இடுகைகள்

அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலநிலை மாற்ற நீதி

சமூக நீதியான காலநிலை மாற்றத்திற்கான மோதல்கள்  நேவா லோவ் / சாரா மேவ்ஸ் / மாக்டலீனா பொலோசெக் --- "சமூக நீதியான காலநிலை பாதுகாப்பு இப்போவே!" என்று எழுதப்பட்ட ஒரு சுவரொட்டியையும், மற்ற சுவரொட்டிகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்டுகிறார்கள். மூலம்: SZ புகைப்படம் --- காலநிலை கொள்கை நடவடிக்கைகள் பெரும்பாலும் சக்தியற்ற தன்மை மற்றும் அதிகாரமின்மை உணர்வுகளால் சந்திக்கப்படுகின்றன, இது அச்சங்களையும் வெறுப்பையும் தூண்டுகிறது. இந்த வலைப்பதிவு தொடர் கேட்கிறது: சமூக நீதியான காலநிலை மாற்றம் எப்படி இருக்கும்? நீதியான காலநிலை கொள்கைகளுக்கு நாம் எவ்வாறு ஏற்பை உருவாக்க முடியும்? காலநிலை நெருக்கடியை புறக்கணிக்க முடியாது. வாழ்க்கையின் சூழலியல் அடித்தளங்களின் அழிவு தொடர்ந்து நடந்து வருகிறது - காலநிலை நடுநிலைமை இலக்கு ஒரு முடிவான விஷயமாக இருந்தாலும் கூட. 2015 ஆம் ஆண்டில், பாரிஸ் ஒப்பந்தத்தின் மூலம், உலக சமூகத்தின் ஒரு பெரும் பகுதி, உலக வெப்பமயமாதலை இரண்டு டிகிரி செல்சியஸுக்குக் கீழே, முன்னுரிமையாக 1.5 டிகிரி செல்சியஸுக்கு மட்டுப்படுத்தும் இலக்கை நிர்ணயித்தது. இந்த இலக்கை அடைவதற்கான வாய்ப்பு சாளரம் வேக...

சீனா, உங்களை அன்புடன் வரவேற்கிறது.

Here is the **Tamil translation** of the article from *The Guardian*: --- **பெய்ஜிங்கின் செய்தி உலக சுற்றுலாப் பயணிகளுக்கு: இங்கே வந்து சீனாவை நீங்களே மதிப்பீடுங்கள்**   – ஜிச்சென் வாங் இன்று மத்திய பெய்ஜிங்கில் நடந்து சென்றால், ஒரு விஷயம் விரைவில் தெளிவாகிறது: வெளிநாட்டவர்கள் திரும்பி வந்துவிட்டனர். அவர்கள் தடைசெய்யப்பட்ட நகரத்திற்கு வெளியே புகைப்படங்கள் எடுக்கிறார்கள், குலோ மற்றும் சான்லித்துன் பகுதிகளில் உள்ள கஃபேக்களில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த மாற்றம் ஆன்லைனிலும் தெரிகிறது; யூடியூபில் "சீனா என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது" அல்லது "சீனாவில் எனது முதல் வாரம்" என்ற தலைப்புகளில் வீடியோக்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலான உருவாக்குநர்கள் சுற்றுலாப் பயணிகள், சீன நிபுணர்களோ அல்லது பத்திரிகையாளர்களோ அல்ல, அவர்களில் பலர் முதன்முறையாக இந்த நாட்டைச் சந்திக்கிறார்கள். இந்த மீள் எழுச்சி குறிப்பிடத்தக்கது, ஏனெனில் பல வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு சீனாவின் கதை மூடல் மற்றும் அதிகரித்த பாதுகாப்பு – மேற்குலகுடனான மூலோபாய போட்டி தீவிரித்தல், விரிவாக்கப்பட்ட உளவு எ...

