இடுகைகள்

தடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசுக்கும், டெக் நிறுவனங்களுக்குமான மேலாதிக்க போட்டி!

படம்
          அதிகாரப் பந்தயம் - அரசு, சமூக வலைத்தளங்களின் மேலாதிக்க மோதல் போக்கு! இணையத்தில் உள்ள பல்வேறு சமூக வலைத்தளங்கள் மீது நெருக்கடிகள் திணிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் டெலிகிராம் குறுஞ்செய்தி நிறுவனத்தின் தலைவர் பாவெல் மீது குற்றச்சாட்டு பதிவாக, அவர் பிரான்சில் கைதானார். பிரேசில் நாட்டில் எக்ஸ் வலைத்தளம் நீதிமன்ற பிரதிநிதியை நியமிக்காத காரணத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மெட்டா நிறுவனம், பைடன் ஹாரிஸ் ஆகியோரின் நிர்வாகத்தால் சமூக வலைத்தள தணிக்கையை செய்யுமாறு நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறது. டெலிகிராம் நிறுவனம், போதைப்பொருட்கள் கடத்தல், சட்டவிரோத பரிவர்த்தனைகள், குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல், ஆபாச வீடியோக்கள் பகிரல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. இதுபற்றிய தகவல்களை அரசு அமைப்புகளுக்கு தருவதில் டெலிகிராம் ஆர்வம் காட்டவில்லை. பிரேசில் நாட்டில் உச்சநீதிமன்ற நீதிபதி எக்ஸ் தளத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். நீதிபதி டீ மோரஸ், எக்ஸ் தளம் நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தும் பிரதிநிதிகளை நீக்கியதால் இப்படியான தடை உத்தரவ...

திருமணமாகாமல் நூறு குழந்தைகளுக்கு தந்தையானவர்!

படம்
            திருமணமாகாமல் நூறு குழந்தைகளுக்கு தந்தையானவர்! ஒன் இந்தியா, எஸ்எஸ் மியூசிக், பிகைண்ட்வுட்ஸ் யூட்யூப் தளங்கள் போல சல்லித்தனமாக தலைப்பு அமைந்துவிட்டது. அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். டெலிகிராமின் நிறுவனர், இயக்குநர் பாவெல் துரோவ், பிரான்சில் கைதாகி விடுவிக்கப்பட்டிருக்கிறார். டெலிகிராமில் பாலுறவு வீடியோக்கள் பகிரப்படுவது, தவறான சட்டவிரோதப் பயன்பாடு ஆகியவை கைதுக்கான காரணம் என கூறப்படுகிறது. உண்மையில் ஒரு ஆப்பை குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒருவர் தொடங்குகிறார். ஆனால், அதன் பயன்பாடு நாளடைவில் கட்டற்றதாக கட்டுப்படுத்த முடியாததாக மாறுகிறது. இந்த செயல்பாடு, அதைப் பயன்படுத்தும் மக்களின் கைகளில் உள்ளது. இதற்காக எதற்காக ஆப் தொடங்கினாய், உன்னால்தான் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கிறது என ஆப் உரிமையாளரை கைது செய்வது சின்னப்பிள்ளைத்தனமாக உள்ளது அல்லவா? அப்படி பார்த்தால் கோடிங் எழுதுகிறவர்கள் அனைவரும் தேசதுரோக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இதுவும் சாத்தியம்தான். 1984ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்து, இத்தாலியில் வளர்ந்தவர் துரோவ். இன்றை...

சுற்றுலா செல்லும் பயணிகள் கொடுக்கும் வருமானம்!

