இடுகைகள்

புனைவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாணக்கியர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை!

படம்
 சாணக்கியர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கான சான்றுகளே இல்லை! சாணக்கியர் என்றதும் அவர் கூறிய அரசியல் நெறிமுறைகள், குரூரமான செயல்பாடுகள் கண்முன்னே வந்துபோகும். ஆனால், அதை எழுதியது யாரோ, அதை ஏன் சாணக்கியர் பெயரில் பிரசாரம் செய்தார்களோ தெரியாது. உண்மையில் சாணக்கியர் என்ற மனிதர் வாழவே இல்லை என்று செய்திகள் தெளிவாக உள்ளன. இன்றுமே கூட இந்தியாவில் மௌரிய வம்சத்துக்கு வழிகாட்டியவர் என்று சாணக்கியரைக் கைகாட்டுவார்கள். சாணக்கிய தந்திரம் பற்றியும் நூல்களை ஆயிரக்கணக்கில் எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் வெற்று பிரசாரமே ஒழிய வேறில்லை. ஏனெனில் சாணக்கியர் ஒற்றைக் குடுமியோடு பார்ப்பனராக இருப்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பார்ப்பனர்கள் அதிகார வெறிக்காக என்னவேண்டுமானாலும் செய்வார்கள். எப்படிப்பட்ட புரட்டையும் பேசுவார்கள், எழுதவார்கள், பரப்புவார்கள். அதை இன்று இந்தியாவே பார்த்து வருகிறது.  பொதுவாக பார்ப்பனர்கள் அழிக்கப்பட்டவர்களில் மௌரிய அரசரான அசோகரும் உண்டு.ஆனால் ஆரிய பார்ப்பனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், தாங்கள்தான் அரசை வழிகாட்டி நடத்தினோம் என்று கூறுகிறார்கள். கி.மு 300இல் மௌரிய அரசுக்...

பலவீனமான இளைஞனின் உடலுக்குள் புகுந்து துரோகிகளை பழிவாங்கத் தொடங்கும் தற்காப்புக்கலை மாஸ்டரின் ஆன்மா!

படம்
          டாமினேட்டர் ஆப் மார்சியல் காட்ஸ் எபிசோடு 29 சீன டிராமா குயின் சென்னுக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான். குயின் குடும்பம், நாட்டின் ராணுவத்தில் உயர்பதவிகளைப் பெற்றுள்ளது. அத்தனைக்கும் குயின் சென்னின் தாத்தா, குறிப்பிட்ட எல்லைப்பிரிவுக்கு தலைவராக இருப்பதால் சாத்தியமானது. அவரது மகள் குயின் யூசெ, முகம் தெரியாத ஒருவரை காதலித்து மணம் செய்துகொள்கிறாள். குழந்தை பிறந்தபிறகு, தந்தையின் வீட்டுக்கு வருவதால் ஊர் அவர்களை ஏசுகிறது. இப்படி வளரும் குயின்சென்னுக்கு, ஆன்ம ஆற்றல் பெரிதாக வளரவில்லை. அந்த நேரத்தில் அவனது உடலுக்குள் சொர்க்கத்தில் உள்ள கடவுளின் ஆன்மா உள்ளே நுழைகிறது. அவருக்கு துரோகம் செய்த நண்பன், மோசம் செய்த காதலி ஆகிய இருவரை பழிவாங்கும் நோக்கம் உள்ளது. அதை குயின்சென்னின் பலவீனமான உடலைக் கொண்டு எப்படி செய்கிறார் என்பதே கதை. இப்படியான கதைகள், மாங்கா வடிவில் ஏராளமாக இணையத்தில் கிடைக்கின்றன. எனவே, கதையில் பெரிய ட்விஸ்டுகள் ஏதுமில்லை. பொதுவாக பார்வையாளர்கள் நினைக்கும்போது பாட்டு, காமெடி என போக்கிரி படத்தில் காட்சிகள் வருமே அதேபோல்தான் இங்கும் நடக்கிறது. முக்...

செய்திகளை எழுதுவதில் எந்தப்பக்கம் நிற்பது? - எது சரி, எது தவறு?

படம்
  கொள்கை ரீதியான சவால்கள் இதழியலைப் பொறுத்தவரை நவீன காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அச்சு ஊடகம் கடந்து காட்சி ஊடகங்கள் சக்தி பெற்றுள்ளன. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், தனி ஒரு ஊடகமாக செயல்படத் தொடங்கிவிட்ட காலமிது. எப்படி இயங்கினாலும் செய்திகளை மக்களுக்கு வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் அதுவும் இதழியலில்தான் சேரும். இதழியலைப் பொறுத்தவரை நிருபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கும் பெரும் சவால். ஒரு விவகாரத்தில் எடுக்கும் நிலைப்பாடு ஒரு சூழலில் சரியாக இருக்கும். மற்றொரு சூழலில் தவறாக இருக்கும். அதை முட்டாள்தனம் என்று கூட பிறர் கருதலாம். செய்தி தொடர்பாக முடிவெடுக்கும்போது தொழில் சார்ந்த கொள்கைளை அடிப்படையாக கொள்ளவேண்டும். ஆசிரியர் குழுவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் நாம் அதற்கு சரியான பதிலைக் கண்டுபிடித்தால்தான் முன்னே நகர முடியும். இரண்டு இடங்களில் நாம் என்ன முடிவெடுப்பது என தடுமாறி நின்றுவிடுகிறோம். ஒன்று. எது சரி அல்லது எது தவறு என குழம்புவது. அடுத்து நாம் எடுக்க வேண்டிய ஒரே முடிவு. ஒரே முடிவால் நாம் செய்யும் செயல்களுக்கு கிடைக்கும் சரிய...