இடுகைகள்

வரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீபாவளி 🎁

படம்
தீபாவளியன்று காலையில் வயல்களில் குத்தகை ஆட்கள் வேலை செய்கிறார்கள். இந்திய ஆட்சித்தலைவரின் தீபாவளி பரிசு இம்மக்களுக்கு கிடைக்கவில்லையோ? பலரும் வாண வேடிக்கைகளுக்கு மாறிவிட்டனர். திரி பட்டாசு குறைந்துவிட்டது.

யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் எடிஷன் - வங்கி சொன்ன அறிவுரை - உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில்...

 யாவரும் ஏமாளி எக்ஸ்டென்டட் எடிஷன்  உன் அறிவின் ஒளியில் ஏகு நீ முதலில்... ஒன்றாக சேர்ந்து நாம்.... என தலைப்பு கொண்டுள்ள வங்கிதான் நான் பத்தாண்டுகளாக கணக்கு வைத்துள்ளது. தொடங்கியபோது எப்படியோ இன்றுவரை அப்படியேதான் உள்ளது. மாற்றம் என்னவென்றால், நிறைய கட்டுப்பாடுகள் பெருகியுள்ளன. பணம் பிடுங்குதலையும் நாற்காலியில் அமர்ந்துகொண்டே நிதானமாக கணினியை தட்டி செய்கிறார்கள். அதையும் கூட 120 ரூபாயை இழந்துதான் கற்றுக்கொண்டேன். பொதுவாக வங்கிகளுக்கு புகார் அளித்து அதன் வழியாக இழந்த தொகையை பெறுவது பிரம்ம பிரயத்தன முயற்சி. பெரும்பாலும் காசு கிடைக்காது. ஏன் காசு கிடைக்காது என்பதற்கு ஈகுவிட்டி பங்கு விளம்பரம் போது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என வேகமாக இரண்டு பத்தியை ஒரு குரல் படிக்குமே... அந்த ரீதியில் விதிகளை காரணம் காட்டுவார்கள்.  வங்கியில் இருந்து ஏடிஎம் வழியாக பணம் பெறுவதைப் பற்றியும் அதன் கட்டுப்பாடுகளையும் ஏற்கெனவே கூறிவிட்டேன். ஏடிஎம்மில் பணம் எடுக்க ஒன்றாக சேர்ந்து... வங்கி மாதம் ஐந்து முறை இலவச வாய்ப்புகளை தருகிறது. அதைப் பயன்படுத்தி ஒருவர் தினசரி 25 ஆயிரம் என்ற வகையில் ஒரு லட்சத்து...

தொழிலதிபர்களை மிரட்டும் வரி!

தொழிலதிபர்களை மிரட்டும் வரி! அண்மையில் கர்நாடகாவைச் சேர்ந்த காபி தொழிலதிபர் சித்தார்த்தா, கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னணியில் கடனும் அரசின் வரி மிரட்டல்களும் இருந்தன. இந்திய அரசின் வங்கி திவால் சட்டம் போன்றவை மோசடிகளைத் தடுக்கும் நல்ல முயற்சிகள்தான். ஆனால், சந்தை ஏற்றத்தாழ்வுகளில் தவிக்கும் நிறுவனங்களை வரித்துறை வரைமுறை கடந்து மிரட்டுவது நியாயமற்றது என்ற குரல் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளது. “நீங்கள் ஒரே கொள்கையை அனைத்து வணிகங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. தொழில்முயற்சி தோல்வி அடைந்தால், உடனே தொழிலதிபர்களுக்குத் தண்டனை வழங்க நினைப்பது தவறு” என்கிறார் எஸ்ஸார் நிறுவனத்தைச் சேர்ந்த பிரசாந்த் ரூயா. உலக நாடுகளிலுள்ள அனைத்து தொழில்களும் வர்த்தகம் தொடர்பான ஒரே கண்ணியில் இணைந்துள்ளன. அதில் அமெரிக்கா சீனா நாடுகளுக்கிடையேயான வர்த்தகப்போர் கூட, வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தொழில்துறைக்கான கடன் வழங்குதலில் கவனமாக ஆராய்ந்து கடன் வழங்குதலை கடைப்பிடிப்பது வாராக்கடன் பாதிப்பைக் குறைக்கலாம். இந்தியா தொழில்கள் மீது அதிக வரி மற்றும் நெருக்குதலை அளிப்பதால், கடந்த ஆண்டு ...