படம்
          சுற்றுலாப் பயணிகளுக்கான நாடுகள் சுற்றுலா செல்பவருக்கு மகிழ்ச்சியைத்தருகிறது. போகும் நாடுகளில் செலவழித்தால், அந்த நாடுகளுக்கு வருமானம் கூடுகிறது. பதிலாக சுற்றுச்சூழல் பிரச்னைகள், உள்ளூர் மக்களுக்கு தொந்தரவு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதை ஓவர் டூரிசம் என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் தலைநகரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருவதை எதிர்த்து சுவரின் கிராபிட்டி வரையப்பட்டு வருகிறது. நாடுகளைப் பொறுத்தவரை மக்களுக்கு கவனம் கொடுத்து வேலைகளை செய்பவர்கள் குறைவு. எனவே, வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப நகரங்களில் வசதிகளை செய்து கொடுத்து வருகிறார்கள். உள்ளூர் மக்களுக்கு குறைந்த தொந்தரவு கொடுத்து, அதிக காசை வீசியெறிந்துவிட்டு செல்கிற சுற்றுலா பயணிகளே அதிகம் தேவை. 2023ஆம் ஆண்டு சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை வந்த நாடு என்ற வகையில் லண்டன், டோக்கியோ நகரங்கள் பந்தயத்தில் முந்துகின்றன. இவை தலா 20 மில்லியன் பேர்களை ஈர்த்திருக்கிறது. ஹோட்டல் வாடகை, வரி, கப்பல் பயணம் ஆகியவற்றை அதிக செலவினம் காரணமாக சுற்றுலா பயணிகள் தவிர்க்கத் த...

சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா?

படம்
 சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா? கணினி, இணையம் ஆகிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையில் நுழைந்தபோது நிறைய மாற்றங்கள் நடந்தன. வேலையிழப்பு, பழைய தொழில்கள் அழிவு இதெல்லாம் நடந்தது. பழையன கழிதல் புதிது கிடையாது. இப்போது அந்த இடத்தை ஓப்பன் ஏஐயின் சாட்ஜிபிடி பிடித்திருக்கிறது.  கலிபோர்னியாவில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர், பீட்டர் பேக்கன், வகுப்பறையில் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி பாடங்களை நேர்த்தியாக நடத்தி வருகிறார். அதை அனுகூலமான வகையில் பயன்படுத்துவதோடு, அதைப்பற்றி ஜூம் மீட்டிங் கூட ஏற்பாடு செய்து பேசியுள்ளார். அனைத்து பாடங்களையும் ஆசிரியரே நடத்தாமல், சில எளிய விஷயங்களை சாட்ஜிபிடியிடம் ஒப்படைத்துவிடலாம் என்பது அவரது கருத்து. பாடங்களை முற்று முழுதாக ஆசிரியர் கற்றுத்தருவது அழுத்தங்கள் நிறைந்த பாடத்திட்டத்தில் இயலாத ஒன்று. அதை சாட்ஜிபிடி மூலம் சாத்தியப்படுத்திக்கொள்கிறார் பீட்டர்.  தான் நடத்திய ஜூம் சந்திப்பில் கல்வியில் சாட்ஜிபிடி ஏற்படுத்தும் சாத்தியம், அதை எப்படி பயன்படுத்துவது என நாற்பது சக ஆசிரியர்களிடம் விவாதித்திருக்கிறார் பீட்டர். மருத்துவம் தொடங்கி ராணுவ...

அரசின் சர்வாதிகாரம், பயங்கரவாதத்தை தட்டிக்கேட்கும் ஹேக்டிவிஸ்டுகளின் வரலாறு!

