இடுகைகள்

தேசதுரோகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேசதுரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா, மாற்றப்பட வேண்டுமா? 124 A IPC

படம்
  ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் ஆட்சிக்கு எதிராக பேசுபவர்களை ஒடுக்குவதற்காக தேச துரோக சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் நாடு முழுக்க ஆங்கிலேயருக்கு எதிராக பேசிய, செயல்பட்ட, கலை வடிவங்களை உருவாக்கியவர்கள் சிறையில் பாரபட்சமின்றி அடைக்கப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர்.  124ஏ ஐபிசி என்ற சட்டம்தான் இன்று இந்தியாவில் அதிகமாக விவாதிக்கப்படும் சட்டம். இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டி, கார்ட்டூன், சமூக வலைத்தள பதிவுகள், அனுமன் ஜெயந்திக்கான கூச்சல்கள் என எவற்றையும் தேச துரோக சட்டம் விட்டுவைக்கவில்லை. அதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  தேசதுரோகம் என்றால் என்ன? அரசுக்கு எதிரான பேச்சு, செயல்பாடு மற்றும் மக்களை அரசுக்கு எதிராக கிளர்ச்சிக்கு தூண்டுதல் என்பதை தேசதுரோகம் என ஆக்ஸ்ஃபோர்டு அகராதி கூறுகிறது.  வெறுப்பு, கண்டனம், விருப்பமின்மை ஆகியவற்றை வார்த்தை, செயல்பாடு மற்றும வேறெந்த வடிவத்தில் வெளிப்படுத்தினாலும் அது தேச துரோகம் என இந்திய சட்டம் 124 ஏ கூறுகிறது.  வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது தேச துரோகத்தில் உள்ளடங்கியது. அரசை விமர்சிப்பது இதில் சேராது என 1962ஆம் ஆண்டு ஐ

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் புழங்கிய வார்த்தைகள் ஒரு பார்வை!

படம்
  2021 ஆம் ஆண்டு திகைப்பு, அதிர்ச்சி, பயம், தைரியம், நம்பிக்கை, நிம்ம்மி என ஏராளமான உணர்ச்சிகளை அடைந்திருப்போம். அதனை இப்போது திரும்பி பார்க்கும் நேரம். அதில் நாம் அதிகம் பயன்படுத்திய சில வார்த்தைகளை இப்போது பார்க்கலாம்.  கேலா ஹோப் மேற்கு வங்கத்தின் அக்கா அதாவது தீதி சொன்ன ஸ்லோகன் இது. சொன்ன மாதிரியே அடித்து விளையாடினார். ஆனால் அவரை தேர்தலில் தோற்றதாக சொல்லி உளவியல் ரீதியான பாதிப்பை பாஜக ஏற்படுத்த முயன்றது. ஆனால் மீண்டும் நடந்த தேர்தலில் தீதி மாஸ் காட்டி வென்று தாமரையை பொசுக்கினார். பாஜகவிற்கு எதிரான போராட்டமாக இப்போது கட்சியை பல்வேறு மாநிலங்களிலும் விரிவாக்கி வருகிறார். காங்கிரஸூக்கு மாற்றாக திரிணாமூல் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் பரவுகிறது. கோவாவில் பாஜகவிற்கு எதிராக இதே ஸ்லோகன் சற்று மாற்றம் பெற்று கேல் ஸட்லோ என்று மாற்றம் பெற்றிருக்கிறது.  டூல்கிட் விவசாயிகளின் போராட்டம், இயற்கையைக் காக்கும் போராட்டம், அதற்கான செயல்முறை, எப்படி போராடுவது என்ற திட்டங்களைத்தான் டூல் கிட் என்று சொல்லுவார்கள். இதனை தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற வகையில் பாஜக பார்த்தது. இப்படி தான் செய்வதை எதிர்த்த ப

அமெரிக்காவை விட உத்தரப் பிரதேசத்தில் இறப்பு சதவீதம் குறைவுதான்! - யோகி ஆதித்யநாத், முதல்வர், உத்தரப்பிரதேசம்

படம்
                    யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வர் ஆக்சிஜன் , படுக்கை , மருந்துகள் இல்லாத காரணத்தால் மாநிலத்தில் அதிகளவு கோவிட் 19 இறப்புகள் நேர்ந்துள்ளதை ஏற்கிறீர்களா ? இந்த விவகாரத்தில் நாம் அரசியல் செய்யக்கூடாது . வளர்ந்த நாடுகளை விட பிற மாநிலங்களை விட எங்களது மாநிலத்தில் குறைவான இறப்புகளே நோய்த்தொற்றால் நடந்துள்ளன . நாங்கள்தான் முதல் மாநிலமாக ஆக்சிஜன் சப்ளையை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை செய்தோ்ம் . இங்கே அதிகளவு ஆக்சிஜனை தயாரிக்கும் ஆலைகள் இல்லாதபோதும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலத்தில் இருந்தும் அதனை பெற்று வழங்கினோ்ம் . இதற்கான ஆக்சிஜன் உருளை தணிக்கை முறையையும் இங்கு அமல்படுத்தியுள்ளோம் . தடுப்பூசியை பெண்களும் , கிராமத்திலுள்ளவர்களும் செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை . இவர்களை எப்படி ஊக்கப்படுத்தப் போகிறீர்கள் ? நாங்கள் மூடநம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வு செய்துவருகிறோம் . எதிர்க்கட்சியினர் தடுப்பூசி பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர் . கிராமத்தில் உள்ள மக்களுக்காக ஆப்களை உருவாக்கியுள்ளோம் . மக்களுக்கு உதவ 1,33,