ரஷ்யாவில் அடைக்கலமான அமெரிக்க குற்றவாளி

**தமிழ் மொழிபெயர்ப்பு:** --- **www.occrp.org** **2 பில்லியன் டாலர் அமெரிக்க தொலைமருத்துவ மோசடியின் கூறப்படும் தலைமை குற்றவாளி ரஷ்யாவில் ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்** 2015 முதல் 2022 வரை, ஒரு குற்றவியல் குழு அமெரிக்கா முழுவதும் உள்ள டஜன் கணக்கான மருந்தகங்களைப் பயன்படுத்தி, மோசடியான மருந்து மருந்துகளுக்காக காப்பீட்டு நிறுவனங்களுக்கு 2 பில்லியன் டாலர்களை வியக்கவைக்கும் வகையில் பில்செய்தது. அந்த குழு 758 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து, அதிகளவு பணத்தை கடல்கடந்த கணக்குகள் மூலம் கறைபடுத்தி, பின்னர் லாபத்தை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர் அல்லது தங்கள் செயல்பாட்டில் மீண்டும் முதலீடு செய்தனர். இந்த சதித்திட்டத்தில் அவர்களின் பங்கிற்காக கலிபோர்னியாவில் 15 பேர் தண்டனை பெற்றனர், மேலும் ஏழு பேர் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், சிலருக்கு பின்னர் பத்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த குழுவின் தலைவர் என்று வழக்கறிஞர்கள் அடையாளம் காட்டும் 34 வயதான லாஸ் ஏஞ்சல்ஸைப் பிறந்த பிரையன் சட்டன் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. புரூக்ளினில் உள்ள அமெரிக்க வ...

ரயில் விபத்து ஏற்படுத்தி நினைவுகளை இழக்கச்செய்தவர்களை பழி வாங்கும் மேஜிக் விண்ட்!

படம்
  ஆத்மாக்கள் அடங்குவதில்லை லயன் முத்துகாமிக்ஸ் மூலம் - செர்ஜியோ போனெல்லி பதிப்பகம் தமிழில் எஸ் விஜயன் # 49வது சென்னை புத்தக காட்சி 2026 இதுதான் மேஜிக் விண்ட் என்ற நாயகனுக்கு முதல் அறிமுக கதை. முத்து காமிக்ஸ் ஸ்டாலில் இரண்டு காமிக்ஸ்கள் இருந்தன. அதில், வேறொன்றை எடுத்தேன். அப்புறம் பார்த்தால் இதுதான் தொடக்க கதை. நாயகன் யாரென்ற புரிந்துகொண்டால்தான் அடுத்த கதைக்கு நகர முடியும். எஸ் விஜயன் அப்படி எல்லாம் கிடையாது என்று சொல்வார். அதை எப்போதும் போல கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்.  இந்த நூலை கருப்பு வெள்ளையிலேயே உருவாக்கியிருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். காலக்கட்டாயத்திற்காக கலர் போல. அடர்த்தியான நிறங்களைக் கொண்ட பூச்சு. சியோக்ஸ் இனத்தைச்சேர்ந்த செவ்விந்தியர்களின் மாந்திரீகர் எதையோ தேடி வருகிறார். பார்த்தால், அவர் அங்கு குற்றுயிராக கிடக்கும் நாயகன் எழுவதைப் பார்த்து தூக்கி வந்து சிகிச்சையளிக்கிறார். அவருக்கு தான் யார் என்றும் தெரியவில்லை. நினைவுகள் அழிந்துவிட்டிருக்கின்றன. மாந்திரீகருக்கு அவருடைய காலம் முடிவடையும் தருவாயில் உள்ளார். ஆனால், அவருக்கு அடுத்து அவரது நிலையில் இருக்கக்கூட...