படம்
  கோடிங் டெமாக்கிரசி மௌரின் வெப் எம்ஐடி பிரஸ் கட்டுரை நூல்  உலக நாடுகளில் உள்ள அரசு சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கணினி போராளிகளைப் பற்றிய நிறை, குறை, போராட்டங்கள், வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிப் பேசுகிற நூல் இது.  அடிப்படை மதவாத நாடுகள், மதவாத நாடாக மாறிவரும் இந்தியா போன்ற நாடுகள், ஒற்றைக் கட்சி சர்வாதிகாரத்தில் இயங்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில், ஜனநாயகம் கிடையாது. அதை மரபான ஊடகங்கள், பத்திரிகைகள், தன்னார்வ அமைப்புகள் பேச முடியாது. அப்படி பேசினால் உடனே அந்த நபர்கள் காணாமல் போய்விடுவார்கள். சிறையில் விசாரணையின்றி காலவரையின்றி வைக்கப்படுவார்கள். விஷம் வைத்து அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள். இதுதான் சர்வாதிகார அரசில் உள்ளவர்களுக்கு நேரும் நிலைமை. ஆனால் இதெல்லாம் அடையாளம் தெரிந்து செயல்படும் ஆட்களுக்குத்தான்.  அதே சர்வாதிகார நாட்டில் இணையத்தில் இயங்கும் ஹேக்டிவிஸ்டுகள் உண்டு. இவர்கள் கணினி கோடிங்கைக் கற்றுக்கொண்டு அதை வைத்து அரசு செய்யும் குற்றங்களை உலகிற்கு கூறிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் குழுக்களாக அல்லது தனியாக இயங்கி வருவார்கள். இவர்களை பிடித்து சிறையில் அடை...

டிக்டாக்கை பொது எதிரியாக கட்டமைக்கும் அமெரிக்கா!

படம்
  மேற்குலக நாடுகளுக்கு வேற்றுகிரகவாசிகள் என்றுமே எதிரியாகவே இருக்கமுடியும். ஏன் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு பயம் கொள்கிறார்களா என்ன? முதலில் ரஷ்யாவை நினைத்து பீதியடைந்தவர்கள், திரைப்படம், பாடல், டிவிநிகழ்ச்சி, செய்தி என அனைத்திலும் அதற்கு எதிரான கருத்துகளை உருவாக்கினார்கள். இந்த ஆண்டுகூட உக்ரைனில் எடுக்கப்பட்ட ரஷ்ய எதிர்ப்பு ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் கிடைத்திருக்கிறது. அதேசமயம், வெள்ளையர்கள் செவ்விந்தியர்களை கொன்ற உண்மையைப் பேசும் ஸ்கார்சி படத்திற்கு ஒற்றை விருது கூட வழங்கப்படவில்லை. இப்போது சில ஆண்டுகளாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் சீனாவை பலவீனப்படுத்த வழி தேடுகிறார்கள். அந்நாட்டு நிறுவனங்களை முடக்கி வருகிறார்கள். அதற்கு தேசப்பாதுகாப்பு என்ற ஒற்றைக் காரணத்தைக் கூறுகிறார்கள்.  டிக்டாக் ஆப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். பதினைந்து நொடி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்ற ஆப். தற்போது, இசை, நூல் வாசிப்பு என வளர்ந்து வருகிறது. இதில் வீடியோ போட்டு சம்பாதிப்பவர்கள் உலகம் எல்லாம் உண்டு. இந்த நிறுவனத்தில் நாற்பது சதவீத பங்குகளை பைட் டான்ஸ் நிறுவனம் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் பூர்விக...

நிறுவனம் வளரும்போது மக்களின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியம்! - டிக்டாக் செயலி இயக்குநர் ஷூ ஸி சூ

படம்
  டிக்டாக் இயக்குநர் ஷூ ஸி சூ shou zi chew டிக்டாக் செயலி, இசைத்துறையை சிதைக்கிறது என சில இசைக்கலைஞர்கள் புகார் சொல்கிறார்களே? நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர் என்று முன்னர் கூறினீர்கள். ஆனால் அது உண்மையல்ல. எங்கள் தளத்தில் இருந்து அகற்றப்பட்ட சில பாடல்களை உங்களுக்கு காட்டுகிறேன். அதைப்பார்த்தால் உங்களுக்கு சில விஷயங்கள் புரியும்.  உங்களது செயலியின் வழியாக வெற்றி பெற்ற மனிதர்களையும் பார்த்திருக்கிறேன்.  டிக்டாக்கில் வீடியோக்களை உருவாக்குவதற்கான செலவு குறைவு. 15 நொடிகள் என பாடல்களை சுருக்குவதன் வழியாக நீங்கள் ஏராளமான புதிய பாடல்களைத் தேடி கேட்க முடியும். இப்படி செய்வது மக்களின் கவனத்தை நூறு சதவீதம் மடைமாற்றுகிறது என்று கூறமுடியாது. டிக்டாக்கில் வெற்றி பெற்ற பாடல்கள் பில்போர்ட் பட்டியலிலும் கூட வெற்றி பெற்றவையாக உள்ளன. இப்படி சொல்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. மக்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப கிரியேட்டிவிட்டியாக செயல்படவேண்டியுள்ளது.  டிக்டாக்கின் அல்காரிதத்திற்கு ஏற்ப இசைக்கலைஞர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறீ...

