இடுகைகள்

கணேஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூரியவம்சிகளை அழிக்க பாசுபாஸ்திரத்தை ஏவும் சிவன்! - வாயுபுத்திரர் வாக்கு- அமிஷ் திரிபாதி

படம்
  சிவா முத்தொகுதி வாயு புத்திரர் வாக்கு அமிஷ் திரிபாதி வெஸ்ட்லேண்ட் முதல் இரு பாகங்களில்... இதுவரை..... குணாக்களின் தலைவரான சிவன், நீலகண்டர் என அடையாளம் காணப்படுகிறார். அவரை அடையாளம் கண்ட சூரிய வம்சிகள் தங்களுக்கு ஏற்ப அவரை மூளைச்சலவை செய்கின்றனர். இதனால் சோமரஸம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சந்திரவம்சிகளால் உருவானது என நம்புகிறார். இதனால் போர் நேரிடுகிறது. இதில் சந்திரவம்சிகள் தோற்றுப்போகின்றனர் அயோத்யாவின் ஸ்வத்பீட மன்னர் திலீபர், தோற்றுப்போனாலும் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சூரியவம்சிகள் பக்கம் நீலகண்டர் இருப்பது அவரை நிலைகுலைய வைக்கிறது. உண்மையில் நீலகண்டர்  சூரியவம்சி மற்றும் சந்திரவம்சிகளுக்கு பொதுவான ஆளுமை, கடவுள். இதை நீலகண்டர் உணர வாசுதேவர்கள் உழைக்கிறார்கள். டெலிபதி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறார்கள்.  சிவனுக்கு இயல்பிலேயே டெலிபதி திறன் உள்ளது. ஆனால் அதனை செயல்படுத்த சற்று உயர்ந்த இடத்திலுள்ள கோவில்களுக்கு செல்லவேண்டியுள்ளது. முதல்பாகத்தில் சிவன் நீலகண்டராக மாறுகிறார். தேவகிரி செல்கிறார். சூரியவம்சி மன்னரான

தனது நண்பனைக் கொன்றதற்கு பழிவாங்க நாகர்களை தேடி பயணிக்கும் சிவன்! - நாகர்களின் ரகசியம் - சிவா முத்தொகுதி 2

படம்
  நாகர்களின் ரகசியம் அமிஷ் திரிபாதி பவித்ரா ஸ்ரீனிவாசன் வெஸ்ட்லேண்ட் அமிஷ் திரிபாதி குணாக்களின் பிரதிநிதியான சிவா, நீலகண்டராக மெலூகா நாட்டினரால் வணங்கப்படுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு அவர் செய்யும் செயல்பாடுகளை விளக்க கோவிலில் வாசுதேவர்கள் உதவுகின்றனர். இவர்கள் சிவாவின் மனதில் எழும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்லும் வல்லமை பெற்றவர்கள். இந்த நேரத்தில் ப்ரஹஸ்பதி என்ற ஞானி ஒருவரை சிவா சந்திக்கிறார். இவர்தான் மந்த்ரமலை என்ற இடத்தில் சோமரஸத்தை ஆய்வு செய்து தயாரிக்கிறார். அதை மேம்படுத்த முயன்றுவருகிறார்.  சதியை மணம் செய்துகொள்ள சிவன் விரும்புகிறார். இதற்கான வழிமுறையை வாசுதேவர் தான் சொல்லித் தருகிறார். அதன்படி சிவா சதியின் மனத்தை வெல்கிறார். திருமணம் நடைபெறுகிறது. விகர்மாவான சதியை மணந்துகொள்ள மெலூகாவில் உள்ள விகர்மா சட்டத்தை மாற்றுகிறார். சட்டத்தை எப்போதும் மீறாத சதி, காதல் வந்தபிறகு அவளால் சிவனை தவிர்க்க முடியாமல் போகிறது.  இந்த நூலில் முக்கியமான விஷயம் நாகர்கள் யார் என்பதுதான். நாகர்களை மெலூகர்கள், ஸ்த்பவ நாட்டைச் சேர்ந்த மக்கள், காசி மக்கள் என பலரும் நாகர்களை வெறுக்கிறார்கள். இத்தனைக்கும