப்ரியா எழுதியிருந்த கட்டுரை நன்றாக இருந்தது. நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டால் வாழ்க்கை மிக பரபரப்பாக மாறிவிடும். இப்போதே ஓரளவு எழுதி வைத்துக்கொள்ள முயன்று வருகிறேன். கிழக்கு பதிப்பகத்தில் அருகர்களின் பாதை  நூலை வாங்க வேண்டும். தீபாவளிக்கு முதல்நாள் எங்கள் அலுவலகத்தில் உள்ள கிழக்கு பதிப்பகத்திற்கு சென்றோம். அங்கு சென்றபோது ஊழிய

ஆன்மிக அனுபவ தரிசனம் தரும் அருகர்களின் பாதை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  ஜெயமோகனின் அருகர்களின் பாதை நூலைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். கிழக்கு பதிப்பகத்தில் வாங்கிய கட்டுரை நூல். ஐந்து மாநிலங்கள் வழியாக செய்த பயணம் பற்றி பிரமாதமாக எழுதியிருக்கிறார். புனைவு அளவுக்கு படிமங்கள் கிடையாது. ஐந்து மாநிலங்கள் வழியாக  சமண ஆலயங்களைத் தரிசித்து செல்லும் பயணம், சந்தித்த மனிதர்கள், கோவில் சிற்பங்கள், அதன் வர்ணனை என அசத்தலாக இருக்கிறது.  எழுத்தாளர் ஜெயமோகன் இங்கு மழை தூறலாக கனமழையாக என பல்வேறு வடிவங்களில் நாள் முழுவதும் சொட்டிக்கொண்டே இருக்கிறது. நேற்றிலிருந்து இன்றுவரை கூரையிலிருந்து விழும் மழைநீரின் ஒலி, சிற்சில வேறுபாட்டுடன் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஈரமான காற்று எப்போதும் ஒருவித பிசுபிசுப்பான தன்மையைக் கொடுக்கிறது. வெளியே குளிர்ச்சி, சட்டைக்கு உள்ளே புழுக்கம் என வித்தியாசமான சூழல் இருக்கிறது. நேஷனல் புக் டிரஸ்டில் புத்தகங்களை வாங்க அருகிலுள்ள தாமரை பப்ளிஷர்ஸை அணுகி உதவி கேட்டேன். அவர்கள் ஒரு வாரத்திற்கு மேலாகும் என்று சொன்னார்கள். வேலை செய்யும் இதழுக்காக சில நூல்கள் தேவைப்படுகின்றன.  பிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது. ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழை வாங்க நினைத்துள்ளேன்.

உலக வாழ்க்கையை செயலூக்கத்துடன் வாழக் கற்றுத்தரும் நூல்!

படம்
  தன் மீட்சி ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி pinterest இந்த நூல் இளைஞர்களின் சமகால பிரச்னைகளையும், அதற்கு ஜெயமோகன் என்ன தீர்வுகளைச் சொல்லுகிறார் என்பதையும் கொண்டுள்ளது.  இலக்கிய வாசிப்பு தொழில் வாழ்க்கையை பாதிக்குமா? ஒன்றுக்காக இன்னொன்றை தியாகம் செய்யவேண்டுமா என்றால் அதற்கான பதில்களை தெளிவாக தனது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து பதில்களை தேடி எடுத்து சொல்கிறார்.  இது பதில் கேட்பவர்களுக்கும், தொகுப்பாக நூலை வாசிப்பவர்களுக்கும் வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.  நூலின் இறுதியில் ஆசான் என்று தன்னை அழைப்பவர்கள் பற்றியும், குக்கூ அமைப்பின் மூலம் தங்களது தொழில் வாழ்க்கையை மாற்றிக்கொண்டு தங்களுக்கு மனநிறைவு தரும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இதனை வாசிக்கும் யாருக்கும் தடுமாறாமல் முடிவெடுப்பதற்கான திறன் கிடைக்கும் என நம்பலாம்.  ஜெயமோகனின் வலைத்தளத்தில் இளைஞர்கள் வாசிப்பு பற்றியும், சொந்த வாழ்க்கையில் உள்ள தேக்க நிலை பற்றியும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். கேள்விகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் கூடுதலாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கூற விரும்புவது என்று பார்த்தால், ஒரே

புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டும் ஜெயமோகன்! - எழுதுக - ஜெயமோகன்