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள்!

படம்
  தேர்தல் பத்திரங்கள் சர்ச்சை - விவாதங்கள் 2018ஆம் ஆண்டு ஒன்றிய அரசு தேர்தல் பத்திரங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன்மூலம், தனிநபர்கள், பெருநிறுவனங்கள் தங்களைப் பற்றிய அடையாளங்களை பிறர் அறியாமல் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க முடியும். தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியில் வாங்கிக்கொள்ளலாம். அதை குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். அவர்கள் அதை ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும்.  இதுபற்றிய வழக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. வழக்கை இடதுசாரி கட்சி தொடுத்து நடத்தியது. வழக்குரைஞர் பிரசாந்த் பூஷனோடு மேலும் பலரும் பங்கேற்றனர்.    தகவலறியும் உரிமைச்சட்டம் 19 (1) படி விதிகளை மீறி, தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன. மக்களுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக வழங்கப்படும் நன்கொடை பற்றிய தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என வாதாடப்பட்டது. அரசு சார்பாக வாதாடிய அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மக்களுக்கு நன்கொடை அளிப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. இதில...

பசுமைக் கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் மத்தியதர வர்க்கத்தின் சுயநலம்! - குஸ்தாவோ பெட்ரோ, கொலம்பியா அதிபர்

படம்
  குஸ்தாவோ பெட்ரோ, அதிபர், கொலம்பியா உலகில் இன்று நடைபெறும் பெரும்பாலான மோசமான அரசின் செயல்பாடுகளுக்கு பின்னால் மத்திய வர்க்கத்தினரின் பேராசை உள்ளது. இவர்களால்தான் வலதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்து பாசிச செயல்பாடுகளை முடுக்கிவிடுகின்றனர். பசுமைக் கொள்கைகளுக்கு எதிரான பிரசாரத்தை செய்து வருகிறார்கள். நிறைய அரசியல் கட்சிகள் இந்த கருத்தை வாக்கு வங்கி கருதி கூறமாட்டார்கள். ஆனால் கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ, மத்திய வர்க்கத்தினரின் வாழ்க்கை பற்றிய பயமே பசுமைக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தாமல் தடுக்கிறது என வெளிப்படையாக பேசியுள்ளார்.  2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று அதிபரானவர் பெட்ரோ. இவர் முன்னாள் கொரில்லாவாக செயல்பட்டவர். பிரேசில் அரசு, அமேசான் காட்டில் கச்சா எண்ணெய் எடுக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உலகில் சூழல் காக்கும் பணியில் அமேசான் காடுகள் முக்கிய பங்களிப்பை ஆற்றுகின்றன. அதன் முக்கியத்தை கொலம்பிய நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர் என்றார்.  வசதியான சொகுசான உயர்தர வாழ்க்கை வாழும் மக்கள் கொண்ட நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா , சீனா ஆகியவை கார்பன் வெளியீட்டில் ம...

