இடுகைகள்

ஆவிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆவிகளை துவைத்து எடுக்கும் கரும்புலி!

படம்
கரும்புலி தோன்றும் ஆவி உலகம் கதை, ஒரே லைன்தான். காட்டுக்குள் ஆவிகள் முழுநிலவு நாளில் பூஜை ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அந்த பூஜையை தடுக்காவிட்டால் அவர்கள் சக்தி பெற்று உலகை அழிப்பார்கள். எவ்வளவு பெரிய கதை. உலகை புலி, கரும்புலி, அவரின் மாமா மூவருமே ஜஸ்ட் லைக் தட் காப்பாற்றி விடுகிறார்கள். எப்படி என்று கேட்டால் கரும்புலி பிடறில் எட்டி உதைப்பார். காட்டில் நடைபெறும் சண்டைக்காட்சிகள் மட்டுமே கொஞ்சம் காமிக்ஸ்தான் படிக்கிறோம் என நினைக்க வைக்கிறது. மற்ற விஷயங்கள் எல்லாம் எப்போது எழுதின காமிக்ஸ் இது என நினைக்க வைக்கிறது. இப்படியொரு தத்தியான கதையா என வியக்க வைக்கிறது. ராணி காமிக்ஸ் உருப்படாமல் நொடிந்து போனதற்கு இந்த கதை தேர்வு முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறோம். கதை முன்னாடியிலிருந்து அல்லது பின்னாடியிலிருந்து என எப்படி படித்தாலும் பிரச்னையில்லை. குழப்பமே இருக்காது. அப்படியொரு கதை லைன். கரும்புலி பாத்திரத்தை ஏதோ சர்க்கஸில் மரணக்கிணறு ஓட்டுபவர் போல மாற்றியிருப்பதை எப்படி புரிந்துகொள்வது? நன்றி: தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ் குழு. படம் உதவி:  jsc johny