இடுகைகள்

நாடகப்பள்ளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆசிரியரிடம் நான் சொன்ன பொய் - அனுபம்கேரின் குரு மரியாதை!

படம்
பாஜக ஆதரவாளர், படுகொலைகளை ஆதரிப்பவர்  என பல தூற்றுதல்கள் இருந்தாலும் நாடகம், சினிமா கதாபாத்திர விஷயங்களில் அனுபம் கேரின் திறமையை யாரும் மறுக்க முடியாது. அப்படி கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிப்பவர், டெல்லி நாடகப்பள்ளியின் முன்னாள் மாணவர். சிம்லாவைச் சேர்ந்த சிறுவன் உலகப் புகழ்பெற்ற திரை நட்சத்திரமாக உருவாகிறார் என்பது புதுமையான ஒன்றுதானே. பத்து வயதில் எனது வாழ்க்கையை எழுதி வைக்கத் தொடங்கினேன். எனது வாழ்க்கையை நூல் வடிவில் மக்களுக்கு வழங்கவே விரும்பினேன் என்று கூறியுள்ளார். 1955 ஆம் ஆண்டு பிறந்த அனுபம் கேர், இன்று 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தனது சிறந்த நடிப்பிற்கு பரிசாக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் அண்மையில் தனது வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டுள்ளார். இதில் தேசிய நாடகப்பள்ளி காலத்தில் தனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்பகுதி பிரமாதமாக எழுதப்பட்டுள்ளது. நாடகம் பற்றிய ப்ராஜெக்ட். ஆசிரியரிடம் கொடுக்க வேண்டிய நேரம். ஆனால் என்ன காரணத்தாலோ அனுபமால் எழுத முடியாமல் போய்விடுகிறது. ஆனால் குறிப்பிட்ட வகுப்பிற்கான ஆசிரியர் உறுதியாக சொல்லிவ