இடுகைகள்

நேர்காணல்- என்.பைரன்சிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மத்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டால் விபரீதம்!

நேர்காணல் ! " இந்திய அரசு தன்னிச்சையாக செயல்பட்டால் அரசு கவிழ்வது உறுதி !" என் . பைரன்சிங் , மணிப்பூர் முதல்வர் . பாஜகவைச் சேர்ந்த முதல் நபராக என் . பைரன் சிங் மணிப்பூரில் முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் . ஆனால் நாகா மக்கள் பிரச்னையால் அரசு கவிழும் நிலை ஏற்பட்டிருக்கிறது . டெல்லியின் தன் 30 அமைச்சர்களுடன் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம்   ஆலோசிக்க காத்திருந்தவர் தன் பிரச்னைகளை பேசினார் . நாகா மக்களுக்கான அமைதிப்பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதாக கூறினீர்களே ? இப்போதுள்ள நிலையில் அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்க முடியாது . நாகா மக்களின் பிரதிநிதி ஆர் . என் . ரவி , நாகா மக்களின் நிபந்தனைகளை முன்வைத்து பேசியதாக வதந்திகள் கிளம்பின . சிறிய மாநிலமான மணிப்பூரில் கூக்கி , நாகா , மெய்டெய் என பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட மக்கள் மாவட்டந்தோறும் வாழ்ந்து வருகின்றனர் . யாரும் எதையும் தியாகம் செய்யமுடியாது என்பதே நிஜம் . நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் மக்களை நிச்சயம் நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை . 2015 ஆம் ஆண்டு இந்திய அர