மாமியார் காமிக்ஸ் கதை சொதப்பல்கள்!
image- sadhguru.org எழுதுவதற்கான முயற்சிதான். வேறொன்றுமில்லை. 1 சற்றே பாழடைந்து கருமை பூக்கத் தொடங்கிய மாடிவீடு. மெல்லிய ஒளி ஜன்னலில் தெரிகிறது. படுக்கை அறை. அதில்தான் மேசை விளக்கு மஞ்சள் நிறத்தில் எரிகிறது. அதன் அருகில் புகைப்படம், அலார கடிகாரம், ஸ்மார்ட் போன் வைகப்பட்டுள்ளது. அருகில் படுக்கையில் இருவர் படுத்திருக்கின்றனர். கணவரிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி கேட்டுக்கொண்டிருக்கிறது. கவிதா, குறட்டை ஒலியால் தூக்கம் தடைபட்டு அவரின் இடது புறத்தில் புரண்டுகொண்டிருக்கிறாள். இன்னும் நீ எந்திரிக்கலையா? நேரமே எந்திரிச்சாத்தானே புருஷனை வேலைக்கு அனுப்பிவிட்டு குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்ப முடியும்? கனவா நிஜமா என குழப்பமாகும் கவிதா எழும்போது அது கனவல்ல என்று தெளிவாகிறாள். இது அதே குரல்தான். 2 சமையல் அறை, குக்கரில் விசில் அடித்துக்கொண்டிருக்க, கவிதா வேகமாக வேலை செய்துகொண்டிருக்கிறாள். காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருக்கிறாள். சிங்கில் குழாயிலிருந்து இருந்து நீர் கொட்டிக்கொண்டிருக்கிறது. அப்போது, திறந்த ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் அறைக்குள் வந்து கவிதாவின் முகம் மீது படுகிறது. சூரிய ஒளியை நோக்