தொன்மைக்கால தென்கொரியாவில் புரட்சிகர கண்டுபிடிப்புகளை செய்யும் பட்டத்து இளவரசர்!

படம்
 பிளாக் கார்ப்பரேஷன் மாங்கா காமிக்ஸ் குன்மாங்கா.காம் தென்கொரிய காமிக்ஸ். இதில் மன்னர் ஜோசியன் காலத்திற்கு நவீன கண்டுபிடிப்பாளர் பயணிக்கிறார். இவர் படிப்பாளி அல்ல. ஆனால் கருவிகளை புதிதாக உருவாக்குபவர். மன்னர் காலத்திற்கு சென்று அங்கு செய்யும் பல்வேறு 21ஆம் நூற்றாண்டு பொருட்களால் அந்த நாடு வளர்வதே கதை. தொன்மைக்காலத்திற்கு சென்று அங்கில்லாத பொருட்களை உருவாக்குவது, அதை பரவலாக்குவது, அதை கன்பூசியவாதிகள் எதிர்ப்பது என கதை நகர்கிறது. இதில் கதாசிரியர் ஏராளமான முன்னோடிகளின் அறிவுரைகளை, பழமொழிகளை கையாண்டிருக்கிறார். இந்த கதையின் நாயகன் நவீன காலத்தில் முப்பது வயது கொண்டவனாகவும், தொன்மைக் காலத்திற்கு செல்லும்போது ஒன்பது வயது கொண்டவனாக இருக்கிறான். அந்த வயதிலேயே அவன் தனது புத்திசாலித்தனத்தால் மன்னர் சேஜோங்கிற்கு எப்படி உதவுகிறார். பேனா, துப்பாக்கி, வெடிகுண்டு, அரசியல் நிர்வாக சீர்திருத்தங்கள், சின்னம்மை ஊசி என நிறைய விஷயங்கள் கதையில் வருகின்றன. அவை கதையில் முக்கிய பங்கும் வகிக்கின்றன. குறிப்பாக கதை நெடுக சாதி,மத, வர்க்க பேதம் நாட்டை முன்னேற்றாது என்று நாயகன் கூறிக்கொண்டே இருக்கிறார். மன்னர் சேஜ...

வணிகத்திற்காக நடந்த போர்!

படம்
    பாயும் பொருளாதாரம் 14 போர் எப்படி தொடங்குகிறது? போர் தொடங்கி நடப்பதற்கு அரசியல், வரலாறு, உளவியல் காரணங்கள் உண்டு. போருக்கு பின்னணியில் பொருளாதாரமும் உள்ளது. தொன்மைக் காலத்தில் ரோம் நாடு,போர் செய்து தன்னை செல்வாக்காக சொகுசாக வைத்துக்கொண்டது. சுரங்கம், பயிர் விளையும் வயல்கள், சொகுசு பொருட்கள் என பலவும் போர் காரணமாக அந்த நாட்டுக்கு சொந்தமாயின. இன்றும் கூட அமெரிக்கா பல்வேறு நாடுகளின் ஜனநாயகம் பற்றி அக்கறைப்படுவதற்கு அந்நாட்டிலுள்ள கனிமங்கள், எரிபொருள் வளங்களே முக்கியக் காரணம். அமெரிக்கா மட்டுமல்ல உலக வல்லரசு நாடுகள் பலவும் ஏதேனும் ஒருவகையில் பலலவீனமான நாடுகளை தன்னுடைய காலனியாக்கிக்கொள்ள துடிக்கின்றன. கடன் கொடுத்தோ, ராணுவ ஆதரவு கொடுத்தோ தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்கின்றன. இந்த வகையில் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவின் அடியாட்கள் போல மாறிவிட்டன. இங்கிலாந்து அபினியை சீன மக்களுக்கு கொடுத்து சட்டவிரோத வணிகம் செய்தே அந்த நாட்டிற்குள் சுதந்திரமாக வணிகம் செய்யும் உரிமையைப் பெற்றது. இதை தடுக்க முயன்ற சீன பேரரசர்களோடு 1839,1856ஆகிய காலகட்டங்களில் போர் செய்யவும் தயங்கவில்லை. ...