பெண்களை கல்வி கற்க விடாமல் முடக்கும் தாலிபன்கள்-அதிகரிக்கும் இளம்பெண்கள் தற்கொலை

படம்
  தற்கொலை செய்துகொள்வதே மேல் – ஆப்கன் தற்கொலை விவகாரம்   மோசமான மதவாத, தீவிரவாத சர்வாதிகாரத்தை மக்கள் அறியாமையால் தேர்ந்தெடுத்தாலும் கூட விளைவு ஒன்றுதான். மக்கள் மெல்ல சாவார்கள். அதுபோல தீயசக்தி கொண்ட அரசியல் தலைமை ஏற்பாடுகளை செய்யும். மக்களும் அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாதபடி வாழ்வார்கள். அரசிடம் காசு வாங்கி   பிழைக்கும் ஊடகங்கள், அரசின் தவறுகளை கேள்விகேட்கும் செயல்பாட்டாளர்களை அவதூறு செய்து செய்திகளை வெளியிட்டு ஊடக தர்மத்தை காப்பாற்றுவார்கள். 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு   வந்தபிறகு நடக்கும் அலங்கோலம் இதுதான். முழுக்க மத அடிப்படையிலான ஆட்சி என்பதால், கற்காலத்திற்கே நாட்டை கொண்டு செல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.   இந்தியாவின் ஆதரவில் அமெரிக்க படைகள் இருந்தபோது பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டது. வேலைக்கு சென்றார்கள். சுய தொழில்களை தொடங்கினர். ஆனால், இன்று மேற்சொன்ன அனைத்தையும் ஆப்கன் ஆட்சியாளர்கள் தடை செய்துவிட்டனர். பெண்களை போகப்பொருளாக கருதுவதால், தொடக்கப்பள்ளிக்கு மட்டும் அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை செய்ய வைத்து உறவினர்களுக்...

அகதிகளை சிறையில் அடைக்கும் இங்கிலாந்து அரசு!

படம்
  ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த இங்கிலாந்து அரசு, தனது நாட்டுக்கு வந்து குடியேற விரும்பும் மக்களை போர்ட்லேண்டில் உள்ள பிபிஸ்டாக்ஹோம் எனும் மிதக்கும் சிறையில்(கப்பலில்) அடைத்து வருகிறது. ஏற்கெனவே தங்கள் நாடுகளில் இருந்து உயிர்பிழைக்க சிறு படகுகளில் தப்பித்து வருபவர்களை இப்படி கடல் நடுவில் கட்டுமானத்தை உருவாக்கி தங்கச் செய்யலாமா, இது அவர்களது உடல், மனநிலையை பாதிக்கும் என மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால், ஒப்பீட்டளவில் அகதிகளை வெறுக்கும் வலதுசாரித்துவத்திற்கு அதிக ஆதரவு கிடைத்துவருகிறது. மகத்தான இந்திய வம்சாவளி பெருமை கொண்ட பிரதமர் ரிஷி சுனக், அகதிகள்   இங்கிலாந்து நாட்டிற்கு வருவதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். அதில் ஒன்றுதான், இப்படி வரும் மக்களை குடும்பமாக 500 படுக்கைகள் கொண்ட மிதக்கும் சிறையில் அடைத்து வைப்பது. அடுத்து, அகதிகளுக்கு வேலை கொடுக்கும், தங்க இடம் கொடுக்கும் உள்நாட்டு மக்கள் மீது அதிகளவு அபராதம் விதிப்பது ஆகிய அரிய செயல்களை முன்னெடுத்து தனது முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறார்.   கடந்த ஆண்டு அகதிகளை ஹோட்டலில் தங்க வைத்த வகையில் அரசுக்...

இந்திய ஜனநாயகத்தை காக்கும் ஆயுதமாக மாறிய இணையசேவை தடை!

படம்
  இணைய சேவை தடை ஜனநாயகத்தைக் காக்கும் இணையசேவை தடை!   உலக நாடுகளில் அதிக முறைகள் இணையம் துண்டிக்கப்பட்டு தடை செய்யப்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. 2012ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை 734 முறை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் உச்சபட்சமாக 421 முறை இணையம் துண்டிக்கப்பட்டு தேச ஒற்றுமை காக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு அந்தஸ்து சட்டத்தை திரும்ப பெற்றதற்கு பிறகு 550 நாட்கள் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 தொடங்கி 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 6 வரை 4ஜி இணையசேவை முழுமையாக அரசால் துண்டிக்கப்பட்டு, மக்களின் எதிர்ப்புணர்வை மழுங்கடித்தனர். அரசியல்ரீதியாக சிக்கல் ஏற்படும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவது மெல்ல வாடிக்கையானது. 2017ஆம்ஆண்டு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து கோரிக்கை எழும்பப்பட்டு போராட்டங்கள் உருவாயின. உடனே அரசு   நூறு நாட்களுக்கு இணைய சேவையை நிறுத்தி வைத்தது.   அண்மையில் பஞ்சாபில் காலிஸ்தான் நாட்டுக்கான போராட்டம் தொடங்கியது. இதை தொடங்கி வ...