மாட்டிறைச்சியின் வரலாறு! - நூல் விமர்சனம்

படம்
  பீப் - எ குளோபல் ஹிஸ்டரி லோர்னா பியாட்டி ஃபார்னெல் கட்டுரை நூல்  மாட்டிறைச்சி என்பது உலகளவில் பல கோடி மக்கள் உண்ணும் உணவு. மக்களில் அதிகம் எதை பயன்படுத்துகிறார்களோ, அதையே அரசியல்வாதிகள் தங்களுடைய ஆயுதங்களாகப் பயன்படுத்துவார்கள். அந்த வகையில் தேசியவாத தன்மையில் மாட்டிறைச்சியும் கூட முக்கிய அடையாளமாக பயன்படுத்தப்பட்டது. இந்த நூலில், மாட்டிறைச்சியின் வரலாறு, அதை ஏன் ஃபீப் என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்,இறைச்சியை சமைக்கும் விதம்,இறைச்சியைச் சுற்றிச் சுழலும் அரசியல், கோழி இறைச்சி கடைகள், மாட்டிறைச்சியை வைத்துஎப்படி விளம்பரம்செய்து கல்லா கட்டின என ஏகத்துக்கும் ஏராளமான தகவல்கள் உள்ளன.  மாட்டிறைச்சி பற்றிய ஓவியங்கள், இலக்கியங்கள் என நிறைய தகவல்களை ஆராய்ச்சி செய்து எழுத்தாளர் எழுதியிருக்கிறார். மாட்டிறைச்சி என்பது கால்நடைகள் அதிகம் வளர்க்கும்நாடுகளில் எப்போதுமே இருக்கிற ஒன்று. நியூசிலாந்தில் மாட்டிறைச்சி வளர்ப்பு பற்றி எழுதியுள்ளது சிறப்பானது. பொய்யான போலியான சுயநல அரசியலுக்குள் மாடுகளை இழுத்துவிட்டு மக்களை ஏமாற்றுவது இந்தியாவில் சாத்தியமாகிறது. உலக நாடுகளில் அப்படி தந்திரங்கள் ...

பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்!

படம்
  பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்! ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தால், அதற்கு முன்னே ஆட்சியில் இருந்தவர்கள் செய்த கட்டுமானப்பணிகளை சிதைப்பது, பெயரை மாற்றுவது, செயல்பாட்டில் உள்ளவற்றை அழிப்பது என நிறைய குதர்க்கங்களை காழ்ப்புணர்ச்சியால் செய்வார்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற கட்டிடம் அப்படித்தான் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. அதன் பின்னே உள்ளது தனிமனிதர் ஒருவரின் அற்பமான ஆணவமும், காழ்ப்புணர்ச்சியும் மட்டுமே.   அந்த வகையில் அமெரிக்காவில் அரசு பயன்படுத்தும் எழுத்துரு மாற்றப்படுவதாக அரசு செயலர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் பைடன் ஆட்சியில், 2023ஆம் ஆண்டு 'சன்ஸ் ஷெரிஃப் காலிப்ரி' என்ற எழுத்துரு அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த எழுத்துரு, பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கும் உதவுவதாக இருந்தது. இப்போது, தொழிலதிபர் ட்ரம்ப் அதிபராகி, குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் வெள்ளையர்களுக்கு ஆதரவான இனவெறிப்போக்கு அதிகரித்துள்ளது. கருப்பினத்தவர்களின் வரலாற்றை மாற்றி பெர...

டாடா - தேசத்தை வளர்ந்த நிறுவனத்தின் கதை - ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன்

