இடுகைகள்

கரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருவுறாத முட்டை செல்களிலிருந்து கரு உருவாவதைப் பற்றி கூறியவர் - ஆஸ்கர் ஹெர்ட்விக்

படம்
பயா(லஜி) டேட்டா ஆஸ்கர் ஹெர்ட்விக் (Oscar Herwig 1849-1922) ஜெர்மனியின் ஹெசன் நகரில் பிறந்தார். பெற்றோர், கார்ல் ஹெர்ட்விக், எலிசெ டிராப்.ஜெனா பல்கலைக்கழகத்தில் படித்தார். உடற்கூறியல் மருத்துவர் எர்னஸ்ட் ஹெக்கல், ஆஸ்கருக்கு வழிகாட்டினார்.  ஆஸ்கர், முதலில் கரு மேம்பாடு பற்றி படித்தவர், பிறகு கருவுறுதலின் செயல்முறைகளைக் கற்க ஈடுபாடு காட்டினார். 1875ஆம் ஆண்டு ஹெக்கலோடு மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு சென்றார். அங்கு முள்ளெலிகளின் இனப்பெருக்கும் பற்றிய ஆய்வைச் செய்தார். தனது ஆய்வை ஆவணமாகவும் பதிவு செய்தார்.  1890ஆம் ஆண்டு நட்சத்திரமீன் பற்றிய ஆய்வைத் தொடங்கினார். அதில், கருவுறாத முட்டை செல்லில் இருந்து கரு உருவாவதைப் பற்றி முதன்முதலில் தகவல் அறிந்து ஆவணப்படுத்தியவர் ஆஸ்கர்தான். இதற்கு, பார்த்தினோஜெனிசிஸ் (parthenogenesis) என்று பெயர்.உடற்கூறியல் - உயிரியல் கழகத்தின் தலைவராக 1888 - 1921 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார்.  சாதனை 1916ஆம் ஆண்டு, டார்வினின் பரிணாமவளர்ச்சி கோட்பாட்டை எதிர்த்து “The Origin of Organisms: a refutation of Darwin’s theory of chance” என்ற நூலை எழுதினார்.    https://www.bbvaopen

வரலாற்றை திருத்தி எழுதி அதனை அரசியலுக்க சில கட்சிகள் பயன்படுத்துகின்றன! - பேராசிரியர் உபீந்தர் சிங், வரலாறு, அசோகா பல்கலைக்கழகம்

படம்
  உபீந்தர் சிங் உபீந்தர் சிங் பேராசிரியர் வரலாற்றுத்துறை அசோகா பல்கலைக்கழகம் நீங்கள் எழுதியுள்ள நூலில் தொன்மை இந்தியா பற்றி பேசியுள்ளீர்கள். அதில் மதங்களுக்கு இடையில் பன்மைத்தன்மை இருப்பதோடு மதரீதியான வன்முறைகளும் இருப்பதைக் கூறியுள்ளீர்கள்.  தொன்மைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதற்காக நிறைய நேரத்தையும் ஆற்றலையும் செலவழித்துதான் ஆக வேண்டும். அகிம்சை, வன்முறை, கடவுள் நம்பிக்கை, நாத்திகம், சமூக பாகுபாடு பற்றி நான் நூலில் எழுதியுள்ளேன். இன்று மத வேறுபாடுகள் உருவாக்கப்படுவதைப் போலவே அன்றும் மத சம்பந்தமாக பிரச்னைகள் இருந்தன. அசோகர் பௌத்தத்தைப் பின்பற்றினார். மதம் தொடர்பான பன்மைத்துவத்தை கோட்பாடு அளவில் உருவாக்கினார். ஆனால் பிற அரசர்கள் இந்த அளவு யோசிக்கவில்லை. அவர்கள் இருக்கும் மத அமைப்புகளை அப்படியே பராமரித்தனர். மதங்களை பின்பற்றுவதில் பன்மைத்தன்மை நிலவியது.  அதேசமயம் மதரீதியான வன்முறைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பௌத்த நூலான சூலவம்சத்தில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. பல்லவர்களின் ராணுவம் இலங்கையில் உள்ள அனுராதபுரத்தின் புத்த சிலைகளை கொள்ளையடித்தது பற்ற

சேவல்களை ஒழிக்கும் ஆராய்ச்சி!