ஐஸ்லாந்தின் திமிங்கில வேட்டை தடையால் உருவாகும் மாற்றம்!

படம்
  திமிங்கில வேட்டைக்குத் தடை! ஐஸ்லாந்து நாட்டின், ஃபேக்ஸாபிளோய் விரிகுடா பகுதி. இங்கு, படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றும்போதே வழிகாட்டி, திமிங்கில இறைச்சியை தவிருங்கள். அதனை பாதுகாக்க முயன்று வருகிறோம் என்று கூறிவிடுகிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில், 2024ஆம் ஆண்டுக்குள் வணிகரீதியான திமிங்கில வேட்டையை நிறுத்தவேண்டும் என ஐஸ்லாந்து நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.   ஜப்பான் நாடு, சில ஆண்டுகளாக திமிங்கில வேட்டையை நிறுத்தி வைத்திருந்தது. பிறகு, 2019ஆம் ஆண்டு வணிகரீதியான திமிங்கல வேட்டையை மீண்டும் தொடங்கியது. இதன் விளைவாக, ஐஸ்லாந்து நாட்டு திமிங்கில இறைச்சிக்கான தேவை குறைந்துவிட்டது. ஆனால் அரசின் மீன்வளத்துறைத்துறை அமைச்சர் ஸ்வாண்டிஸ் ஸ்வாவர்ஸ்டோட்டிர், ”திமிங்கிலப் பாதுகாப்பே முக்கியம். பொருளாதாரப் பயன் முக்கியமல்ல” என்று  நாளிதழில் எழுதியுள்ளார்.  இதெல்லாம் தாண்டி சூழல் அமைப்புகள், திமிங்கில வேட்டையைத் தடுக்க 15 ஆண்டுகளாகப் போராடி வருகின்றன.   ஐஸ்லாந்தில் , 1600 ஆம் ஆண்டிலிருந்தே திமிங்கில வேட்டை நடைமுறையில் உள்ளது. 19ஆம் நூற்றாண்டில் ஐஸ்லாந்தில் நுழைந்த அமெரிக...

வீரர்களுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வேதிப்பொருள்! - கன்னபீடியால் எனும் சிபிடி

படம்
  கன்னபீடியால் - மேல்தட்டு வீரர்களுக்கான ரெகவரி மருந்து! 2018ஆம் ஆண்டு ஆன்டி டோபிங் ஏஜன்சி, கன்னபீடியாலை தனது தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் இருந்து நீக்கியது. இதனை மேல்தட்டு வர்க்க பணக்கார வீரர்கள் வலிநிவாரணியாக பயன்படுத்தி வந்தனர்.  இதனை சுருக்கமாக சிபிடி என்று அழைப்பார்கள். சிபிடி - கன்னபீடியால். உடலில் சற்று வேகமாக வேலை செய்து உடல் சோர்வை குறைப்பதோடு வலி, வீக்கம் நீக்கி நல்ல தூக்கத்தை உடலுக்கு கொடுக்கிறது. மனப்பதற்றம் நீக்குகிறது.  கஞ்சா தாவரத்திலிருந்து நூற்றுக்கும் அதிகமான வேதிப்பொருட்களை தயாரித்து வருகின்றனர். அதில் சிபிடியும் ஒன்று. மனிதர்களுக்கு இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை. எலிகளை வைத்து செய்த சோதனையில் மேற்சொன்ன நிறைய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. சிபிடி துறை 2025ஆம் ஆண்டில் ஒரு பில்லியன்  பவுண்டுகளாக உயரும் என எதிர்பார்க்கின்றனர்.  நீங்கள் அதிகளவு சிபிடியை உடலில் எடுத்துக்கொள்ளும்போது மூளையில் உள்ள நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் சமநிலை அடைகின்றன. இதன் விளைவாக பதற்றம் தொடர்பான பிரச்னைகள் தீர்கின்றன என்று ஊட...

