இடுகைகள்

விலங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கற்ற அறிவை நினைவில் வைத்து செயல்படும் விலங்குகள்! - எட்வர்ட் டோல்மனின் ஆய்வு

படம்
  அமெரிக்காவில் புகழ்பெற்ற உளவியலாளர் என எட்வர்ட் டோல்மனை உறுதியாக சொல்லலாம். இவர் முன்னர் நாம் பார்த்த உளவியல் ஆய்வாளர்களான தோர்ன்டைக், வாட்சன் ஆகியோரை விட வேறுபட்ட அறிவியல் அணுகுமுறையைக் கொண்டிருந்தார். இவர் குணநலன் சார்ந்த உளவியலை அறிவியல் அணுகுமுறை சார்ந்துதான் அணுகினார். கோணம், அறிவாற்றல், ஊக்கம் ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக எடுத்துக்கொண்டார். ஜெர்மனியில் கெசால்ட் உளவியல் முறையை கற்று பல்வேறு விஷயங்களை அறிந்துகொண்டார். இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து பர்பஸிவ் பிஹேவியரிசம் என்ற கோட்பாடை உருவாக்கினார். இதை தற்போது காக்னிட்டிவ் பிஹேவியரிசம் என அழைக்கின்றனர்.  டோல்மன், குறிப்பிட்ட நிபந்தனைகளை முன்வைத்து விலங்குகளின் மீது செய்யும் சோதனைகளை நம்பவில்லை. ''விலங்குகளுக்கு உணவை பரிசாக கொடுக்காமல் ஒரு வேலையை செய்ய வைத்தாலும் அவற்றால் குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்'' என்று கூறினார். இப்படி கற்ற அறிவை சேர்த்து வைத்து விலங்குகள் பின்னாளில் பயன்படுத்துகின்றன என்றார். எலிகளுக்கு சில புதிர்களை விடுவித்தால் உடனே உணவும், மற்றொரு குழு எலிகளுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு உண

புரொஜெக்ட் சீட்டா வெற்றி பெறுமா?

படம்
  சீட்டா அறிமுகம் வெற்றி பெற்றதா? கடந்த செப்டம்பர் மாதம், எட்டு ரேடியோகாலர் பொருத்தப்பட்ட சீட்டாக்கள் நமீபியாவிலிருந்து இந்தியாவின் குனோ தேசியப்பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. ஏறத்தாழ 5 ஆயிரம் மைல் தூர பயணம். புரொஜெக்ட் சீட்டா என்ற பதிமூன்று ஆண்டு கால திட்டத்தின்படி சீட்டாக்களை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். கடந்த எழுபுது ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த புல்வெளிப்பகுதி சீட்டாக்கள் வேட்டையர்களால் வேட்டையாடப்பட்டன. எனவே, சீட்டாக்கள் எளிதாக அழிந்துவிட்டன. செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி, புரொஜெக்ட் சீட்டா திட்டத்தின் இரண்டாவது   கட்டம் தொடங்கியது. மொத்தமுள்ள இருபது சீட்டாக்களில் எட்டு சீட்டாக்கள், மூன்று குட்டிகள் இறந்துவிட்டன. இப்போது மீதமுள்ள சீட்டாக்களை பாதுகாக்க தேசியப்பூங்கா அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். உண்மையில் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டு அவற்றை பாதுகாக்க முடியாது போனது இந்தியாவுக்கு தர்மசங்கடமான நிலைமைதான். அவற்றை எப்படி பாதுகாப்பது, பராமரிப்பது என்று பணியாளர்களுக்கு தெரியவில்லை என்று கருத்துகள் பேசப்பட்டுவருகின்றன. இறப்பிற்கான முக்கியக் காரணம், ரேடியோ காலர் பொருத்தப்பட்டதுதான்

வீகன் உணவுமுறையில் இருந்து தாவர உணவுமுறை மாறுபட்டது!