 மறுவாசிப்பு நூல்கள் டாடா - நிலையான செல்வம்  ஆங்கிலத்தில் ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன் கிழக்கு பதிப்பகம் மூல நூல் -கிரியேஷன்ஸ் ஆப் வெல்த் வணிக நூல் டாடா குழுமம், நூறாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இயங்கி வருகிறது. அதாவது அதன் குழுமத்தில் உள்ள பல நிறுவனங்கள் நூற்றாண்டுகளாக இந்தியாவில் தொழிலை நடத்தி வருகின்றன. பார்சி இனத்தவர்களே டாடா குழுமத்தின் இயக்குநர்கள், தலைவர்கள்.  365 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை ஒருவர் வாசிக்கும்போது முதல்முறையிலேயே டாடா குழுமத்தினர் எந்தளவு உயரிய கொள்கை கொண்டு உழைக்கிறார்கள், வணிகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்திற்கு ஆட்படுவார்கள். நூலை எழுதிய நூலாசிரியர் லாலாவின் நோக்கமும் கூட அதுதான். ஆனால், அவர் டாடா நிறுவனத்தில் வேலையைப் பெற்றுள்ளதும், இந்த நூலுக்கு ரத்தன் டாடா உரை எழுதிக் கொடுத்ததும் நூலை சற்று பின்னுக்கிழுப்பது போல தோன்றுகிறது. இதை நூலை வாசிப்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.   ஒரு பத்திரிகையாளராக லாலா நூலை எழுதி இருந்தால் அந்த நூலில் டாடா குழுமத்தில் உள்ள பிரச்னைகள், செயல்பாட்டில் உள்ள தவறுகள், அவர்கள் மீது மக்கள் கூறிய புகார்கள், ...

ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா?

படம்
  ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா? நீங்கள் அரிசி ஆலையில் வேலை செய்கிறீர்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ப்ளுஸ்கை ஆகிய சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கிறீர்கள். அதில் உங்கள் மனதிற்கு பிடித்த படித்த பதிவுகளை போடுகிறீர்கள். பொதுவாக ஒருவர் தனக்கு பிடித்தாற்போன, மனசாட்சிப்படி சொல்லும் எழுதும் கருத்துகள் நிறையப்பேரை போய்ச்சேரும். பலருக்கும் பிடித்ததாக இருக்குமோ இல்லையோ, சிறு வட்டார ஆட்களேனும் அந்த எழுத்துக்களை படிக்க கூடுவார்கள். இதில் அரிசி ஆலை அதிபர் பெரிதாக தலையிட ஒன்றுமில்லை. வேலை நேரத்தில் போனை நோண்டினால் தவிர. ஆனால், அதுவே தனிநபர், சமூக வலைதளத்தில் பிராண்டு போல தனிப்பட்ட ஆளுமையை உருவாக்கிக் கொண்டுள்ளார். அவரை டிவி நிறுவனம் வேலைக்கு எடுக்கிறது. அப்போதும் அந்த தனிநபர் முன்னைப்போலவே சுதந்திரமாக சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிர முடியுமா? அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே நடைமுறை உண்மை.  அண்மையில் வார இதழில் வேலை செய்யும் மூத்த நிருபர் ஒருவரிடம் பேசினேன். அவர் நிறைய இலக்கிய நூல்களைப் படிப்பவர். ஆனால், அதைப்பற்றி பேசுபவர்,இணையத்தில் எழுத ...

வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம்

படம்
  வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம் இங்கிலாந்தில் வரும் 2029ஆம் ஆண்டு பொது தேர்தலில் பதினாறு வயதானவர்கள் வாக்களிக்க தகுதி பெறுவார்கள். வாக்களிக்க பதினாறு வயது என்பது ஏற்கெனவே பல நாடுகளில் உள்ள நடைமுறைதான். சில நாடுகள் அதை ஏற்கவில்லை. குறிப்பாக உலகிலுள்ள 85 சதவீத நாடுகளில் வாக்களிக்கும் வயது 18 ஆக உள்ளது. இங்கிலாந்தில் இதற்கு முன்னர் 1969ஆம் ஆண்டு, வாக்களிக்கும் வயதை 21 இலிருந்து 18 ஆக மாற்றினா். அதற்குப் பிறகு இப்போது தொழிலாளர் கட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அதன் சுலோகன் பிரகாரம் மாற்றம் வந்திருக்கிறது.  பிரேசில், அர்ஜென்டினா, நிகரகுவா, மால்டா, ஜெர்சி, ஆஸ்திரியா, கியூபா, ஈகுவடார் ஆகிய நாடுகளில் பதினாறு வயதி்ல வாக்களிக்கும் உரிமை உள்ளது. வாக்களிக்கும் வயதை குறைப்பது அரசியல் கட்சிகளுக்கு உதவும் என்பது சரி. ஆனால், வாக்களிப்பவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பது ஆய்வுக்குரியது. பதினாறு வயது என்றால் இயக்குநர் சபாபதி எடுத்த திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதைக் கடந்து பார்த்தால், இங்கிலாந்தின் துணை பிரதமர் வாதத்தை வலுப்படுத்த தான் அம்மாவானது பதினாறில்,வரி ...

