இடுகைகள்

எல்லை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிந்தியா என்றால் என்ன? மழைப்பேச்சு பாட்காஸ்ட்

படம்
        சீனர்களும் இந்தியர்களும் ஒன்றாக இணைந்தால், அவர்களை சிந்தியர்கள் என அழைக்கலாம். சிங்கப்பூரில் தம்பதிகளாக வாழும் சீன இந்தியர்களை சிந்தியர்கள் என்று அழைக்கிறார்கள். அவர்களைப் பற்றிய செய்திகளைக் கூற தனி யூட்யூப் சேனல்களே உள்ளன. சீனாவும் இந்தியாவும் நட்புணர்வோடு இருந்தால் என்னென்ன நலன்கள் கிடைக்கும் என்பதை மழைப்பேச்சு பாட்காஸ்ட் உங்களுக்கு விவரிக்கிறது.காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், ஆங்கில நூலை எழுதியிருக்கிறார்.  சீனாவின் ஆதரவாளர் என தூற்றப்பட்டாலும், அதை அவர் பெரிதுபடுத்தவில்லை. ஏனெனில் பல நூறு கி.மீ எல்லை நிலத்தை இழந்துவிட்டை அதைப்பற்றி பேசாமல் அமைதி காப்பது அயோக்கியத்தனம். அதை காசு வாங்கிய ஊடகங்கள் வாலைக் குழைத்துக்கொண்டு ஏதும் கூறாது. ஆனால், நட்புணர்வோடு இருந்தால் கிடைக்கும் பலாபலன்களைப் பற்றி பேசினால் உடனே தேசதுரோக பட்டம், இழிவு, அவதூறு கிடைக்கும். நூல், இந்தியா சீனாவுக்கு இடையிலான நுட்பமான வேறுபாடுகளை முன்வைக்கிறது.        https://open.substack.com/pub/anbarasushanmugam/p/0d5?r=396v6&utm_campaign=post&utm_medi...

அடிமைகளை விட கேவலமானவர்களைக் கொண்ட நாடு!

படம்
              சீன நாட்டோடு இந்திய மக்கள் தம்மை இணைத்துக்கொள்ள முடியுமா என்றால் முடியாது. ஆனால், சில தற்செயலான தொடர்புகளைப் பற்றி பேசி மகிழ்ந்துகொள்ளலாம். பௌத்த மதம் இந்தியாவில் உருவானது. அதை, இந்து மதத்தில் இருந்து உருவானது என அரசு அமைப்பு பட்டியலிட்டுள்ளது. இந்துத்துவ முட்டாள்களும் அப்படியே பிரசாரம் செய்து வருகிறார்கள். கூடவே, அரசில் இணைந்து இன அழிப்பு செய்து பிற சிறுபான்மையினரை அழிக்க முயல்கிறார்கள். சர்க்கரை தயாரிப்பு, பட்டு ஆடைகள் உற்பத்தி, சீன மொழியில் உள்ள 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமொழி சொற்கள் ஆகியவை இந்தியாவுடனான தொடர்பை உறுதி செய்கிறது. சீனாவின் யுன்னானிலுள்ள டாய் எனும் சிறுபான்மை மக்கள் ராமாயணத்திற்கான தனித்த வடிவத்தைக் கொண்டிருக்கிறார்கள். 1636-1912 காலகட்டத்தில் பிரிட்டிஷாரால் சீனாவுக்கு ஆபத்து ஏற்பட்டது. அப்போது பிரிட்டிஷ் படையில் பெருமளவில் இருந்தவர்கள், இந்தியாவைச் சேர்ந்தவர்கள். சீக்கியர்கள். இவர்கள் ஹாங்காங், ஷாங்காய், ஹாங்கூ ஆகிய பகுதிகளில் ஆங்கில அரசுக்கு ஆதரவாக படுகொலைகளை செய்தனர். எனவே, அன்று தொடங்கி சீனாவில், இந்தியா என்றால் அட...

சீனாவின் சிந்தனைகளை எண்ணவோட்டங்களை அறிய உதவும் கட்டுரை நூல்!

படம்
           கிழக்கும் மேற்கும்: பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் கட்டுரை நூல் ஆசிரியர்: மு.இராமனாதன் ♦ ♦ முதல் பதிப்பு: டிசம்பர் 2022 ♦ வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001 இந்த கட்டுரை நூல் மொத்தம் 34 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதன் வழியாக சீனா, ஹாங்காங், மியான்மர், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள், அதன் பின்னணி ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக சீனாவில் தணிக்கை முறை அமலில் உள்ளதால், அதைப்பற்றிய கட்டுரைகள் அங்குள்ள சமூக சூழல், அரசியல் அமைப்பு, கட்டுப்பாடுகள், விதிகள், கலாசாரம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இந்த நூலில் அமெரிக்கா, மியான்மர், ஹாங்காங்கை விட சீனாவைப் பற்றிய கட்டுரைகள் கவனம் ஈர்த்தவையாக இருந்தன. இந்தியாவும் சீனாவும் ஒரே ஆண்டில்தான் சுதந்திரம் பெற்றன என்றாலும் சீனா இன்று வல்லரசு நாடுகளில் ஒன்றாக உயர்ந்துவிட்டது இதை அமெரிக்கா ஏற்கிறது ஏற்காமல் போகிறது என்பது விஷயமல்ல. பல்வேறு தடைகள் இருந்தாலும் உள்நாட்டிலேயே அனைத்து பொருட்களையும் தயாரித்து அதை வெளி...