இடுகைகள்

ஊட்டச்சத்துக்குறைவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளைக் கொல்லும் இந்திய மாவட்டம்!

படம்
தி வீக் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம், வேதனையான விஷயங்களுக்கு முதன்மை பெற்றுள்ளது. ஆம் இங்கு ஏறத்தாழ 2016-18 காலக்கட்டத்தில் மட்டும் 1, 100 குழந்தைகள் இறந்துபோயுள்ளனர். காரணம் வறுமை, வேலைவாய்ப்பின்மையால் ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறைதான். ஏழு வயதான ஜானேஷ் என்ற சிறுவனின் எடை பத்து கிலோ. தன் தாய் தலைவருடினால் மட்டுமே கண்திறந்து பார்க்கிறான். புன்னகைக்க மட்டுமல்ல அழக்கூட உடலில் சத்தில்லை. அவனுக்கு தர ஊட்டச்சத்தான சோறு தாயிடம் இல்லை. என்ன செய்ய முடியும்? இங்குள்ள ஐந்து பழங்குடி கிராமங்களில் குழந்தைகள் தினத்தன்று செய்த ஆய்வில் மருத்துவர்களே அதிர்ந்து போனார்கள். அங்கு வந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்குறைபாடு இருந்தது. பால்கர் மாவட்டம் எங்கோ தூரதேசத்தில் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். மும்பையிலிருந்து நூறு கி.மீ தொலைவில்தான் இருக்கிறது. அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு விரைவில் அமைக்கப்படவிருக்கும் புல்லட் ரயில் இந்த ஊரின் பாதையில்தான் அமையவிருக்கிறது. இதற்கான மதிப்பீடு 2 லட்சம் கோடி ரூபாய்கள். மும்பை தன் வருமானத்தில் 15 ஆயிரம் கோடிக்கும் குறைவாகத்தான் மக