இடுகைகள்

ஸ்வீடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்கள் கொடுத்த பொறுப்பை அரசியல் தலைவர்கள் உணரவேண்டும்! - துன்பெர்க்

படம்
நேர்காணல் - கிரேட்டா துன்பெர்க் உலகளவில் இயற்கை சூழலியலுக்களான நாயகியாக மாறியிருப்பவர் இவர்தான். ஸ்வீடனைச்சேர்ந்த பதினாறு வயது சிறுமி கிரேட்டா துன்பெர்க், சூழலியலுக்காக போராடுவதில் முன்நின்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். வெப்பமயமாதலை சமாளிக்க இந்தியா என்ன செய்யவேண்டும்? அது குறித்த பிரசாரத்தை மக்களிடம் செய்யவேண்டும். அதற்குப் பிறகு வெப்பமயமாதலைக் குறைக்கும் முயற்சிகளை அரசு தீவிரப்படுத்தவேண்டும். இந்தியா வளரும் நாடு என்பதால் அதனை விட ஸ்வீடன் நாடு இதில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டுமென நினைக்கிறேன். மோடிக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? பிரதமர் மோடி வெப்பமயமாதலை முக்கியமான பிரச்னையாக எடுத்துக்கொண்டு செயலாற்றவேண்டும். இல்லையென்றால் வளரும் தலைமுறை இந்த பிரச்னையின் விளைவுகளை உணரமாட்டார்கள். உங்களுக்கு பொறுப்புகள் இருந்தாலும் அதனை நிறைவேற்றாதபோது உலகமே பின்னாளில் உங்களை அவதூறாக பேசும். இந்தியாவிலுள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு ஏதேனும் செய்தியை சொல்ல விரும்புகிறீர்களா? வெப்பமயமாதலுக்காக போராடும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் நான் வ...

கிரேட்டா துன்பெர்க்- இளைய போராளி

படம்
கடந்த ஆண்டு ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன் சிறுமி ஒருத்தி போராட அமர்ந்தாள். என்ன கோரிக்கை, என்ன விஷயம் என யாருக்கும் புரியவில்லை. அப்புறம் பார்த்தால் வெப்பமயமாதலுக்கான போராட்டம் அது. அரண்டு போன ஊடகம், மைக்கையும் கேமராவையும் எடுத்துக்கொண்டு ஓடிவர மெல்ல கிரேட்டா துன்பெர்க்கும், அவரது போராட்டமும் உலகளவில் கவனம் ஈர்க்கத் தொடங்கியது.  இதன் விளைவாகத்தான் லண்டனில் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக நடந்த போராட்டமும் கூட.  கடந்த ஆகஸ்டில் துன்பெர்க் செய்த போராட்டத்திற்கு அவரது பெற்றோர், சக நண்பர்கள் யாரும் ஆதரவு தரவில்லை. ஆனால் இன்று எட்டு மாதத்திற்கு பிறகு அவரை ஆதரிக்காத ஆட்கள் உலகிலேயே கிடையாது என்ற அளவு துன்பெர்க்கை உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர்.  71 நாடுகளில் 700 நகரங்களுக்கு மேலாக சுற்றுச்சூழல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது எனக்கு பெரிய ஆச்சரியம் என கண்கள் மினுங்கப் பேசுகிறார் துன்பெர்க். இவரது தந்தை புகழ்பெற்ற நடிகர் எழுத்தாளர் ஸ்வெந்தா துன்பெர்க், தாய் பிரபலமான ஓபரா பாடகி. துன்பெர்க் பெரியளவு யாரையும் கவனம் ஈர்க்கும் சிறப்புகளைக் கொண்டவர் அல்...

காணாமல் போன சீன பதிப்பாளர்

படம்
மைட்டி கரண்ட் என்ற பதிப்பக நிறுவனத்தைச் சேர்ந்தவரை சிறையிலிருந்து மீட்க ஸ்வீடன் தூதர் முயன்றார். இதன் விளைவாக அவரை சீனா ஸ்வீடனுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. காணாமல் போன பதிப்பாளர் குய் மின்காயின் மகள் கொடுத்த புகாரின்படி, சீன அரசு ஸ்வீடன் தூதர் அன்னா லின்ட்ஸ்டெட்டை ஸ்டாக்ஹோமுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. தந்தையைப் பார்ப்பதற்கு உதவுவதாக குய் மின்காயின் மகளுக்கு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார் அன்னா. சந்திப்பு சீன பணக்காரர் ஒருவருடன் நிகழ்ந்திருக்கிறது. இச்சந்திப்பு குறித்து குய் மின்காயின் மகள் கொடுத்த புகார்தான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 2030 ஆம் ஆண்டிற்கான தூதர் என்ற பெயரில் சீனாவுக்கு தூதராக வந்தவர் அன்னா. ”லஞ்சம் , துன்புறுத்தல் இவை எதுவும் என் தந்தையை காப்பாற்ற போவதில்லை” என்பவர் இது குறித்து மீடியம் இணையதளத்தில் எழுதியுள்ளார். அதில் இவரை ச் சந்தித்த பணக்காரர் குறித்தும் விவரித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு சாலை விபத்து சம்பந்தமாக சீன அரசு குய் மின்காயை கைது செயதது. பின்னர் அவரை சீன அரசு பற்றி வெளிநாடுகளுக்கு தெரிவித்த குற்றத்திற்காக அவரை சிறையில் அடைத்தனர். குய...