வெளிநாட்டில் தேடிய வணிக வாய்ப்புகளும், சவால்களும்!

ஹூவெய் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என இருப்பது ரென் கிடையாது. ரிலையன்ஸின் திருபாய் அம்பானி போன்ற டெக்னிக்தான். ஊழியர்கள் தான் உரிமையாளர்கள். மொத்தம் 1 லட்சம் பேர். அவர்களின் பெயர்களைக் கூட பொறித்து வைத்திருக்கிறார். 1987ஆம் ஆண்டு ஐந்து நண்பர்கள் ஹூவெய் நிறுவனத்திற்கு முதலீடு செய்தனர். பிறகு 2000ஆம் ஆண்டிற்குள் தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டனர்.    அமெரிக்காவில் முக்கியமான நிறுவனம் ஏடி அண்ட் டி. இந்த நிறுவனத்தின் பெல் லேப்ஸில் ஆய்வு செய்து ஏராளமான காப்புரிமைகளை பெற்று வந்தனர். இவர்களின் துணை நிறுவனமாக லூசென்ட் டெக்னாலஜி என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கப்ப்பட்டது. 1996ஆம் ஆண்டு தொடங்கிய  இந்த நிறுவனம், 2006ஆம் ஆண்டு தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. இத்தனைக்கும் எம்ஐடியின் சிறந்த நிறுவனத்திற்கான விருதை இரு ஆண்டுகள் தொடர்ச்சியாக பெற்ற நிறுவனம் தான் லூசென்ட் டெக்னாலஜி.   பின்னாளில் சரிவை தடுத்து நிறுத்த அல்காடெல்லுடன் லூசென்ட் டெக்னாலஜி சேர்க்கப்பட்டது. ஆனாலும் பயனில்லை. நஷ்டப்பட்டு திவாலாகும் வங்கியை, நன்றாக இயங்கும் வங்கியோடு சேர்த்தால் அது சிறந்த ரா...

இந்திய சிறைகளுக்குள் நூல்களுக்கு தடை!

படம்
  ஜிஎன் சாய்பாபா, மனித உரிமை செயல்பாட்டாளர் கடந்த மாதம் எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கௌதம் நவ்லகா, பிஜி வுட்ஹவுஸ் என்ற எழுத்தாளரின் நூல்களை வாசிக்க கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.  மும்பையிலுள்ள தலோஜா சிறை நிர்வாகம் இதற்கு அளித்த பதில், பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று.  சிறைத்துறை அதிகாரிகள் நூல்களை, காகிதங்களை, நோட்டுகளை ஏன் அகராதிகளை கூட கைதிகளுக்கு கொடுக்காமல் இருப்பதும், பிறகு வழக்குரைஞர்கள் இதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்கு செல்வதும் புதிதல்ல. இப்படி சமூக செயல்பாட்டாளர் ஜோதி ஜக்தாப் என்பவருக்கு நூல்கள் மறுக்கப்பட்ட, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த உத்தரவு வந்து சேர்ந்தும் கூட இரண்டு மாதங்கள் ஆனபிறகே நூல்கள் ஜோதிக்கு வழங்கப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளுக்கு நூல்கள் மேல் உள்ள வெறுப்பை  இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம்.  2020ஆம் ஆண்டு நாக்பூர் சிறையில் ஜிஎன் சாய்பாபா அடைக்கப்பட்டிருந்தார். இவர் தெலுங்கு மொழி நூல்களை வாசிக்க கேட்டிருந்தார். ஆனால் சிறைத்துறை அதிகார...