இடுகைகள்

உணவு வழங்கல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிற மாநிலங்களை விட பஞ்சாப் வெளியிடும் மாசு குறைவுதான்!

படம்
நெற்கழிவுகளை எரிக்காமல் இருக்க விவசாயிகளுக்கு மானியங்களை வழங்குவோம்.  பஞ்சாப்பில் அறுவடை முடிந்ததும் நெற்கழிவுகளை எரிப்பது வழக்கம். மாறிவரும் சூழலில், இந்தப் பழக்கம் சூழல்கேடுகளை உருவாக்கி வருகிறது. இதனைக் குறைக்க பஞ்சாப் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயிர்களை எரிக்கும் நிகழ்வு போன ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக நடந்துள்ளது. இதைத்தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? இந்த பிரச்னைக்கு நீண்டகால நோக்கில் யோசித்துத்தான் தீர்வுகளைக் காண முடியும். நாங்கள் விவசாயிகளுக்கான எந்திரங்களை தற்போது மானிய விலையில் வழங்கி வருகிறோம். கடந்த ஆண்டில் 28 ஆயிரம் இயந்திரங்களை வழங்கி உள்ளோம். இந்த ஆண்டில் 22 ஆயிரம் இயந்திரங்களை வழங்கி உள்ளோம். மேலும் விவசாயிகளுக்கு நெல் குவிண்டாலுக்கு நூறு ரூபாயை மானியமாக வழங்கிவருகிறோம். இது மத்திய அரசு வழங்கும் பொருட்களுக்கான குறைந்த விலையை விட அதிகமாகும். மாநில அரசாக எங்களிடம் உள்ள ஆதாரங்களை வைத்துத்தான் நாங்கள் செயல்பட முடியும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் எங்களுக்கு உதவினால் மட்டுமே மாசுபாடுகளை குறைக்க முடியும். விவசாயிகளு