உலகமயமாக்கலின் பிரச்னைகள், பயன்கள்!

படம்
      பாயும் பொருளாதாரம் உலகமயமாக்கலின் பிரச்னைகள், பயன்கள்! இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நிதி அறிக்கையில் வருமானம் இருந்தால் பனிரெண்டு லட்சம் வரையில் சம்பாதிப்பவர்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. கேட்க நன்றாக இருப்பதெல்லாம் நடைமுறையில் பெரிய பயனைத் தருவதில்லை. உலகமயமாக்கம் பற்றி நிறைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்தின் நூல்களை படித்து முழுமையாக புரிந்துகொள்ளலாம். நாம் இங்கு அதைப்பற்றி சுருக்கமாக குறிப்பிடுகிறோம். உலகமயம் என்பது அனைத்து நாடுகளையும் இணைத்து செய்யும் பெரிய வணிக சங்கிலி என்றுகூறலாம். உலகமயத்திற்கு பெரிய பயன்பாடாக கன்டெய்னர் அமைந்தது. நிலம், நீர் என இரண்டிலும் கன்டெய்னர்களை கொண்டு செல்ல முடியும். கப்பல் மூலம் கன்டெய்னர்களை கடலில் கொண்டு செல்கிறார்கள். நிலத்தில் வாகனங்கள், ரயில் மூலம் கன்டெய்னர்களைக் கொண்டு செல்லலாம். இந்த வகையில்தான் 1954ஆம் ஆண்டு 57 பில்லியன் டாலர்களாக இருந்த கன்டெய்னர் வணிகம், 2018ஆம் ஆண்டில் 18 டிரில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டது. இதில் வணிகம் சார்ந்த ஆதரவு தொழில்நுட்பமாக இணையம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி ஆப்கள்...

சுதந்திர வணிகம்!

படம்
    பாயும் பொருளாதாரம் 11 சுதந்திர வணிகம் ஒரு நாடு குறிப்பிட்ட பொருளை தயாரிப்பதில் சிறந்து விளங்குகிறது. இன்னொரு நாடு அதே பொருளை தயாரிக்க அதிக செலவாகிறது. நினைத்த அளவுக்கு தரமும் மேம்படவில்லை. ஆனால் வேறு சில பொருட்களை சிறப்பாக தயாரிக்கிறது. இந்த சூழலில் பொருளை சிறப்பாக தயாரிக்கும் நாடு, அதை தயாரிக்க விட்டுவிடலாம். அதே பொருளை சிறப்பாக தயாரிக்க முடியாத நாடு, அம்முயற்சியை கைவிட்டு தனக்கு எளிதாக தயாரிக்க முடிகிற பொருளைத் தயாரிக்கலாம். இப்போது இருநாடுகளும் வணிகம் செய்தால் இரு பொருட்களை ஒருவருக்கொருவர் குறைவான விலையில் விற்றுக்கொள்ள முடியும். மக்களுக்கும் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். பரவலாக அனைத்து மக்களும் வாங்குகிற இயல்பில் இருக்கும். அமெரிக்கா விமானங்களை சிறப்பாக தயாரிக்கிறது என்றால் அதை இன்னொரு நாடு வாங்கிக்கொண்டு பயன்பெறலாம். தற்சார்பு என்ற பெயரில் முழங்கால்களை தரையில் தேய்த்துக்கொண்டு கஷ்டப்படவேண்டியதில்லை. சீனா, வெளிநாட்டு வரி தீவிரவாத செயல்களை சமாளித்து கணினி,அலைபேசிகளுக்கான சிப்களை கூட உள்நாட்டிலேயே தயாரிக்கும் திறன் கொண்டுள்ளது. அவ்வளவு ஏன் ஓப்பன் ஏஐயை அடிப்படையா...

ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள வேறுபாடுகள்!

படம்
    பாயும் பொருளாதாரம் 10 ஒரு நாட்டில் தயாரிக்கும் பொருளை இன்னொரு நாடு விலைக்கு வாங்கிக்கொண்டால் அது இறக்குமதி. ஒரு பொருளை ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு விற்பது ஏற்றுமதி. நியூசிலாந்தில் பால் வளம் அதிகம். எனவே, அவர்கள் அதை வளம் குன்றிய ஏழை நாடுகளுக்கு விற்கிறார்கள். சில நாடுகளில் இலவசமாக கொடுத்து தங்களுடைய பால் பொருட்களுக்கான சந்தையை உருவாக்கிக்கொள்ள முயல்கிறார்கள். ஏன்? ஏனென்றால் அங்கு பால்வளம் மிகுதி. இதனால் பால், பால் பொருட்கள் விலை மலிவாக கிடைக்கிறது. இப்போது உதாரணத்தைப் பார்ப்போம். நியூசிலாந்து பாலை பால் பொருட்களை மலிவாக விற்கிறது. சீனா, சோலார் பேனல்களை மலிவான விலையில் உற்பத்தி செய்து கொடுக்கிறது என்றால் பரஸ்பரம் இரு நாடுகளும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பொருட்களை விற்றுக்கொள்ளலாம். இது இருநாடுகளுக்குமே லாபம்தான். தேசப்பாதுகாப்பு என முட்டுக்கொடுத்து தொலைத்தொடர்பு நுட்பங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கலாம். ஆனால், காசு ஏராளமாக செலவாகுமே? பதிலுக்கு சீனாவிடம் குறைந்த விலைக்கு சிறந்த தொழில்நுட்பங்களை ஆசியாவிலேயே பெறலாம். ஆனால் இந்திய அரசை நடத்தும் மதவாத கட்சிக்கு கமிஷன் போய்...

பரிசும் தண்டனையும் - பாயும் பொருளாதாரம்

படம்
      6 பாயும் பொருளாதாரம் ஒரு தொழில்துறையில் போட்டிக்கு அதிக நிறுவனங்கள் இல்லாமல் இரண்டே இரண்டு நிறுவனங்கள் இருந்தால் அதை ஒலிகோபோலி என்று குறிப்பிடுகிறார்கள். இதில் ஒரு நிறுவனம் செய்யும் விலைகுறைப்பை இன்னொரு நிறுவனமும் எதிர்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றியமைக்கவேண்டும். இல்லையெனில் வணிகத்தில் பாதிப்பு ஏற்படும். லாபமும், நஷ்டமும் இரு நிறுவனங்களின் செயல்பாட்டிலும் உள்ளது. ஒன்றையொன்றைச் சார்ந்தே வணிகத்தின் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கட்டுமானம், தொலைத்தொடர்பு ஆகிய துறைசார்ந்த பெரிய நிறுவனங்கள் வெளிநாட்டின் நிறுவனங்களை எதிர்க்க தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவதுண்டு. இதை கார்டெல் என குறிப்பிடலாம். இப்படி தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவது, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளிலும் இப்படியான வணிகப்போக்கு நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளனர். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக தொலைத்தொடர்பு வசதியை இந்தியாவில் வழங்கப்போகிறார் என்றால் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், ஆட்சித்தலைவருக்கு அணுக்கமான குஜராத் தொழிலதிப...

பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும்

  பாயும் பொருளாதாரம் முடிவுகளும் விளைவுகளும் மதவாத கட்சிக்கு வாக்களித்துவிட்டு சிறுபான்மையினரின் வீடு கோவில்களை புல்டோசர் இடிப்பதை சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்ப்பது போன்றதல்ல. ஒருவர், குறிப்பிட்ட பொருளை கடையில் வாங்கிவிட்டு அதன் மதிப்பை அதிகமாக கருதிக்கொள்வதுண்டு. சிலர் ஒருவர் வைத்துள்ள பொருளுக்கு ஆசைப்பட்டு அதிக விலை கொடுப்பதாக சொன்னாலும் சம்பந்தப்பட்டவர் அதெப்படி இதை நீ வெலைக்கு கேட்கலாம். எனக்கு பிடிச்ச பொருள். விற்கமாட்டேன் என்று கூறுவதுண்டு. சூதாட்டம் விளையாடுவதைக் கூட மனிதர்களின் முடிவு தொடர்புடையதாக சொல்லலாம். இன்று ஆன்லைன் ரம்மியை ஒன்றிய, மாநில அரசுகளே ஊக்குவிக்கின்றன. சில மாநிலங்களில் லாட்டரி குலுக்கல் நடைமுறையில் உள்ளது. இதில் எல்லாம் வெல்வது அரிதிலும் அரிதாக நடைபெறுவது. இதன் அர்த்தம் பெரும்பாலும் நடக்காது என்பதுதான். வானிலை ஆய்வு மையம், பகல் வெயில் பளிச்சென அடிக்கும் என்று அறிக்கை வெளியிடும் அன்றைக்கு அடைமழை பெய்வது போல்தான். எதையும் கணிக்க முடியாது. சந்தையில் பங்குகள் ஓகோவென உயரத்திற்கு செல்லும் என்று வணிக டிவி சேனல்கள் ஒப்பாரி வைக்கும். அந்த சமயம் பார்த்து ரூபாயின் ம...

பாயும் பொருளாதாரம் - செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும்

படம்
      பாயும் பொருளாதாரம் செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும் பெற்ற தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் சமாளிப்பதை இந்தியாவில் அனைவருமே செய்பவர்கள்தான். இந்திய அணி கோப்பையைத் தவறவிட்டால், மற்ற நாட்டு ஊடகங்கள் போல உதவாக்கரை பயல்கள் என எழுத முடியாது. எனவே, இதயங்களை இந்திய அணி வென்றது என எழுதி ஆறுதல் தேடுவது வழக்கம். அணியில் உள்ளவர்களுக்கு இதனால் எந்த நன்மையும் கிடையாது. அவர்கள் அப்படியே குறைகள் குறையாமல் ஆடுவார்கள். ஒரு ரன்னுக்கு ஓடி வரும்போது கூட ஈகோ பார்த்து இளம் வீரனை அவுட் ஆக்கி கௌரவம் பார்ப்பது இப்படித்தான் உருவாகிறது. அதாவது குணநலன். ஆட்டோவில் ஒரு நகைப்பை கிடைக்கிறது. அதை ஓட்டுநர் வைத்துக்கொள்ள நினைக்கிறார் இதனால் அவருக்கு, வாங்கிய கடனைத் தீர்க்க முடியும், ஆனால், பொருளை தொலைத்தவர் வழக்கு பதிந்தால் காவல்துறையில் மாட்டிக்கொள்ள நேரும், அதேநேரம் பிறர் பொருளை திருடியதால் குற்றவுணர்ச்சி இருக்கும். அடுத்து, அதை உரியவர்களிடம் ஒப்படைப்பது. இந்த வகையில் ஒருவருக்கு நல்ல செயலை செய்தோம் என்ற ஆறுதல் கிடைக்கும். அதற்காக அவர் செய்கிறார் என்றே வைத்துக்கொள்ளலாம். பொருளை இழந்தவருக்கு அப்பொருள...

விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி!

படம்
        3 பாயும் பொருளாதாரம் விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி! பனிரெண்டு லட்சம் கோடி ரூபாயை இந்திய வங்கிகள் தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவற்றை வசூலிக்க முடியவில்லை. அணுக்க முதலாளித்துவ ஒன்றிய அரசு, எப்போதும்போல கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்றால் அத்துறை சார்ந்த முன்னேற்றம் என்று பொருள் கொள்ளலாம். கொரோனா காலத்தில் கூட லாபம் சம்பாதித்த தொழிலதிபர்களுக்கு எதற்கு கடன் தள்ளுபடி? இப்படி அரசியல்வாதிகளின் உதவிகளைப் பெற்று வரி கட்டாமல் சம்பாதித்தாலும் கூட லஞ்சம் வழங்குவது, பங்கு விலையை அதீதமாக காட்டுவது என இந்திய தொழிலதிபர்கள் சர்க்கஸ் காட்டி வருகிறார்கள். சரி சந்தைக்கு செல்வோம். சந்தையில் மக்கள் பொருட்களை வேண்டும் என கோரவில்லை என்றாலும் கூட அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வணிகர்கள் வாங்கி வைத்து விற்பார்கள். சந்தை அதன் இயல்பில் இயங்கி வரும் என பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் கூறியுள்ளார். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. சந்தை இயங்குவது கண்ணுக்குத் தெரியாத கரம் மூலம் என...

ரோனி சிந்தனைகள் - நன்மையின் இன்னொரு பரிமாணம்!

படம்
      ரோனி சிந்தனைகள் நம் கையை விட்டு அனைத்தும் விலகிப்போய்விட்ட நிலையில் விரக்தியில் சொல்லும் வார்தைகள்தான் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான் என்பது. ஒருவர் உங்களுக்கு உதவுகிறார் என்றால் அவர் நல்லவராக இருக்கவேண்டுமென்பதில்லை. முன்னர் உங்களுக்கு செய்த கெடுதலுக்கு பரிகாரமாக நன்மையைச் செய்யக்கூடும். பணத்திற்கு வாய் உண்டு. காதுகள் கிடையாது. அதனால்தான் காசு இருக்கிறவர்கள், தன்னால் யாராவது எளியோர் செத்தால்கூட கவலையேபடாமல் கேக் வெட்டி சாப்பிடவும், மது அருந்திக் கொண்டாடவும் முடிகிறது. கைது செய்ய காக்கிப்படை வந்தாலும் டீ குடித்தபடி மாட்லாடலாம். கையில் காசுள்ளவரையில் இங்கு எதுவும் தவறே கிடையாது. சோளப்பொரிக்கு வரி என அலறவேண்டியதில்லை. குறைந்த வரி கொண்ட சோளப்பொரியை வாங்கிச் சாப்பிடுங்கள் என நிதி அமைச்சர் விரைவில் கூறி மக்களுக்கு வழிகாட்டக்கூடும். சாப்பிட சோறு இல்லையா, கோதுமையில் ரொட்டி சுட்டு சாப்பிடுங்கள் என அரசு கூறக்கூடிய நாள் அருகில் உள்ளது. மேல், நடு, கீழ் என பல்வேறு வர்க்கங்கள் உள்ளனவே என சிலர் வருத்தப்படுகிறார்கள். பின்னே அவர்களை வைத்துத்தானே அரசுகளும் திட்டங்களைத் தீட்டி ...

பாயும் பொருளாதாரம் - பொருளாதாரத்தை அறிந்தால், பொருளாதார வல்லுநர்கள் நம்மை ஏமாற்றுவதைத் தடுக்கலாம்!