படம்
  எழுதுக - ஜெயமோகன் எழுதுக ஜெயமோகன் தன்னறம் நூல்வெளி கவிதை, கட்டுரை, புனைவு ஆகியவற்றை எழுதுபவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் தோன்றும். இதைப்பற்றி யாரிடம் கேட்பது என்றும் தெரியாது. இப்படி இருப்பவர்கள், பின்னாளில்  தொழில் சார்ந்து சென்றுவிடுவார்கள். ஆனால் அவர்களின் மனதில் உள்ள  இலக்கிய ஆசை மெல்ல மங்கி மறைந்துவிடும்.  ஜெயமோகன், தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டுதான் இலக்கிய வேலைகளையும் செய்தார். அவர் தனது வாழ்க்கையில் இலக்கியத்தை முக்கியமாக எடுத்துக்கொண்டு அதனை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்தார். இதனால் தொழில்சார்ந்த வாழ்க்கையில் பதவி உயர்வு, அதிகாரம் ஆகியவற்றுக்கு முயற்சிக்கவில்லை. இதனால் அவர் இலக்கியத்தில் சமகாலத்தில் முக்கியமான எழுத்தாளராக உள்ளார்.  யாருக்குமே தொடக்க காலத்தில் எழுதும்போது நிறைய சந்தேகங்கள் வரும். அப்படி ஜெயமோகன் தளத்தில் கேள்வி கேட்டவர்களில் சிலரை தேர்வு செய்து, அதற்கு பதிலளித்து அதனை நூலாக தொகுத்துள்ளனர். இதைப் படிக்கும்போது ஒருவருக்கு எழுத்து தொடர்பான சந்தேகங்கள் ஓரளவுக்கு குறையும். தீரும்.  எழுத்து தொடர்பாக சில பழக்கங்களை ஜெ. பின்பற்றுகிறார். அதனைக் கூ

மனதை நிறைக்கும் ஆன்மிக அனுபவ பயணம்! - அருகர்களின் பாதை- ஜெயமோகன்

படம்
  சமணர்களின் கோவில் - ஜெயமோகன் வலைத்தளம் அருகர்களின் பாதை ஜெயமோகன் கிழக்கு  ரூ.285 (ராயப்பேட்டையிலுள்ள கிழக்கு பதிப்பகமே சென்று வாங்கினாலும் கூட ஒரு ரூபாய் கூட குறைக்கமாட்டோம் என அன்போடு சொல்லிவிட்டனர்.) நூல் முழுக்க சமண வழிபாட்டிடங்களை தேடிச்செல்லும் எட்டுபேர் கொண்ட குழுவின் பயணத்தைப் பற்றியது. இதில் வரும் ஆரியர் வருகை, நாற்கர சாலை ஆகியவற்றைத் தவிர்த்து விட்டு பார்த்தால் நூல் முழுக்க பயணம் தொடர்பான செறிவான கருத்துகள் நிரம்பியுள்ளது என உறுதியாக கூறலாம்.  தொன்மைக் காலம் தொடங்கி இன்றுவரை சமண வழிபாட்டிடங்கள் வளர்ந்துகொண்டே வருகின்றன. கூடுதலாக அந்த மதம் சார்ந்தவர்கள் தாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கோவில்களை வெண் சலவைக்கல் கொண்டு கட்டிக்கொண்டே இருக்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக  கல்யாண்ஜி எனும் அமைப்பைச் சொல்லலாம். ஜெயமோகன் தன்னுடைய நண்பர்களோடு செல்லும் இடங்களில் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள் சமண தர்மசாலையினர்தான். இந்து மத அமைப்பினர் அல்ல. இது பற்றிய இடம் வரும்போது, ராமகிருஷ்ண மடத்தின் அணுகுமுறை பற்றி காட்டமாக விமர்சிக்கிறார் ஜெ. என்ன நோக்கம் என்பதே தெரியாமல் மடத்தை நிர்வாகம் செய்பவர

சாகித்தியக்காரனின் திறமையை இருட்டடிப்பு செய்துவிட முடியுமா? - கடிதங்கள்

படம்
     pixabay இனிய நண்பர் முருகு அவர்களுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எங்கள் வீட்டில் ஆத்தாவின் இறப்புக்குச் சென்றேன் . இரண்டு நாட்கள் இருந்துவிட்டு பிறகு சென்னைக்கு திரும்ப வந்துவிட்டேன் . சகோதரர் இன்னும் சில நாட்கள் இருந்து வேலைகளைப் பார்த்துவிட்டு கோவைக்கு செல்வார் . நான் வேலை செய்யும் வார இதழ் நிறுவனத்தில் வேலை செய்யும் உதவி ஆசிரியர்கள் , நிருபர்கள் பெயர் திடீரென இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது . அண்மையில் பெண்கள் இதழ் , மருத்துவ இதழ் ஆசிரியர்கள் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டனர் . இதன் காரணமாக எங்கள் நிறுவனத்தின் நிர்வாகம் கடுமையாக கோபம் கொண்டுவிட்டது போல . சாகித்தியக்காரனின் திறமையை இப்படி மறைத்துவைத்துவிட முடியுமா ? பணமும் , தன்னகங்காரமும் கண்ணை மறைக்கிறது என்றுதான் கூறவேண்டும் . குங்குமத்தில் தொடராக வரும் முகங்களின் தேசம் - ஜெயமோகன் எழுதுவதை வாசிப்பீர்கள் என நினைக்கிறேன் . நான் என் கைக்கு வரும் இதழில் முதலில் படிப்பது இதைத்தான் . ஈரோடு கதிரின் எழுத்து அப்படியே எஸ் . ரா போலவே இருக்கிறது . காலையில்தான் காலச்சுவடு இதழைப் பட