படம்
  தாவர உணவுமுறை இன்று தாவரங்களைச் சார்ந்த உணவு எடுத்துக்கொள்வபவர்கள் அதிகரித்துள்ளனர். தாவர உணவுகள் என்றால் தலையில் கொம்பு முளைக்குமளவு பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவதல்ல. உணவு வகைகளில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் பங்கு எழுபது முதல் எண்பது சதவீதம் இருக்கும். இறைச்சியைக் கூட சிறிது சேர்த்துக்கொள்ளலாம். தாவர உணவுமுறையில் சர்க்கரை, உப்பு, பதப்படுத்தப்பட்டு உணவுப்பொருட்கள் சேர்க்க கூடாது. மற்றபடி ஊட்டச்சத்துகளைக் கொண்ட காய்கறிகள் பழங்களை சாப்பிடலாம். தாவரம் சார்ந்த உணவுமுறைக்கு மாற்றாக வீகன் உணவுமுறையை சிலர் கூறுகிறார்கள். ஆனால், அதை இதையோடு ஒப்பிட முடியாது. ஒப்பீட்டளவில் மிகவும் மாறுபட்டது. வீகனில் விலங்கிலிருந்து பெறும் இறைச்சி, முட்டை, பால் என எதையும் சேர்ப்பதில்லை. அவர்கள் தங்களது உணவு சார்ந்த தீவிர கவனம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களது உடை, பயன்படுத்தும் பொருட்களில் கூட விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் இருக்காது. சைவ உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் பால், முட்டையை எடுத்துக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இந்த உணவுகளைப் பெற விலங்குகள் கொல்லப்படுவதில்லை என்பது நியாயமான காரணமாக உ

உலகம் முழுவதும் உள்ள நிலப்பரப்புகள் பற்றி சிறு பார்வை - இயற்கை 360 டிகிரி

படம்
  ஆண்டு முழுவதும் வெப்பம் இருக்கும் புல்வெளிப்பகுதி. ஆப்பிரிக்காவின் சாவன்னா பலருக்கும் நினைவுக்கு வரலாம். அதேதான் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம். இங்கு, வெப்பம் இருந்தாலும் மழையும் பெய்வதுண்டு. இதில் முளைக்கும் புற்களை தின்ன வரிக்குதிரை உள்ளிட்ட உயிரினங்கள் வருகின்றன. அப்போது அதை வேட்டையாடி உணவாக உண்ணும் உயிரினங்களும்தானே வரும்? ஆம் சிங்கம் உள்ளிட்ட இரையுண்ணிகள் இதை தமது ஆகாரமாக்கிக்கொள்கின்றன.  சாவன்னா துருவப்பகுதி நாம் வாழும் உலகம் பூமியில் நமது வாழ்க்கை முதன்முதலில் கடலில்தான் தொடங்கியது. 3.5 பில்லியன் ஆண்டுகள் முன்பு, (ஒரு பில்லியன் - நூறு கோடி). உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி நிலம், நீர் என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் தொடங்கியது. அப்போது பூமியில் பல்வேறு இயல்புகள் கொண்ட நிலப்பரப்புகள், நீர்ப்பரப்புகள் இருந்தன. அவற்றைப் பார்ப்போம்.  ரோனி வடதுருவப்பகுதியில் ஆர்க்டிக் கடல் சூழ்ந்துள்ளது. தென்பகுதியில் அன்டார்டிகா அமைந்துள்ளது. எனவே இருதுருவப் பகுதிகளிலும் உறையும் பனி உள்ளது. இங்கும் உயிரினங்கள் உள்ளன. இவை குளிரைத் தாங்கும் தகவமைப்புகளைப் பெற்றுள்ளன. உடலில் அடர்த்தியான ரோமம், சேம

சட்டவிரோத வணிகம் சமூகத்தைக் கடுமையாக பாதிக்கிறது! வூ ஹோவாய் நாம் டங்

  வூ ஹோவாய் நாம் டங் ஆராய்ச்சியாளர்,கோபன்ஹேகன் பல்கலைக்கழகம், டென்மார்க் நாம் டங், காண்டாமிருக கொம்புகளை வணிகம் செய்வது பற்றிய வாடிக்கையாளரின் மனநிலை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  சட்டவிரோத வணிகம் சமூகத்தை பாதிப்பதாக நினைக்கிறீர்களா? அரசின் சட்டப்பூர்வமான வணிகத்தில் போதுமான கொம்புகள் கிடைக்காதபோது, வாடிக்கையாளர்கள் சட்டவிரோத வணிகர்களை நாடிச்செல்கிறார்கள். இப்படி சட்டவிரோதமாக காண்டாமிருக கொம்புகளை வாங்குவது காட்டின் பல்லுயிர்த்தன்மையை அழிக்கிறது. காடுகளில் கிடைக்கும் சாதாரணமான பொருட்களை குறைந்த வருமானமுள்ள குழுவினர் பெறுகிறார்கள். மிகச்சிலர் மட்டுமே அதிக மதிப்பான பொருட்களைத் தேடுவதை நாங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்.  எப்படி விலங்குகளிலிருந்து பெறும் பொருட்கள் பற்றிய தகவல்களை சேகரித்தீர்கள்? சட்டவிரோத வியாபாரச் சங்கிலி அமைப்பில் உள்ள வேட்டைக்காரர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என பலரிடமும் பேசியிருக்கிறேன். வியட்நாமில் உள்ள வாடிக்கையாளர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் வயதானவர்களாக, வசதியானவர்களாக இருந்தனர்.  சட்டப்படி விலங்குகளிடமிருந்து பொருட்களை பெற்றுவிற்பது பயன் தருமா? மருத்துவக்

விலங்குகளின் உணவு சேகரிக்கும் வேறுபட்ட பழக்கம்!

படம்
  உணவு சேகரிக்கும் விலங்குகள்! நீர்நாய் (The Beaver) விலங்குகள் உலகில் அதிகளவு உணவு சேகரிப்பவை, நீர்நாய் தான். 200 முதல் 2 ஆயிரம் கி.கி. அளவுக்கு சாப்பிடத்தேவையான கிளைகளை சேகரித்து வைக்கிறது.  அகோர்ன் மரங்கொத்தி (Acorn woodpecker) 150 முதல் 200 கி.கி. வரையிலான ஓக் மரக்கொட்டையை சேகரித்து வைக்கிறது. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் அகோர்ன் மரங்கொத்தி வாழ்கிறது. இவை, ஓக் மரங்களில் வசிக்கிறது. ஓக் மரக்கொட்டைகளைப் பாதுகாத்து வைக்க, பட்டுப்போன மரங்களின் அடிப்புறத்தை தேர்ந்தெடுக்கிறது. இவைதான் பனிக்கால உணவுக்கான சேமிப்பு கிடங்கு.  அணில் (Squirrel) காட்டுக்குள் அணில் கொட்டைகள், பருப்பு, பூஞ்சை என சேகரித்து சேமிக்கிறது. இப்படி சேமிக்கும் இடங்களை அணில் மறந்துவிடும்போது, அவை மண்ணில் முளைவிட்டு செடியாகி மரமாவதும் உண்டு. அணில் இந்த வகையில், 20-50 கி.கி. அளவுக்கு உணவு சேகரிப்பை செய்கிறது.   யூரேசியன் ஜே (Eurasian jay) இலையுதிர்காலத்தில் கொட்டைகளை தேடி சேகரிக்கத் தொடங்கும் பறவை. நிலத்தில் கொஞ்சமும், பட்டுப்போன மரங்களில் கொஞ்சமும் கொட்டைகளை சேமித்து வைக்கிறது. 20-30 கி.கி. வரையிலான கொட்டைகளை சேமித்த

பாலூட்டிகளின் கரு முட்டை செல்களைப் பற்றி உலகிற்கு அறிவித்தவர்! - கார்ல் எர்னஸ்ட் வான் பேயர்

படம்
கார்ல் எர்னஸ்ட் வான் பேயர் ( karl Ernst Von Baer 1792-1876) உயிரியலாளர், இயற்கை அறிவியலாளர் நான் எஸ்டோனியாவின் பீப் நகரில் பிறந்தேன். டோர்பட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்து, 1814ஆம் ஆண்டு மருத்துவப்பட்டம் பெற்றேன். பிறகு, ஜெர்மனியின் உர்ஸ்பெர்க் நகருக்கு இடம்பெயர்ந்தேன். அங்குதான் எனது பிற்கால ஆராய்ச்சிகளுக்கு காரணமாக மருத்துவர் இக்னாஸ் டோலிங்கரைச் சந்தித்தேன்.  அவர்தான், கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியைச் செய்ய ஊக்குவித்தார். கருவியல் துறை சார்ந்து நான் பிளாஸ்டுலா (Blastula), நோடோசோர்ட் (Notochord)ஆகியவற்றைக் கண்டறிந்தேன்.  பேயர், விலங்குகளின் உட்கரு சார்ந்த ஆராய்ச்சியோடு இன பண்பாட்டியல், புவியல் ஆகிய துறைகளிலும் ஆராய்ச்சி செய்து வந்தார். கருவுக்குள் இருக்கும் செல் அடுக்குகள் பற்றிய ஜெர்ம் லேயர் கோட்பாட்டை (Germ-layer theory) உருவாக்கினார். இதுவே நவீன கருவியல் சார்ந்த ஆய்வுகளுக்கு ஆதாரமாக அமைந்தது.  1827ஆம் ஆண்டில் முதன்முறையாக பாலூட்டிகளின் கருமுட்டை செல்களைப் பற்றி அறிவியல் உலகிற்கு கூறியவர்.  https://en.wikipedia.org/wiki/Karl_Ernst_von_Baer https://www.encycloped

காட்டுத்தீயிலிருந்து விலங்குகளைக் காப்பாற்ற ஹேபிடேட் பாட்ஸ் உதவும்! அலெக்ஸாண்ட்ரா கார்தே

படம்
  அலெக்ஸாண்ட்ரா கார்தெ காட்டுயிர் ஆராய்ச்சியாளர் 2019 - 2020 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பாதிப்பு ஏற்பட்டது. இவை போன்ற நிகழ்ச்சிகளிலிருந்து சிறு விலங்குகளை பாதுகாக்க ஹேபிடேட் பாட்ஸ் என்ற சிறு கூடார அமைப்பை மெக்குவாரி பல்கலைக்கழக காட்டுயிர் ஆராய்ச்சியாளர் அலெக்ஸாண்ட்ரா கார்தெ உருவாக்கியுள்ளார்.  ஆராய்ச்சியில் ஆர்வம் வந்தது எப்படி? இயற்கை உலகம் பற்றிய கேள்விகளுக்கு அறிவியலில் பதிலைத் தேடி அறிவது எனக்குப் பிடித்திருந்தது. பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது புதுமைத்திறன், பிரெஞ்சு மொழி, உளவியல் ஆகிய பாடங்களை எடுத்தேன். இது தவறான தொடக்கம் தான். பிறகு, பேராசிரியர்களின் உரைகளால் சூழலியல், முதுகெலும்பு உயிரினங்களைப் பற்றி படிக்கத் தொடங்கினேன்.  சிறு விலங்குகளுக்கான கூடார அமைப்பை எப்படி வடிவமைத்தீர்கள்? ஹேபிடட் பாட்ஸ் எனும் இந்த கூடார அமைப்பை உருவாக்க ரீப் டிசைன் லேபைச் சேர்ந்த அறிவியலாளர் அலெக்ஸ் கோட் உதவினார். இதற்கான முதல் கூடார அமைப்பை, கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டோம். எங்களது கண்டுபிடிப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள காட்டுயிர்  பாதுகாப்பு அமைப்பு, நியூ சௌத்வேல்ஸ் தேசிய பூங்கா ஆகிய அ

குடிநீர் தேடி அலையும் விலங்குகளுக்கு உதவும் சூழல் மனிதர் - ராதாஷ்யாம் பிஷ்னோய்

படம்
  விலங்குகளின் குடிநீர் தாகம் தீர்க்கும் மனிதர்!  ராஜஸ்தானின் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் வாழும் விலங்கினங்களுக்கு கோடைக்காலம் கடினமானது. அப்போது, நீர்வேட்கையில் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்துதான் தாகத்தை தணித்து வந்தன. தற்போது, அப்படி அலையும் விலங்குகளுக்காக குளங்களில் நீரை நிரப்பி வருகிறார் சூழலியலாள் ராதேஸ்யாம் பிஷ்னோய்.  ராஜஸ்தானின் தோலியா கிராமத்தைச் சேர்ந்தவர், பிஷ்னோய். இனிப்புகளில் சேர்க்கப்படும் கோயா எனும் பால் பௌடரைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். ஓய்வு நேரத்தில் விலங்குகளைப் பாதுகாக்கும் பணிகளைச் செய்து வருகிறார். காயம்பட்ட விலங்கினங்களை மீட்டு சிகிச்சை அளிப்பதோடு, அவற்றைப் பாதுகாப்பது பற்றிய பிரசாரத்தையும் செய்து வருகிறார்.  கடந்த ஐந்து ஆண்டுகளாக கோடைக்காலமான  ஏப்ரல், ஜூன் மாதங்களில் விலங்கினங்களுக்காக குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் பணிகளைச் செய்து வருகிறார். தோலியா கிராமத்தோடு அருகிலுள்ள  கேடோலி கிராமத்திற்கும் தனது பணியை விரிவுபடுத்தியுள்ளார்.  இதன் மூலம், பாலைவன  நரி, பூனை, சின்காரா மான், கழுகுகள் ஆகியவை பயன்பெற்று வருகின்றன. ”2017ஆம் ஆண்டு நீர்தேட

விலங்குகளை அச்சுறுத்தும் பட்டாசுகள்!

படம்
  விலங்குகளை அச்சுறுத்தும் ஒலி! 2021ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநில அரசு, பிற மாநிலங்கள் உருவாக்காத சூழல் திட்டத்தை உருவாக்கியது. காலநிலை மாற்றத்திற்கான மும்பை கிளைமேட் ஆக்சன் பிளான் (MCAP) எனும் திட்டம் தான் அது. ஆனால் இந்த திட்டத்திலும் கூட ஒலி மாசுபாடு குறிப்பிடப்படவில்லை.  மேலும், மும்பை பெருநகரில் நடைபெறும் பல்வேறு கட்டுமானப் பணிகள் சூழல் நிலைத்தன்மை விதிகளுக்கு உட்படாதவை.  கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஜெஸ்வின்,  கிங்ஸ்லி களிறு எனும் ஆவணப்படத்தை உருவாக்கினார். இப்படத்தில், விலங்குகள் எப்படி பட்டாசுகளை வெடிக்க வைத்து விரட்டப்படுகின்றன என்பதை விவரித்தது. இப்படி விலங்குகளை இரைச்சலிட்டு விரட்டுவது புதிதல்ல என்றாலும் நவீன காலத்தில் சக்தி வாய்ந்த பட்டாசுகளைப் பயன்படுத்துவது விலங்குகளை அச்சுறுத்துவதோடு அவற்றை உடல் அளவில் காயப்படுத்தவும் செய்கிறது.  "தொடர்ச்சியாக பல்லாண்டுகளாக உருவாகி வரும் இரைச்சல், விலங்குகளின் நுட்பமான ஒலிகளை உணரும் திறனை பாதிக்கிறது. அதன் வாழிடத்தில் திடீரென உருவாகும் ஒலி அச்சுறுத்தலாக மாறி வருகிறது” என 2013ஆம் ஆண்டு ஆய்வாளர் கிளிண்டன் டி ஃபிரான்சிஸ் ,

அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்த தியோடர் ஸ்க்வான்!

படம்
  தியோடர் ஸ்க்வான் தியோடர் ஸ்க்வான் (theodor schwann 1810 - 1882) 1810ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள நியூயஸ் என்ற நகரில் பிறந்தார். அச்சுத்தொழில் செய்துவந்த லியோனார்ட் ஸ்ச்வான் என்பவருக்கு நான்கு மகன். 1834ஆம்  ஆண்டு மருத்துவராக பட்டம் பெற்றார். ஜோகன்னஸ் முல்லர் என்ற தனது பேராசிரியருக்கு ஆராய்ச்சியில் உதவியாளராக இணைந்தார்.  நுண்ணோக்கியில் ஏற்பட்டு வந்த பல்வேறு முன்னேற்றங்களை கவனித்து வந்தார் தியோடர். பொருட்களை பதப்படுத்துதலில் ஈஸ்டின் பங்களிப்பு  பற்றிய ஆய்வின் முன்னோடி.  இவருக்குப் பிறகுதான் நோய்க்கிருமிகள் பற்றி பிரெஞ்சு நுண்ணுயிரியாளர் லூயிஸ் பாஸ்டர் ஆராய்ச்சி  செய்து சாதித்தார்.  இதைத் தவிர செரிமானத்திற்கு உதவும் என்சைம்கள், தசை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பணிகளை ஆராய்ந்து வந்தார். வயிற்றில் செரிமானத்திற்கு உதவும் வேதிப்பொருளான பெப்சினைக் கண்டறிந்தார். விலங்கின் திசுக்களிலிருந்து பெறப்பட்ட முதல் என்சைம் இதுவே.    லீஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் வாய்ப்பை ஏற்றார்.  இவர் கண்டுபிடித்த பல்வேறு அறிவியல் முறைகளுக்காக இன்றும் பேசப்பட்டு வருகிறார். 1839ஆம் ஆண்டு நுண்ணோக்கி

டேவிட் அட்டன்பரோ ஏற்படுத்திய மாற்றங்கள்தான் எனக்கு ஊக்கமூட்டின! - புகைப்படக் கலைஞர் பெர்சி ஃபெர்னாண்டஸ்

படம்
புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக் கலைஞர் புகைப்படக் கலைஞர்  பெர்சி ஃபெர்னாண்டஸ் கானுயிர் புகைப்படக்கலை மீது எப்படி உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது? தமிழ்நாட்டிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை அருகில் ராணுவப்பள்ளியில் படித்தபோது ஆர்வம் பிறந்தது. நாங்கள் அங்கு தினமும் நீர் குடிக்க வரும் யானைகளைப் பார்ப்போம். அந்த நீர்நிலையில் ஏராளமான முதலைகள் உண்டு. பக்கத்திலேயே முதலைப் பண்ணையும் இருந்தது. சிறுத்தையை அடிக்கடி பார்ப்போம்.  ஒருநாள் மாலைநேரம் நாங்கள் விளையாடிவிட்டு நீர் குடிக்க வரும் இடத்தில் இரண்டு மலைப்பாம்புகளை பார்த்தோம். குடிநீர் குழாய் காவல்நிலையத்தின் அருகில் இருந்தது. மலைப்பாம்புகள், யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் ஆகிய உயிரினங்களை நாங்கள் அடிக்கடி பார்ப்பது பழக்கமாகிவிட்டிருந்தது. கேரளாவில் உள்ள சின்னார், மூணார் ஆகிய இடங்களுக்கு நாங்கள் அடிக்கடி சுற்றுலா செல்வோம். அங்கு நாங்கள் புலி, சிறுத்தைகளை பார்ப்போம். கூடுதலாக ஏராளமான சந்தன மரங்களையும் பார்த்து ஆச்சரியப்பட்டோம்.  பிஹெச்டி படிக்கும்போது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மயில்களைப

கோப்ளின் அரசரின் மகளை மீட்கும் ஸ்கூபி டூ குழு! - ஸ்கூபி டூ அண்ட் தி கோப்ளின் கிங்

படம்
                ஸ்கூபி டூ அண்ட் தி கோப்ளின் கிங் அனிமேஷன் படம் வார்னர் பிரதர்ஸ் - ஹன்னா பார்பரா இந்த படம் மாயாஜால மந்திரங்களைக் கொண்டது . கோப்ளின் அரசரின் மகளை பிடித்து வைத்துக்கொண்டு அவரின் சக்தியைப் பெற்று அனைவரையும் அடக்கியாள நினைக்கும் மேஜிக் கலைஞரை எப்படி ஸ்கூபி டூ , சேகி தோற்கடிக்கிறது என்பதுதான் கதை .    இந்த கதையில் வெல்மாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டதால் முழுக்கதையையும் தங்கள் பாணியில் ரகளையாக நகர்த்திச்செல்வது ஸ்கூபி டூ மற்றும் சேகி இணைதான் . கோப்ளின் அரசரின் இளவரசி , தோற்றுப்போன மாய தந்திரக்கலைஞரை நையாண்டி செய்கிறது . அதனை பிடித்துவிட்ட அவர் , அதன் சக்தியை வைத்து பிற மந்திரப் பொருட்களை வயதான கலைஞர் ஒருவரிடமிருந்து பெறுகிறார் . குறிப்பிட்ட தினத்தில் கோப்ளின் அரசரையும் அவரது கூட்டத்தையும் உயிர்பெறச்செய்து , அவரின் கையில் உள்ள ஆயுதத்தைப் பெற்றால் உலகத்தை ஆள முடியும் என்பது மாய தந்திரக்கலைஞரின் பேராசை . இதனை படாதபாடுபட்டு அறியும் சேகி , ஸ்கூபிடூ இணை பூசணிக்காய் ஒன்றின் உதவியுடன் சூனியக்காரிகளை சந்திக்கின்றனர் . அவர்களின் பறக்கும் துடைப்பத்தைப்

வாழ்க்கையை அழித்த வசை! - இனவெறி, கருப்பினத்தவர்களின் குற்றங்கள், பெண் கொலைகாரர்கள், சிறுவயது சைக்கோ கொலைகாரன் ...

படம்
                  மனதைக் கொல்லும் வார்த்தை ! உணர்ச்சிகளை பகிரங்கமாக வெளிப்படுத்துவது , கோபத்தை , பொறாமையை , விரோதத்தை , வன்மத்தை , பகையை நேரடியாக வெளிப்படுத்துவது அதற்கான விளைவுகளை கூடவே எடுத்துவரும் . அதற்கான உதாரணம் எட்மண்ட் கெம்பர் . இவரைப் பற்றி அசுரகுலம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது . இப்போது அவரது வாழ்க்கையை சுருக்கமாக பார்க்கலாம் . அப்பாவின் வழிகாட்டுதல் இல்லாத குழந்தை . ஆறடி ஒன்பது அங்குல ஆளுமை . ஆனால் மனதளவில் அன்பும் அங்கீகாரமும் கிடைக்காத காரணத்தால் புறக்கணிப்பை எதிர்கொள்ள முடியாமல் பெண்களை கொல்வதே அவர்கள் தன்னை மறுக்காமலிருக்கும் வழி என முடிவுக்கு வந்தவர் . இதற்கு ஒரே காரணம் , அவரது அம்மா . தினந்தோறும் சித்திரவதையான வார்த்தைகள் , தண்டனைகள் என அம்மாவிடம் இருந்து கிடைத்த அத்தனையும் மனதில் வன்முறையாக மாறத் தொடங்க , விலங்குகளை துன்புறுத்தி மகிழத் தொடங்கினார் . கொன்று புதைப்பது , உயிரோடு புதைப்பது என தொடங்கிய பழக்கம் மெல்ல முன்னேறி இறந்த உடல்களில் அருகில் சுய இன்பம் அனுபவிப்பது வரை வளர்ந்தது . பள்ளியில் பலரும் சூப்பர்மேன்களாக மாறி மக்களைக் கா