படம்
              பாயும் பொருளாதாரம் பொருளாதாரம் இந்தியாவில் ரூபாய் மதிப்பு தடுமாறிக்கொண்டிருக்கிறது. வேலையிழப்பு பரவலாகி வருகிறது. விவசாயிகள் டெல்லி எல்லையில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் உண்ணாவிரதம் கூட இருக்கிறார்கள். எதேச்சதிகார ஆட்சியில் அகிம்சை எப்படி எடுபடும் என்று தெரியவில்லை. சுயதொழில் செய்பவர்கள் நிலைமை எப்படியோ, ஆனால், மாதச்சம்பளக்காரர்களிடம் பறிக்கும் வரிக்கொள்கை புதிதாக அமலாகிவிட்டது. மாணவர்கள் பயன்படுத்தும் பள்ளி நோட்டு புத்தகங்களுக்கு சேவை வரி பதினெட்டு சதவீதம் என்றால், பணக்காரர்களுக்கு அத்தியாவசியமான வைரத்திற்கு ஐந்து சதவீத வரி விதிக்கப்படுகிறது. இவ்வளவு வரி தீவிரவாதம் அதிகரித்தாலும் கல்வி, மருத்துவம், தங்குமிடம், உணவு என பலவற்றுக்கும் அரசு எந்த பொறுப்பும் ஏற்காது. இதையெல்லாம் தனியார் நிறுவனங்களிடம் தள்ளிவிட்டுவிடுகிறார்கள். பொருளாதாரம் பற்றி அறிந்துகொண்டால் அதைப்பற்றிய விழிப்புணர்வைப் பெற்று நம்மை நாம் காத்துக்கொள்ள முடியும். அதைப்பற்றிய அறிமுகத் தொடர் இது. பொருளாதாரம் என்றால் வங்கிகள், பங்குச்சந்தை, அப்புறம் வினோதமான வரைபடங்கள் என ட...

வாழு வாழவிடு எனும் அமைதி முயற்சிகளை சந்தேகப்படக்கூடாது

படம்
            அமைதிக்கு வாய்ப்பளிப்போம்!  பாகிஸ்தானில் முன்பிருந்த அரசுகள் அங்கிருந்து வரும் தாக்குதல்களை தடுக்க சிறிதளவே முயற்சிகளை எடுத்தன. காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் எந்த ஒரு நடைமுறைத் தீர்வையும் முன்வைக்கவில்லை. இன்றுவரையிலும் கூட வளைந்து கொடுக்காத தன்மையில் அமைதிப் பேச்சுவார்த்தை செல்கிறது. எதிர்தரப்பில் எந்த பதிலும் இல்லாத நிலையில் நாம் தொடர்ந்து அதனை முன்னெடுத்து வருகிறோம்.  பாகிஸ்தானுடன் விரோதம் வளர்க்க நம்மிடம் பல்வேறு காரணங்கள் இன்றும் உயிரோடு உள்ளன. இது கடினமானதாக இருந்தாலும், அமைதி அழைப்பு என்பது முக்கியமானதாக உள்ளது. ஆண்மையுடன் தொடர்புபடுத்தாத வரையில் வாழ்க்கையில் இது முக்கியமானதுதான். வன்மம் வளர்ப்பதைவிட இந்தியர்களுக்கு நல்ல வாழ்விற்கான உறுதி தருவது அமைதி என்பதால் அதனை தேர்ந்தெடுக்க முடியும்.  பாதுகாப்பு நிதியறிக்கையில் 40 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக இரு நாடுகளில் இந்தியா மூன்று மடங்கு அதிகமாக ஆண்டிற்கு ஆண்டு கூடுதலாக செலவழித்துவருகிறது. கோல்டன் குவாட்டிரிலேட்டரல் சாலை திட்டம் எனும் பெரிய திட்டத்தினை அரசு நிறைவு செய்துள்ள...