சீனாவில் சாதித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றிக்கதை!

 சீனா டிஸ்ட்ரப்டர்ஸ்  சீன டெக் நிறுவனங்களின் கதை கட்டுரை நூல் இந்த ஆங்கில நூல், மேற்குலகு கொண்டிருக்கும் சீனா மீதான மூடநம்பிக்கைகளுக்கு சவால் விடுகிறது. சீன பொருள் என்றால் மட்டமானது. நிறுவனம் என்றால் மோசடி செய்யக்கூடியது என வலுவான பிரசாரத்தை செய்துவருகிறார்கள். அதை உடைத்து வரும் முக்கியமான நிறுவனங்களான அலிபாபா, டென்சென்ட், ஹூவெய், ஷாவ்மி, ஹெங்கன், லெனோவோ, ஹெயர் ஆகிய நிறுவனங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது.  வணிக நிறுவனங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், சீனாவில் உள்ள அரசியல், அதற்கு டெக் நிறுவனங்கள் செய்துகொள்ள வேண்டிய சமரசம் பற்றியும் பேசியுள்ள நூல் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. வணிக ரீதியான விஷயங்களோடு அரசியலும் பின்னிப்பிணைந்துள்ளது. அப்படியல்லாமல் சீனாவில் எந்த வணிக நிறுவனமும் வளர முடியாது. அந்த வகையில் அலிபாபா, ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை பெறுகின்றன. அலிபாபா உள்நாட்டில் சிறப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஹூவெய் உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் தனது செயல்திறனை நிரூபித்துள்ளது. அதைபற்றி விவரிக்கும் பகுதி சுவாரசியமாக உள்ளது. இன்று அந்த சீன நிறுவனத்திற்கு ஒரே...

சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி  சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்? அதிகாரம், புகழ், பணம் இதெல்லாம் ஒருவருக்கு திடீரென கிடைத்தால் எப்படியிருக்கும்? அதை அப்படியே தக்க வைத்துக்கொள்ள பல்வேறு தில்லுமுல்லுகளை செய்வார். இப்படித்தான் நார்சிசம் எனும் சுயமோகம் உருவாகிறது. சுயமோகிகளுக்கு கல்யாணம் என்றால் மாப்பிள்ளை, இழவு என்றால் பிணமாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏனெனில் மேற்சொன்ன நிகழ்ச்சிகளில் அவர்கள்தானே மையப்பொருள். இதை சொல்லும்போது தீவிரவாத தாக்குதல் நடந்து மக்கள் செத்தபோது தேர்தல் பிரசாரம் செய்தவர், விமானவிபத்தில் 270 இறந்தபோது லோ ஆங்கிள் அழகிய புகைப்படம் எடுத்து பதிவிட்டவர் பற்றி ஏதேனும் நினைவு வருகிறதா, அது உறுதியாக தற்செயலானதே...  சுயமோகிகளுக்கு மனதில் கருணை கிடையாது.  அரசியல்வாதிகள் ஊழல்களில் சிக்குவது ஏன்? அதிகாரம், பணபலம், புகழ் கிடைக்கிறது. அதை நோக்கி பங்கு போட்டுக்கொள்ள அனுபவிக்க நிறைய ஆட்கள் வருகிறார்கள். பொதுவாக பலவீனமான ஒருவரை வலிமையான ஒருவர் பார்த்தால் அவரை கேலி சித்திரவதை செய்ய நினைப்பார். அந்த வகையில் பஞ்சத்திற்கு வழங்க வேண்டிய நிதியை அர...

