இடுகைகள்

இடுப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இலியானாவின் இடுப்பில் சித்தார்த் ஆடும் ஆட்டம்!

படம்
        இலியானாவின் இடுப்பில் சித்தார்த் ஆடும் ஆட்டம்! ஆட்டா சித்தார்த், இலியா இசை தேவி ஶ்ரீபிரசாத் அமைச்சரின் மகன், கல்லூரி செல்லும் இளம்பெண்ணை வல்லுறவு செய்து சாலையில் கொன்று வீசிவிட்டு செல்கிறான். அதற்கான நியாயத்தை நாயகனும், நாயகியும் சேர்ந்து பெற்றுத் தருகிறார்கள். ஆட்டா என்றால் மைதா கலந்ததா, கோதுமை மட்டுமே என்று கேட்காதீர்கள். ஆட்டம். நாயகன் ஆடுகிற ஆட்டம். கடைசி பத்து நிமிடம் மட்டும் நாயகனுடன். மீதி நேரம் எல்லாம் நாயகியுடன். தயாரிப்பாளர் எம்எஸ் ராஜூவே கதை, திரைக்கதையை எழுதியிருக்கிறார். அதனால் படம் சிறப்பாக இருக்கிறது என நினைத்துவிடவேண்டும். திரைக்கதை இலியானாவின் மார்பு, தொப்புள், தொடை என தொடர்ச்சியாக பயணித்துக்கொண்டே இருக்கிறது. கீழே இறங்கவே இல்லை. படத்தின் கதை, திரைக்கதையை எல்லாம் விட்டுவிடுங்கள். பாடல்களில், நாயகியை எந்தளவு உடையை உரிக்க முடியுமோ அந்தளவு உரித்து காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். பிறகு, இலியானவை நடிக்கவா புக் செய்ய முடியும்? டைப்காஸ்ட்தான். இலியானாவும் சாங்கோபாங்கோவாக இழைந்திருக்கிறார். படத்தின் கதை? சித்தார்த், சினிமா தியேட்டர் ஆபரேட்டரின் மகன்....

அமைச்சரின் பெண்ணை மீட்கச்செல்லும் கம்யூனிச லட்சியத் திருடன்!

படம்
            ரெச்சிப்போ நிதின் , இலியானா கம்யூனிச கருத்து கொண்ட திருடனைப் பயன்படுத்தி உள்துறை அமைச்சரின் ஐநூறு கோடி கள்ளப்பணத்தை கொள்ளையடிக்கும் அதிகாரியின் கதை . அ ந்த அதிகாரியின் கதையை சொல்லியிருந்தால் கூட பார்க்க நன்றாக இருந்திருக்கும் . அதையும் ஊறுகாய் போல பயன்படுத்தி இலியானாவின் தசை மேல் பயணிக்கிறது கதை . நிதின் படத்தில் திருடனாக நடித்திருக்கிறார் . திருடன்தான் . ஆனால் நல்ல திருடன் . பிளாட்பாரம் , கோவில் வாசல் என தூங்கி எழுபவர் , தான் சம்பாதிக்கும் பணத்தை மதுவுக்கு செலவிடுகிறார் . ஆனால் , மாது , நிலம் என செலவிடாமல் ஏழைகளுக்கு , படிக்க வேண்டிய வயதில் பிச்சை எடுக்கும் பிள்ளைகள் , வேலை செய்யும் சிறுவர்களுக்கு செலவிடுகிறார் . இப்படிப்பட்ட லட்சிய திருடனை போலீஸ் ஏறத்தாழ கைது செய்யும் அளவுக்கு அருகில் வந்துவிடுகிறது . அப்போதுதான் காவல்துறை அதிகாரி , திருடனின் கம்யூனிச லட்சியத்தை அறிந்து வியக்கிறார் . நான்கு கி . மீ . ஓடிவந்து அவனுக்கு கை கொடுத்து அமைச்சரின் கள்ளப்பணத்தை திருடிச்செல்லுமாறு கூறுகிறார் . திருடனுக்கு அது போல ...