இடுகைகள்

வார்னர் பிரதர்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பனிரெண்டு முறை நிராகரிக்கப்பட்டு சாதித்த குழந்தை எழுத்தாளர்! - ஜே.கே. ரௌலிங்

படம்
  ஜே.கே. ரௌலிங் ஜே.கே. ரௌலிங் எழுத்தாளர் ஜோன்னா ரௌலிங் என்று கூட இந்த எழுத்தாளரை அழைக்கலாம். 1965ஆம் ஆண்டு இங்கிலாந்தின் யேட் என்ற நகரில் பிறந்தார். இவரை எதற்காக இங்கே எழுதுகிறோம்? எழுதியே சம்பாதித்து இன்று கோடீஸ்வரராக இருக்கிறார். அந்த தில்லுக்குத்தான் எழுதுகிறோம். ஹாரிபாட்டர் தொடர்கதைகள் நூலாக மிகச்சிறப்பாக விற்றன. அதை வார்னர் பிரதர்ஸ் திரைப்படமாக எடுத்தபோது ஜே.கோ. ரௌலிங்கின் புகழ் இன்னும் மேலே போய்விட்டது. நூலும் , திரைப்படங்களும் இன்றும் வெறித்தனமாக விற்றுக்கொண்டிருக்கிறது.  500 மில்லியன் நூல்கள், 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விற்றுள்ளன என்று கணக்கு சொல்கிறார்கள். கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக 200 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகளை ஹாரிபாட்டர் நூல்கள் வசீகரித்துள்ளன.  ஜே.கே. ரௌலிங் தனது பள்ளிப்படிப்பை புனித மைக்கேல் தொடக்கப்பள்ளியில் படித்தார். பிறகு, பிரெஞ்சு மற்றும் செவ்வியல் படைப்புகள் பற்றிய படிப்பை எக்ஸ்செடர் என்ற பல்கலையில் நிறைவு செய்தார். தொண்ணூறுகளில் போர்ச்சுக்கலுக்கு சென்று ஆங்கிலம் கற்பிக்கும் பணியை செய்து வந்தார். பணியோடு காதலும் வந்தது. போர்ச்சுக்கீசிய பத்திரிக்கையாளர