கட்சி, நாட்டிற்காக தன்னை தியாகம் செய்துகொள்ளும் மக்களே தேவை - ஷி ச்சின்பிங்

படம்
  விசுவாசம் அனைத்துக்கும் மேலானது! தாய்நாடு என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சீன அதிபர் ஷி ச்சின்பிங், வெளிநாட்டில் வாழும் சீனர்களை உங்கள் தந்தை நாட்டிற்கு நன்றிக்கடனை திருப்பிச் செலுத்துங்கள் என்று பேசுகிறார். எதற்காக? உலகம் முழுக்க சீன மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அதற்கு உள்நாட்டு அரசியல் நிலைமை, வேலையின்மை, கல்வி, தொழில்வாய்ப்பு என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இவர்களை ஷி, பொதுவுடைமைக் கட்சியின் கீழ் ஒருங்கிணைக்க நினைக்கிறார். அனைவருக்கும் தனிக்கனவுகள் உண்டு, ஆனால், அதிபர் காணச்சொல்வது சீனக்கனவை. அது அனைவருக்குமான கனவு என்பதாக கட்டமைக்கிறார்.  நாடு, கட்சி, அதிபர் ஷி ச்சின்பிங் என மூன்றையும் சீனாவிலுள்ள மக்கள் நேசிக்கவேண்டும். காதலிக்க வேண்டும். வாழ்க்கையை அப்படியே அர்ப்பணிக்க வேண்டும். அதன் பெயர்தான் விசுவாசம். கட்சியை மட்டுமே மையப்படுத்திய தேசப்பற்று. அப்படியல்லாது கேள்வி கேட்பவர்களை, கட்சி உறுப்பினர்கள் மீது ஊழல் பாலியல் புகார்களை சொல்பவர்களை ஷி மன்னிப்பதில்லை. பாலியல் புகார் சொன்ன டென்னிஸ் வீராங்கனை ஒருவர் காணாமல் போனார். திரும்ப வந்தபோது தனது ஓய்வை அறிவித்துவி...

முஸ்லீம்களை தீவிரவாதிகளாக்கும் அமைச்சர், காவல்துறை உயரதிகாரி, தீவிரவாதி ஆகியோரைக் கொன்றால் வாய்மை வென்றுவிடும்!

படம்
 சத்யமேவ ஜெயதே தெலுங்கு ராஜசேகர், சிவாஜி, சஞ்சனா, ஷெரில் பின்டோ இசை சின்னா இயக்கம் ஜீவிதா அரசு மருத்துவர் இக்பால் அன்சாரி என்பவர், தீவிரவாதி என குற்றம்சாட்டப்படுகிறார். அவரை குறிப்பிட்ட இடத்திலுள்ள நீதிமன்றத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும். அதற்கு நாயகன் உட்பட சில அதிகாரிகளை தேர்ந்தெடுத்து குழுவை தயாரிக்கிறார்கள். அக்குழு, இக்பாலை நீதிமன்றத்தில் சமர்பித்ததா இல்லையா என்பதே கதை. மீண்டும் என்கவுண்டர் அதிகாரியாக ராஜசேகர் நடித்திருக்கிறார். இம்முறை படத்தில் சிவாஜிக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவரும் ஷெரில் பின்டோவுக்கும் பாடல் காட்சிகள், கிளு கிளு காட்சிகள், காமெடி ஆகியவை உண்டு. குழுவிலுள்ளவர்களின் குடு்ம்பங்களை காட்டும்போதே, இவர்களை கொத்துக்கறியாக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிடுகிறது. அதேதான் அதேதான். படத்தில் பாஸ்டர்ட் என்ற கெட்ட வார்த்தையை மட்டும் நாயகன் எத்தனை முறை சொல்லியிருப்பார்  என்று எண்ண முடியாது. அத்தனை முறை விரக்தி அடைகிறார். கையாலாகாத்தனம், இயலாமையில் அலறிக்கொண்டே இருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கென இருக்கும் ஒரே ஆன்மா சிவாஜி மட்டுமே. காதல் என்ற பெயரில் மகாலட்சுமி...