படம்
  சேவல்களை ஒழிக்கும் ஆராய்ச்சி!  கருவிலேயே ஆண் குஞ்சுகளை ஒழிக்கும் அறிவியல் ஆய்வுமுறை அறிமுகமாகி உள்ளது.  கர்ப்பிணிகளை ஸ்கேன் செய்து பெண் குழந்தைகளை எப்படி கருவிலேயே கொன்றார்களோ அதேமுறையில் கோழிகளுக்கு செய்த அறிவியல் ஆராய்ச்சி சர்ச்சையாகியுள்ளது. இம்முறையில் கோழிமுட்டைகளை கோழி குஞ்சு பொரிக்கும் முன்பே அதிலுள்ளது ஆணா, பெண்ணா என கண்டுபிடித்து ஆண் குஞ்சுகளை கொல்லத் தொடங்கியுள்ளனர்.  Seleggt  என்ற ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுமுறையில் கோழி கருவுற்ற ஒன்பது நாளில் அது ஆணா, பெண்ணா என கண்டறிந்து விடுகின்றனர்.  பெண் என்றால் அதனை வளரவிடுவதும், ஆண் என்றால் உடைத்து விலங்கு உணவுகளுக்கு பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.  ”நாங்கள் இதன்மூலம் ஆண்டுதோறும 600 கோடி ஆண் சேவல்கள் கொடூரமாக கொல்லப்படுவதை தடுக்கிறோம்” என்கிறார் ஸ்லெக்கிட். ஆண் சேவல் குஞ்சு பொறித்து வெளியே வந்து குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு உதவுகிறது என்றால் சரி; ஆனால் கருவிலேயே கொன்றுவிட்டு இரக்கம் என்று கூறினால் ஏற்பீர்களா?  சந்தையில் பெண் கோழிகளுக்கு உள்ள மதிப்பு, ஆண் சேவல்களுக்கு இல்லை. இதன்விளைவாக, அவற்றை எந்திரத்தில் அரைத்து கொ

பெண் குழந்தைகளின் உருவாக்கத்தைத் தவிர்க்கும் ஜப்பான் ஆராய்ச்சி!

படம்
பிறக்கும் குழந்தைகளை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்! செய்தி: மரபணுக்களை மருத்துவர்கள் கணித்து, ஆண், பெண் குழந்தைகளைத் தீர்மானிக்கும் திறனைப் பெற்றுள்ளனர்.இது சமூகத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜப்பானில் உள்ள ஹிரோசிமா பல்கலைக்கழகத்தில் மசயுகி சிமடா  தலைமையிலான ஆராய்ச்சிக்குழுவினரின் ஆராய்ச்சி இதுவே. ஆணின் விந்தணுக்களில் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் உண்டு. இவற்றில் எக்ஸ் குரோமோசோம்கள் கருப்பைக்குள் செல்வதைத் தாமதப்படுத்தினால் பெண் குழந்தைகளின் பிறப்பைத் தடுக்கலாம். இதன் விளைவாக, ஆண் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இந்த ஆராய்ச்சிதான் மருத்துவ வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. விந்தணுக்களில் சராசரியாக ஐநூறுக்கும் மேற்பட்ட மரபணுக்கள் உள்ளன. விந்தணு செல்களை கருப்பைக்குள் நடத்திச்செல்வது இதன் அடித்தளத்திலுள்ள பதினெட்டு புரதங்கள் ஆகும். இவற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, குழந்தைகளின் பிறப்பை மாற்றலாம் என்பது புதிய கண்டுபிடிப்பு. “இந்த கண்டுபிடிப்பு  சமூகத்தின் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனை ஒருவர் தன

விந்தணுக்களைப் பெருக்கும் மரிஜூவானா!

படம்
truthout மரிஜூவானா குழந்தை பேறுக்கு உதவுமா? ஆம் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். இன்று உலகமெங்கும் சோதனைக்குழாய் மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. காரணம், ஆண், பெண் என தம்பதிகள் இருவருக்கும் ஏற்படும் உடலியல் பிரச்னைகள்தான் காரணம். பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி எனில் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சி பெறாமை, விந்து முந்துதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இது உடலுறவில் திருப்தி என்பதைக் கடந்து குழந்தைப் பேற்றிலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள டி.ஹெச். சான்ஸ் மையத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. ஆராய்ச்சி நடைபெற்றபோது, அதில் ஆய்வுக்கு உட்பட்டவர்கள் மரிஜூவானா எடுத்துக்கொண்டனர். அதோடு அதனை புகைக்காதவர்களைக் கணக்கிலெடுத்தால் விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்த து. உடனே எங்கு கிடைக்கும் மரிஜூவானா என கூகுளிடம் கேட்காதீர்கள். அப்படி புகைப்பது தமிழகத்தில் சட்டவிரோதம். இந்த ஆய்வு நடக்கும்போது, ஆய்வுக்கு உட்பட்டவர்கள் மரிஜூவானா புகைத்தனர். இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது. தற்போது உலகின் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட