இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது!

படம்
                டாக்டர் எஸ் பாலசுப்பிரமணியன் லான்செட் இந்தியா டாஸ்க் போர்ஸ் குழு மூன்றாவது அலை கொரோனா தொற்று குழந்தைகளை தாக்கும் என்று கூறப்படுகிறதே ? பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நான்கு சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது . இந்த எண்ணிக்கை விரைவில் 12 சதவீதமாக உயரலாம் . பிற நாடுகளிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது . ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் மீதான நோய் பாதிப்பு 9 சதவீதமும் , அமெரிக்காவில் பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 12. 4 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஐரோப்பாவில் நோயால் தாக்கப்பட்டவர்களின் வயது பதினைந்துக்கும் குறைவுதான் . இந்த தாக்குதலும் கூட முதல் , இரண்டாவது அலையில் ஏற்பட்டதுதான் . மூன்றாவது அலையில் இப்படி தாக்குதல் நடைபெறுமா என்று கூற முடியாது . தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தினால் வயது வந்தோருக்கும் குழந்தைகளுக்கும் பெரியளவு பாதிப்பு நேராது என்று கூறலாம் . படுக்கைகளும் வெண்டிலேட்டர்களும் அதிகம் தேவைப்படுமா ? முதல் மற்றும் இரண்டாவது அலையில் பெரியளவு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை . ஆனால் இரண்டாவது அல

நூற்றாண்டுகளாக காதலியைக் கரம் பிடிக்க காத்திருக்கும் காதலன்! மூன்ஷைன் அண்ட் வேலன்டைன்

படம்
            மூன்ஷைன் அண்ட் வேலன்டைன் சீன டிவி தொடர் யூட்யூப் பூமியில் வாழும் நரிக்குலம் வடக்கு , தெற்காக பிரிந்து தனியாக வாழ்கிறது . இதில் தெற்கில் வாழ்பவர்கள் வடக்கில் இருப்பவர்களை விட சிறப்பாக மனிதர்களுடன் இணக்கமாக வாழ்கிறார்கள் . வடக்கில் வாழ்பவர்கள் மனிதர்களுடன் அதிக இணக்கமின்றி தனியாக இருக்கிறார்கள் . ஒட்டுமொத்த குலத்திற்கும் தலைவராக சதிகள் நடக்கின்றன . இதில் ஜிங்டிங் என்ற பார்வையில்லாத தெற்கு குல தலைவரின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதுதான் கதை . கதையை மேலே சொன்னபடியும் சொல்லலாம் . பல நூறாண்டுகளாக தொடரும் காதல் உறவை எப்படி நவீனத்திலும் காப்பாற்றி மண உறவில் முடிக்கிறார்கள் இரண்டு காதலர்கள் என்றும் கூறலாம் . தெற்கு நரிக்குலத் தலைவராக இருப்பவர் ஹெலன் ஷி . இவரின் அதிகாரப்பூர்வ பெயர் , ஜிங்டிங் . இவருக்கும் இவரது தந்தைக்கும் திருமண விஷயத்தில் நடக்கும் பிரச்னையால் குலமே இரண்டாகிறது . ஹெலன் அப்பாவை அதிகம் விமர்சிக்காமல் அமைதியாக தனது வா்ழ்க்கையை நடத்துகிறார் . இவர் நரிக்குலத்திற்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவில் பிறந்தவர் . இதனால் என

சடலங்களை மறைக்க சீரியல் கொலைகாரர்கள் மெனக்கெடுகிறார்களா?

படம்
                சித்திரவதை தொடர் மற்றும் சைக்கோ கொலைகார ர்களை மோசமானவர்கள் என்று எப்படி பிரிப்பது , இதற்கு பலரும் பல்வேறு வித எடுத்துக்காட்டுகளை கூறுவார்கள் . ஆனால் எளிதான ஒன்று யார் உங்களையும் , உங்களது நண்பர்கள் , குடும்ப உறுப்பினர்களை கொல்கிறார்களோ அவர்கள்தான் என்று கூறலாம் . ஒரு கொலைகாரர் எந்தளவு மோசமானவர் என்பதை அவர் செய்யும் சித்திரவதையை வைத்து முடிவு செய்யலாம் . இந்த வகையில் டெப்ரி டாமர் , அனைத்து குற்றவாளிகளுக்கும் முன்னோடியான ஆள் . இவர் , தான் கொல்லும் ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பிறகு தலையில் ட்ரில்லிங் மெஷி்ன் வைத்து துளையிடுவார் . பிறகு அமிலங்களை எடுத்து உள்ளே ஊற்றுவார் . இதனால் பலரும் மயக்கத்தில் இருக்கும்போது , இறந்துபோனார்கள் . எதற்கு இப்படி சித்திரவதை செய்தீர்கள் என்று விசாரித்தபோது , நான் செய்யும் விஷயங்களை வலியில்லாமல் செய்ய நினைத்தேன் என பேட்டி கொடுத்தார் டாமர் . பிரான்சில் குழந்தைகளை சித்திரவதை செய்து கொன்ற கில்லெ்ஸ் டி ரைஸ் , பதினைந்தாம் நூற்றாண்டில் முக்கியமான கொலையாளி . இதற்கு அடுத்து ஆல்பர்ட் பிஷ் உள்ளே வர